ஆரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஜூன், 2013

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 9

சென்ற பதிவில் எவ்வாறு சோழர்கள் எவ்வாறு சூழ்ச்சிக்கு வீழ்ந்து இருக்கலாம் என்றே கண்டோம். இப்பொழுது இன்னொரு விடயத்தினை நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது. அது, இராச இராச சோழனின் காலத்தில் மக்களுள் வருணப் பாகுபாடுகளோ அல்லது பிறப்பால் ஏற்றத் தாழ்வு முறைகளோ இருந்ததா இல்லையா என்பதே அது.

இதனைக் குறித்து நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். என்னுடைய பார்வை இராச இராச சோழனின் காலத்தில் வருணப் பாகுபாடுகளோ அல்லது பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளோ தமிழக மண்ணில் இருந்ததில்லை என்பதே. இதனை நான் அத்தோழரிடம் கூறிய பொழுது அவர் ஏற்கவில்லை. அவர் அக்கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை கொண்டு இருந்தார்.

பின்னர் சில நாட்கள் கடந்தன...மீண்டும் அந்த நண்பரிடம் பேசும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது பேசுகையில் அவர் இராச இராச சோழனின் காலத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளோ அல்லது வருணப் பாகுபாடுகளோ இல்லாது இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றது என்றே கூறினார். அதற்கு அவர் கூறிய காரணம்,

இரு நாடுகள் இருக்கின்றன. இரண்டிலும் நூறு மக்கள் இருக்கின்றனர் என்றே வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஒரு நாட்டினில் திறமையின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். அதாவது நூறு பேரில் சண்டை இடும் திறமையும் வலிமையையும் ஒரு நாற்பது பேரிடம் இருக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். அந்த நாற்பது பேரினை வைத்துக் கொண்டு ஒரு படையினை ஒரு நாடு உருவாக்குகின்றது. மற்றொரு நாடோ பிறப்பின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்து படையினை உருவாக்குகின்றது. அதாவது நூறு பேரில் நாற்பது பேர் போர் செய்யும் குலத்தில் பிறந்து இருக்கின்றார்கள். அப்படிப் பிறந்த அவர்கள் அனைவருமே போர் செய்ய வல்லுனர்களாக இருக்க முடியுமா? வாத்தியார் பையன் மக்கு என்பதனைப் போல் அந்த நாற்பது பேரினில் பலர் போர் செய்யும் தகுதி இல்லாது தான் இருப்பர். அது தான் நியதி.

இந்நிலையில் இந்த இரண்டு நாடுகளும் போர் புரிந்தன என்றால் எந்த நாடு வெல்லும்? திறமையின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடா அல்லது பிறப்பின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடா?

திறமையின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடு தானே வெல்லும். இதனைக் கொண்டு பார்க்கும் பொழுது இராச இராச சோழன் பெற்ற வெற்றிகள் யாவையும் பிறப்பின் அடிப்படையில் அமைந்த படையினை வைத்து பெற்று இருக்க முடியாது. திறமையின் அடிப்படையில் படையினை அவன் வைத்து இருந்தான் என்றால் தான் அவ்வெற்றிகளை அவன் பெற்று இருக்க முடியும். எனவே இராச இராச சோழனின் காலத்தில் தமிழகத்தில் வருணப் பாகுபாடுகளோ அதன் தாக்கமான பிறப்பால் ஏற்றத் தாழ்வு முறைகளும் இல்லை என்றே நாம் கருத முடியும்.

இது தான் அவர் கூறியக் காரணம். சரியான காரணம் தானே. இப்பொழுது இந்தக் காரணத்தினைத் நாம் இன்னும் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது, ஆனால் அதனைப் பின்னர் காண்பது நலமாக இருக்கும் என்பதினால் இப்பொழுது சோழர்களுடன் நம் பயணத்தினைத் தொடரத் தான் வேண்டி இருக்கின்றது.

இராச இராசன் பிறப்பால் வேற்றுமைகளைக் காணும் அரசினை வைத்து இருந்தான் என்றால் அவன் பெற்ற வெற்றிகளை அவன் பெற்று இருக்க முடியாது, எனவே அவன் காலத்திலும் சரி அவனின் மகனின் காலத்திலும் அத்தகைய நடைமுறை அதாவது பிறப்பால் ஏற்றத் தாழ்வினைக் காணும் நடைமுறை தமிழ் மண்ணில் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே நாம் கருத முடிகின்றது அல்லவா. இதனை மெய்ப்பிப்பதனைப் போல் அவர்கள் காலத்தில் சோழ பேரரசின் புகழ் சிறந்து விளங்குகின்றது.

அதனைப் போலவே எப்பொழுது சாளுக்கிய சோழனாக குலோத்துங்கன், இறுதி சோழனான அதி இராசேந்திர சோழனின் மர்மமான மரணத்தினைத் தொடர்ந்து அரியணை ஏறுகின்றானோ அப்பொழுது இருந்து சோழர்களின் ஆட்சி வீழ்ச்சிப் பாதைக்குச் சென்று இருக்கின்றது.

சூழ்ச்சியினால் வந்த அரசன் வலுவான அரசனாக இருக்க முடியாது. அவனை வைத்துக் கொண்டு மற்றவர்கள் பல காரியங்களை செய்துக் கொள்ள முடியும். அரசன் நமது கைகளுக்குள் இருந்தால் நம் விருப்பப்படி அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்....ஆன்மீகத்திலும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்....என்ன சரி தானே.

அது தான் தமிழகத்தில் நடந்து இருக்கின்றது என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அரசனைக் கைக்குள் வைத்து இருந்தால் அவனை மட்டுமே கட்டுப் படுத்த முடியும், ஆனால் ஆன்மீகத்தினை கையில் வைத்து இருந்தால் யாரை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை ஆரியர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால் அரசனின் துணையுடன் ஆன்மீகத்தினை தங்களின் பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரு நாட்டினைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசனை வெல்ல வேண்டும். அதனைப் போன்று ஆன்மீகத்தை தங்களுக்கு உரிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களைக் கொல்ல வேண்டும். அது தான் தமிழக வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றது. சித்தர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணர்களை எதிர்த்த சித்தர்கள் காடுகளுக்குள் விரட்டப்படுகின்றனர். பின்னர் அதுவும் போதாதென்று உயிருடன் குகைகளுள் அடைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுக்கு 'ஜீவ சமாதி' அடைந்தார் என்று பட்டத்தையும் தந்து சிறப்பித்தனர் என்பது வரலாறு. மேலும் சிலரை உயிருடன் எரித்து விட்டு அவர் முக்தி அடைந்து விட்டார் என்றப் பட்டத்தையும் தந்து அவர்கள் கொலை செய்யப்பட்டதை மறைத்த செயல்களும் இங்கே நிகழத் தான் பெற்று இருக்கின்றன.


அதனைப் போன்றே இறுதி நாயன்மாரான நந்தனாரின் கொலையும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரின் கொலையும் நிகழப் பெற்று சைவ கோவிலின் தலைமையிடமான சிதம்பரமும், வைணவக் கோவிலின் தலைமையிடமான திருவரங்கமும் பிராமணர்களின் வசம் செல்லுகின்றது.

சோழர்களின் வீழ்ச்சியும், தமிழக கோவில்கள் பிராமணர்களின் கைகளின் செல்வதும் தற்செயலான செயல்களா அல்லது ஒரு மிகப் பெரிய சதியின் பகுதிகளா என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

சோழர்களின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து பாண்டியர்கள் சிறிது வலு பெறுகின்றார்கள். ஆனால் அவர்களும் என்ன செய்ய முடியும், நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம் ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பாண்டியர்களும் சிறிதுக் காலத்தில் வீழ்ச்சியினைத் தான் அடைகின்றனர்.

இக்காலத்தில் தான் பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது.


கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...

"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல் வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன் வகையறாவினரையும் விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க வைத்தான்" என்றே பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் என்ற நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

இதைப் போன்ற நிலை தான் பழனிக் கோவிலிலும் நிகழ்ந்து இருக்கின்றது என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மன்னராட்சிக் காலத்தில் அரசன் நமக்குத் துணை நின்றான் என்றால் நாம் கூறுவது தானே உண்மை. அவ்வாறே உண்மைகள் புனையப்படுகின்றன...தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இக்கொடுமைகளை எதிர்த்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், வீரர்கள் ஆகியோர் அனைவரும் தாழ்த்தப்படுகின்றனர். அவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைக்கு தாழப்பட்டவர்களாக இருப்பவர்கள். மேலும் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக மாற்றம் பெறத் துவங்கியது இக்காலத்தில் தான் என்பதும் சிலரும் கூற்று.

பிராமணர்களின் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்து அதிகாரங்களையும் செல்வங்களையும் பெற்ற தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்றே மாற்றப்பட்டார்கள். இன்றுக் கூட சைவ வைணவ மடங்களில் இருப்பவர்கள் பிராமண செல்வாக்கு உடனேயே இருப்பதும், சமசுகிருதத்தை மீறி தமிழ் வர கூடாது என்று இருப்பதும், அம்மடங்களில் குறிப்பிட்ட சாதியினரே இருக்கலாம் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதனையும் நாம் காணத் தானே செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காக அவர்களுக்கு பிராமணர்கள் கொடுத்த பட்டம் தான் சற்சூத்திரர். அதாவது சிறந்த அடிமைகள் என்றே பொருள் வரும்.

தமிழன் பிராமணனோ, சத்திரியனோ அல்லது வைசியனோ கிடையாது...அவன் சூத்திரன் அல்லது பஞ்சமன். அதன் அடிப்படையில் தான் பிராமணர்கள் தங்களுக்கு உதவிய தமிழர்களை சிறந்த அடிமைகள் என்ற பொருள் படி 'சற் சூத்திரர்' என்றும்...ஒன்றுமே செய்யாது இருந்த சாதாரண மக்களை அடிமைகள் என்னும் பொருள் படி 'சூத்திரர்' என்றும், அவர்களை எதிர்த்த தமிழ் அறிஞர்களை பஞ்சமர்கள் என்றும் பிரித்து வைக்கலாயினர்.

அரசனின் செல்வாக்கினைப் பெற்ற பிராமணர்களை மக்களால் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று. தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து அடிமைகளாயினர். கல்வியினைக் கண்ணாக மதித்து வந்த ஒரு சமூகம் அறியாமை இருளில் மூழ்கத் தொடங்கியது....இன்று வரை அது அவ்வாறு தான் இருக்கின்றது.

தொடரும்....!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 8

இராச இராச சோழன்!!!

என்ன தான் சொல்லுங்க... இந்தப் பெயரைக் கேட்ட உடன் ஒரு பெருமித உணர்ச்சி தமிழர்களுக்குள் வருவதனைத் தடுக்க முடியாது தான். காரணம் அவன் செய்த செயல்கள் அத்தகையவை. தமிழர்களின் புகழை மீண்டும் உலகறியச் செய்தவன் அவன்....செந்தமிழை வளர்த்தவன் அவன்...தமிழரின் பெருமையை நிலை நாட்டியவன் அவன்... என்று இராச இராச சோழனை கொண்டாடுவதற்கு இங்கே ஆயிரம் காரணங்களைக் கூறுவதற்கு ஆட்கள் இருக்கின்றனர்.

அதைப் போலவே அக்கூற்றுக்களை மறுப்பதற்கும் ஆட்கள் இருக்கின்றனர். அவர்களின் கூற்றின் படி இராச இராச சோழன் என்ற மன்னன் ஒரு பிராமண அடிவருடி என்றும் அவனின் காலத்தில் தான் தமிழர்களும் சரி பெண்களும் இழிவுப்படுத்தப் பட்டு அடிமைகளாயினர் என்றே அவர்கள் கருதுகின்றனர் என்று நமக்குப் புலனாகின்றது.

அட என்னடா இது...ஒரு தரப்பினர் இராச இராச சோழனை தமிழ் இனக் காவலனாகக் காணுகின்றனர்...அதே சமயம் அவனை மற்ற சிலரோ தமிழ் இனத்தினை இழிவுப் படுத்த வந்த ஒருவனாகப் பார்கின்றனரே..ஏன் இந்த முரண்பாடு என்ற எண்ணம் நிச்சயம் நம்முள் எழும்...அந்நிலையில் ஏன் அந்த முரண்பாடுகள் என்றக் கேள்விக்கு நாம் விடையினைத் தேடத் தான் வேண்டி இருக்கின்றது. இருந்தும் சாதி ஏற்றத் தாழ்வுகளைக் குறித்து நாம் கண்டுக் கொண்டு வரும் இத்தொடரில் அக்கேள்விக்கான விடையினைத் தேடுவது என்பது தொடர்பில்லாது சென்று விட வாய்ப்புகள் இருப்பதினால் அதனைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாகக் காண முயலலாம். இருந்தும் இராச இராச சோழனுக்காக அம்முரண்பாடுகளைக் குறித்து நாம் இங்கே சிறிது பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

௧) இராச இராச சோழன் பிராமண அடிவருடி என்றால்.... அவன் ஆட்சியில் கோவில்கள் அனைத்திலும் பிராமணர்களே இருந்து இருக்க வேண்டும்... ஆனால் உண்மை என்னவென்றால் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு பின்னர் அமைந்த விசய நகரப் பேரரசிலும் தான் கோவில்கள் பிராமணர்களின் கைவசம் செல்லுகின்றது. அது வரை கோவில்களில் தமிழர்களே இருந்து இருக்கின்றார்கள். மேலும் கோவில்களில் தமிழே ஒலித்து இருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் அவனை எவ்வாறு பிராமண அடிவருடியாக கருத முடியும்.

