திங்கள், 14 ஏப்ரல், 2014

இயேசுவின் இரண்டாம் வருகை (8) - இயேசு கிருத்துவின் இராச்சியம்


இயேசு கிருத்து உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய பரலோக இராச்சியத்தைப் பற்றிக் கூறி, பரலோக இராச்சியத்தைப் பூலோகத்திலேயே உருவாக்கவே தாம் வந்திருப்பதைக் கூறுகிறார்.

அவருடைய சீடர்களோ, யூதர்கள் இழந்து போன இராஜ்ஜியமாகிய பூலோக இராச்சியத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வந்தவராக அவரை நம்பினார்கள்.

முரண்பட்ட இரண்டு இராஜ்யங்கள்:

இவை ஒன்றுக்கொன்று எதிரான முரண்பட்ட இரண்டு நிலைகளாக இருக்கின்றன. பரலோக இராஜ்ஜியக் கருத்துக்கு எதிரானது பூலோக இராசியக் கருத்து என்பது பைபிளில் விளக்கப்படுகின்றது. எவ்வாறு?

பூலோக இராஜ்ஜியம் வன்முறையால் உருவாவது.

"ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்;
 பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்வான்"

என்பது உலகம் முழுவதற்கும் பொருந்தும். வன்முறையும் கொலையுமே பூலோக இராஜ்யங்கள் உருவாகக் காரணமானவை.

இதனால், வன்முறைக்கும் கொலைக்கும் காரணமான சாத்தானுடைய கையிலே இப்பூலோக இராஜ்யங்கள் இருப்பதாக லூக்கா 4 ஆம் அதிகாரத்தின் 5 முதல் 8 வரையுள்ள வசனங்களின் வழி விளக்கப்படுகிறது.

பரலோக இராசியம் மனமாற்றத்தால் உருவாவது. மனமாற்றத்தை ஏற்படுத்துவது இயேசு கிருத்துவின் நற்செய்தி. இயேசு கிருத்துவின் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்குக் காரணமானவர் பரிசுத்த ஆவி.

ஆகவே, பரிசுத்த ஆவியால் உருவாக்கப்படுவது பரலோக இராஜ்யம்.

வன்முறை, கொலை முதலிய செயல்களுக்குக் காரணமான சாத்தானால் உருவாக்கப்படுவது பூலோக இராஜ்யம்.

இயேசு கிருத்து பரலோக இராஜ்யத்தை இந்த பூலோகத்தில் உருவாக்க வந்த கடவுளின் மகன்.

புரிந்துக் கொள்ள இயலாமை:

அவர் பரலோக இராஜ்யத்தை இப்பூலோகத்திலே உருவாக்க வந்த கடவுளின் மகன் என்பது அவருடைய சீடர்களால் புரிந்து கொள்ள இயலாமலிருந்தமையே, இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையை அவர்கள் புரிந்து கொள்ளுவதில் அவர்களுக்கு இருந்த சிக்கல் ஆகும்.

ஏன் அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை?

1. இயேசு கிருத்து யூத மதத்தில் பிறந்தவர். அவருடைய சீடர்கள் அனைவரும் யூத மதத்தில் பிறந்தவர்கள்.

2. யூத மதம் மேசியாவாகிய ஒரு அரசரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

3. அந்த மேசியாவாகிய அரசன் யூதா கோத்திரத்தில் பிறப்பார் என்பது பழைய ஏற்பாட்டிலுள்ள தீர்க்க தரிசனங்களின் வெளிப்பாடு.

4. இயேசு கிருத்து யூதா கோத்திரத்தில் பிறந்த யோசேப்பின் மகன் என்று அறியப்பட்டார்.

5. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கூறியுள்ள தீர்க்கதரிசனங்கள் இயேசு கிருத்துவில் நிறைவேறியதாக நம்பினார்கள்.

6. அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, இயேசு கிருத்து கொலை செய்யப்பட்டாலும், அவர் திரும்ப உயிரோடு எழுந்தது மட்டுமல்லாமல், திரும்பவும் வருவார் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

7. இதனால், அவர் இறந்ததற்கும், திரும்பவும் உயிர்த்தெழுந்தமைக்கும் நாங்கள் சாட்சிகள் என்று அவர்கள் உறுதியாக எந்தத் தடையையும் பற்றிக் கவலைப்படாமல் சாட்சி கூறினார்கள்.

8. அவர் கூறிச் சென்றபடி, இரண்டாம் வருகையில் அவர் திரும்ப வரக் காத்திருக்கின்றார்கள்.

9. இந்தக் காத்திருத்தலே இன்று வரை வழிவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

10. இதன்படி இன்றும் அந்த நிலை போதிக்கப்பட்டு வருகிறது.

11. இன்று மொத்த பைபிளையும் கையில் வைத்திருப்பவர்களே பரலோக இராசியத்திற்கும் பூலோக இராசியதிற்கும் வேறுபாடு தெரியாமல் போதித்துக் கொண்டிருக்கையில், பைபிள் முழுமையாக உருவாகாத அந்தக் காலத்தில் சீடர்களால் புரிந்து கொள்ள இயலாமல் இருந்ததில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

சீடர்களால் அறிய முடியாதிருந்த இரண்டு காரியங்கள்:

1. இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்த யோசேப்பிற்குப் பிறந்தவர் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதாவது இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.

2. பூலோகத்தில் பரலோக இராஜ்யத்தை உருவாக்க வந்த கடவுளின் மகனே இயேசு கிருத்து என்பதையும் அவர்கள் அறிந்து இருக்கவில்லை. அதாவது பரலோக இராஜ்ஜியம் பற்றி அவர்களுக்குத் தெரியாது.

இவை இரண்டையும் இயேசு கிருத்துவின் சீடர்களால் ஏன் அறிய முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

இயேசுவின் இரண்டாம் வருகை (7) - இரண்டாம் வருகை ஏன் நிறைவேறவில்லை?


இயேசு கிருத்து கூறியதும், அப்போஸ்தலர்கள் எதிர்பார்த்ததும், பவுல் திட்டமாக எதிர்பார்த்ததுமாகிய இரண்டாம் வருகை அவர்களுடைய வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஏன் நிறைவேறவில்லை? என்னும் கேள்வி எழுகின்றது.

அவர்களுடைய வாழ்நாளில் நிறைவேறாதது மட்டுமல்லாமல், இப்பொழுது ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னமும் நிறைவேறவில்லை.

இதுவரை அவர் வந்து விடுவார் என்று நம்பி, அவர் சொல்லி இருந்த அடையாளங்களைக் கணக்கிட்டு, இந்த நேரத்தில் வந்து விடுவார் என்று நம்பிக் காத்திருந்த பல கூட்டத்தினர் ஏமாற்றமடைந்த வரலாறுகள் இருக்கின்றன. இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இயேசு கிருத்து ஏன் இப்படிச் செய்தார்?

பொய் சொல்ல அவர் மனிதரல்ல. அவர் கூறியது நிச்சயம் நடந்திருக்க வேண்டும். இரண்டாம் வருகை இன்னமும் நிறைவேறவில்லையா? அல்லது நிறைவேறி விட்டதை சீடர்கள் அறியாமல் போனார்களா? என்னும் கேள்விகள் எழுகின்றன.

யூத இன மீட்பரா? உலக மீட்பரா?

பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை அடிப்படையாகக் கொண்டு, யூதருடைய இராச்சியத்தை மீட்டு அவர்களுக்குக் கொடுக்க வந்த யூத அரசனாகிய கிருத்துதான் இயேசு கிருத்துவா? அல்லது உலக மக்களை மீட்க்க வந்த உலக மீட்பராகிய அரசனாகிய கிருத்துவா? என்னும் கேள்வி இப்பொழுது எழுகின்றது. இயேசு கிருத்து தம்மை உலக மீட்பராகிய கிருத்து என்று அவருடைய சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஆனால் அவர்களோ யூத மீட்பராகிய கிருத்து என்று புரிந்து கொண்டார்களே தவிர, உலக மீட்பராகிய கிருத்து என்பதை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதை அவருடைய வாழ்நாளில் நடந்த நிகழ்ச்சிகளே நமக்கு விளக்குகின்றன.

மத்தேயு 16 ஆம் அதிகாரத்தில் 13 முதல் 28 வரையுள்ள வசனங்கள் கூறும் நிகழ்ச்சி இதைத் தெளிவுபடுத்துகின்றது.

" அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்." (மத் 16 : 22-23)

இயேசு கிருத்துவோ தம்மை உலக மீட்பராக விளக்குகிறார். சீடர்களோ அவரை யூத இன மீட்பராகப் பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு விருப்பமான நிலை. அவர் தம்மை உலக மீட்பராக விளக்கினாலும், சீடர்கள் அவரை யூத இன மீட்பராகவே பார்த்தமைக்குக் காரணம் அவருடைய இராஜ்யத்தைப் பற்றி அவர்களால் புரிய இயலாமையேயாகும்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

இயேசுவின் இரண்டாம் வருகை (6) - சீடர்களின் அப்போஸ்தலர் பட்டமும் பவுலும்


சீடர்களின் அப்போஸ்தலர் பட்டமும் பவுலும்:

இயேசு கிருத்துவின் சீடர்கள் பன்னிருவர். யூதாஸ் காரியோத்து இறந்தமையால், அந்த இடத்திற்கு மத்தியா தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த அப்போஸ்தலர் பட்டம் மற்றவர்களுக்குக் கிடையாது என்றும், இந்த பன்னிருவருக்கு மட்டுமே உரியது என்றும், அவர்கள் நம்பினார்கள் என்பதை அப்போஸ்தலர் முதலாம் அதிகாரம் 21 முதல் 26 வரை நாம் பார்கின்றோம்.

பவுல் போன்றவர்கள் இந்தப் பட்டத்திற்கு உரியவர்கள் அல்லர் என்றும், இதனால் இவர்கள் தங்களை அப்போஸ்தலர் என அழைத்துக் கொள்ளக் கூடாது என்றும் செயல்பட்டனர் என்பது,

"அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; (வெளி. 2:2)

என்னும் வசனத்தால் விளங்குகிறது.

ஆயினும் பவுலைப் பற்றி அனனியாவுக்குக் கூறப்பட்ட செய்தி:

அதற்குக் கர்த்தர்: "நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்." என்றார். (அப். 9:15)

என்பதாகும். ஆகவே, பவுலைப் பன்னிருவருடன் ஒப்பிடுவது பொருத்த மற்ற ஒன்றாகும். அவர் இயேசுவால் சிறப்பாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பதை உள்ளத்தில் வைத்தல் வேண்டும்.

உடனே இரண்டாம் வருகை என நம்பினர்:

இசுரவேலருக்கு இராச்சியத்தைக் கொடுக்கும் இரண்டாம் வருகை, இயேசு கிருத்து உயிர்த்தெழுந்து, பரலோகம் சென்று, சிறிது காலத்திலேயே இருக்கும் என்று சீடர்கள் உறுதியாக நம்பினார்கள். காரணம், இயேசு கிருத்து சிலுவையில் அடிக்கப்படும் முன்பே, இதைப் பற்றித் தெளிவாகக் கூறி இருந்தார். எவ்வாறு?:

"இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." (மத்.16:28, மாற். 9:1)

"அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று." (யோவான் 21:21-23)

இந்த வசனங்களின்படி, அவருடைய சீடர்களில் சிலர் வாழுங்காலத்திலேயே இரண்டாம் வருகை நிகழ்ந்து விடும் என்பது தெளிவாக இயேசு கிருத்துவால் கூறப்பட்டு உள்ளது.