௨) இராச இராசன் தேவ அடியார்கள் முறையை அறிமுகப்படுத்தினான். அதன் மூலம் பெண்களைத் தாழ்த்தினான் என்ற ஒரு கூற்று இருக்கின்றது...

இக்கேள்விக்கு விடையினைக் காண நாம் பிரபாகரனையும் புலிகளையும் காண வேண்டி இருக்கின்றது. புலிகளில் பெண்களுக்கு என்று இடம் தனியே இருந்தது. அவ்வீர தமிழ் மகளிர் பெண் புலிகள் என்றே அழைக்கப்பட்டனர். புலிகளின் காலத்தில் அவர்களுக்கு நிச்சயம் சிறப்பான நிலை இருந்து இருக்கும்...ஆனால் அதே நிலை இன்று நிலவும் என்றா கூற முடியும்? இழிவான நிலைக்கு அவர்கள் சிங்களவர்களால் தள்ளப் பட்டு இருப்பார்கள் தானே. அதற்காக புலிகளின் காலத்திலேயும் பெண் புலிகள் இன்று இருந்த நிலையிலேயே இருந்தார்கள் என்றுக் கூற முடியுமா? அதே நிலையைத் தான் நாம் தேவ அடியார்கள் முறையிலும் காண வேண்டி இருக்கின்றது.

சமணசமயத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. அவள் அடுத்தப் பிறவியில் ஆணாக பிறந்தால் ஒழிய அவளுக்கு முக்தி கிடையாது. ஆனால் சைவ வைணவ சமயங்களிலோ பெண்ணுக்கு சிறப்பான இடம் இருந்தது. அவ்விடத்தை கோவிலிலும் கொண்டு வந்தவன் தான் இராச இராச சோழன். கோவில் என்பது இறைவனை நாம் நினைக்கும் இடம். அங்கே ஆணும் பெண்ணும் சமம் தான் என்று அவன் கொண்டு வந்த ஒரு திட்டம் தான் தேவ அடியார்கள் திட்டம். ஆனால் பிற்காலத்தில் தமிழர்களின் கோவில்களையும் சமயத்தினையும் ஆட்க்கொண்ட ஆரியர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய விசய நகரப் பேரரசின் மன்னர்கள் அத்திட்டத்தினை அவ்வாறே வைத்து இருப்பரா அல்லது அவர்களின் வசதிக்கேற்ப மாற்றி இருப்பரா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. (இதனைப் பற்றியும் விரிவாக வேறு பதிவில் காணலாம்)

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் இராச இராச சோழன் கோவிலினுள் பெண்களுக்கு இடம் கொடுத்து அவர்களின் நிலையை உயர்த்தினானே ஒழிய தாழ்த்தவில்லை. அப்பெண்களின் நிலை தாழ்த்தப்பட்டது விசய நகர பேரரசின் காலத்திலேயே ஆகும்.

௩) இராச இராசன் சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தான்...தமிழை அவன் வளர்க்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழன் உருவாக்கிய ஒரு மொழிக்கு தமிழன் முக்கியத்துவம் கொடுத்தது என்ன தவறு? மேலும் அவனின் காலத்தில் கோவிலுள் சமசுகிருதம் இருந்ததா இல்லை தமிழ் இருந்ததா? தமிழ் தானே இருந்தது. அப்படி இருக்க இராச இராசன் தமிழை வளர்க்கவில்லை என்று நாம் எவ்வாறு கருதுவது.

எனவே இராச இராச சோழன் பிராமண அடிவருடி என்பதற்கோ அவன் தமிழை வளர்க்க வில்லை என்பதற்கோ சான்றுகள்பெரிதாய் ஏதும் இல்லை. மேலும் இத்தலைப்பினைப் பற்றி நாம் பின்னர் விரிவாக காணலாம். இப்பொழுது நாம் மீண்டும் ஆதித்தக் கரிகாலனின் மரணத்திற்கு செல்ல வேண்டி இருக்கின்றது.

ஆதித்த கரிகாலன்...சோழர்களின் பட்டத்து இளவரசன். இவன் சதியால் கொலை செய்யப்பட்டு இருக்கின்றான் என்றே நாம் கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறிகின்றோம். பட்டத்து இளவரசனை யார் கொலை செய்வார்?

ஆட்சியினைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொலை செய்வார்கள். அந்நிலையில் ஆதித்த கரிகாலனைக் கொன்றால் நன்மை யாருக்கு வரும் என்று பார்த்தால் பொதுவாக அடிபடும் பெயர்கள் எவை என்றால்

குந்தவை
மதுராந்தகன்
இராச இராச சோழன்
பாண்டிய ஆபத்துதவிகள்

ஆச்சர்யமாக இருக்கின்றது அல்லவா...இன்றைய வரலாறு இராச இராச சோழனையும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் தான் நாம் உடையாளூர் கல்வெட்டுக்களைக் காண வேண்டி இருக்கின்றது.

உடையாளுர்க் கல்வெட்டுக்கள் ஆதித்தக் கரிகாலனை பிராமணர்கள் கொன்று விட்டனர் என்றும் அவர்களின் நிலங்களை இராச இராசன் பறிக்க உத்தரவிட்டான் என்றும் இருக்கின்றது. இதன் மூலம் பிராமணர்களே ஆதித்தக் கரிகாலனை கொன்று இருக்கின்றனர் என்ற ஒரு கருத்து நம்மிடையே வருகின்றது.

இந்நிலையில் தான் இன்னொரு கல்வெட்டுக் கூறும் செய்தியினை நாம் காண வேண்டி இருக்கின்றது. அக்கல்வெட்டு இராச இராசனின் காந்தளூர்ச் சாலைப் போரினைப் பற்றிக் கூறுகின்றது.

காந்தளூர்ச் சாலைப் போர் என்பது இராச இராசன் அரசனாக முடியேற்றப் பின்னர் நடத்திய முதல் போர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. காந்தளூர்ச் சாலை என்பது ஒரு பாட சாலை. அங்கே போர் கலைகள் பயிற்றுவிக்கப் பட்டுக் கொண்டிருந்தன என்றும் அது பிராமணர்களின் (ஆரியர்கள்) கட்டுக்குள் இருந்த ஒரு அமைப்பு என்றும், அங்கிருந்த நபர்களின் சூழ்ச்சியால் தான் தனது அண்ணன் கொலை செய்யப்பட்டான் என்பதினால் தான் தனது முதல் யுத்தத்தினை காந்தளூர்ச் சாலைக்கு எதிராக நடத்தினான் இராச இராச சோழன் என்றே ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். (புத்தகம்: இராச இராச சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் - அலைகள் பதிப்பகம். மேலும் பல கருத்துக்களும் இப்போரினைப் பற்றி இருக்கத் தான் செய்கின்றன...ஆனால் அவற்றை நாம் வேறொரு பதிவில் பின்னர் காணலாம்).

இப்போதைக்கு இராச இராசன் அவனது அண்ணனை பிராமணர்கள்/ஆரியர்கள் கொன்று விட்டார்கள் என்றும் அதனால் தான் அவன் காந்தளூர் சாலையின் மீது போர் தொடுத்தான் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது என்பதனை நாம் அறிகின்றோம்.

இங்கே தான் நாம் மற்றொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. சோழர்கள் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிம்மதியாக இருக்கவில்லை. போர்கள் அவர்களை அழைத்துக் கொண்டே தான் இருந்தன. அதுவும் வடக்கில் இருந்து யுத்தம் அவர்களுக்கு தூது விட்டுக் கொண்டே இருந்தது. (வடக்கே ஆரியர்களின் செல்வாக்கு ஏற்கனவே பலமாக இருந்தது என்று நாம் கண்டிருக்கின்றோம்)

இந்நிலையில் சோழ மன்னர்களின் வீழ்ச்சி வடக்கில் இருந்தவர்களுக்கு நிச்சயம் உதவும் தானே. அப்படிப்பட்ட ஒரு வீழ்ச்சிக்காக சோழ மன்னர்களை சதியால் கொல்ல முயலலாம் தானே...அதனால் தான் ஆதித்த கரிகாலன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் நாம் கருதலாம் தானே. நிற்க

ஆனால் அந்த சூழ்ச்சிகளானது இராச இராச சோழனின் காலத்திலும் சரி அவனின் மைந்தன் இராசேந்திர சோழனின் காலத்திலும் எடுபடாமல் சென்று விட்டதினை நாம் வரலாற்றினில் காணுகின்றோம். ஆனால் பின்னர் வந்த சோழர்கள்அத்தகைய சதிகளை கண்டறிந்து வென்றார்களா என்பது மிகப் பெரிய கேள்வியாகவே இருக்கின்றது. காரணம் சாளுக்கியர்களும் சோழர்களும் ஒன்றிணைந்து சாளுக்கிய சோழர்கள் என்று உருவாகி இருக்கின்றனர். சாளுக்கியர்களுடன் போரிட்டு வந்துக் கொண்டிருந்த சோழர்கள் அவர்களுடன் இணைந்ததற்கு காரணம் என்ன?

சோழ அரசனான அதி இராசேந்திர சோழன் மர்மமான நிலையில் வாரிசின்றி இறக்க சாளுக்கிய வம்சத்தைச் சார்ந்த முதலாம் குலோத்துங்கன் அரியணை ஏறுகின்றான். எதனால் அதி இராசேந்திர சோழன் இறந்தான்? சாளுக்கியர்கள் அரியணை ஏற அவன் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டானா? என்பதெல்லாம் ஆராய வேண்டிய விடயங்களாகத் தான் இருக்கின்றன. ஆராய வேண்டியக் காரணம்...அதற்குப் பின்னர் தமிழ் நாட்டினை தமிழரே முழுமையாக ஆண்ட நிலை இன்று வரை பெருமளவு வரவே இல்லை என்ற உண்மை தான்.

தமிழர்களுள் சாதி ஏற்றத் தாழ்வுகளும், தமிழர்கள் தாழ்த்தப்பட்டமையும் ஏற்படத் தொடங்கியது அக்காலத்தில் இருந்து தான் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார்.
(தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005)

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

இதன் மூலம் இராச இராசனின் காலத்தில் பெண்கள் தாழ்தப்பட வில்லை என்று நாம் அறிய முடிகின்றது தானே. (தகவல் அறிய உதவிய ம. செந்தமிழன் அவர்களுக்கு நன்றி)

சனி, 1 ஜூன், 2013

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 7

வட இந்தியாவினில் இருந்த இந்திய அரசனை சூழ்ச்சியால் வீழ்த்தி அங்கு ஆரிய வர்த்தம் என்று தங்களின் அரசினை அமைத்த ஆரியர்கள் முழு இந்தியாவினையும் கைப்பற்றிக் கொள்ள உதவும் வண்ணம் அன்று இந்தியாவினில் எழுந்திருந்த பக்தி இயக்கத்தினை பயன் படுத்திக் கொள்ள முயன்றனர் என்று நாம் கண்டு வருகின்றோம். இப்பொழுது இதனைத் தொடர்ந்து நாம் காண்பதற்கு முன்னர் வேறு சில முக்கியமான விடயங்களைக் கண்டு விடுவது நன்றாக இருக்கும்.

௧) சைவமும் வைணவமும் தமிழகத்திலே தோன்றிய சமயங்கள்.

௨) சைவக் கோவில்களின் தலைமையிடம் சிதம்பரம். வைணவக் கோவில்களின் தலைமையிடம் திருவரங்கம். இவைகள் இரண்டுமே தமிழகத்திலேயே தான் இருக்கின்றன.

௩) சைவம் வளர்த்த நாயன்மார்கள் அறுபத்தி மூவரும் தமிழ்நாட்டையேச் சார்ந்தவர்கள். அவ்வாறே வைணவம் வளர்த்த ஆழ்வார்களும் தமிழ் நாட்டையேச் சார்ந்தவர்கள்.

௪) ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!! ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோவில்கள் ஏறத்தாழ 108 இதில் 96 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!

௫) இன்று வேதங்கள் என்று சிலர் கொண்டாடும் ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களை தொகுத்தவர்கள் தமிழர்களே ஆவர்.

௬) உபநிடங்கள், பிரம்ம சூத்திரம், ஆகமங்கள், மகாபாரதம், இராமாயணம், பகவத் கீதை போன்ற நூல்கள், இதிகாசங்கள் போன்றவைகளை உருவாக்கியோர் அனைவரும் தமிழர்கள்.

௭) தமிழர்கள் உருவாக்கிய புதிய மொழியான சமசுகிருதத்திலேயே அந்நூல்களை அவர்கள் படைக்கின்றனர்.

௮) மேலும் சைவ வைணவ இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன…!!! நிற்க.

மேலே நாம் கண்ட விடயங்களின்படி அனைத்து ஆன்மீக நூல்களும் தமிழர்களாலேயே இயற்றப்பட்டு உள்ளன. ஆரியர்கள் எழுதிய நூல்கள் என்று எதுவுமே இல்லை. அனைத்தும் தமிழர்கள் எழுதியவை.

அட என்னங்க அனைத்தும் தமிழர்கள் எழுதியது என்றால் ஆரியர்கள் ஒன்றுமே செய்யவில்லையா என்ற எண்ணம் இங்கே வரலாம்...அவர்களும் அவர்கள் பங்குக்கு செய்து தான் இருக்கின்றனர்.

மேலே நாம் கண்ட நூல்களில் இடைச் செருகல்கள் பல செய்து உள்ளனர் (தொடக்கத்தில் இருந்த இராமாயணத்தை விட இப்பொழுது இருக்கும் இராமாயணம் அதிக மடங்கு பெரிதாக இருக்கின்றது...காரணம் பல இடைச் செருகல்கள். இதே நிலை தான் மகா பாரதத்திற்கும்)... அந்நூல்களுக்கு தவறான உரை எழுதி அர்த்தத்தினை மாற்ற முயன்று உள்ளனர்.