இதனால் தங்கள் வாழ்நாளிலேயே தாங்கள் இரண்டாம் வருகையைப் பார்க்கப் போகின்றோம் என உறுதியாக நம்பினார்கள். பவுல் இதைக் குறித்து

"இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்." - (1 கொரி. 15:51)

"பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்." (1 தெச. 4:17)

என்று எழுதி உள்ளார்.

பவுலுடைய வாழ்நாளிலேயே இரண்டாம் வருகை நடைபெறப் போவதாக அவர் உறுதியாக நம்பினார். இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகை, தாமதமான பொது இன்னமும் நடைபெறவில்லையே, தாமதமாவது ஏன்? என்று கேட்கிறவர்களுக்கு பேதுரு

"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2பேது. 3:9)

என்றும்

"தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்;" (2பேது 3:12)

என்றும் எழுதி உள்ளார்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

இயேசுவின் இரண்டாம் வருகை (5) - யூதரல்லாத மற்ற புறஜாதியார்களின் நிலை என்ன?


இரண்டாம் வருகையில் யூதரல்லாத மற்ற புறஜாதியார்களின் நிலை என்ன?

யூதரல்லாத புறஜாதியாருக்கு நற்செய்தி அறிவிக்கும்படி பேதுருவுக்குக் காட்சியளித்து, ஆவியானவராலும் அறிவுறுத்தப்பட்டு, கொர்நெலியு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அங்கு பேதுரு பேசிய பொழுது புறஜாதியார் பரிசுத்த ஆவியைப் பெற்றதைக் கண்டு பேதுருவுடன் சென்ற யூதர்கள் பிரமித்தார்கள் என்பது அப்போஸ்தலர் 10 ஆம் அதிகாரத்தில் விளக்கப்படுகிறது.

"பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்." - (அப்.10 : 46)

இயேசு கிருத்து யூதருக்கு இராச்சியத்தைக் கொடுக்கும் பொழுது "புறஜாதியாரின் நிலை என்ன?" என்னும் கேள்வி இப்பொழுது எழுகின்றது.

இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையில் புரஜாதியினர் யூதருக்குச் சமமானவர்களாக இருக்க இயலாது. யூதர்கள் மோசேயின் நியாயப் பிரமாணத்தைப் பின்பற்றுகிறவர்கள்.

புறஜாதியாருக்கு அந்த நிலை கிடையாது. அவர்கள் யூதர்களின் ஆட்சியின் கீழ் வாழ வேண்டியவர்கள். அதனால் அவர்கள் யூதரைப் போன்று மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றவோ, விருத்தசேதனம் பெறவோ வேண்டியதில்லை என்றும், பொதுவான சில கட்டளைகளைப் பின்பற்றினால் போதும் என்றும் முடிவெடுத்ததை அப்போஸ்தலர் 15 ஆம் அதிகாரத்தில் பார்க்கின்றோம்.

இதனால் 1,44,000 பேர் இசுரவேலரில் ஆட்டுக் குட்டியானவருக்கு ஊழியக்காரராக முத்திரையிடப்பட்ட பொழுது, புறஜாதியார் யாருக்கும் ஊழியக்காரர்களாக முத்திரை போடப்படவில்லை. ஆனால்,

"சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்." - (வெளி. 7:9)

என்று கூறப்படுவதில், இரண்டாம் வருகையில் புறஜாதிகளுக்குப் பங்கு உண்டு; ஆனால் அது இரண்டாந்தரக் குடிமக்களுக்குண்டான உரிமை என்று விளக்கப்படுகிறது.

இதையே பவுல்,

"இசுரவேலரை நல்ல ஒலிவ மரத்தின் சுபாவக்கிளை" என்றும், "புறஜாதியாரை, காட்டு ஒலிவ மரக்கிளை" என்றும் வேறு பிரித்து விளக்குகின்றார். (ரோ. 11 : 13-24)

பிலதெல்பியா சபைக்கு யோவான் எழுதும் பொழுது

"யூதரில்லாதிருந்தும், தங்களை யூதரென்று பொய் சொல்லுகிற சாத்தானுடைய கூட்டம்" (வெளி. 3:9)

என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்தில் அச்சபையில் யூதர்கள் உயர்ந்தவர்கள் என்றும், புறஜாதியார் யூதர்களுக்குச் சமமானவர்கள் அல்லர் என்னும் கருத்தும் வெளிப்படுகிறது.

"இதோயூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்" (வெளி. 5:5)

என்று இயேசு கிருத்து யூதா கோத்திரத்தைச் சேர்ந்த யோசேப்பிற்குப் பிறந்தவர் என்று கூறப்படுகிறது.

ஆகவே, இரண்டாம் வருகையை எதிர்பார்த்தவர்கள் யூதர்கள். இயேசு கிருத்து யூத இனத்தில் பிறந்தவர் என்று நம்பப்பட்டமையால், யூத இராச்சியத்தில் புறஜாதியார்களாகிய கிருத்துவர்கள் யூத கிருத்துவர்களால் அரவணைக்கப்படக் கூடிய இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படத்தக்கவர்களே தவிர, யூதர்களுக்குச் சமமாக நடத்தப்படும் உரிமையுடையவர்கள் அல்லர் என்னும் கருத்து அவர்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்தது.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

இயேசுவின் இரண்டாம் வருகை (4) - இரண்டாம் வருகையை எதிர்பார்த்தல்


அவர் உயரே எடுத்துக் கொல்லப்பட்ட பின்னர் தேவதூதர், "அவர் எவ்வாறு மேலே போனாரோ அவ்வாறே மறுபடியும் வருவார்" என்று கூறியமையால் அவருடைய இரண்டாம் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தொடங்கினர்.

"கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்."(அப்.1:11)

அவர் இரண்டாம் முறை விரைவில் வரப்போகிறார் என்று நம்பிய சீடர்கள், அவர் வந்து இசுரவேல் இராச்சியத்தை மீட்டு ஆளும் பொழுது, உடன் இருந்து பன்னிரண்டு கோத்திரங்களையும் ஆளுவதற்குப் பன்னிரண்டு சீடர்கள் உரிமையுடையவர்களாய் இருப்பதால், தற்கொலை செய்து கொண்ட யூதாஸ் காரியோத்துக்குப் பதிலாக மத்தியா என்பவரைத் தேர்ந்து எடுத்து 12 என்னும் எண்ணை நிறைவு செய்தார்கள்.

" பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்." - (அப். 1 : 26)

இவர்களுடைய 12 கோத்திரம் என்பது யாக்கோபின் பிள்ளைகள் 12 பேரையும் குறிக்கிறது என்பதை வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்துகிறது. (வெளி. 7: 5 - 8)

இதையே நம்பி மக்களுக்குப் போதித்தார்கள்.இதனால், யோவானுடைய வெளிப்படுத்துதல் நூலிலும் சீடர்கள் பன்னிருவருடைய சிறப்பு பற்றிக் கூறப்பட்டு உள்ளது.

"வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.  நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன." (வெளி. 21: 13-14)

யூத மதத்திலிருந்து கிருத்துவத்திற்கு வந்த யூதர்கள், இயேசு கிருத்துவின் முதல் வருகையில் கொடுக்காத இசுரவேல் இராச்சியத்தை இரண்டாம் வருகையில் கொடுக்கப் போவதாக உறுதியாகப் போதித்தார்கள்.

ஆனால் கிருத்தவர் அல்லாத மற்ற யூதர்கள் இயேசு கிருத்துவை அவர்கள் எதிர்பார்த்த கிருத்துவாகிய மேசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால், கிருத்துவர் அல்லாத யூதர்கள் இன்று வரை யூத அரசனாகிய கிருத்து இன்னமும் வரவில்லை என்றும், இனிமேல் தான் யூத அரசனாகிய கிருத்து வரப்போகின்றார் என்றும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

ஆகவே,

1. யூத மதத்தைச்சேர்ந்த யூதர்கள், யூத அரசனாகிய கிருத்துவின் முதல் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

2) கிருத்துவ மதத்தைச் சேர்ந்த யூதர்களும், அவர்களைப் பின்பற்றிய புற ஜாதிக் கிருத்தவர்களும் யூத அரசனாகிய கிருத்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டு இருக்கும் யூத அரசனாகிய கிருத்துவின் முதல் வருகை இயேசு கிருத்துவில் நிறைவேறிவிட்டது என்று பழைய ஏற்பாட்டுத் தீர்க்க தரிசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் கடமையை கிருத்தவர்களாகிய யூதரும், கிருத்தவ யூதர்களைப் பின்பற்றும் புற ஜாதிக் கிருத்தவர்களும் இன்று வரை செய்து வருகின்றார்கள்.

ஆகவே இரண்டாம் வருகை என்பது யூதா கோத்திரத்தில் பிறந்த, யூத இனத்தைச் சேர்ந்த யூதனாகிய இவ்வுலக அரசனை எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பே ஆகும்.

யோசேப்புக்குப் பிறந்த யூதா கோத்திரக் கிருத்து:

இதனால், இரண்டாம் வருகையை எதிர்பார்த்த பேதுருவும், யோவானும், பவுலும், இயேசு கிருத்து யூதா கோத்திரத்தைச் சேர்ந்த யோசேப்புக்குப் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்தவர் என்று நம்பியமையை நாம் பார்க்கின்றோம். இவ்வாறு நம்பியமையே அவர்கள் இரண்டாம் வருகையை எதிர்பார்த்தமைக்கு அடிப்படை ஆகிறது. இந்த நம்பிக்கைக்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

1. பேதுரு - அப். 2:30
"உன் சிங்காசனத்தில் வீற்று இருக்க மாம்சத்தின் படி உன் (தாவீது) சந்ததியிலே கிருத்துவை எழும்பப் பண்ணுவேன்."

2. பவுல் - ரோமர் :1:5
(இயேசு கிருத்து) மாம்சத்தின் படி தாவீதின் சந்ததியில் பிறந்தவர்.

3. யோவான் - வெளி.22:16
நான் (இயேசு கிருத்து) தாவீதின் வேரும் சந்ததியும்...

அவர்கள் எதிர்பார்த்த இரண்டாம் வருகை இசுரவேலரின் அரசியல் மீட்புக்காக இருப்பதாக எண்ணப்பட்டதே தவிர, உலக மக்களின் ஆன்ம மீட்புக்காக அன்று.