அவ்வாறு மேலே தமிழர்களால் உருவாக்கப்பட்ட நூல்களுக்கு தவறான உரை எழுதியவர்களுள் ஒருவர் தான் ஆதி சங்கரர். அவ்வாறு தவறான உரை எழுதி அவர் கண்டு வைத்த தத்துவம் தான் அத்வைதம். இதனைப் பற்றி நாம் விரிவாக நாம் இங்கே காணத் தேவை இல்லை. ஆனால் ஆதி சங்கரரைப் பற்றி நாம் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

காரணம் சென்றப் பிறவியில் ஒருவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஒருவன் இப்பிறவியில் பிராமணனாகவோ அல்லது சூத்திரனாகவோ பிறக்கின்றான் என்று சமண பௌத்தச் சமயங்கள் கூறிய பிறவிச் சுழற்சிக் கொள்கையோடு வருணப் பாகுபாட்டையும் கொண்டு வந்து இணைத்து இன்று நம் மண்ணில் இருக்கும் பிறப்பால் உயர்வு தாழ்வு என்ற நிலைக்கு வித்திட்ட பெருமை ஆதி சங்கரரையே சாரும். அக்கொள்கையைப் பரப்பவே சங்கர மடங்கள் என்னும் நிறுவனங்களையும் அவர் நிறுவுகின்றார்.

இன்று வரை அம்மடங்கள் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகாணும் கொள்கையை சிறப்பாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றன. காரணம் பிறப்பால் ஏற்றத் தாழ்வு என்றக் கொள்கையில் பிராமணர்கள் அவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப் படுவதற்கு ஒன்றும் செய்யாமல் வெறுமனவே பிறந்தால் மட்டும் போதுமே. அதனால் தான் இன்று வரை பிராமணர்கள் சங்கர மடத்தினை தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கின்றனர். சரி அது வேறு கதை. இப்போதைக்கு நமக்கு அது தேவை இல்லை.

நமக்கு இப்போதைக்கு வேண்டியது எல்லாம், பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்றக் கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஆதி சங்கரரே ஆவார். சரி இப்பொழுது ஒரு கேள்வி,

ஒரு ஆங்கிலேயன் இருக்கின்றான்...அவனிடம் போய் நீ தாழ்த்தப்பட்டவன்...எனக்கு அடிமையாக நீ வேலை செய்ய வேண்டும் என்றுக் கூறினால் அவன் என்ன செய்வான்?

நம்மளை வெளுத்து வாங்கி விடுவான். சரி தானே. ஒருவனும் தான் மற்றவனுக்குத் தாழ்ந்தவன் என்று ஒரு காலமும் கருத மாட்டான் தானே. அப்படி இருக்க மாபெரும் வரலாற்றினையும் அறிவுக் கூர்மையையும் கொண்டிருந்த தமிழர்களிடம் ஒருவன் வந்து "தம்பி...நீ தாழ்ந்தவன்" என்றுக் கூறினான் என்றால் அவன் ஏற்றுக் கொண்டிருப்பானா அல்லது எதிர்த்து இருப்பானா?

எதிர்த்து தானே இருப்பான். சரி இப்பொழுது இன்னொரு சூழல்.

ஹிட்லரின் படை வென்று விட்டது. சர்வாதிகாரியாக ஹிட்லர் இருக்கின்றான். அப்பொழுது ஹிட்லரின் படையிடம் தோற்ற ஒரு நபரை "தம்பி...நீ பிறப்பால் தாழ்த்தப்பட்டவன்" என்று கூறினால் அவன் ஏற்றுக் கொள்வானா மாட்டானா? ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவன் உயிர் போய் விடும். அந்நிலையில் அவன் அவன் தாழ்ந்தவன் என்று ஏற்றுக் கொள்ளத் தானே செய்வான். சரி தானே.

இந்நிலையில் தான் நாம் பிறப்பால் ஏற்றத் தாழ்வுக் கொள்கை இந்தியாவில் பரவிய விதத்தைப் பற்றிக் காண வேண்டி இருக்கின்றது. பொது மக்களுள் பிரிவுகளை உண்டாக்க வேண்டும் என்றால் அரசனின் ஒத்துழைப்பு வேண்டும். அரசனின் ஒத்துழைப்பினைப் பெற என்ன வேண்டும்? அது ஒவ்வொரு அரசனைப் பொருத்தும் மாறும்... சிலருக்குப் பொன், சிலருக்கு பெண்...சிலருக்கு அதிகாரம்...இவைகளை ஆரியர்கள் நன்றாக உணர்ந்து இருந்தனர் என்பதனை நமக்கு வரலாறு காட்டிக் கொண்டு தான் இருக்கின்றது.

இருந்தும் அனைத்து அரசர்களும் அவ்விதிகளுக்குள் அடைப்பட்டு விட மாட்டார்கள் தானே. சிலருக்கு வீரமும் மானமும் மட்டுமே கண்ணாக இருப்பதும் உண்டே. அவர்களை என்ன செய்ய முடியும்?

சூழ்ச்சியால் கொலை செய்ய முடியும்.

தமிழகத்தின் ஆதித்த கரிகாலனின் மரணம் அதைத் தான் உறுதிப்படுத்துகின்றது. சோழர்கள் மீண்டும் தலை எடுத்து வரும் காலம் நிகழ்கின்றது அக்கொலை. செய்தவர்கள் பிராமணர்கள் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (இதனைப் பற்றி விரிவாக வேறொரு பதிவில் காண்போம்)

ஆதித்த கரிகாலனின் மரணத்தில் இருந்தே நாம்இப்பொழுது தமிழர்களின் நிலையைக் குறித்து காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3)  வியாசர் என்பவர் தனி மனிதர் அல்ல. வியாசர் என்னும் சொல் தொகுப்பவர் என்றே பொருள் தருவது. அதாவது வேத வியாசர் என்றால் வேதங்களைத் தொகுப்பவர் என்றே பொருள் வரும். அது ஒரு காரணிப் பெயர். எனவே வேதங்களையும் மற்ற நூல்களையும் தொகுத்தவர்கள் அனைவரையும் வியாசர் என்றப் பொதுப் பெயரால் அழைத்தார்கள்.

4) சமசுக்கிருதம் என்ற மொழி தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழி. சமசுகிருதம் என்றால் செம்மையாகச் செய்யப் பட்டது என்றே பொருள் தரும். இதனைப் பற்றி மேலும் அறிய (சமசுகிருதம் என்று ஒரு மொழி) என்ற பதிவினைப் பார்க்கவும்.

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 6

கி.பி ஏழாம் நூற்றாண்டு இந்தியாவின் ஒரு பகுதியை ஆரியர்கள் கைப்பற்றி விட்டனர் என்றும் அப்படிக் கைப்பற்றப்பட்ட பகுதியினைத் தான் ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் பெயரிட்டு அழைத்தனர் என்றும் நாம் சென்றப் பதிவில் கண்டோம். மேலும் அவ்வாறு கைப்பற்றப் பட்ட இடத்தில் இருந்த மக்களுக்கு இயற்றப்பட்ட சட்ட நூல் தான் மனு தர்மம் என்பதனையும் நாம் கண்டோம்.

இப்பொழுது நாம் இங்கே காண வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் எண்ணிக்கை...மக்கள் தொகை எண்ணிக்கை!!! என்ன தான் ஆரியர்கள் சூழ்ச்சியின் மூலமாக ஆட்சியினைப் பிடித்து இருந்தாலும் இந்திய மக்களோடு ஒப்பிடும் பொழுது அவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் (இன்றளவிலும் கூட அவர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே தான் இருக்கின்றனர்). இந்நிலையில் வெறும் ஆயுதங்களை மட்டுமே நம்பிக் கொண்டு இருந்தால் ஆரியர்களால் நீண்ட காலம் ஆட்சியினைப் புரிய முடியாது. இதனை அவர்கள் நன்றாக புரிந்து வைத்துத் தான் இருந்தனர். அவர்கள் வேற்றவர்கள் என்று இந்திய மக்கள் உணர்ந்து, இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டால் நீண்ட நாட்களுக்கு ஆரியர்களால் அங்கே ஆதிக்கம் செலுத்த முடியாது.

அந்நிலையில் இந்திய மக்களை இவர்களை அவர்களுள் ஒருவராகக் கருத வைக்கவும் வேண்டும்...ஆனால் அதே சமயம் அவர்களின் ஆதிக்கமும் குறையக் கூடாது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றே ஆரியர்கள் சிந்திக்கலாயினர்?

மக்களை ஏமாற்ற என்ன செய்ய வேண்டும்...சூழ்ச்சி செய்ய வேண்டும். சூழ்ச்சி செய்வதற்கு ஆரியர்களுக்கு சொல்லித் தரவா வேண்டும்...இந்திய மக்களுள் கலக்கவும் அம்மக்களைப் பிரிக்கவும் சூழ்ச்சியினை செய்யத் துவங்குகின்றனர்.

அதனை அவர்கள் மிகவும் சிறப்பாக செய்ய காலமும் வசமாகத் தான் இருக்கின்றது.  ஏன் என்றால் அன்றையக் காலத்தில் இந்தியா மிகப் பெரிய மாற்றத்தினைக் கண்டு கொண்டு இருந்தது. அது வரை இந்திய மண்ணில் செல்வாக்குப் பெற்று இருந்த சமண பௌத்த சமயங்களுக்கு மாறாக புதிய இறைக் கொள்கை வளர்ந்துக் கொண்டு இருந்தது. ஆம் சைவமும் வைணவமும் பக்தி இயக்கத்தின் விளைவாக இந்திய மண்ணில் வளர்ந்துக் கொண்டிருந்த காலம் தான் அது.

ஆரியர்கள் அம்மாற்றத்தினைக் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம், ஆரியர்கள் என்பவர்கள் ஒரு காலத்தில் இந்தியாவின் மீது படை எடுத்து வந்து வந்தவர்கள் அல்ல என்றும் பல்வேறுக் காலங்களில் படை எடுத்து வந்து இந்தியாவில் பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்து வந்து பின்னர் ஒரு காலத்தில் ஒன்றிணைந்த அன்னியர்களே ஆரியர்கள் ஆவர் என்று.

அவர்கள் இந்திய மண்ணில் பௌத்த சமயத்தைக் கண்டு இருக்கின்றனர். சமணத்தைக் கண்டு இருக்கின்றனர். அதனை எதிர்த்தும் இருக்கின்றனர். காரணம் அச் சமயங்கள் பலி மறுப்புச் சமயங்கள். விலங்குகளைப் பலி இடாதீர்கள் என்பதே அவற்றின் போதனை. ஆனால் ஆரியர்களின் வழிப்பாட்டு முறையோ பலியினையும் தீ வழிப்பாட்டினையும் அடிப்படையாகக் கொண்டது. முற்றிலும் மாறுப்பட்ட கொள்கைகள் தானே. அப்படி என்றால் அங்கே மோதல்கள் வந்து இருக்கத் தானே செய்து இருக்க வேண்டும். அது தான் நிகழ்ந்து இருந்தது வரலாற்றில்.

சுங்க அரசினை நிறுவிய பெர்சிய வம்சாவளியினைச் சார்ந்த புஷ்ய மித்திர சுங்கனின் காலத்தில் பௌத்தர்கள் வேட்டையாடப்பட்டனர் என்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அக்காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு. ஆனால் காலத்தில் சுங்கனின் அரசு வீழ்ந்தது ஆனால் அவனால் ஒடுக்கப்பட்ட பௌத்த சமயமோ இந்தியா முழுவதும் பரவத் தான் செய்தது. அதனை அவர்களால் தடுக்க முடியவில்லை.சரி இருக்கட்டும் நாம் இப்பொழுது மீண்டும் கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கே வர வேண்டி இருக்கின்றது.

பக்தி இயக்கத்தின் வளர்ச்சியை ஆரியர்கள் கண்டு கொண்டு தான் இருக்கின்றனர். மக்கள் பெரும்பான்மையாக அவ்வியக்கத்தில் ஈடுபாடு காட்டுவதனையும் காணுகின்றனர்.

"மக்களின் செல்வாக்கு இருக்கின்றது...மேலும் பௌத்த சமண சமயங்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டு வேறு இருக்கின்றது...நன்று...மிக நன்று...இந்த இயக்கத்தினை மட்டும் நம்முடைய நோக்கிற்கு கைப்படுத்திக் கொண்டு விட்டோம் என்றால் நம்முடைய செல்வாக்கினை பலமாக வலுப்படுத்திக் கொள்ள முடியும்" என்று எண்ணியே சைவ வைணவ சமயத்தின் மீது அவர்களின் பார்வையினைப் படர விடுகின்றனர். சைவ வைணவ சமயங்களுள் தங்களின் கருத்துக்களை நுழைக்க சூழ்ச்சியினை மேற்கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

சைவ வைணவ போர்வையில் அவர்களின் வேள்விக் கோட்பாடுகளை வளர்க்க ஆரம்பிக்கின்றனர். அதனை தமிழகத்தில் தொடங்கி வைப்பவர் வேறு யாருமல்ல... திருஞானசம்பந்தர் தான்.

என்ன அதிர்ச்சியாக இருக்கின்றதா? நிச்சயம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். காரணம் திருஞானசம்பந்தரின் மேல் இன்று நம் நாட்டினில் கட்டப்பட்டு உள்ள பிம்பம் அத்தகையது. எனவே சைவத்தை திசைத் திருப்பியது திருஞானசம்பந்தர் என்றால் நிச்சயம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் திருஞானசம்பந்தரை நாம் மட்டுமே குறைக் கூற வில்லை. திருநாவுக்கரசரும் கூறி இருக்கின்றார்.

"நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக்குஅரையன், நாளைப்போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி,
கண்ணப்பன், கணம்புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
கொள்கை கண்டு, நின் குரைகழல் அடைந்தேன்"


என்று ஞானசம்பந்தர் குற்றங்கள் புரிகின்றார் என்றே திருநாவுக்கரசர் கூறி இருக்கின்றார். அது ஏன் என்றும் நாம் சிந்திக்கத் தானே வேண்டி இருக்கின்றது. மேலும் வேள்விகளுக்கு துளியும் தொடர்பில்லாத சைவ சமயத்தினுள் வைதீக கருத்துக்களைப் பரப்பியவரும் சம்பந்தர் தாம்.


"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே..."

"வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே..."


மேலே உள்ள வரிகள் மூலம் சமணர்களை சம்பந்தர் வெறுக்கின்றார் என்றும், அவர்கள் வேள்வியினை மதிப்பதில்லை என்ற காரணத்திற்காகவே அவர்களை வெறுக்கின்றார் என்பதும் புலனாகின்றது அல்லவா.

மேலும் பெரிய புராணத்தினைத் தொகுத்த சேக்கிழார் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கின்றார்...

" இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
  வந்த வைதீக மாமணி " என்று.

அதாவது திரு ஞானசம்பந்தர் சைவ சமயத்தை அல்ல வைதீக சமயத்தினையே வளர்த்தார் என்றே தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார். மேலும் அரசனைக் கைக்குள் வைத்துக் கொண்டு அன்பைப் போதித்த சைவ சமயத்தின் வாயிலாக 8000 சமணர்களையும் கொலை செய்தார் திருஞான சம்பந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (அவ்வாறு சம்பந்தர் கொலை செய்த தமிழ் சமணர்களின் உறவினர்கள் எல்லாம் ஒன்றிணைந்து சம்பந்தரை தீ வைத்துக் கொன்றனர் என்றக் கூற்றும் இருக்கின்றது)

மேலும் சமயக் குரவர்களுள் தமிழரான திருநாவுக்கரசரைப் பின் தள்ளி விட்டு திருஞானசம்பந்தருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு இருப்பதும், வேதாரணியத்தில் திருநாவுக்கரசர் பாடி திறக்காத கதவு திருஞானசம்பந்தர் பாடி திறந்தது என்று திருநாவுக்கரசரை தாழ்த்தி திருஞானசம்பந்தரை உயர்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பன்னிரு திருமுறைகளிலும் திருஞானசம்பந்தரே முதன்மைப் படுத்தப்பட்டு இருப்பதும் தற்செயலான விடயம் அல்ல. காரணம் அவற்றைத் தொகுத்ததும் நம்பியாண்டார் நம்பி என்ற ஒரு ஆரியர் தாம்.நிற்க. (தொடர்புடைய பதிவுகள்: உலகின் வரலாறு – 4, உலகின் வரலாறு – 5)

சுருக்கமாகக் காண வேண்டும் என்றால் சைவ வைணவ சமயங்களுக்கு துளியும் தொடர்பில்லாத வைதீகக் கருத்துக்கள் பக்திஇயக்கக் காலத்தில் அச் சமயங்களுடன் மெதுவாக இணைக்கப்படுகின்றன. ஆரியர்கள் மெதுவாக தமிழர்களின் சமயங்களின் மேல் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

ஒருவன் ஒரு அரசியல் கட்சியின் தலைமையில் அமர வேண்டும் என்று எண்ணினால் என்ன செய்ய வேண்டும்? அவனுக்கு போட்டியாக இருக்கும் நபர்களை முதலில் ஒதுக்க வேண்டும்...பின்னர் கட்சியின் தலைமையில் இருக்கும் நபர்களை ஏமாற்றி அவ்விடத்தை அவன் பிடிக்க வேண்டும். பின்னர் பிடித்த அவ்விடத்தை தக்க வைத்துக் கொள்ள அக்கட்சியின் கொள்கைகளை அவனுக்கு ஏற்றார்ப் போல் மாற்ற வேண்டும். சரி தானே. இயல்பான நிலை அப்படி இருக்க ஒரு ஆன்மீக இயக்கத்தினை பிடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களை ஒதுக்க வேண்டும்...அச் சமயக் கருத்துக்களை தமக்கு ஏற்றார்ப் போல் மாற்றிக் கொண்டு அச் சமயத்தின் தலைமையைப் பிடிக்க வேண்டும். சரி தானே. இங்கே அது தான் நடந்து இருக்கின்றது.

ஆன்மீகத் தலைவர்கள் தாழ்த்தப்பட்டு இருக்கின்றனர். பலர் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இறுதி நாயன்மாரான நந்தனாரும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரும் சரி கொலை செய்யப்பட்டனர் என்பது வரலாறு. சித்தர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டனர் என்பது வரலாறு. வள்ளலாரும் கொலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.

பல நாயன்மார்கள்/ஆழ்வார்கள் தாழ்த்தப்பட்ட இனங்களில் இருந்து வந்து இருக்கின்றனர் என்றே இன்றுக் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் வாழ்ந்தக் காலங்களில் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க வில்லை (அன்று தான் சாதி ஏற்றத் தாழ்வுகளோ அல்லது பிறப்பின் அடிப்படையில் வேறு பிரிவுகளோ நம்மிடையே இல்லவே இல்லவே)... பிற்காலத்திலேயே தான் சதிகள் காரணமாக அவர்களின் இனம் தாழ்த்தப்பட்ட இனமாக மாற்றப்பட்டது. காரணம்...சமயங்களை சிலர் கைப்பற்றிக் கொண்டு அதன் மேல் அவர்களின் செல்வாக்கினை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அச்சமயத்திற்கு உண்மையிலேயே உரிமையானவர்களை தாழ்த்தினால் தானே முடியும். அது தான் இங்கே நடந்து இருக்கின்றது. சரி அவற்றைப் பற்றி நாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

இப்பொழுது ஆரியர்களின் வைதீகச் சமயம்தமிழர்களின் சைவ வைணவ சமயங்களினுள்மெதுவாகநுழைய ஆரம்பித்து இருக்கின்ற காலக் கட்டத்திற்கு நாம் மீண்டும் செல்ல வேண்டி இருக்கின்றது.

காரணம் இன்றைய இந்தியாவில் திகழும் அனைத்து சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணியாக கருதப்படுகின்ற ஒரு நபர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் நமக்காகக் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

அவர் வேறு யாரும் இல்லை...இன்று சங்கர மடங்களால் கொண்டாடப்படும் ஆதி சங்கரர் தான் அது.

காண்போம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) "குறுகிய நோக்கும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக சமயம் தென்னாட்டில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தது. ஒதுக்கப்பட்ட இந்த மதம் புத்த சமண சமயங்களைப் போன்று செல்வாக்குப் பெற முயன்றது. செல்வாக்குப் பெற வேண்டு என்றால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே வழி தான் உண்டு. அவ்வழி யாது எனின் தமிழர் வழிபட்டு வரும் திராவிட சமயத்துடன் வைதீக சமயத்தையும் சேர்த்துக் கொண்டு பொது மக்களின் ஆதரவைப் பெறுவது தான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. அதாவது வைதீக மதம் திராவிட மதத்தின் தெய்வங்கள் ஆகிய சிவன்,திருமால்,முருகன்,கொற்றவை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டது. ஏற்றுக் கொண்டதோடு நில்லாது திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது." என்றே மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் கூறுகின்றார்.

சனி, 25 மே, 2013

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5

ஆரியர்கள் என்பவர்கள் யார் என்றக் கேள்வியினை இன்று நம்மிடையே வைத்தோம் என்றால்... அவர்கள் நாடோடிகள், இயற்கை வழிப்பாட்டினைக் கொண்டு இருந்தவர்கள்...குதிரைகளை வைத்து இருந்தவர்கள்...வெளியே இருந்து இந்தியாவின் மீது போர் எடுத்து வந்து இந்திய மக்களை அடிமைப்படுத்தியவர்கள் என்றே விடைகள் வரும்.

சரியான விடைகள் தாம்...ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், ஆரியர்கள் என்று வழங்கப்பெருவோர் இந்தியாவின் மீது எக்காலத்தில் படை எடுத்து வந்தனர் என்பதனையே நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு இருக்கும் நம்பிக்கை ஆரியர்கள் என்பவர்கள் சிந்து சமவெளிக் காலத்திலேயே வந்து விட்டார்கள் என்பதே...ஆனால் அது தவறான கருத்து என்றும் ஆரியர்கள் என்பவர்கள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கி.பி ஏழாம் நூற்றாண்டு வரைக்கும் இந்தியாவின் மேல் படையெடுத்த பல்வேறு வேற்று இனத்தவர்களே என்று புதிய ஆராய்ச்சிகள் கூறிக் கொண்டு இருக்கின்றன. அதனைப் பற்றி நாம் விரிவாகப் முன்னரே கண்டு இருக்கின்றோம் என்பதனால் அதனைப் பற்றிச் நாம் இங்கே மீண்டும் காண வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றேன். இருந்தும் நண்பர்கள் அப்பதிவுகளையும் படித்து விடுவது நலமாக இருக்கும். (அப்பதிவுகள் : ஆரியர்கள் யார் -1 , ஆரியர்கள் யார் -2 )

சரி இப்பொழுது நாம் மீண்டும் மனு தர்மத்திற்கு வர வேண்டி இருக்கின்றது.

"கிழக்கு சமுத்திரம் தொடங்கி மேற்கு சமுத்திரம் வரையில் முன் சொன்ன மலைகளின் நடுப்பிரதேசமானது சாதுக்கள் வசிக்கின்ற ஆரியா வர்த்ததேசமென்று சொல்லப்படுகின்றது." - மனு அத்தியாயம் 2 - 22

"இப்படிப்பட்ட புண்ணிய தேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்திற் பிறந்தவராயினும் வந்தடைய வேண்டியது அல்லது சூத்திரன் ஊழியத் தொழிலை விட வேறு விர்த்தியை எந்த இடத்தில் அடைய மாட்டானோ அந்த இடத்தில் வசிக்கத்தக்கது" - மனு அத்தியாயம் 2 - 24

மேலே உள்ள மனு தர்ம வாக்கியத்தின் படி ஆர்ய வர்த்தம் எனப்படுவது இந்தியாவின் வட மேற்குப் பகுதியாகும்.



 

சரி இருக்கட்டும்...இப்பொழுது இன்னொரு வாக்கியத்தினையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

"பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநய முதலிய கர்ம லோபத்தினாலும் மேற்ச் சொல்லும் சத்திரிய சாதிகள் இவ்வுலகத்தில் வர வர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள்." - மனு அத்தியாயம் 10 -43

"பௌண்டரம், ஒவண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்கீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்ச் சொன்னபடி சூத்திரளாகி விட்டனர்." - மனு அத்தியாயம் 10 -44

அதாவது பிராமணர்களை வணங்காமையினால் பல தேசங்கள் சூத்திரத் தன்மையை அடைந்து விட்டன என்றே மேலே உள்ள வாக்கியங்கள் கூறுகின்றன. அவ்வாறு அவர்கள் குறிப்பிட்டு உள்ள தேசங்களில் சில பெயர்கள் நமக்கு நன்கு பழக்கப்பட்ட பெயர்கள்

திராவிடம்
யவனம் - தமிழகத்தில் வந்திருந்த ரோமர்கள்/கிரேக்கர்கள் ஆகியோருக்கு தமிழில் வழங்கப்பட்ட ஒருச் சொல்.

இங்கே இன்னொரு இனத்தினையும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவர்கள் சகர்கள்.

பொதுவாக இன்றைக்கு மனுதர்மம் எப்பொழுது இயற்றப்பட்டது என்றால், அது மனு என்ற மகானால் ஆதிக் காலத்தில் இயற்றப்பட்டது என்றே விடையினை சிலர் கூறுவர். ஆனால் நாம் இங்கே காண வேண்டியது என்ன வென்றால் சகர்கள் என்ற இனத்தினர் கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே தான் இந்தியாவினுள் நுழைகின்றனர்.

பல்வேறு காலங்களில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் நுழைந்த பல்வேறு நாடோடிக் கூட்டங்களில் சகர்களும் ஒருவர். மேலும் அவ்வாறு நுழைந்த பல்வேறு அன்னியர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஆர்ய வர்த்தத்தில் சகர்களும் இருந்தனர் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பு. அப்படி இருக்கையில் ஆதி காலத்தில் வாழ்ந்த மனுவிற்கு கி.பி காலத்தில் இருந்த சகர்களைப் பற்றித் தெரிந்து இருப்பது ஆச்சர்யம் தான் அல்லவா? மேலும் திராவிடர்கள் வேறு தேசத்தினைச் சார்ந்தவர்கள் என்பதையும் நாம் இங்கே கவனிக்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது நாம் மேலே உள்ள வாக்கியங்களை வரலாற்றின் அடிப்படையில் காண முயல்வோம். அதற்கு நாம் சில விடயங்களை அறிந்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

1) நாடோடி இனத்தவர்கள் என்பவர்கள் பெரும்பாலும் இருவகைப்படுபவர்கள். ஒன்று உணவினைத் தேடி பயணம் மேற்கொள்பவர்கள். இரண்டாமவர்கள் இடத்தினைப் பிடிக்க ஊர் ஊராய் அலைபவர்கள். இவ்விரண்டு வகையினைச் சார்ந்தவர்களும் இந்தியாவினுள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி ஏழாம் நூற்றாண்டின் வரை வந்த வண்ணமே தான் இருந்து இருக்கின்றனர்.