அதனால், அவருடைய இரண்டாம் வருகையில் பங்குள்ளவர்களாகிய ஊழியக்காரர்களாக முத்திரை போடப்பட்டவர்கள் இசுரவேல் புத்திரர் 12 கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்திலும் 12 ஆயிரம் பேர் வீதம் மொத்தம் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் என்று குறிக்கப்படுகிறது. (வெளி. 7:3-8)

"அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது. ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்." (வெளி. 14: 3-4)

இங்கே "ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள், கற்புள்ளவர்" என்று கூறப்படுவன கடவுள் மனிதனைப் படைத்த பொழுது ஒருவன் ஒருத்தியாக வாழ்ந்ததைப் போன்ற வாழ்க்கை உடையவர்கள் என்பதையும், யூத மதத்தில் பல மனைவியரை மணந்து ஒருவன் ஒருத்தியாக வாழாமல் கற்பு நெறி தவறி, பல மனைவியருடன் வாழ்ந்ததைப் போன்ற வாழ்க்கை இல்லாத கிருத்தவர்களாகிய, ஆட்டுக்குட்டியானவரின் ஊழியக்காரர்கள் என்று கூறுவதையும் குறிக்கின்றன.

ஆக, இரண்டாம் வருகையில் "இசுரவேலருக்கு இராச்சியமும், இசுரவேல் இராச்சியத்தை ஆளும் ஆட்டுக்குட்டியானவரும், ஆட்டுக்குட்டியானவரின் ஊழியக்காரர்களாகிய ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் இசுரவேலரும் சிறப்புக்குரியவர்களாக இருக்கின்றனர்" என்பது விளக்கப்படுகிறது.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

இயேசுவின் இரண்டாம் வருகை (3) - யூத மதம்

முந்தையப் பகுதி

யூத மதம்:

இசுரவேலராகிய சமாரியர் ஆட்சியை இழந்து துன்புற்று இழிவடைந்த காரணத்தால், யூதர்கள் தங்கள் நாட்டையும், தங்கள் ஆட்சியையும், தங்கள் மதத்தையும் மிகவும் உயர்ந்தவையாகவும், தாங்களே தங்கள் தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியவர்கள் எனவும் நம்பத் தொடங்கினர்.

தங்கள் நாடாகிய யூத நாடும், தங்கள் மதமாகிய யூத மதமும், தங்கள் கோவிலாகிய எருசலேம் கோவிலும் தங்கள் தெய்வத்தால் என்றும் அழியாமல் நிலையாகப் பாதுகாக்கப்படும் என்று உறுதியாக நம்பி, மற்றவர்களை இழிவாகவும் மற்ற வழிபாடுகளை இகழவும் தொடங்கினர். அதாவது ஆணவ நிலையின் உச்சத்தை அடைந்தனர்.

இந்த நிலையில் பாபிலோனில் இருந்து வந்த படை ஒன்று யூதர் நாட்டை வென்று, யூதர் தேவாலயத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, யூத வாலிபர்களைக் கைதிகளாக அடிமைப்படுத்தி கி.மு586 இல் பாபிலோனுக்குக் கொண்டு சென்றது.
யூதர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் தவிடு பொடியாகி, எஞ்சி இருந்த யூதர்கள் மிகவும் மனவேதனையில் இருந்தனர். அந்த நேரத்தில் அவர்களுடைய மனவேதனையைக் குறைக்கவும் மாற்றவும் தீர்க்கதரிசிகள் உருவாயினர்.

தாவீதின் கோத்திரத்தில் ஒரு வீர அரசன் தோன்றுவான்; அவன் யூத நாட்டையும் யூத மதத்தையும் யூதக் கோவிலையும் திரும்பவும் மிகச் சிறப்புகுரியனவாக எழுப்புவான் என்று யூத மக்களுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டினர். யூதர்களின் தெய்வம், யூதர்களின் எழுச்சிக்கு ஏற்ற வாக்குத்தத்த வாக்கியங்களைக் கொடுத்திருப்பதாகக் கூறி யூதர்களுடைய தளர்ச்சியிலிருந்து அவர்களுக்கு எழுச்சியை ஊட்டினர்.

பாபிலோனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையால், அடிமைப்படுத்தப்பட்ட யூதர்களுக்கு விடுதலை கிடைக்கத் தொடங்கியது. விடுதலை அடைந்தவர்கள் படிப்படியாகப் பெருகி, கி.மு 516 இல் திரும்பவும் எருசலேமின் கோவிலையும், எருசலேமின் மதிலையும் கட்டத் தொடங்கினர்.

யூத நாட்டிற்கும், யூத மதத்திற்கும், எருசலேமின் வழிப்பாட்டிற்கும் புத்துணர்வு கொடுக்க முயன்றனர்.

ஆயினும் பழைய பெருமைக்குரிய நிலையை அடைய வேண்டுமானால், எதிரி அரசர்களை எல்லாம் வீழ்த்தி ஆட்சி அமைத்த தாவீதைப் போன்ற பெரு வீரனாகிய அரசனைத் தங்கள் தெய்வம் தங்களுக்காக எழுப்புவார் என்று நம்பிச் செயல்பட்டு வந்தனர். இந்த நம்பிக்கை யூத மத நம்பிக்கையாக மாறியது.

இவரே யூத அரசனாகிய கிருத்து:

யூத மதத்தில் இயேசு கிருத்து பிறந்தார்;வளர்ந்தார்; இவரே யூதர்கள் எதிர்ப்பார்த்த யூத அரசனாகிய மேசியா என்று சிலர் நம்பத் தொடங்கினர். அவருடைய சீடர்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்ததை நாம் புதிய ஏற்பாட்டில் பார்க்கின்றோம்.

இயேசு கிருத்துவின் காலத்தில் யூத நாட்டை ஆண்டவர்கள் ரோமர்கள்.

யூத அரசனாகிய கிருத்து ரோம ஆட்சியாளர்களை வென்று, யூத இராச்சியத்தைத் திரும்பவும் நிலைநாட்டுவார் என்று யூத மதத்தினர் முழுமையாக நம்பினர்.

இயேசு கிருத்துவின் சீடர்கள் அனைவரும் யூத மதத்தில் பிறந்தவர்கள். ஆகையால் இயேசு கிருத்துவின் செயல்பாடுகளைப் பார்த்து இவரே யூத அரசனாகிய கிருத்து என்று முழுமையாக நம்பத் தொடங்கினர்.

யூத அரசனாகிய கிருத்துவின் முதல் வருகை:

இயேசு கிருத்துவே யூதர்கள் எதிர்பார்த்த கிருத்துவாகிய மேசியா என்று இயேசு கிருத்துவின் சீடர்கள் முழுமையாக நம்பியமையால், இயேசு கிருத்து ரோமர்களை விரட்டி யூத இராச்சியத்தை நிறுவும் பொழுது அவருடைய சீடர்களாகிய தாங்கள் பன்னிருவரும் பன்னிரு கோத்திரங்களாகிய இசுரவேலின் மொத்த மக்களையும் ஆளும் நிலையை அடைவோம் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு.

இதனால் இயேசு கிருத்து ஆளும் பொழுது சீடர்களின் யார் முக்கிய பொறுப்பில் இருப்பது என்பது பற்றி அவர்களிடையே போட்டி இருந்ததையும் நாம் பார்க்கின்றோம்.

இந்த நிலையில், அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத முறையில் இயேசு கிருத்து சிலுவையில் அறையப்பட்டுக் கொலை செய்யப்பட்டது அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. எம்மாவூருக்குச் சென்றுக் கொண்டிருந்த சீடர்களின் உரையாடல் இதை வெளிப்படுத்துகிறது.

"அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம் இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது." - லூக்கா 24:21

ஆயினும், இயேசு கிருத்துவின் உயிர்த்தெழுதல் சீடர்களுக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தது. உயிர்த்தெழுந்த கிருத்து இசுரவேல் இராச்சியத்தை ரோமர்களிடமிருந்து மீட்டுக் கொடுத்து விடுவார் என நம்பினர்.

ஆனால், இயேசு கிருத்துவின் விண்ணேற்றம் அவர்களுக்குக் கேள்விக் குறியை ஏற்படுத்தியது. அதனால் அவர் விண்ணேற்றத்தை அடையும் பொழுது கூடி வந்திருந்தவர்கள்,

"அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்." - (அப். 1:6)

என்று கேட்டார்கள். அப்பொழுது அவர் கொடுத்த பதிலை அவர்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலவில்லை.
தொடரும்...!!!

அடுத்தப் பகுதி
பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

இயேசுவின் இரண்டாம் வருகை(2) - இசுரவேலர் மதம்!!!

முந்தையப் பகுதி

உலகம் முழுவதிலுமுள்ள கிருத்தவர்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். பலர் இரண்டாம் வருகையின் நாள் இது தான் என்று குறித்து ஏமாற்றமடைந்த வரலாறுகளும் இருக்கின்றன. இதன் அடிப்படைக் காரணம் என்ன? என்பதைப் பைபிளின் அடிப்படையில் நோக்குவோம்.

கிருத்துவர்களை பைபிள் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கிறது.

1. யூதக் கிருத்தவர்கள்
2. புற ஜாதிக் கிருத்தவர்கள்.

இயேசு கிருத்து யூத மதத்தில் பிறந்தவர். இதனால் கிருத்துவை ஏற்றுக் கொண்டு முதலில் கிருத்தவர்கள் ஆனவர்கள் யூதர்கள். யூதக் கிருத்தவர்கள் தங்கள் நம்பிக்கையை யூதரல்லாத மற்ற புற ஜாதி மக்களிடையே பரப்பினார்கள். இதனால், பின்னர் புற ஜாதிக் கிருத்தவர்கள் உருவானார்கள்.

இதனால் புற ஜாதிக் கிருத்தவர்கள் யூதக் கிருத்தவர்களின் நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகின்றார்கள். இன்று உலகம் முழுவதிலுமுள்ள கிருத்தவர்கள் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், இது யூதக் கிருத்தவர்கள் கற்றுக் கொடுத்த எதிர்பார்ப்பே ஆகும்.

யூதக் கிருத்தவர்களுக்கு இந்த நம்பிக்கை எவ்வாறு வந்தது என்றால் யூதர்களுடைய வேதமாகிய பழைய ஏற்பாட்டில் இருந்து வந்தது ஆகும்.

பைபிள் முக்கியமாக மூன்று மதங்களின் நம்பிக்கைகளை விளக்குகிறது. அவை,
1. இசுரவேலர் மத நம்பிக்கை
2. யூதர் மத நம்பிக்கை
3. கிருத்துவ மத நம்பிக்கை
ஆகும்.

இசுரவேலர் மதம்:

இசுரவேலர் 12 கோத்திரத்தினர். இசுரவேல் என அழைக்கப்பட்ட யாக்கோபு தம் குடும்பத்தைப் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றிய யோசேப்பின் மக்கள் இருவரையும் இசுரவேல் கோத்திரங்களில் சேர்த்துக் கொண்ட காரணத்தால் இசுரவேல் கோத்திரத்தார் எண்ணிக்கை 13 ஆனது.

இந்த 13 கோத்திரத்தாரும் எகிப்தியர்களால் அடிமைப்படுத்தப்பட்டுத் துன்புற்றக் காலத்தில், இசுரவேலரை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து கானான் நாட்டுக்கு வழி நடத்தியவர் மோசே.

கானான் நாட்டை வென்று இசுரவேலருக்கு அந்நாட்டைப் பிரித்துக் கொடுத்தவர் யோசுவா.

கானான் நாட்டில் வாழ்ந்த இசுரவேலரைத் திறமையாக ஆட்சி செய்து, கூடாரங்களை ஆலயமாக வைத்திருந்த நாடோடி நிலையிலிருந்து, எருசலேமில் ஆலயம் கட்ட வழி வகுத்தவர் தாவீது.

தாவீதின் மகனாகிய சாலமோன் எருசலேமில் தேவாலயத்தைக் கட்டினார். சாலமோனின் மகன் ரெகொபெயாம் காலத்தில் இசுரவேல் நாடும் இசுரவேல் மதமும் இரண்டாக உடைந்தன.

13 கோத்திரங்களில், அரசாண்ட யூதக் கோத்திரமும், பென்யமின் கோத்திரமும், ஆசாரியராயிருந்த லேவி கோத்திரத்தில் ஒரு பகுதியும் ஆகிய இரண்டரை கோத்திரத்தார் எருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூத நாட்டில் தங்கினர்.

இசுரவேலரின் வழிபாட்டிடங்களில் வழிபடக் கூடாது. எருசலேம் கோவிலில் மட்டுமே பலி இட வேண்டும். மற்ற இசுரவேலர் வழிபாட்டிடங்களில் பலியிடக் கூடாது என்னும் கட்டுப்பாடுகளுடன், யூத மதத்தைத் தோற்றுவித்தனர். யூத மதத்தின் உயிர்நாடி எருசலேம் கோவில் ஆயிற்று.

யூத அரசனாகிய ரெகொபெயாமிடமிருந்து பிரிந்து சென்ற பத்தரைக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பழைய வழிபாட்டிடங்களான பெத்தேல், மிஸ்பா, சீனாய், கில்கால், சீகேம், எபனேசர் முதலிய இடங்களில் பலியிட்டு இசுரவேலர் மதத்தைத் தொடர்ந்து பின்பற்றியதுடன், எருசலேமுக்குப் பதில் சமாரியா பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு இசுரவேல் நாட்டை ஆளத் தொடங்கினர்.

யோசுவா கானான் நாட்டை வென்று, பிரித்துக் கொடுக்கும் பொழுது, 13 கோத்திரங்களில் லேவி கோத்திரத்திற்குப் பங்கு கொடுக்கவில்லை. ஆலயத்தில் பணி செய்யும் பொறுப்புக் கொடுக்கப்பட்டு, தசமபாகம் லேவிக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் 12 கோத்திரம் என்று கூறும் வழக்கம் மீண்டும் வந்தது என்பது இங்கே நினைவு கூரத்தக்கது.

நாடு இரண்டாகப் பிரிந்த பின்னர், "யூத நாடு" என்னும் பெயரும், "யூத மதம்" என்னும் பெயரும் இசுரவேலர் வரலாற்றில் புதிதாகத் தோன்றின.

சமாரியா பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இசுரவேலரை, சமாரியர் என்றும், இசுரவேலரின் வழிபாட்டைச் சமாரியர் வழிபாடு என்றும் யூத நாடினர் அழைக்கலாயினர்.

சமாரியர் நாடு கி.மு. 721 இல் அசீரியர்களால் பிடிக்கப்பட்ட பின்னர், சமாரியர்களாகிய இசுரவேலரும், சமாரியர் வழிபாடாகிய இசுரவேலர் வழிபாடும், யூத இனத்தவராலும், யூத மதத்தவராலும் அலட்சியமாகவும் இழிவாகவும் நோக்கப்பட்டனர்.

சமாரியர் வழிபாட்டிடங்களாகிய இசுரவேலர் வழிபாட்டிடங்களில் சில, யூத மதத்தைச் சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டதுடன், சமாரியர்களாகிய இசுரவேலரை, இசுரவேல் மதத்தில் இருந்து யூத மதத்திற்கு மாற்றும் முயற்சிகளும் அது முதல் மேற்கொள்ளப்பட்டன. இயேசு கிருத்து இவ்வாறு மதம் மாற்றுகிறவர்களைப் பற்றியே மத்.23 : 15 இல் குறிப்பிடுகின்றார்.

இதனால், இசுரவேலராகிய சமாரியர்கள் இழிவானவர்கள் எனவும், யூதர்கள் உயர்வானவர்கள் எனவும் எண்ணுகின்ற மனப்போக்கு யூதர்களிடையே வளர்ந்தது. இதனால் இசுரவேலர் மதம் அழியும் நிலையை அடைந்து, யூத மதம் சிறப்படையும் நிலை உருவானது.

இந்த நிலைகளுக்குக் காரணம் இசுரவேலர் ஆட்சியை இழந்தமையும், யூதர்கள் ஆட்சியில் இருந்தமையுமே ஆகும்.

தொடரும்...!!!

அடுத்தப் பகுதி

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

வியாழன், 10 ஏப்ரல், 2014

இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் (புனித தோமா வழிப் பார்வை) -1!!!

நான் கிருத்துவ சமயத்தினைச் சார்ந்தவன் அல்ல!!!

இதனை இங்கே நான் முதலில் கூறிக் கொண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. நான் சமயத்தால் ஒரு இந்து. ஆனால் இன்று அனைத்துச் சமயங்களும் அரசியல் கருவிகளாக மாறி அவற்றிற்கும் இறைவனுக்கும் சரி ஆன்மீகத்திற்கும் சரி சிறிதும் தொடர்பற்று இருக்கும் இந்நிலையில் ஒரு சமயத்தினைச் சார்ந்தவனாக என்னை அடையாளம் காட்டிக் கொள்வதனை விட 'நான் ஒரு இறை நம்பிக்கையாளன்' என்றே என்னை அடையாளம் காட்டிக் கொள்வது நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். ஆனால் அதிலும் பிரச்சனை இருக்கத் தான் செய்கின்றது. இறை நம்பிக்கையாளன் என்றால் எந்த கடவுளை நீ நம்புகின்றாய் என்ற கேள்வியினை நாம் எதிர் கொண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு பதிலாக 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்' என்றே நாம் விடையினை அளித்தாலும் அதனை பலர் ஏற்றுக் கொள்வது கடினம். காரணம் மக்கள் பல்வேறாக பிரிந்து இருக்கின்றனர்...பல்வேறு சமயங்கள் இருக்கின்றன...அச்சமயங்களிலேயே பல பிரிவுகள் இருக்கின்றன...அவைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டுக் கொண்டே வேறு இருக்கின்றன. இந்நிலையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றே நாம் பொதுவாக கூறினோம் என்றால் நிச்சயம் அதனை ஏற்றுக் கொள்வது என்பது கடினமான ஒன்றாகத் தான் இருக்கும்.

எனவே இந்நிலையில் இறை நம்பிக்கையாளராக விளங்கும் நம் மீது நம்மையும் நமது சமயங்களையும் நன்கு ஆராய்ந்து பார்த்து, நாம் உண்மையாகவே சரியான கருத்தில் தான் இருக்கின்றோமா...நமது சமயம் உண்மையாகக் கூறுகின்ற கருத்துக்களை நாம் அறிந்து இருக்கின்றோமா?...உலகில் உள்ள சமயங்கள் கூறுகின்ற கருத்துக்களும் நமது சமயக் கருத்துக்களும் வேறுபட்டவையா அல்லது அவை அனைத்தும் ஒரே கருத்தினைத் தான் கூறுகின்றனவா என்றும் நாம் ஆராய்ந்துப் பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் அனைத்துச் சமய நூல்களையும் அவற்றின் வரலாற்றையும் அறிந்துப் பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

அதனை ஒரு ஆன்மீகத் தேடல் பயணம் என்றும் கூறலாம்...வரலாற்றுப் பயணம் என்றும் கூறலாம். எனதும் அப்படிப்பட்ட ஒரு தேடல் பயணம் தான். எனது தேடலில் நான் உண்மை என்று கண்டவற்றை இவ்வலைத்தளத்தின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு வருகின்றேன். காரணம் அக்கருத்துக்களும் விடயங்களும் நிச்சயமாக மக்களால் அறியப்பட வேண்டியவைகள் என்றும் அறிந்து விவாதிக்கப்பட வேண்டியவைகள் என்றும் நான் எண்ணுவதே ஆகும். இப்பொழுது தொடங்கப் போகும் இப்பதிவும் அப்படிப்பட்ட ஒன்றே.

பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

எச்சரிப்பின் பகுதி:

"நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று (மத் 7: ) இயேசு கூறுகின்றார். யாரைப் பார்த்து?

"கர்த்தாவே; கர்த்தாவே; உமது நாமத்தினாலே தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா?
உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா?
உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?" (மத் - 7 :22 )


என்றுக் கூறும் ஊழியக்காரர்களைப் பார்த்து.

அதாவது அவர் நாமத்தினாலே ஊழியம் செய்யும் ஊழியக்காரர்களைப் பார்த்து இயேசு கிருத்து இவ்வாறு கூறுவது ஏன்?

இது ஊழியக்காரர் பலரால் புரிய முடியாத கேள்வி.
ஏன்?
இந்த ஊழியங்களை இவர்களுக்குக் கொடுத்ததே இயேசு கிருத்து தான்.

"இயேசு கிருத்து தம்முடைய (சீடர்களை) ஊழியக்காரர்களைத் தம்மிடத்தில் வரவழைத்து அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்." (மத் - 10 :1)

நோய்களையும் பேய்களையும் நீக்கும் அதிகாரத்தைக் கொடுத்த கர்த்தர், அவர் நாமத்தினாலே அவர் கொடுத்த ஊழியத்தைச் செய்கிறவர்களைப் பார்த்து "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே; என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று கூறுவது எந்த விதத்தில் நியாயமானது என்னும் கேள்வி எழுகின்றது.

அவருடைய ஊழியக்காரர் அப்படி என்ன அக்கிரமத்தைச் செய்தார்கள்? என்பதைக் குறிப்பிடாமல் அவர்களை நோக்கி, "அக்கிரமச் செய்கைக்காரரே; என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று கூறுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்னும் எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.

அதாவது அவர் கொடுத்த ஊழியமாகிய, அவர் நாமத்தால் பிசாசுகளைத் துரத்தலும், அவர் நாமத்தால் தீர்க்கதரிசனம் உரைத்தலும், அவர் நாமத்தால் அநேக அற்புதங்களைச் செய்தலும் அக்கிரமச் செய்கையா? என்னும் கேள்விகள் எழுகின்றன.

இவற்றிற்கு விடைகாண இயேசு கிருத்து இவற்றிற்கான அதிகாரத்தைக் கொடுத்த பின்னணியைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மத்தேயு 10 ஆம் அதிகாரத்தின் 7 ஆம் வசனம் இந்த அதிகாரத்தை அவர் தம் ஊழியக்காரர்களுக்குக் கொடுத்தது ஏன் என்பதற்கான காரணத்தைக் கூறுகிறது.