2) இந்தியாவின் தெற்குப் பகுதியைப் போல் அல்லாது இந்தியாவின் வட மேற்குப் பகுதி பெரும்பாலும் அந்நியர்களின் ஆதிக்கத்திலேயே தான் இருந்து இருக்கின்றது. பெர்சியர்கள், கிரேக்கர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள் போன்றவர்கள் அங்கே ஆட்சியினைப் பிடித்து இருக்கின்றனர்.

3) அவ்வாறு அங்கே ஆண்ட வேற்று இனத்து மக்கள் காலத்தில் அங்கே ஏற்கனவே இருந்த இந்திய/ திராவிட மக்களுடன் சேர்ந்து தனி இனமாகவே உருவாகி விட்டனர். அதாவது மௌரியப் பேரரசன் பிரகரதத்தனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த பெர்சிய வம்சாவழியினைச் சார்ந்த புஷ்ய மித்திரனின் காலத்தில் பெர்சிய இனவழி மக்கள் இந்தியாவில் இருந்து தான் இருக்கின்றனர். அவனின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டப் பின்னும் அவர்கள் அங்கேயே இருந்து தான் வந்து இருக்கின்றனர். இதே கதை தான் மற்ற இன மக்களுக்கும். அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை என்னவென்றால் அவர்கள் அனைவரும் வெளியில் இருந்து வந்தவர்கள்.

4) அவ்வாறு இந்தியாவில் வந்து வாழ்ந்து இருக்கும் அம்மக்கள் இந்தியாவில் நிகழும் மாற்றங்களைக் கண்டுக் கொண்டே தான் இருந்து இருக்கின்றனர். அதுதானே வழக்கம்...நாம் வேறொரு நாட்டில் சென்றுத் தங்கும் பொழுது அந்நாட்டின் பழக்க வழக்கங்களை நாம் அறிந்துக் கொள்வது இயல்பு தானே. அவ்வாறு அந்த பல்வேறு இனக்குழுக்களுள் சில இந்திய மக்களைப் பற்றியும், அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், அவர்களுள் நிகழ்கின்ற மாற்றங்கள் பற்றியும் நன்றாக அறிந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் வெளியில் இருந்து வந்து இந்தியாவில் தங்கி இருக்கும் அவர்களுக்கு இந்தியாவினை ஆளும் வாய்ப்பு கிடைத்தால் ஆள்வார்களா மாட்டார்களா? ஆள்வதற்கு முயல்வார்களா மாட்டார்களா? முயல்வார்கள் தானே. முன்னர் அதற்காக வந்த இனம் தானே அவர்கள்...முன்னர் தோற்றனர்...இப்பொழுது இங்கே இருக்கும் மக்களைப் பற்றி நன்றாக அறிந்து இருக்கின்றனர்...கூடுதலாக வேறு இன மக்களின் உதவி வேறு கிட்டும் என்றால் ஆள்வதற்கு முயல்வார்கள் தானே.

இப்பொழுது இந்தியாவில் இந்தியாவினைச் சார்ந்த மக்கள் (திராவிடர்கள்) இருக்கின்றனர். வேறு இடங்களில் இருந்து வந்த பல்வேறு இனக்குழுவினைச் சார்ந்த மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சண்டை என்று வந்தால் கூட்டணிகள் எவ்வாறு உருவாகும்?

அன்னியர்கள் எல்லாம் ஒன்றாக முயல்வர். அவற்றில் சில இனக்குழுக்கள் போரினை விரும்பாது நடுநிலையில் நிற்கும். சில குழுக்கள் இந்திய மக்களுக்கு ஆதரவுத் தெரிவிக்கும். இதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன தானே. இதன் அடிப்படையில் தான் நாம் மனு தர்மத்தின் வாக்கியத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.

இந்தியாவினுள் நுழைந்த பல்வேறு இனக் குழுக்களும் சில ஒன்றிணைந்து வடக்கில் இந்திய அரசனான ஹர்ஷவர்தனை சூழ்ச்சியால் கொன்று விட்டு வடக்கே ஆட்சியினைப் பிடிக்கின்றனர். அவர்கள் அவ்வாறு பிடித்த இடம் தான் ஆர்ய வர்த்தம். அக்காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு. அவ்வாறு அவர்கள் பிடித்த இடத்தில் இருந்த மக்களுக்காக அவர்கள் தொகுத்தது தான் மனு நூல் என்ற சட்ட நூல். அது ஆர்யவர்தத்திற்கு வெளியே செல்லாது. அவ்வாறு ஆர்ய வர்தத்தினைப் பிடித்த ஆரியர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்டப் பிரிவுகள் தான் ஆர்யப் பிரோகிதர், சத்திரியர், வைசியர் ஆகியப் பிரிவுகள். அவர்கள் இந்தியாவில் பிடித்தப் பகுதிகளில் இருந்த இந்தியர்கள் அனைவரும் அடிமைகளாகிப் போனார்கள் என்றதன் படி அவர்கள் அனைவரும் சூத்திரர் என்று வழங்கப்பெற்றனர்.

மேலும் அந்த அந்நியக் குழுக்களுக்கு உதவாத வேறு இனக்குழுக்கள் எல்லாம் எதிரிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டன. அதனால் தான் தமிழகத்தில் இருந்த யவனர்கள் சூத்திரர்களாகி விட்டனர் என்று இருக்கின்றது.

அவ்வாறு வடக்கே ஆட்சியினைப் பிடித்த ஆரியர்களுக்கு இந்தியர்களை நன்றாகத் தெரியும்...வரலாறும் புரியும். எனவே வரலாற்றினை மாற்ற ஆரம்பிக்கின்றனர். இன்று நம்மிடையே இருக்கும் பல நூல்கள் பல இடைச் செருகல்களைக் கொண்டு விளங்குபவையே. மனு தர்ம நூல் கூட காலங்களில் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுத் தான் வந்துக் கொண்டே இருந்து இருக்கின்றது.

ஒரு இனத்தினைத் தோற்கடிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் வரலாற்றினை முதலில் மறைக்கவோ அல்லது அழிக்கவோ வேண்டும்...அது நமது மண்ணில் இன்று வரை வெற்றிகரமாக செய்யப்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்றது. சரி அது இருக்கட்டும்.

நம்முடையக் கூற்றின் படி கி.பி ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் மனு தர்மமும் சரி நான்கு வர்ணப் பிரிவுகளும் சரி நம் மண்ணில் அதுவும் குறிப்பாக ஆரிய வர்த்தத்தில் உருவாக்கம் பெறுகின்றன.

அக்காலத்தில் தான் அவை தோற்றமே பெறுகின்றன என்றால் அதற்கு முன்னர் இந்திய மண்ணில் சாதி ஏற்றத்தாழ்வுகளோ வர்ணப் பிரிவுகளோ இல்லை என்பது உறுதி தானே. அதுவும் குறிப்பாக தமிழகத்திற்கு சாதி ஏற்றத் தாழ்வு என்ற வியாதி அக்காலத்தில் வந்து இருக்கவே இல்லை என்பதும் உறுதி தானே.

இந்நிலையில் தமிழகத்திற்கு அவ்வியாதி எப்பொழுது வந்து இருக்கலாம் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3)  தொடர்புடைய பதிவுகள்:
ஆரியர்கள் யார் -1 
ஆரியர்கள் யார் -2
சமசுகிருதத்தின் காலம்
ஒரு கிரேக்கப் பயணியின் பயணக் குறிப்புகள்!!!
வேதங்கள் எனப்படுபவை யாதெனின் -1
வேதத்தில் பலியான கடவுள்
சமசுகிருதம் என்று ஒரு மொழி

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 4

மனு நூல்...அல்லது மனு தர்ம சாஸ்திரம்.

இன்றைக்கு நம் நாட்டினில் 'தர்மம் காக்கவும்...தர்மம் தழைக்கவும்...' என்று பல இந்துத்துவ அமைப்புகள் முழங்குவது எல்லாம் மேலே நாம் கண்டுள்ள மனு தர்மத்தையே ஆகும். அப்படிப்பட்ட ஒரு நூலினைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. காரணம் இறைவன் மனிதர்களை நான்கு வர்ணமாகப் படைத்தான் என்று வேதத்தில் ஒரு வரியோடு நின்று விட்ட ஒரு விடயத்தினைப் பற்றி விரிவாக பேசுவது இந்த நூலே ஆகும். பிறப்பால் இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்று கூறும் நூலினை நாம் சாதி ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிப் பார்க்கும் பொழுது நிச்சயம் காணத் தானே வேண்டி இருக்கின்றது.

"அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம் தோள் தொடை பாதம் இவைகளில் இருந்து உண்டான பிராமண, சத்திரிய, வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்" - மனு அத்தியாயம் 1 - 87

"நாலு வருணத்தாருக்குள் பிராமணன் சத்திரியன் வைசியன் இம்மூவரும் இரண்டு விதமாகப் பிறப்பதனால் துவிஜாதிகள் என்று சொல்லப்படுகின்றார்கள். சூத்திரனுக்கு உபநயம் முதலியன இல்லாததால் ஒரு சாதியாகவே இருக்கின்றான். இந்த நான்கு வருணத்தார் தவிர ஐந்தாவது வருணத்தான் கிடையாது." மனு அத்தியாயம் 10 - 4

பிரம்மா மனிதர்களை நான்கு வர்ணங்களாகப் படைத்து அவர்களுக்கென்று தனித்தனி கர்மங்களை வகுத்து வைத்தார் என்றும் இவர்களைத் தவிர வேறு வருணத்தார் கிடையாது என்றக் கருத்தினை நாம் மேலே உள்ள மனு தர்ம வசனங்களால் அறிந்துக் கொள்கின்றோம். ஆனால் அக்கருத்துக்கள் மட்டுமே அங்கே கூறப்பட்டு இருக்கவில்லை...கூடுதலாக பிராமண, சத்திரிய மற்றும் வைசிய வருணத்தினைச் சார்ந்தவர்கள் துவிஜாதிகள் என்றுக் குறிக்கப்பட்டு இருக்கின்றது. சூத்திரன் துவிஜாதி அல்ல என்றும் கூறப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் துவிஜாதி என்றால் என்ன என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

துவிஜாதி என்றால் இருப்பிறப்பாளர்கள் என்றே, அதாவது இரண்டு முறை பிறந்தவர்கள் என்றே அர்த்தம் வரும். ஒரு மனிதன் ஒருமுறைப் பிறப்பான் அதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை...ஆனால் இங்கே இரண்டு பிறப்பு பிறக்கின்றார்கள் என்றே கூறுகின்றார்களே அது ஏன்? மேலும் அது என்ன இரண்டாம் பிறப்பு என்றக் கேள்விகள் இங்கே இயல்பாக எழும் தானே. அக்கேள்விகளுக்கு விடையினைத் தேடினால் மனு தர்மத்திலேயே விடை கிட்டுகின்றது.

"துவிஜனுக்கு முதற்பிறப்புத் தாயாலும், இரண்டாவது உபநயநத்தாலும் மூன்றாவது எக்கிய தீட்சையிலாலும் உண்டாகின்றது என்று வேதத்திற் சொல்லப்படுகின்றது." மனு அத்தியாயம் 2 - 169

அதாவது இரு பிறப்பாளர்கள் எனப்படும் முதல் மூன்று வருணத்தார் முதல் பிறப்பினை தாயிடம் இருந்து பெறுகின்றனர் என்றும் இரண்டாவது பிறப்பு உபநயம் செய்வதன் மூலமாகவும் பெறுகின்றனர் என்றுமே நாம் மேலே உள்ள வசனத்தின் மூலம் அறிந்துக் கொள்ளுகின்றோம். மேலும் மூன்றாவது பிறப்பினைப் பற்றிய ஒரு குறிப்பும் அங்கே இருக்கின்றது, ஆனால் அது இப்போதைக்கு நமக்குத் தேவை இல்லாததால் அதனைப் பற்றி நாம் காண வேண்டியதில்லை.

இது வரை நாம் கண்ட விடயங்களின் படி உபநயம் செய்வதால் மட்டுமே பிராமண, சத்திரிய, வைசிய வருணங்களைச் சார்ந்தோர் இருப்பிறப்பாளர்கள் என்று அறியப்படுகின்றனர் என்றும் உபநயம் செய்ய தடை உள்ளதால் சூத்திர வருணத்தார் ஒருப் பிறப்பினை மட்டுமே உடையவராய் இருக்கின்றனர் என்றும் நாம் அறிந்து இருக்கின்றோம். இந்நிலையில் தான் மற்றுமொரு மனு தர்ம வசனத்தைக் காண வேண்டி இருக்கின்றது.

"உபநயம் செய்துக் கொள்வதற்கு முன்னால் இவன் சூத்திரனுக்கு ஒப்பானவன். ஆனால் மாதா பிதா கர்மத்தில் மாத்திரம் அதற்கு வேண்டிய வேத மந்திரத்தைச் சொல்லலாம்." மனு அத்தியாயம் 2 - 172

உபநயம் செய்தால் இருப்பிறப்பாளர்கள் ஆகின்றனர் என்றுக் கண்டோம் சரி...ஆனால் இங்கே அவன் உபநயம் செய்யும் வரை, அது பிராமணனாக இருக்கட்டும்...சத்திரியனாக இருக்கட்டும்...வைசியனாக இருக்கட்டும் , அவர்கள் சூத்திரர்களாகவே காணப்படுவர் என்றே கூற்று வருகின்றதே.

இதன் படி பார்த்தோம் என்றால் தாயின் மூலம் வரும் முதல் பிறப்பில் அனைவரும் சூத்திரர்களாகவே பிறக்கின்றனர் என்றே பொருள் வருகின்றதே. சூத்திரனாக பிறந்த ஒருவன் உபநயம் செய்துக் கொள்வதன் வாயிலாகவே இரு பிறப்பாளன் ஆகின்றான் என்றால்,

பிரமன் படைக்கும் போதே பிராமணன் ஆக படைத்தான் சத்திரியனாகப் படைத்தான் என்ற கூற்றுகள் அடிப்பட்டுப் போய் விடுகின்றதே. ஏனென்றால் ஒருவன் உபநயம் செய்யாமல் இருந்தால் அவன் மனு தர்மத்தின் கூற்றின் படி இறுதி வரை சூத்திரனாகவே தானே இருப்பான்.