போகையில் "பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கியுங்கள் என்னும் கட்டளையைச் சொல்லுகிறது. அவருடைய கட்டளையை அவர்கள் நிறைவேற்றச் செல்லும் பொழுது, தங்குவதற்கும், உணவுக்கும், உடுத்துவதற்கும் ஆகும் செலவுகளுக்காக எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று (மத் 10 : 9-10 ) கட்டளையிட்டதுடன், "வேலையாள் தன் ஆகாரத்திற்குப் பாத்திரமாவான்" (மத் 10: 10) என்றும் தெரிவித்து உள்ளார்.

இயேசு கிருத்து தம் சீடர்களுக்குக் கொடுத்திருக்கும் வேலையும், அந்த வேலையைச் செய்வதற்கான கூலியாகத் தங்குமிடம் முதலியன கிடைப்பதற்குரிய வாய்ப்பாக வரங்களைக் கொடுத்ததுடன்

"இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்" (மத் 10 :8 ) என்றும் கூறி உள்ளதை நாம் பார்கின்றோம்.

இந்தப் பகுதியில் முக்கியமாக நடைபெற வேண்டிய வேலையையும், அந்த வேலை தடையில்லாமல் நடைபெறுவதற்கு, வேலை செய்கிறவர்களுக்குக் கூலியாகக் கிடைக்க வேண்டிய வசதிகளுக்காக வரங்களும் கொடுக்கப்பட்டுள்ள நிலை விளக்கப்பட்டு உள்ளது.

இந்த விளக்கத்தின்படி,

"பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று அனைத்து இடங்களிலும் பிரசங்கம் செய்வதற்கு வாய்ப்பாக வரங்கள் கொடுக்கப்பட்டன என்பதை நாம் அறிகின்றோம். ஆனால் அந்த ஊழியக்காரர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வெளியாகிய பரலோக இராஜ்யத்தைப் பற்றியும், அதை அறிவிக்கும் முறைகளைப் பற்றியும் சிறிதும் சிந்திக்காமல், வசதிக்காகக் கொடுக்கப்பட்ட வரங்களைப் பயன்படுத்தி வசதியாக வாழ்ந்தமையால், அவர்களுடைய வாழ்க்கை முறை அக்கிரமச் செய்கை என்று கண்டிக்கப்படுவது நமக்கு விளங்குகிறது.

இன்றும் ஊழியக்காரர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிற, இத்தகைய வரங்களையும் மற்ற வரங்களையும் பெற்றவர்கள், பரலோக இராஜ்யம் பற்றி எண்ணிப் பார்க்க இயலா நிலையில் பூலோக இராஜ்யம் பற்றிய சிந்தனையிலேயே வாழ்கின்றவர்களை நாம் பார்க்கின்றோம். இவர்களை இயேசு கிருத்து "அக்கிரமச் செய்கைக்காரர்களே, அகன்றுப் போங்கள்" என்று கூறும் நிலை இன்றும் இருப்பதைக் காணுகின்றோம்.

அதாவது 'பரலோக இராஜ்யம்' பற்றி அறிய விரும்பாமலும், அதைப்பற்றிப் பிரசங்கிக்க விரும்பாமலும், தங்களுக்குக் கிடைத்துள்ள வரங்களால் கிடைக்கும் வசதி வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தும் பூலோக இராஜிய ஊழியக்காரர்கள் அக்கிரமச் செய்கைக்காரர்கள் என்று இன்றும் கண்டிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இது மட்டுமன்று, பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு, ஊழியக்காரர் என்று உரிமை பாராட்டும் அனைவருக்கும் இது ஒரு எச்சரிப்பின் பகுதியாகும்.

இந்த எச்சரிப்பின் பகுதியைப் பின்னணியாகக் கொண்டு இயேசு கிருத்து தெளிவாகக் கூறியுள்ள பரலோக இராஜ்யத்தைப் பற்றியும், பரலோக இராஜ்யம் வரக் காரணமான இரண்டாம் வருகையைப் பற்றியும் பைபிளைப் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தில் கூர்ந்து ஆராய்வோம் வாருங்கள். "பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று இயேசு கிருத்து பிரசங்கிக்கக் கூறியபடி பரலோக இராஜ்யம் கேட்டவர்களுக்குச் சமீபமாக வந்ததா?

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் ஊழியக்காரர்கள் இப்படித்தான் மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ண வேண்டுமா? அல்லது பரலோக இராஜ்யம் இயேசு கிருத்து கூறி இருந்தபடி வந்துவிட்டது. ஆனால் நாம் அதை அறிய முடியாமல் இருக்கின்றோமா?

இப்பொழுது எப்படிப் பிரசங்கிக்க வேண்டும்? என்று இயேசு கிருத்து விரும்புகின்றார் என்பதை அறிந்துக் கொள்ள பைபிளை ஆராய்வோம் வாருங்கள்.

"எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்; பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" (1 தெச. 5 :21 : 22)

தொடரும்...!!!

அடுத்தப் பகுதி

பி.கு:

இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

சனி, 5 ஏப்ரல், 2014

இது காதல் காலமடி…!!!

நீண்டப் பிரிவினை
ஒரு இரவு வாழ்த்துகள் குறுஞ்செய்தியின்
வாயிலாக முடித்து வைக்கிறாய்….!!!
*
முறைத்துக் கொண்டே இரவு வெளியேற
சிரித்துக் கொண்டே மீண்டும் பூக்கின்றது
ஒரு காதல் காலம்…!!!
*
ஆம்…சில இரவு வாழ்த்துகள்
இரவுக்கான வாழ்த்துகள் அல்ல தான்..!!!
 **************************
அத்தனைக்கும் ஆசைப்பட்டவாறே
உலகைப் பயணித்தவனுக்கு
அத்தனையுமான உலகாய் நீ மாறிப்போனதில்
நிச்சயம் காதல் எங்கோ ஒளிந்துக் கொண்டு தான் இருக்கின்றது…!!!
 *******************************
காதல் என்றால்
ஆண் பெண் வேதியல் மாற்றம்
என்று வெற்று அறிவியல் பேசிக்கொண்டிருந்தவனை
நான் நீ என்பதை விடுத்து
நாமாக்கி புன்னகைக்க வைத்த தருணத்தில்
காதல் அவனை தத்து எடுக்கத்தான் செய்து இருந்தது…!!!
*
தொலைவில் திருமூலர் இசைத்துக் கொண்டிருந்தார்…
மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை…!!!
*
மெய் தான்…
காதலை மறைத்தது நான் என்ற ஒன்று
காதலில் மறைந்தது நான் என்ற ஒன்று…!!!

திங்கள், 17 மார்ச், 2014

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - இறுதிப்பகுதி!!!

இந்தியா என்பது என்றுமே ஒரே நாடாக இருந்தது இல்லை என்றும் அதனுள் பல்வேறு இனத்தவர் வசித்து வந்தனர் என்றும் அவர்களின் இடையே பல்வேறு அரசியல்களும் நிலவி வந்தன என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம் ராஜீவ் அவர்களே...!!! அதனை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே எண்ணுகின்றேன்.

அப்பேர்பட்ட ஒரு நாட்டினை ஆள்வது என்பது எளிதான காரியம் கிடையாது என்பதனை நிச்சயம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஒரே இன மக்கள் வசிக்கும் நாட்டினை ஆள்வதற்கே பலர் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கும் பொழுது பல்வேறு இனங்கள் மற்றும் பல்வேறு நம்பிக்கைகள் ஒருங்கே விளங்கிக் கொண்டு இருக்கும் ஒரு நாட்டினை முழுமையாக ஆள்வது என்பது அரசியலில் மிகுந்த அனுபவம் மிகுந்தவர்களுக்கு கூட ஒரு சவாலான காரியம் தான்.

நிலைமை அவ்வாறு இருக்கும் பொழுது தற்செயலாக தங்களின் தாயாரின் மரணத்திற்குப் பின்னர் அரசியலினுள் நுழைந்த உங்களின் கைகளில் இந்தியா போன்றதொரு மாபெரும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பு வந்து சேர்ந்த பொழுது அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள தகுதியானவராக இருந்து இருப்பீர்களா என்றால் இல்லை என்பதே உண்மையான விடையாக இருக்கும்.

நிச்சயமாய் இந்தியா போன்ற ஒரு தேசத்தினை ஆளும் பக்குவம் உங்களுக்கு அன்று இருந்து இருக்காது. இந்திய அரசியல் எவ்வாறு இருக்கின்றது...உங்களது தாயார் விட்டுச் சென்ற பணிகள் யாவை? நமது அயல் உறவுக் கொள்கைகள் என்ன? நாடு சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள் என்ன? என்பதனை எல்லாம் அறிந்துக் கொண்டு சுய முடிவினை எடுக்கும் தன்மை ஒரு மனிதனுக்கு காலத்தினாலும் அனுபவத்தினாலும் மட்டுமே வருமே அன்றி பதவியினை ஏற்ற நொடியிலே வந்து சேராது.

ஆனால்இந்திய நாட்டினை ஆள்வது என்ற மிகப்பெரிய பொறுப்பு உங்களின் கைகளில் வந்துச் சேர்ந்த பொழுது உங்களுக்கு அத்தகைய அனுபவம் வாய்க்கப் பட்டு இருக்கவில்லை என்பதனை நீங்கள் உணர்ந்தே தான் இருப்பீர்கள். அந்நிலையில் நிச்சயமாய் நீங்கள் உங்களைச் சுற்றி இருந்தவர்களின் உதவினை நாடி இருக்கத்தான் செய்வீர்கள். அதுவும் குறிப்பாக உங்களின் தாயின் உடனேயே இருந்தவர்களைத் தான் நீங்கள் நம்பி இருப்பீர்கள். உங்களின் கட்சி ஆட்களை நீங்கள் நம்பி இருப்பீர். அவர்கள் உங்களுக்கு நன்மையைத் தான் செய்வர்...நன்மையானவற்றைத் தான் சொல்வர் என்றே தான் நீங்கள் நம்பி இருப்பீர். அது தானே இயற்கை.

இந்த அடிப்படையிலேயே தான் என்னால் உங்களது ஈழத்தைக் குறித்த நடவடிக்கைகளைக் காண முடிகின்றது.

எந்த ஒரு பெரிய தேசத்திற்கும் ஒரு  நோய் இருக்கின்றது. அவைகள் பெரும்பாலும் மற்ற தேசங்களை அடக்கி ஒடுக்கி வைத்து தான் வல்லரசாக வேண்டும் என்ற கனவுகளையே கொண்டு விளங்குகின்றன...மாறாக நல்லரசாக வேண்டும் என்ற எண்ணம் அவைகளிடையே பெரும்பாலும் எழுவதே இல்லை.

அந்த நோய் இந்தியாவிற்கும் இருந்து இருப்பதில் நமக்கு ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான். நூறு கோடி மக்கள் தொகை...அள்ள அள்ள குறையாத இயற்கை வளம்..போதாதா வல்லரசுக் கனவுக் காண்பதற்கு. எனவே நீங்களும் வல்லரசுக் கனவினைக் கண்டத்தில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான்.