மேலும் சூத்திரத்தன்மையோடு இருப்பவர்கள் உபநயம் செய்வதன் மூலம் உயர் நிலையை அடைகின்றனர் என்றால் இவர் தான் உபநயம் செய்ய வேண்டும் என்றும் இவர்கள் எல்லாம் செய்யக் கூடாது என்று எதன் அடிப்படையில் யார் பிரித்துக் கூற முடியும்? ஏனெனில் முதற் பிறப்பில் அனைவரும் சூத்திரர்களாகத் தானே பிறக்கின்றனர். அவர்களுள் எவ்வாறு பிறப்பின் அடிப்படையில் வேற்றுமைகளைக் காண முடியும்?

மேலும், பிராமண சத்திரிய வைசிய சூத்திர வர்ணங்கள் ஆகிய நான்கு வர்ணங்களைத் தவிர வேறு வர்ணங்கள் இல்லை என்றே மனு தர்மத்தில் வருகின்றது...ஆனால் பஞ்சமர் என்ற வர்ணம் கடவுளில் இருந்து வாரா ஒரு வர்ணமாக இன்று அறியப்படுகின்றது. நிற்க.

இப்பொழுது ஏன் இந்த முரண்பாடுகள் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் சில விடயங்களை நாம் அறிந்துக் கொள்வது நலமாக இருக்கும்.

1) இப்பொழுது இலங்கை ஈழத் தமிழர்களின் மேல் படை எடுத்துச் சென்று போரில் வெற்றிப் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் அங்கே அடிமையாக இருப்பர். சிங்களவர்களின் சட்டங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். ஆனால் சிங்களவர்களின் சட்டம் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் மேல் செல்லுபடியாகாது. சரி தானே.

அதைப் போல் தான் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடக்குப் பகுதியை பிடித்த ஆரியர்கள் அவர்கள் பிடித்த பகுதியை ஆரிய வர்த்தம் என்று அழைத்துக் கொண்டு, அப்பகுதிகளில் வாழ்ந்த இந்தியர்களை அடிமைகள் என்ற பொருள்படி சூத்திரர்கள் என்றுக் குறித்து சட்டம் இயற்றினர். அச்சட்டம் தான் மனு தர்மம்.

அதாவது ஆரியர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த இடத்தில் வாழ்ந்த மக்களுக்காக ஆரியர்களால் இயற்றப்பட்ட ஒரு சட்ட நூல் தான் மனு தர்மம். அச் சட்டத்தின் படி,

பிராமணர்கள் - ஆரிய பிரோகிதர்கள்
சத்திரியர்கள் - போர் செய்யும் ஆரியர்கள்
வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்

என்ற ஆரியப் பிரிவுகள் உயர்ந்ததாகவும்....அங்கே வாழ்ந்து வந்த இந்திய மக்கள் அனைவரும் அடிமைகள் என்று குறிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சூத்திர பிரிவு தாழ்ந்ததாகவும் அமைக்கப்பட்டது.

அவர்களின் ஆட்சிக்கு அடிபணியாத மற்ற தேசங்களில் ஆரியர்களின் செல்வாக்கும் செல்லாது அவர்களின் சட்டமும் செல்லாது என்பதனால் அவர்கள் பஞ்சமர் அல்லது எதிரிகள் என்று குறிக்கப்பட்டனர்.

2) இருப்பிறப்பாளர்கள் என்றச் சொல் ஆன்மீகச் சான்றோர்களைக் குறிக்கும் சொல். முதல் பிறப்பு மானுடப் பிறப்பு...இரண்டாம் பிறப்பு ஆன்மீகப் பிறப்பு. இதற்கும் உபனயதிற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. (இருப்பிறப்பினைப் பற்றி நாம் மற்றதொரு பதிவில் காண்போம்)

இந்தியாவின் மேல் படை எடுத்து வந்த ஆரியர்கள், இந்தியாவில் நிலவிய பல வழக்கங்களைக் கைப்பற்றிக் கொண்டு அதன் அர்த்தங்களை காலங்களில் மாற்றிக் கொண்டனர்.

சற்று புதிதான/புதிரான கூற்றுகளாகத் தானே இருக்கின்றன. இப்பொழுது இவற்றைப் பற்றித் தான் நாம் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்....!!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

தமிழர் - திராவிடர் - ஆரியர் - 1

இன்றைக்கு ஈழத்திற்காக மாபெரும் எழுச்சி தமிழர்களின் மத்தியில் எழுந்துள்ளது...'ஈழத்தில் உள்ள தமிழர்கள் காக்கப்பட வேண்டும்...அவர்கள் உரிமையோடும் சுதந்திரத்தோடும் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும்...அதற்கு அவர்களுக்கென்று தனி நாடு வேண்டும்...அதில் சிறிதளவும் மாற்றுக் கருத்துக்கள் எங்களிடம் இல்லை...கூடுதலாக தமிழர்களின் மேல் கொடூரமான இனப்படுகொலையினை ஏவி விட்ட அனைத்து நபர்களின் மேலும் நேர்மையான விசாரணையும் அதற்கேற்ற தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.' இதுவே தான் அனைத்து தமிழர்களின் குரலாக இன்று தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இக்குரல்களுக்கு எதிராக ஒலிக்கும் சில குரல்களையும் இந்நேரத்தில் நாம் இனம் காண வேண்டி இருக்கின்றது.

"இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது. அங்கு நடந்தது இனப்படுகொலை அல்ல..." என்று காங்கிரஸ் தரப்புக் கூறுகின்றது.

"இலங்கையை போர் குற்றவாளியாக அறிவிக்க முடியாது..." இது பா.ஜ.க கட்சியினரின் கூற்று.

"இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்..." இது RSS இன் கூற்று.

போராடும் தமிழ் இளைஞர்களை 'தமிழ் பொறுக்கிகள்' என்று சு. சுவாமி வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்.


இப்பொழுது நாம் காண வேண்டியது அரசியல் அளவில் அவர்களுள் பலவிதமான வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் விடயத்தில் மட்டும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்புவது ஏன்?

இக்கட்சிகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்பட்ட பொழுதும் ஒற்றுமையாக மௌனம் காப்பது ஏன்?

ஏன் தமிழர்களின் மீது மட்டும் இத்தனை வன்மம்?

இந்தக் கேள்வியினை நண்பர் ஒருவருடன் விவாதித்தப் பொழுது அவர் கூறிய விடை,

'ஆமாம்...அந்தக் கட்சிகளினால் தமிழகத்துல ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாது...அதுனால தான் அவன் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் அப்படின்னு விட்டுட்டு அவன் எந்த இடத்துல ஜெயிக்க முடியுமோ அந்த இடத்தை மட்டும் பார்த்துக்கிறான்..."

ஆனால் இவ்விடையினை ஏனோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம்,

1) எந்த கட்சியானாலும் சரி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களிலும் இருந்து குறிப்பிட்ட அளவு தொகுதிகளை வென்று இருக்க வேண்டும். அந்நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்றால் செல்வாக்கினைப் பெறவே கட்சிகள் முயற்சி செய்யுமே அன்றி, அவர்களே அவர்களின் செல்வாக்கினைக் குறைத்துக் கொள்ளும் வண்ணம் செயலாற்ற மாட்டார்கள்.அவ்வாறே அவர்கள் செயலாற்ற ஆரம்பித்தனர் என்றால் விரைவில் அவர்களின் கட்சி அழிந்து விடும்.

2) அந்நிலையில் தமிழகத்தில் மட்டும் அக்கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லாமல் போனதற்கும் அவர்கள் இழந்த செல்வாக்கினை மீண்டும் பெறுவதற்கு முடியாமல் இருப்பதற்கும் அடிப்படையானக் காரணம் ஏதேனும் நிச்சயம் இருக்க வேண்டும். எனவே மேலே உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு என்ன காரணம் என்று நாம் காண வேண்டும் என்றால் நாம் தமிழகத்திலே அக்கட்சிகள் கால் ஊன்றாதிருப்பதற்கு என்ன காரணம் என்றே காண வேண்டி இருக்கின்றது.

அப்படி அந்த காரணத்தினை நாம் தேடினோம் என்றால் அதற்கு விடையாய் கிடைப்பது திராவிடர் இயக்கங்கள். அந்த இயக்கங்கள் இங்கே எழுந்தக் காரணத்தினாலேயே காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகளால் இங்கே வேரூன்ற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

அதாவது பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த இயக்கத்தின் காரணமாக பிராமணர்களின் கட்டுப்பாட்டினில் இருக்கும் கட்சிகள் தமிழகத்திலே வேரூன்ற முடியாத நிலை இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விடயம் திராவிடர் என்றச் சொல் 'தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள்' போன்றோரையும் தமிழரையும் குறிக்கும் ஒரு சொல் என்றே இன்றைக்கு திராவிடம் பேசுவோர் கூறுகின்றனர்.

ஆனால் அதனை தெலுங்கர்களோ, கன்னடியர்களோ அல்லது மலையாளிகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கே திராவிடர் என்றச் சொல்லோ அல்லது திராவிடர் இயக்கங்களோ பரவவும் இல்லை. இந்நிலையில் திராவிடர் என்றச் சொல் தமிழர்களை மட்டுமே குறிக்கக் கூடியச் சொல்லாக அமைந்து இருக்கின்றது. இதனை அம்பேத்கர் அவர்களும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களுமே கூறி இருக்கின்றனர்.

அப்படி இருக்க தமிழகத்தினில் தமிழர்களுக்கு மத்தியில் தோன்றிய தமிழர் இயக்கங்களின் வாயிலாக ஆரியர்கள்/பிராமணர்களின் இயக்கங்களும் கொள்கைகளும் தமிழகத்திலே பின்னடைவு அடைகின்றன. மீண்டும் அக்கொள்கைகளோ அந்த இயக்கங்களோ தமிழகத்திலே மலரப் போவதே இல்லை.

இந்த நிலை தமிழகத்தில் மட்டுமே நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ஆரியர்கள் பயப்படுகின்றனர். ஒருவேளை இந்தத் தெளிவு மற்ற மாநிலங்களுக்கும் பரவி விட்டால், அங்கும் நமது செல்வாக்கு மலிந்து விட்டால்... நாம் என்ன செய்வோம்? நாம் எங்குப் போவோம்?

அவர்களின் பயத்திற்கும் காரணமின்றி இல்லை.

இந்திய சனத்தொகையினில் அவர்களின் எண்ணிக்கை வெறும் 10% மட்டுமே... அதிலும் பிராமணர்கள் எண்ணிக்கை வெறும் 3% மட்டுமே. அந்நிலையில் மற்ற மாநிலங்களிலும் அவர்களின் செல்வாக்கு சரிந்து விட்டால், அவர்களின் வேடம் கலைந்து விட்டால்...அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் போக்கிடம் தான் என்ன?

அதனால் தான் பிரச்சனைக்குரிய மூலத்தினை அழித்துக்கட்ட அவர்கள் உறுதியாக முயல்கின்றனர்...அரசாட்சிக் காலத்தில் அரசனைக் கைக்குள் போட்டுவிட்டு எளிதாக மக்களை தாழ்த்தியதினைப் போன்ற வசதிகளை சனநாயகம் அவர்களுக்கு வழங்கவில்லை. அதனால் தான் அவர்கள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

ஆரியர் - திராவிடர் என்ற பிரிவுகள் புரட்டு என்று கதைகளைக் கட்டி விடுவது, தங்களால் இயன்ற அளவு வரலாற்றினை மறைக்க/திரிக்க முயல்வது, பெருன்பான்மையான திராவிட மக்கள் ஒற்றுமையாக இருக்காத வண்ணம் அவர்களின் நடுவே சாதி/ மதச் சண்டைகளை ஏற்படுத்திவிட்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற இவை அனைத்தையும் தாங்கள் அடிமையாக்கி வைத்துள்ள சைவ வைணவ சமயங்கள் மூலமாகவும், சூழ்ச்சியினால் பிடித்த அரசியல் உரிமையினாலும் செம்மையாகச் செய்துக் கொண்டு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முயன்றுக் கொண்டு இருக்கின்றனர்.


ஆனால் தமிழும் சரி தமிழர்களும் சரி அவர்களுக்கு மிகப் பெரிய இடையூறாகத் தான் இருக்கின்றனர். பிராமணர்கள், சைவ வைணவ சமயத்தினை அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர் என்பதனை தமிழ் இலக்கியங்கள் பறைசாட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழர்களோ தங்களின் மண்ணில் பிராமண செல்வாக்கு உள்ள இயக்கங்களை துரத்தி அடித்து விட்டு இருக்கின்றனர்.

இது தான் ஆரியர்களுக்கு கவலையையும் கோபத்தினையும் வர வைக்கின்றது. சைவ வைணவ சமயங்களை அவர்கள் அடிமையாக்கி வைத்து இருப்பது அனைத்து மக்களுக்கும் தெரிந்து விட்டால் அச் சமயங்களின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடி போய் விடும். பின்னர் எவ்வாறு அவர்கள் தாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றுக் கூறிக் கொண்டு வாழ்வை வாழ்வது?

மேலும் தமிழர்களைப் போன்றே அனைத்து மக்களும் ஆரியச் சதியினை அறிந்துக் கொண்டு தெளிவடைந்து விட்டனர் என்றால் ஆரியர்கள் எங்கே செல்வார்கள்? அவர்களுடைய செல்வாக்கு வேறு எங்கே செல்லுபடியாகும்? வேறு எங்கும் செல்லுபடியாகாதல்லவா....அதனால் தான் இங்கே தமிழ் மொழியும் தமிழர்கள் அழிவதையும் மகிழ்ச்சியாக ஆரியன் கண்டுக் கொண்டு நிற்கின்றான். பிரச்சனைக்குரியவர்கள் ஒழிந்துவிட்டால் பின்னர் அவன் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா...!!!

அதனால் தான் தனி ஈழம் அமைவதை அவன் தடுக்கின்றான். ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் ஒன்றும் செய்யாது நிற்கின்றான். தன்னை இந்து மதத்தின் தலைவன் என்றுக் (பொய்) கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களையும் இந்துக்களான தமிழர்களையும் கொன்றுக் குவித்த இராசபக்சேவினை மகிழ்ச்சியாய் திருப்பதிக் கோவிலில் வரவேற்கின்றான் (சிங்களர்கள் தங்களை ஆரியர்கள் என்றுக் கூறிக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது). அவர்களுக்குத் தேவை தமிழ் அழிய வேண்டும்... தமிழர்கள் அழிய வேண்டும்...ஏன் என்றால் அவைகள் அழிந்தால் தான் அவன் நிம்மதியாக மக்களை ஏமாற்றி வாழ முடியும்....!!!

இதனால் தான் திருமூலர் அன்றே பாடிச் சென்று விட்டார்...

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே - திருமந்திரம்

இன்று ஈழத்தில் நிகழ்வதும்...இந்தியாவில் நிகழ்ந்துக் கொண்டு இருப்பதும் ஆரியத் திராவிடப் போரின் ஒருக் கட்டமே அன்றி வேறல்ல...!!!

இவை அனைத்தையும் விரிவாகக் காண முயற்சிப்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

சனி, 15 செப்டம்பர், 2012

சமசுகிருதம் என்று ஒரு மொழி

சமசுகிருதம்....ஒரு அருமையான மொழி!!!

"அட என்னங்க 'தமிழ் தமிழ்' என்றுக் கூறிக் கொண்டு தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் போராடுபவர்கள் எல்லாம் சமசுகிருதத்தினை எதிர்த்துக் கொண்டு இருக்கும் போது நீங்க சமசுகிருதம் அருமையான மொழி அப்படின்னு சொல்றீங்களே...கட்சி மாறிடீங்களா!!!" என்று நண்பர்கள் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். சமசுகிருதம் உண்மையிலையே அருமையான மொழி தான். அதில் ஆய்வாளர்களுக்கு மாற்றுக் கருத்துக்களே கிடையாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு காலத்தில் சமசுகிருதம் தமிழர்களால் வளர்க்கப்பட்டது. இப்பொழுது எதிர்க்கப்படுகின்றது. இந்த மாற்றம் திடீர் என்றோ அல்லது காரணம் ஏதும் இன்றியோ தோன்றிவிடவில்லை மாறாக இந்த மாற்றத்திற்கு அடிப்படையாக ஒரு மாபெரும் அரசியல் இருக்கின்றது. அந்த அரசியலினைப் பற்றி நாம் பின்னர் காணலாம். ஆனால் இப்பொழுது ஏன் சமசுகிருதத்தினை தமிழர்கள் அன்று வளர்த்தனர்...ஏன் பின்னர் எதிர்கின்றனர்...என்ற இக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் சமசுகிருததினைக் காண வேண்டி இருக்கின்றது. காண்போம்...

நாம் ஏற்கனவே சமசுகிருதத்தின் காலம் என்ற பதிவில் சமசுகிருதத்தின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னரே என்றுக் கண்டு இருந்தோம். நண்பர்கள் பலர் இக்கருத்தினை நிச்சயம் ஏற்றுக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில் காலம்காலமாக சமசுகிருதம் தான் உலகின் முதல் மொழி என்றே நாம் நம்பிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...அவ்வாறு தான் நம்மிடையே கருத்துக்களும் பரப்பப்பட்டு இருக்கின்றன. சரி பிரச்சனை இல்லை...இப்பொழுது நாம் சமசுகிருதத்தினைப் பற்றி சற்று உன்னிப்பாகக் காணலாம். அதற்கு முதலில் நாம் கி.பி இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் காண வேண்டி இருக்கின்றது.

கி.பி காலத்தில் இந்தியாவில் எந்த எந்த மக்கள் எல்லாம் இருந்தார்கள் என்பதனை நாம் முன்னர் கண்ட பதிவுகளில் கண்டு இருக்கின்றோம்.
இதற்கு முன்னர் அந்தப் பதிவுகளைப் படிக்காதவர்கள் அதனை முதலில் படித்து விட்டால் நலமாக இருக்கும். (ஆரியர் யார், ஆரியர் யார் - 2)

சரி படிச்சிட்டீங்களா...அருமை.

கி.பி முதல் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பல விதமான மக்கள் இருக்கின்றனர் என்று அந்தப் பதிவுகள் வாயிலாக நாம் அறிந்து இருக்கின்றோம். பெர்சியர்கள் இருக்கின்றனர், கிரேக்கர் இருக்கின்றனர்...ரோமர் இருக்கின்றனர்...பார்தியர்கள் இருக்கின்றனர்...குசானர்களும் இருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு மக்கள் இனத்தவர் இங்கே இருக்கின்றனர். பல்வேறு மக்கள் இனத்தவர் இருக்கின்றனர் என்றால் பல்வேறு மொழிகளும் இருக்க வேண்டும் தான் அல்லவா...


அவ்வாறே தான் இருக்கின்றன. இந்தியா முழுவதிலும் பல்வேறு மொழிகள் பயன்பாட்டில் இருக்கின்றன...தமிழ்,பாலி,அரமேயம்,பாரசீகம்(பெர்சியர்களின் மொழி),கிரேக்கம், இலத்தின், அர்த்தமாகதி போன்ற பல மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன.இப்பொழுது ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் மேலே நாம் கண்ட அந்த அனைத்து மொழிச் சொற்களையும் சமசுகிருதத்தினில் நம்மால் காண முடிகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் திருவாளர் சார் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் சமசுகிருதமே உலகின் முதல் மொழியாக இருந்து இருக்கலாம் என்ற கருத்தை கூறுகின்றார். அன்று ஆரம்பித்தது தான் சமசுகிருதம் உலகின் முதல் மொழி என்றக் கோட்பாடு.

ஆனால் இந்தக் கருத்தினை சில ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். அவர்கள் கூறும் காரணம் எளிதானதொரு காரணம் தான். சமசுகிருத எழுத்துக்கள் கிடைக்கப் பெரும் முன்னரே மேலே கூறிய அந்த மற்ற மொழிகளுக்கான எழுத்துக்களும் சரி அவை பயன்பாட்டில் இந்த இன மக்களிடம் இருந்தன என்ற சான்றுகளும் சரி மிகுதியாகக் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் சமசுகிருதத்தின் சான்றுகளோ பிற்காலத்திலேயே தான் கிட்டப் பெறுகின்றன. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட ஒரு மொழி என்றே பொருள் தருகின்றது. எனவே மேலே உள்ள அந்த மொழிகளை எல்லாம் இணைத்து ஏன் சமசுகிருதத்தினை மக்கள் உருவாக்கினர் என்று நாம் கருதக் கூடாது...? அந்த மொழிகள் அனைத்தையும் இணைத்து செம்மையாக தோன்றிய ஒரு புதிய மொழியாக ஏன் சமசுகிருதம் இருக்க கூடாது? இருக்கலாம் தானே.

அதாவது பல மொழிகள் இருக்கின்றன. அவை முன்னரே இருந்து இருப்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. திடீர் என்று ஒரு புதிய மொழி தென்படுகின்றது...அந்த மொழியில் முன்பு இருந்த மொழியின் எழுத்துக்கள் எல்லாம் தென்படுகின்றன. எனவே முன்பிருந்த மொழிகளை எல்லாம் தொகுத்து இந்த புதிய மொழி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று நாம் கருத முடிகின்றது தானே. அதுவும் அந்த புதிய மொழியின் அர்த்தமே செம்மையாக செய்யப்பட்டு இருக்கின்றது என்று இருக்கும் பொழுது நம்முடைய கருத்து வலுபெறத்தானே செய்கின்றது. ஆனால் சான்றுகள் இன்றி நம்மால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மேலே உள்ள ஆய்வாளர்களின் கூற்றுக்கு அவர்கள் தரும் சான்றுகள் என்னவென்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு வேதங்களையும் வேதாந்தங்களையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே காணப்படுகின்றன. மேலும் சென்றப் பதிவுகளில் அவைகளுக்கும் விவிலியத்தில் இருக்கும் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவைக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்த்தோம். இப்பொழுது நாம் மேலும் எந்த புதிய விடயத்தினையும் காணும் முன்னர் சில பழைய விடயங்களை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது...

௧) ஒரு கிருத்துவக் கொள்கை -

அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்.
 

௨) விவிலியத்தைத் தொகுத்ததில் உள்ள ஒரு கொள்கை -
பழைய ஏற்பாடு யூதர்களுக்கு உரியது – எபிரேயச் சமயத்தின் கொள்கைகளைக் கொண்டது – எபிரேய மொழியில் தொகுக்கப்படுகின்றது.
புதிய ஏற்பாடு உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக – கிருத்துவின் கொள்கைகளைக் கொண்டது – கிரேக்க மொழியில் தொகுக்கப்படுகின்றது.

௩) வேதங்களுக்கும் பழைய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

௪) வேதாந்தங்களுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

௫) வேதத்தில் இறைவன் பலியாவது போன்று வரும் செய்திகள். நிற்க.
என்ன அனைத்து விடயங்களையும் ஒரு முறை நியாபகப்படுத்திக் கொண்டு விட்டீர்களா? நன்று. இனி நாம் சுத்தி வளைக்காது நேரே நம்முடைய கருத்துக்கு செல்லலாம்.

மேலே நாம் கண்ட கிருத்துவக் கொள்கையின் மூலம், எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கைகளையும் தத்துவ அடிப்படைகளையும் கற்றுக் கொண்டு பின்னர் அவைகளின் மூலமாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்றே நாம் அறிகின்றோம்(இன்று அரசியல் காரணமாக அனைத்து சமயங்களின் கொள்கைகளுமே மாறி விட்டன) அதன் அடிப்படையிலேயே யூதர்களின் சமயமான எபிரேயச் சமயத்தினைப் பற்றிய தொகுதியான பழைய ஏற்பாட்டினை எபிரேய மொழியில் தொகுக்கின்றனர். பின்னர் அந்த நிலப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கிருத்துவின் கருத்துக்களைக் கூற அங்கே பரவலாகக் காணப்பட்ட கிரேக்க மொழியிலே தொகுக்கின்றனர்.

ஆனால் யூதர்களும் கிரேக்கர்களும் மட்டுமே அன்று உலகில் வாழ்ந்த மக்கள் அல்லவே...மற்ற இனத்தவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களே. அவர்களுக்கென்று தனி மொழி இருக்குமே. எபிரேயத்தில் யூதர்களுக்கு சொல்லியாயிற்று...யூதர்களுக்கும் சரி கிரேக்கர்களுக்கும் கிரேக்கத்தின் வாயிலாகவே சொல்லியாயிற்று...அந்த நூல்களில் யூதர்களின் பழக்க வழக்கங்களும் சரி கிரேக்கர்களின் வரலாறும் சரி இருக்கின்றன... எனவே அந்த மக்கள் அந்த நூல்களின் உள்ள கருத்துக்களை அவர்களின் வாழ்வோடு இணைத்துக் கொள்வர். ஆனால் மற்ற மக்களுக்கு? அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்துக் கொண்டு அவற்றின் வாயிலாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் தானே...அது தானே முறையாக இருக்கும். நிற்க.

இந்நிலையில் தான் நாம் இந்தியாவினைக் காண வேண்டி இருக்கின்றது. பல்வேறு மொழிகள் இருக்கின்றது. பல்வேறு மக்கள் பல்வேறு வரலாற்றோடு இருக்கின்றனர். பலி இடும் பழக்கம் அனைவரின் மத்தியிலும் ஒன்றினைப் போலவே இருக்கின்றது. இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் பொதுவான கருத்துக்களைச் எவ்வாறுச் சொல்வது? எந்த மொழியினில் சொல்வது?

நியாயமான கேள்வி தானே. இக்கேள்விக்கு இரண்டு விதமாக தீர்வினைக் காண முடியும்.

ஒன்று - அனைத்து மொழிகளிலும் கருத்துக்களைப் படைத்து அனைவரிடமும் பரப்பலாம்.

இரண்டு - அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழியினைப் படைத்து அதன் மூலமாக கருத்துக்களைப் பரப்பலாம்.