பலம் வாய்ந்த தேசம் இருக்கின்றது. வல்லரசுக் கனவும் இருக்கின்றது. அண்டை நாடுகளுக்கு இடையே பிரச்சனையும் இருக்கின்றது. வல்லரசுக் கனவினை நனவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் கண் முன்னே விரிந்து இருக்கின்றது. இவை போதாதா உங்களைக் கனவுக் காண வைக்க....மனிதனுள் இருக்கும் இயல்பான வல்லரசு நாட்டின் தலைவன் என்ற ஆசையை வளர்க்க...!!!

ஆனால் அந்த ஆசையினைக் கொண்டு தங்களை தவறான வழியில் வழி நடத்தியதினால் தான் ஈழத்தில் உங்களது அமைதி காக்கும் படை புரிந்த படுகொலைகள் நிகழ்ந்தன என்றே நான் கருதுகின்றேன். இதனை மெய்ப்பிக்கும் படியாகவே

"எனக்கு அந்த (ஈழ மக்கள்) போராட்டம் பற்றி சரியாக ஏதும் தெரியவில்லை. திடீர் என்று ஆட்சியில் அமர்ந்த நிலையில் பக்கத்தில் இருந்தவர்களின் ஆலோசனையின் படி அப்படி முடிவு எடுக்க வேண்டியதாக போயிற்று. உங்களின் பிரச்சனை எனக்குத் தெரியவில்லை. அதனால் அங்கு தமிழர்களுக்கு பாதகமான சில முடிவுகளை எடுத்து விட்டேன். இப்பொழுது தான் எனக்கு எல்லாம் புரிகிறது. மீண்டும் நான் பிரதமராக வருவேன்.அப்பொழுது உங்களின் போராட்டத்திற்கு துணையாக உறுதியாக நிற்பேன்" என்று நீங்கள் உங்களை வந்து சந்தித்த ஈழப் பிரதிநிதிகளான கவிஞர் காசி ஆனந்தனிடமும் சச்சிதானத்தினிடமும் நீங்கள் இறப்பதற்கு ஒண்ணரை மாதங்களுக்கு முன்னர் கூறியது இருக்கின்றது. ( பார்க்க : புத்தகம் - ராஜீவ் காந்தி தூக்கு கயிற்றில் நிஜம் பக்கம் 205)

மேலும் இந்து நாளேட்டிலும்

"கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்துவிடுவோம்...நமது உறவில் புதிய அத்தியாயத்தை துவக்குவோம். எங்கள் இயக்கம் இந்தியாவிற்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என்று புலிகள் இராஜிவிடம் கூறினர். அவரும் இதற்கு முழுமையான ஆதரவு தெரிவித்தார். பிரபாகரனுக்குத் தனது வாழ்த்துக்களை கூறுமாறு தெரிவித்த ராஜீவ், போராட்டத்தை தொடர்ந்து நடத்துமாறும் தனது சார்பில் பிரபாகரனிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ராஜீவ் கூறிய கருத்துக்கள் உடனே பிரபாகரனுக்குத் தெரிவிக்கப்பட்டன. பிரபாகரனும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் இராஜீவை விடுதலைப் புலிகள் கொலை செய்து இருப்பார்கள் என்று கூறப்படுவதில் அடிப்படை இல்லை"

என்று 28.05.91 ஆம் தேதி வந்த கட்டுரை புலிகளைக் குறித்த உங்களின் பார்வை காலங்களில் மாற்றம் அடைந்து இருப்பதையும் புலிகள் உங்களுடன் சமாதானம் செய்வதற்கு தயாராக இருந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டிக் கொண்டு தான் இருக்கின்றது. ( பார்க்க : புத்தகம் - ராஜீவ் காந்தி தூக்கு கயிற்றில் நிஜம் பக்கம் 217)

நிலைமைகள் அவ்வாறு இருக்க உங்களை கொல்வதற்கு புலிகளுக்கு யாதொரு தேவையுமே இருந்து இருக்க வாய்ப்பு இல்லையே. அனைத்தும் நன்றாக சென்றுக் கொண்டிருந்த வேளையில் தங்களது இலட்சியத்தினை பின்னடைவிற்கு உள்ளாக்கும் எந்த ஒரு செயலையும் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் அளவிற்கு புலிகள் முட்டாள்கள் அல்ல என்பதனை நீங்கள் அறிந்தே தான் இருப்பீர்கள்.

இருந்தும் உங்களின் மரணத்திற்கு புலிகள் காரணமாக காட்டப்பட்டு உள்ளனர். பழி வாங்கும் நோக்கில் உங்களை புலிகள் கொலை செய்து விட்டனர் என்றே கருத்துக்களும் பரப்பப்பட்டு உள்ளன.

இது நிச்சயம் உங்களைக் குழப்பிக் கொண்டு இருக்கும் பல கேள்விகளுள் சிலவான,

1) ஏன் என்னுடன் வேறு ஒரு காங்கிரஸ் தலைவர் கூட மரணமடைய வில்லை?

2) எப்பொழுதும் என்னுடம் இருக்கும் பாதுகாப்பாளர் ஏன் அன்றைக்கு எனது அருகில் இல்லை?

3) என்னுடைய உயிருக்கு ஆபத்து அந்நிய நாடுகளின் வாயிலாக இருக்கின்றது என்று பாலஸ்தீன போராளி இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்த போதும் ஏன் அதற்கு உகுந்த கவனம் செலுத்தப்படவில்லை...ஏன் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை?

4) ஏன் என்னுடைய கொலை வழக்கை முடக்க எனது கட்சியே முயன்றது. ஏன் என்னுடைய மனைவியே எனது கட்சியின் தலைமையில் இருந்தும் உண்மையான குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க முழுமையாக முயற்சி செய்யாதது ஏன்?

5) அந்நிய நாட்டு உளவு அமைப்புகளுக்கும் சந்திராசாமி மற்றும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று தெரிந்தும் ஏன் விசாரிக்கவில்லை அவர்களை?

என்பனவற்றுடன் நிச்சயமாய் ஏன் விடுதலைப்புலிகளை உங்களின் மரணத்தோடு அனைவரும் தொடர்புபடுத்தினர் என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாக இருக்கும்.

அதுவும் ஏன் புலிகளின் இயக்கத் தலைவரான பிரபாகரன் அவர்கள் உங்களது மரணத்தை குறித்து 'அது ஒரு துன்பவியல் சம்பவம்' என்று மட்டுமே குறிப்பிட்டார் எனபதும் நிச்சயம் ஒரு கேள்வியாகத் தான் இருக்கின்றது. அதாவது உங்களை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்று அனைவருமே கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அவ்வியக்கத்தின் தலைவர் முதலில் 'உங்களின் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் உங்கள் கொலைக்கான விசாரணையில் அனைத்து வித உதவியும் செய்ய தயார்' என்று கூறி விட்டு பின்னர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 'அது ஒரு துன்பவியல் சம்பவம்' என்றுக் கூறி இருப்பது ஏன் என்று நாம் கண்டாகத் தான் இருக்கின்றது.

அதற்கு நாம் ஒரு சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. உங்களின் கொலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலர் ஈடுபட்டு ஆதாயம் அடைந்து இருக்கின்றனர் என்றே நாம் கண்டு வருகின்றோம். இந்நிலையில் உங்களை காங்கிரஸ் கட்சி கொலை செய்து விட்டது என்று ஒட்டு மொத்த பழியையும் காங்கிரசின் மீதும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் மீதும் சுமத்துவது சரியானதொரு செயலாக அமையுமா?

அமையாது தானே. காங்கிரஸ் கட்சியினைப் பிடிக்க அக்கட்சியினுள் உள்ள சிலர் செய்த சதிக்கு அவ்வியக்கத்தினை முழுமையாக குறைக் கூற முடியாது தானே.

இந்த அடிப்படையிலேயே தான் நாம் விடுதலைப்புலிகளின் இயக்கத்தையும் காண வேண்டி இருக்கின்றது. இராஜீவ் அவர்களே. எந்த ஒரு இயக்கத்திலும் பிளவுகளும் துரோகங்களும் இருக்கத் தான் செய்யும்...காரணம் அவை மனிதனுள்ளே இருக்கும் மிருகத்தினாலே தூண்டப்படுபவை. அந்த மிருகம் பெருன்பான்மை மக்களுக்கும் அடங்காது உலாவிக் கொண்டு தான் இருக்கின்றது என்பதனை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர். அந்த மிருகத்திற்கு இயக்கங்கள் தெரியாது...எங்கே பேராசை, பொறாமை, ஆசை, வெறி போன்றவைகளுக்கு இடம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அது சுதந்திரமாக உலாவும். இதனை நாம் வரலாற்றில் தொடர்ந்து கண்டுக் கொண்டு வந்து இருக்கின்றோம். காங்கிரசிலும் கண்டு இருக்கின்றோம். விடுதலைப்புலிகளின் இயக்கத்திலும் கண்டு தான் இருக்கின்றோம். அதைத் தான் நாம் சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.

மாத்தையா...இந்த பெயர் உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்குமா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை...ஆனால் நிச்சயம் இந்திய உளவுத்துறைக்கு அப்பெயர் பரிச்சயமாகத் தான் இருக்கக் கூடும்...காரணம் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த பொழுது புலிகளின் சார்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டு இருந்தது புலிகளின் தலைமையில் இரண்டாம் இடத்தில் இருந்த மாத்தையா தான்.

பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையா, இந்திய உளவுத்துறையோடு இணைந்துக் கொண்டு பிரபாகரனையும், பொட்டு அம்மானையும் கொலை செய்து விட்டு புலிகளின் தலைமையை பிடிக்க சதி செய்ததற்காகவும் கிட்டுவின் மரணத்திற்கும் காரணமாக குற்றம் சாட்டப்பட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் தூக்கிலிடப்பட்ட விடயம் உங்களுக்கு தெரியாமல் தான் இருக்கும். காரணம் இவை அனைத்தும் உங்களின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகும்.

புலிகளின் இயக்கத்தில் பிளவுகள் இருந்து இருக்கின்றது...புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் இந்திய உளவுத்துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்...உங்களின் மரணத்தில் இந்திய உளவுத்துறை ஒழுங்காக செயல்படாமலும் உண்மையை மூடி மறைக்கும் விதமாகவும் செயலாற்றி இருக்கின்றது...உங்களின் மரணத்தில் காரணமாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பொழுது பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவின் பெயர் சேர்க்கப்படாது இருந்து இருக்கின்றது...மேலும் முன்னரே பிரபாகரன் அவர்கள் மாத்தையாவால் கொலை செய்யப்பட்டு விட்டார் என்று இந்திய உளவுத்துறை கிளப்பி விட்ட கதைகள் வேறு வரலாறாய் நின்றுக் கொண்டு தான் இருக்கின்றது.

இதன் அடிப்படையில் கண்டோம் என்றால்...இந்திய உளவுத்துறையையும் மாத்தையாவையும் பயன்படுத்தி உங்களை கொலை செய்து விட்டு பழியை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் மீதும் பிரபாகரனின் மீதும் சுமத்துவது என்பது சாத்தியமானதொன்றாகவே தெரிகின்றது.

அதுவே தான் நடந்தும் இருக்கின்றது என்பதே எனது மனதில் புலப்படும் எண்ணமும் ஆகும் அய்யா...!!! மேலும் வெளிநாடுகளில் ஈழம் குறித்த தமிழ் போராளிகள் என்றாலே புலிகள் என்ற பெயர் தான் அறியப்பட்டு இருக்கின்றது. மாறாக அங்கே பல்வேறு போராளி இயக்கங்கள் இருந்து இருக்கின்றன என்பதனை அவர்கள் அறிய மாட்டார்கள். காரணம் ஒரு சிறு தீவினுள் நிகழும் பிரச்சனைகளும் பெரும்பாலும் பலருக்கு மெய்யான ஆர்வம் இருப்பதில்லை தான். ஆனால் இந்திய உளவுத்துறைக்கு அவ்வாறு இல்லை...தமிழ் போராளி இயக்கங்கள் பல இருக்கின்றன என்பது அதற்குத் தெரியும்...அந்த இயக்கங்களுள் பலவற்றை அது தனக்காக பயன் படுத்தியும் இருக்கின்றது என்பது வரலாறு.

இந்நிலையில் உங்கள் மரணத்தில் ஈழத்தைச் சேர்ந்த தமிழர்களை சூழ்ச்சியினால் பயன்படுத்தி விட்டு பழியினை புலிகளின் மீது சுமத்தி இருக்கின்றனர் என்றே எமக்குத் தோணுகின்றது. உங்களுக்கும் அவ்வாறே தோணும் என்றே நினைக்கின்றேன் அய்யா...காரணம் உங்களின் மரணத்தினால் புலிகள் அடைந்த இலாபம் என்பது ஒன்றும் இல்லை என்றே நாம் வரலாற்றில் கண்டு இருக்கின்றோம்.

உண்மையில் உங்களது மரணத்தினால் ஆதாயம் அடைந்தது இந்தியாவில் உள்ள சிலரும்...உங்களின் கட்சியில் உள்ள சிலரும்....வெளிநாடுகளுமே அன்றி விடுதலைப்புலிகள் அல்லர்.

உங்களின் மரணத்தை சிறிது உன்னிப்பாக அறிவினைக் கொண்டு காண்பவர்களுக்கே இவ்விடயம் புலனாகும் பொழுது இது வரை இந்த விடயத்தினை உங்களின் கட்சியினரே...ஏன் நீங்கள் காதலித்து கைப்பிடித்து இன்று உங்களால் உங்களின் கட்சிக்கு தலைவராக இருக்கும் உங்களின் மனைவியுமே காணாமலும் அதனைக் குறித்து மேலும் ஆராயாமலும் இருப்பது நிச்சயம் உங்களுக்கு புதிராகத் தான் இருக்க கூடும் ராஜீவ் அவர்களே...!!!

மகாபாரதத்தில் ஒரு பகுதி உண்டு...ஊரினைச் சுற்றிப் பார்க்க தர்மனும் துரியோதனனும் செல்வார்களாம்...தர்மன் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு ஊரில் அனைவரும் நல்லவர்களாக இருக்கின்றனர் என்றுக் கூறுவான்...துரியோதனனோ ஊரில் அனைவரும் கள்வர்களாக இருக்கின்றனர் என்றுக் கூறுவான். அக்கதையின் முடிவு மனிதர்கள் நாம் கொண்டு இருக்கும் பார்வையின் படியே இருக்கின்றனர் என்பது ஆகும்.

இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் நான் காதலையும் மணவாழ்வையும் தூய்மையானதொன்றாக கருதுபவன் இராஜீவ் அவர்களே...அதனைக் குறித்து சந்தேகங்கள் எழுவதை கேவலமாக கருதுபவன். எனவே தான் நான் உங்களின் காதலையும் மெய்யானதொன்றாகவே காணுகின்றேன். இருந்தும் "அந்நிய நாட்டின் தலைவரின் வாரிசுகள் எங்களின் நாடுகளுக்கு படிக்க வந்தால்...அவர்களை எங்களின் வலையில் சிக்க வைக்க அனைத்து முறைகளையும் கையாளுவோம்...அதில் பெண்களை விட்டு காதலிக்கச் செய்வதும் உண்டு..." என்று அமெரிக்கா மற்றும் மேற்கு உலகத்தின் முகத்திரையை கிழிக்கும் வேலையைச் செய்து கொண்டு வருபவர்களும் ஒருவரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள் கூறும் பொழுதுசிறிய சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை இராஜீவ் அவர்களே...!!! உங்களின் துணைவியார் இங்கே வந்ததிற்கு பின்னர் தான் உங்களின் தம்பியும் சரி அன்னையும் சரி...நீங்களும் சரி கொலை செய்யப்பட்டு இருக்கின்றீர்...உங்களின் கொலைக்கான உண்மையான குற்றவாளிகளை உங்களின் கட்சியின் தலைமையில் இருந்தும் உங்களின் மனைவி கண்டுப்பிடிக்க முயலாது இருக்கின்றார்...அவரிடம் உண்மைகளைப் பற்றி பலர் கூறியும் அதனைக் காணாது இருக்கின்றார்...இந்நிலையில் அவர் மேல் சிறிது சந்தேகம் வரத்தான் செய்கின்றது இராஜீவ் அவர்களே...!!! அதற்கு மன்னியுங்கள்...ஒருவேளை இந்த கணிப்பு தவறானதொன்றாக இருந்தால் நிச்சயம் என்னை நீங்களும் உங்களின் துணைவியாரும் என்னை மன்னித்தே ஆக வேண்டும்...!!!

எனது இந்த கணிப்பு தவறானதொன்றாக இருக்கும் என்றே நான் வேண்டிக் கொள்கின்றேன். ஏன் தெரியுமா இராஜீவ்...

உங்களின் மேல் நான் பாவப்படுகின்றேன்...ஆயிரமாயிரம் ஈழத் தமிழர்களின் மரணத்திற்காக தமிழகமே உங்களை வெறுக்கும் பொழுது நான் உங்களுக்காக வருந்துகின்றேன்.

தம்பியை இழந்தீர்...!!!
தாயை இழந்தீர்...!!!
உண்மையான நண்பர்கள் யார் என்று அறியாது சதிகாரர்களுடன் சகவாசம் கொண்டீர்...!!!
தவறான வழிகாட்டலால் பாவம் பல பெற்றீர்...!!!
இறுதியில் மரணமும் கொடூரமாக எய்தினீர்...!!!

உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்ற காதல் ஒன்றாவது மெய்யாக இருக்கும் என்றே நம்பி இருப்பீர்...அதற்காகவாவது உங்களின் காதலைக் குறித்த எனது சந்தேகம் பொய்யாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன் அய்யா!!!

நீங்கள் பலியாக்கப்பட்ட ஒரு பலி ஆடு இராஜீவ் அவர்களே...!!!


இதனை...

இந்தியாவில் இருந்து பிரிந்துக் போன ஆரியக் கூட்டத்தில் ஒருவர்களான சிங்களர்கள் இந்திய ஆரியர்களின் மீது சொந்தம் கொண்டாடுவதும்...

""12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும்" - இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம்."

இங்கே இருக்கும் ஆரியர்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுவதில் இருந்தும்...

""இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது. அங்கு நடந்தது இனப்படுகொலை அல்ல..." என்று காங்கிரஸ் தரப்புக் கூறுகின்றது.
"இலங்கையை போர் குற்றவாளியாக அறிவிக்க முடியாது..." இது பா.ஜ.க கட்சியினரின் கூற்று.

"இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்..." இது RSS இன் கூற்று.

போராடும் தமிழ் இளைஞர்களை 'தமிழ் பொறுக்கிகள்' என்று சு. சுவாமி வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்."


என்பனவற்றின் வாயிலாக நீங்கள் அறிந்துக் கொள்ளலாம் இராஜீவ்...!!!

இந்தியாவின் பூர்வீக குடியினரான தமிழருக்கும்...வந்தேறிகளான ஆரியர்களுக்கும் இடையில் நடக்கும் ஒரு யுத்தத்தில் நீங்கள் பலியாக்கப்பட்ட ஒரு பலிகடா இராஜீவ்...அவ்வளவே!!!

வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் எங்கள் உள்ளம்...உண்மையாக உங்களுக்காக வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றது.

இருந்தும் உங்களின் பெயரால் அழிக்கப்பட்ட தமிழ் இனம்...மீண்டும் வளரும் என்பதில் எவ்வித ஐயங்களும் இல்லை அய்யா...உலகின் முதல் இனம் எளிதில் அழியாது...!!!

முற்றும்...!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

2) ஈழத்தின் வரலாற்றினை அறிந்துக் கொள்ள
ஈழம் : முகப்புப் பக்கம்

3)  தொடர்புடைய இடுகைகள்
http://tamilthesiyam.blogspot.in/2011/08/raw-3.html
http://thiruvadiyan.blogspot.in/2006/10/blog-post_05.html
//http://www.outlookindia.com/article.aspx?204614// 
 - ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி

முந்தையப்பதிவுகள்:

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!!
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 2 !!!
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 3 - இந்தியா என்றொரு தேசம...!!!

ஞாயிறு, 2 மார்ச், 2014

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 3 - இந்தியா என்றொரு தேசம்!!!

உங்களது மரணத்தில் உண்மையான ஆதாயத்தினை அடைந்தது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் இங்குள்ள பிராமணர்கள் மற்றும் உயர் சாதியினருமே என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம். இருந்தும் உங்களது மரணத்துக்கான பழி தமிழ் இனத்தின் மீது சுமத்தப்பட்டு இருக்கின்றது. அது ஏன் என்பது உங்களுக்கும் கூட குழப்பமாகத் தான் இருக்கலாம். அக்குழப்பத்திற்கு விடையினைக் காண வேண்டும் என்றால் அதற்கு நாம் இந்தியாவினைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் சிறிது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு கேள்வி

அமெரிக்க கிருத்துவர்கள் இந்தியர்களா?

முட்டாள்தனமான கேள்வியாகத்தானே தெரிகின்றது. உண்மையும் அது தான். அமெரிக்க கிருத்துவர்கள் அமெரிக்கர்கள் ஆவார்களே அன்றி இந்தியர்கள் ஆக மாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் வந்து தங்கினாலும் அவர்கள் இந்தியர்கள் ஆக மாட்டார்கள். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நான் நம்புகின்றேன்.

இதன் அடிப்படையிலேயே நாம் சீரியக் கிருத்துவர்களைக் காண வேண்டி இருக்கின்றது. கி.பி நான்காம் நூற்றாண்டில் இன்றைய கேரளக் கடற்கரைக்கு வந்து சேர்ந்த சீரிய நாட்டினைச் சார்ந்த சீரியக் கிருத்துவர்கள் இன்று இந்தியர்களாக இருக்கின்றனர். அதுவும் உயர் சாதியினராக இருக்கின்றனர். அவர்கள் ஏன் அவ்வாறு இருக்கின்றனர் என்றக் கேள்விக்கு விடைத் தேடத் துவங்குவதில் இன்று இந்தியா சந்தித்துக் கொண்டு இருக்கும் பல பிரச்சனைகளுக்கும் விடைகள் கிட்டும் என்பதே எனது எண்ணம்.

இந்தியா என்பது என்றுமே ஒரே நாடாக இருந்தது இல்லை ராஜீவ் அவர்களே. இதனை நீங்கள் உங்களது தாத்தா எழுதிய கடிதங்கள் மற்றும் நூல்களை படித்து இருந்தீர்கள் என்றாலே சிறிது அறிந்து இருப்பீர்கள். பல்வேறு காலங்களில் பல்வேறு இனக்குழுக்கள் இன்று இந்தியா என்று இருக்கும் நிலப்பரப்பின் மீது போர் தொடுத்தோ அல்லது வணிகம் சார்ந்தோ அல்லது பிழைக்க வழி தேடியோ வந்து அங்கேயே குடி கொண்டே தான் இருந்து இருக்கின்றனர்.

அசோகனின் காலத்தில் அவனது ஆட்சிக்கு உட்பட்ட யவன அரசர்களைப் பற்றியக் குறிப்பு இருக்கின்றது. தெற்கே இன்று கேரளம் என்று வழங்கப்பெறும் கடற்கரையோரம் கிரேக்க குடி இருப்புகள், ரோம குடி இருப்புகள், யூத குடி இருப்புகள் மற்றும் அவர்கள் ஆட்சி புரிய வழங்கப்பட்ட இடங்கள் என்று பல்வேறு இடங்கள் இருந்ததை வரலாற்றில் நாம் அறியத் தான் முடிகின்றது.

மேலும் சத்திரியர்கள் என்று ஆரியப் பிரிவுகளில் ஒன்றாக அறியப்பெறும் பிரிவினைச் சார்ந்தவர்களான ராஜபுத்திரர்கள் என்பவர்களும் இந்தியாவிற்கு வெளியே இருந்து இங்கே வந்த நாடோடி இனத்தினைச் சார்ந்த சகர்கள் மற்றும் சித்தியர்கள் ஆகியோரின் வம்சாவளியினரே என்றே உங்களின் தாத்தா கூறி இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்தியா என்று இன்று வழங்கப்பெறும் நிலப்பரப்பினில் பல்வேறு இன மக்கள் ஆண்டு இருக்கின்றனர்...குடி ஏறி இருக்கின்றனர்...இங்கேயே நிரந்தரமாக தங்கியும் இருந்து இருக்கின்றனர். கிரேக்கர்கள் இருந்து இருக்கின்றனர்...ஈரானியர் இருந்து இருக்கின்றனர்...ரோமர்கள் இருந்து இருக்கின்றனர்...சீரியர்கள் இருந்து இருக்கின்றனர்...யூதர்கள் இருந்து இருக்கின்றனர்....இன்னும் பல்வேறு மக்கள் இருந்து இருக்கின்றனர். ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இவர்கள் அனைவரும் இன்று அவர்களாக இங்கே இல்லை. அதாவது...

இந்திய நிலப்பரப்பினில் வந்துத் தங்கிய யூதன் இன்று யூதனாக இல்லை...!!!
இந்திய நிலப்பரப்பினில் வந்து குடியேறிய கிரேக்கன் இன்று கிரேக்கனாக இல்லை..!!!
இந்திய நிலப்பரப்பினில் குடியேறிய சகர்கள் இன்று சகர்களாக இல்லை...!!!

அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற பெயரிலே ஒன்றாக இருக்கின்றனர். அதுவும் நீங்கள் நன்றாக அறிந்த வர்ணாசிரமத்தின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் பெரும்பாலும் உயர் சாதியினராக இருக்கின்றனர். அதே நேரம் இந்திய நிலப்பரப்பின் பூர்வீக குடியினரான பெரும்பான்மையினரான மக்கள் தாழ்த்தப்பட்டு சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றுமே வைக்கப்பட்டு இருக்கின்றனர். வியப்பாக இருக்கின்றது தானே.

இந்த சூழ்நிலையைப் பற்றி நீங்கள் மேலும் விரிவாக அறிந்துக் கொள்ள அமெரிக்காவின் வரலாறு உங்களுக்கு உதவக் கூடும்.

உண்மையில் அமெரிக்கா என்று ஒரு நாடோ அல்லது அமெரிக்கர்கள் என்ற ஒரு இனமோ கிடையாது என்பதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள் என்றே நம்புகின்றேன். அமெரிக்கா என்று இன்று வழங்கப்படும் நிலப்பரப்பினில் வாழ்ந்துக் கொண்டு இருந்த பூர்வீக மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களைக் கொன்று ஒடுக்கியப் பின்னர் அங்கு சென்று இடத்தினைப் பிடித்த ஐரோப்பிய மக்களே இன்று அமெரிக்கர்கள் என்று வழங்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் பிடித்த இடமே அமெரிக்கா என்றும் நீங்கள் அறிவீர்கள். இடத்தினைப் பிடித்த அந்நியர்களும் வந்தேறிகளும் அங்கே ஆட்சியினைப் பிடித்துக் கொண்டு இருக்கும் பொழுது மண்ணின் மைந்தர்களான மக்களின் நிலை என்னவென்று யாரும் அறியாத நிலை தான் அங்கே இருக்கின்றது.

அதே வரலாற்று நிகழ்வு தான் இங்கேயும் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இங்கே உள்ள மண்ணின் மைந்தர்களை செவ்விந்தியர்களைக் கொன்றது போல் யுத்தத்தினால் வெல்ல முடியாத நிலையில் சூழ்ச்சிகள் பல கையாளப்பட்டு வந்தேறிகளும் அந்நியர்களும் உயர் சாதியினராய் இருக்க மண்ணின் மைந்தர்களோ சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் வைக்கப்பட்டு அறியாமையில் இருக்கின்றனர்.

இந்த வரலாற்றினை நீங்கள் அறிந்தால் தான் ஏன் உங்களின் மரணத்தினையும் உங்களையும் சாக்காக வைத்து மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் தாழ்த்தப்பட்டும் அழிக்கப்பட்டும் கொண்டு இருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிய முடியும்.

தமிழர்கள் சிறப்பானவர்கள் ஐயா...!!!

உலகின் முதல் இனம் என்று இன்று பெரும்பாலும் உலகம் ஏற்றுக் கொள்ளும் ஒரு இனம் தமிழ் இனம். ஒரு காலத்தில் இந்திய நிலப்பரப்பு முழுமையுமே தமிழர்களே இருந்து வந்தனர் என்று அம்பேத்கர் அவர்கள் கூறியது வெறும் மிகையல்ல. அதற்கு சான்றாக இன்று சிந்து சமவெளி நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்று பல ஆராய்ச்சிகள் கூறுவதும் அங்கே தமிழர்களின் புகழ் பெற்ற ஊர்ப் பெயர்களான மதுரை, வஞ்சி, தொண்டி போன்றவை காணப்படுவதும் தமிழர்களின் பெருமைக்கும் அவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதற்கும் சான்றுகளாகும். ஏன் இந்திய நிலப்பரப்பு முழுவதையும் கிட்டத்தட்ட பிடித்த அசோகனின் காலத்திலும் தெற்கே பாண்டியர்களும் சோழர்களும் சுதந்திரமாய் ஆட்சி புரிந்துக் கொண்டு தானே இருந்தனர்.

அப்பேர்பட்ட தமிழர்கள் தாம் இன்று உங்களது பெயரினால் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவ்வாறு முக்கியமாக தமிழர்களை அழிக்கும் பணியை முன் இருந்து செய்பவர்கள் பிராமணர்கள் மற்றும் மலையாளிகள் என்பதையும் நீங்கள் அறிந்து இருக்கக் கூடும். காரணம் உங்களைச் சுற்றி பெரும்பாலும் அவர்கள் தானே இருந்து இருப்பர். அதனால் அவர்களை நீங்கள் அறிந்து இருக்கக் கூடும்.

அவர்கள் அவ்வாறு அழிக்க முயல வேண்டியக் காரணம் என்ன? தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதனாலா? தமிழர்கள் இருக்கும் வரை அவர்களால் அவிழ்த்து விடப்பட்டு இருக்கும் பொய்களும் புரட்டுகளும் சூழ்ச்சிகளும் என்றாவது உடைந்து அவர்களின் மேலாதிக்கம் உடைந்து விடும் என்ற அச்சத்தினாலா?

என்ற கேள்விகளுக்கு நாம் நிச்சயம் பதில் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது ராஜீவ் அவர்களே.

அதுவும் குறிப்பாக பிராமணர்கள் என்பவர்கள் வந்தேறிகள் என்று தமிழ் இனம் முழங்கிக் கொண்டு இருக்கும் பொழுது,

மலையாளிகள் என்று இன்று அழைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அந்நிய நாட்டினைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் (மேற்கு கடற்கரையோரப் பகுதியில் நிகழ்ந்த யூத குடியேற்றங்கள், கிரேக்க மற்றும் ரோம குடியேற்றங்கள், சீரியக் குடியேற்றங்கள் போன்ற அன்னியர்கள் இன்று கேரளா எனப்படும் பகுதியில் ஆட்சிகள் புரிந்ததை வரலாறு கூறிக் கொண்டு இருக்கும் பொழுது)

அன்னியர்கள் என்று வழங்கப்படும் அவர்கள் மண்ணின் மைந்தர்களாக அறியப்படும் தமிழர்களை அழிக்க முயல்வது எதனால் என்றக் கேள்வி உங்களுக்கு முக்கியமாக படுகின்றதோ இல்லையோ தமிழர்களுக்கு நிச்சயமாய் முக்கியமான ஒரு கேள்வியாகத் தான் இருக்கின்றது.

மேலும் பிராமணர்கள் தமிழ் இனத்தின் தலைவரான திரு.காமராஜர் அவர்களையும் கொல்ல முயற்சித்து இருக்கின்றார்கள் என்ற வரலாற்றையும் இங்கே உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

மேலும் ஆச்சர்யமாகத் தான் இருக்கின்றது...ஒரு மலையாளி எங்கே சென்றாலும் மற்றொரு மலையாளியை அழைத்துக் கொண்டு விடுவான் என்று மலையாளிகளின் ஒற்றுமையை பெருமையாக யூதர்களின் ஒற்றுமையைப் போல் பேசும் மக்கள் காலங்களில் தமிழகத்தின் மேற்கு கடற்கரையில் வந்து குடி அமர்ந்த யூதர்களையும் இன்றைய மலையாளிகளையும் ஏன் ஒற்றுமைப்படுத்தி பார்க்கவில்லை என்பது நிச்சயம் ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது.

சரி இருக்கட்டும். நீண்ட நெடிய வரலாற்றினை சுருக்கமாகப் பார்ப்பது என்பது கடினமான ஒரு செயல் தான் இருந்தும் தமிழர்களான நாங்கள் எதனால் உங்களின் மரணத்திற்கு காரணமாக காட்டப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம் என்பதனை அறிய இந்த வரலாறு தேவைப்படத் தான் செய்கின்றது.

இப்பொழுது எப்படி உங்களின் மரணத்திற்கு பழியினை தமிழ் இனம் சுமக்க நேர்ந்தது என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது....!!!

கடிதம் தொடரும்....!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...