இந்த இரண்டு தீர்வுகளில் அக்காலத்தில் இருந்த அறிஞர்கள் இரண்டாவது தீர்வினைத் தேர்ந்து எடுத்ததே இன்று சமசுகிருதம் என்ற மொழி நம்மிடையே இருப்பதற்கு காரணம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆம்...அவர்களின் கூற்றின் படி அக்காலத்தில் இந்தியாவில் இருந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கருத்தினைப் பரப்ப அன்று நிலைவிய மொழிகளான தமிழ்,பாலி,அர்த்தமாகதி,அரமேயம்,கிரேக்கம்,இலத்தின் போன்ற மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி தான் சமசுகிருதம். அவ்வாறு அது உருவாக்கப்பட்டமையால் தான் அது 'செம்மையாகச் செய்யப்பட்டது' என்று பொருள் தருவதோடு அம்மொழி யாராலும் பேசப்பட்டதாக வரலாறும் கிட்டப்பெறாமல் இருக்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு மொழியினைக் கொண்டு இந்தியாவில் அன்று இருந்த மக்கள் அனைவருக்கும் இறைவனது கருத்துக்களைப் பரப்ப அன்று இருந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்ட நூல்கள் தான் வேதங்களும் வேதாந்தங்களும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது அன்று இந்தியாவில் இருந்த மக்களுள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அனைவரிடமும் பல கடவுளர் வழிபாடும் பலி வழிபாடும் ஒன்றினைப் போலவே இருந்து இருக்கின்றது. அவர்கள் தமிழர்களாகட்டும் அல்லது பெர்சியர்களாகட்டும் பலி இருந்து தான் இருக்கின்றது. அப்படி இருக்கையில், "இறைவனுக்கு பலியிட்டு நாம் வணங்கிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...ஆனால் இறைவன் நமக்காக பலியாகி விட்டார்... எனவே நாம் பலியிடத் தேவை இல்லை...மாறாக நமக்காக பலியான இறைவனை வேண்டி அன்பினையே போதிப்போம்" என்ற கருத்துக்களை அனைத்து மக்களுக்கும் பரப்பத் தான் வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி தொகுக்கப்படுகின்றன.

அதனால் தான் வேதங்களில் பல கடவுளர் இருக்கின்றனர்...பலி இருக்கின்றது...முடிவில் இறைவன் பலியாவதைப் போல் வருகின்றது. வேதாந்தத்தில் கடவுள் ஒருவரே என்றக் கொள்கையும் பலி தேவை இல்லை என்ற கொள்கையும் காணப்படுகின்றன. மேலும் இந்தியாவில் அன்று இருந்த அனைத்து மக்களுக்கும் பொதுவாக வேதங்களைத் தொகுத்தக் காரணத்தினால் தான் வேதங்களில் பெர்சியர்களின் கொள்கைகள், வரலாறு மற்றும் கிரேக்கர்களின் கொள்கைகள் மற்றும் இன்னும் பல கொள்கைகளும் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு,

"வேதங்களுள் வழிப்படப்பட்ட இயற்கைப் பொருள்களுள் பழமையானது வானம். இதனுடைய பழம் பெயர் 'தியுஸ்' என்பது. இது கிரேக்க சுஸ் என்பதையும் இலத்தீனில் உள்ள ஜுபிட்டர்ஐயும் ஒத்ததாய் இருக்கின்றது. 'தியுஸ்' என்பது பிதர், தந்தை என்றும், படைப்பவர், ஆற்றல் மிக்கவர் என்றும் கூறப்படுகின்றன. 'தியுஸ் பிதர்' என்னும் வான் தந்தை அல்லது ஒளியின் தந்தை என்பது விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே என்பதையும் ஒளியின் தந்தையே என்பதையும் நினைவுறுத்துகின்றன" என்றே கூறுகின்றார் மாரிஸ் பிலிப்ஸ் என்னும் ஆய்வாளர் தனது 'The Teaching of the vedas' என்னும் நூலில்.

“ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது.” என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது ‘இந்தியாவின் வரலாறு’ என்ற புத்தகத்தில் (E.W.Thompson – History of India).

மேலும் ர.ச. ஷர்மாவின் ” சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது.” என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் – ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma – Looking for the Aryans).

டேவிட் பிரௌலே தனது ‘ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley – The Myth of the Aryan Invasion of India)’ என்ற தனது புத்தகத்திலே ‘ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய – ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

எனவே இந்தியாவில் அன்று இருந்த பல்வேறு இனங்களுக்குரிய வரலாறு, பாடல்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றினைத் அவர்களுக்காகத் தொகுத்து அவர்களின் இறைவன் அவர்களுக்காக பலியானான் என்ற செய்தியை தெரிவித்து பின்னர் இறைவன் ஒருவன் தான் அவன் மக்களுக்காகவே இருப்பவன் என்ற கருத்தினைத் தெரிவிக்கவே வேதங்களும் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் "அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்." என்றக் கொள்கைக்கு ஏதாக அம்மக்கள் அவர்களுள் கொண்டு இருந்த இறைப் பெயர்களைக் கொண்டே அம்மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு செல்கின்றனர். அதனால் தான் இயேசு என்ற பெயர் அங்கே காணப்படவில்லை.

காரணம் இறைவனின் பெயர் முக்கியமில்லை கருத்துக்களே முக்கியம் என்ற நிலையில் தான் அன்றைய அறிஞர்கள் கருத்துக்களைத் தொகுக்கின்றனர் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிலும் முதலில் இருக்கு வேதமே தொகுக்கப்பட்டது என்றும் பின்னரே மற்ற வேதங்கள் தொகுக்கப்பட்டன என்றும் அவர்கள் கூறுகின்றனர். சரி இருக்கட்டும்…!!!
 
இறைவன் உலகிற்கு வந்து மக்களுக்காக பலியானார் என்ற செய்தியினைப் பரப்பவே வேதங்களும் பின்னர் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன, அந்தப் பணிக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய மொழி தான் சமசுகிருதம் என்ற இந்த கருத்தை நிச்சயம் ஏற்பது கடினமாகத் தான் இருக்கும். இந்நிலையில் இக்கருத்துக்களை வலுப்படுத்துமாறு வேறு சான்றுகள் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
 
மேலும் பலி இல்லாத வழிபாட்டு முறைக்கு புத்தம் மற்றும் சமணம் ஆகிய சமயங்களின் தாக்கங்களும் காரணமாக இருக்கலாம் அல்லவா என்றக் கேள்வியும் இன்னும் பதில் அளிக்கப்படாமல் இருக்கின்றது அல்லவா…எனவே நாம் அவற்றையும் காணத் தான் வேண்டி இருக்கின்றது.
அதற்கு நாம் இப்பொழுது அந்த சமயங்களைக் காண வேண்டி இருக்கின்றது…
 
காண்போம்…!!!
 
பின்குறிப்பு:
 
இன்று வேதங்கள் என்று வழங்கப்படுபவை தமிழர்களால் இறைவன் பலியானதை தெரிவிக்க தொகுக்கப்பட்ட நூல்கள் என்று கூறுகின்றீர்களே அப்படி என்றால் அதில் வரும் நான்கு பிரிவுகள் எவ்வாறு வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து இருந்தது என்றால், வேதங்களில் இறைவன் மனிதன் நான்கு வர்ணமாக படைத்தான் என்று வரும் பகுதி இடைச் செருகல் என்றே அம்பேத்கர், மாக்ஸ் முல்லேர் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாம் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்திய அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து இருந்து இருக்கின்றன என்று. அக்காலம் தொடங்கி இந்திய நூல்களில் பல மாற்றங்களும் பல இடைச் செருகல்களும் நிகழ்ந்து இருக்கின்றன என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஞாயிறு, 17 ஜூன், 2012

ஆரியர்கள் யார் - 2

சென்ற பதிவில் இந்தியாவினை கி.பி காலத்தின் தொடக்கத்தில் விட்டு விட்டு வந்தோம். அப்பொழுது இந்தியாவில் அன்னியர்கள் பலர் இருந்ததாகவும் மேற்கு பகுதிகள் முழுமையாகவே அவர்களிடம் இருந்ததையும் நாம் கண்டோம். இனி கி.பி யில் நடந்தது என்ன என்றுக் காண்போம்.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் பார்தியர்கள் ஆண்டுக் கொண்டு வந்தனர் என்றுக் கண்டோம் அல்லவா. ஆனால் அவர்களின் ஆட்சி நீண்டக் காலம் நீடிக்க வில்லை. காரணம் - குஷானர்களின் படையெடுப்பு. நாம் சென்ற பதிவில் கண்டு இருந்தோம் அல்லவா சகர்களை மத்திய ஆசியாவில் இருந்து குசானர்கள் துரத்தி அடித்தனர் என்று, அதே குசானர்கள் தான் இப்பொழுது மத்திய ஆசியாவினைப் பிடித்து இந்தியாவின் மேற்கே வந்து இருக்கின்றனர். இவர்களின் முன் தாக்குப் பிடிக்க முடியாது பார்தியர்களின் அரசு வீழ மேற்கு இந்தியா இப்பொழுது குசானர்களின் வசம் செல்கின்றது.

இந்த குசானர்கள் என்பவர்கள் கிழக்கு மத்திய ஆசியாவில் இருந்து கிளம்பிய ஒரு சீன நாடோடிக் கூட்டம் ஆகும். அதாவது பிற்காலத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற மங்கோல் இனத்தவரின் முன்னோடிகள் இவர்கள் என்றும் சொல்லலாம். ஆயிரம் வருட முன்னோடிகள். அப்பேர்ப்பட்ட இவர்களின் வலிமைக்கு முன்னால் நிற்க முடியாது வரிசையாக மத்திய ஆசிய நாடுகள் வீழ இறுதியில் பார்தியர்களின் அரசும் வீழ்கின்றது. இந்தியாவின் மேற்குப் பகுதி சீன நாடோடி இன மக்களின் கட்டுப்பாட்டுக்கு வருகின்றது.

இத்தனைப் படையெடுப்புகளிலும் நாம் காண வேண்டியது இந்தியாவின் மேற்குப் பகுதியினைப் பிடித்தவர்கள் பெரும்பாலும் நாடோடி இன மக்களே. அவ்வாறு பிடித்தவர்கள் அங்குள்ள மக்களுடன் கலந்து கொண்டே ஆட்சியினைத் தொடருகின்றனர். அதாவது மக்களுடன் அவர்கள் கலந்தே விடுகின்றனர். இதன் காரணமாக மேற்கில் பல இனக் குழுக்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. சரி இப்பொழுது மீண்டும் குசானர்களிடம் வருவோம்.

குசானர்கள் கிட்டத்தட்ட மேற்கு இந்தியா முழுவதையுமே பிடித்து விடுகின்றனர். ஏன் மத்தியிலும் அவர்களின் செல்வாக்கினை விரிவு படுத்துகின்றனர். மத்திய இந்தியாவில் சாதவாகனர்கள் வலிமையுடன் இருந்தாலும் குசானர்களை ஒரு அளவு கட்டுப்படுத்த முடிகின்றதே தவிர அவர்களை முழுமையாக விரட்ட முடியவில்லை. இவ்வாறே காலங்கள் ஓட கி.பி மூன்றாம் நூற்றாண்டும் வந்து விடுகின்றது. இக்காலத்திலேயே குசானர்கள் மற்றும் சாதவாகனர்களின் ஆட்சிகள் ஒரு முடிவுக்கு வருகின்றன.

சாதவாகனர்கள் இந்தியாவின் மேற்கில் குசானர்களின் ஆதரவில் வீற்று இருந்த ஒரு சகர் அரசால் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. குசானர்களின் ஆட்சியோ மேற்கில் மீண்டும் வலுப்பெற்று எழுந்த பெர்சியர்களின் அரசால் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. ஆனால் குசானர்கள் முழு ஆட்சியையும் இழக்கவில்லை. பஞ்சாப் பகுதியினை அவர்கள் அப்பொழுதும் அவர்களின் ஆட்சியில் வைத்து இருந்தனர். மத்திய இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி வரும் வரை குசானர்களின் ஆட்சி இந்தியாவில் மறையவில்லை. ஆனால் இந்தக் காலத்தில் தமிழகத்தின் சரித்திரம் ஒரு இருண்டக் காலத்தினுள் நுழைகின்றது. தமிழகம் களப்பிரர்களின் கைகளுக்கு செல்கின்றது. இருண்டக் காலம் என்றுக் கூறுவதன் காரணம் அக்காலத்தில் தமிழகத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. களப்பிரர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? என்ன நடந்தது என்று ஆய்வுகள் தான் கூற வேண்டும். சரி இப்பொழுது நாம் மீண்டும் குப்தர்களை காண செல்வோம்.

குப்தர்கள் ஆட்சி மலருவது கி.பி நான்காம் நூற்றாண்டில். குப்தர்களின் காலம் மீண்டும் இந்தியாவின் ஒரு பொற்காலம். இக்காலத்தில் தான் இழந்த பகுதிகள் அனைத்தையும் இந்தியா திரும்ப பெறுகின்றது. சந்திர குப்தர், சமுத்திர குப்தர் போன்ற மாபெரும் வீரர்கள் தோன்றுகின்றனர். பெர்சியர்களை வீழ்த்தி மேற்குப் பகுதியில் பெருன்பான்மையான பகுதிகள் மீட்கப் படுகின்றன. கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே இந்தியர்களின் கையில் வருகின்றது. மேற்குப் பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்தாலும் குப்தர்களின் முன் அவை தோற்றே போகின்றன. ஆனால் வலிமையுடன் இருப்பவன் வலிமையாகவே இருக்க முடியுமா. குப்தர்களின் ஆட்சியிலும் அவர்கள் சறுக்கும் காலம் வருகின்றது. இந்த சறுக்கம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகின்றது. காரணம் ஹுன்னேர்கள் (Huns). வட ஆசியப் பகுதிகளில் இருந்துக் கிளம்பிய மற்றுமொரு நாடோடி இனத்தவர். இவர்களைப் பற்றி சாதாரணமாக எண்ணி விட முடியாது. குதிரை வில்லாளிகளையே முக்கிய ஆயுதமாகக் கொண்டு இருந்த இவர்கள் கிட்டத்தட்ட அனைத்து ஆசிய நாடுகளுக்கும் சரி ரோமப் பேரரசுக்கும் சரி தலைவலியாகத் தான் திகழ்ந்தனர். அப்பேர்ப்பட்ட இவர்கள் தான் இந்தியாவின் மேற்குக் கதவினை இப்பொழுது தட்டிக் கொண்டு இருக்கின்றனர். எத்தனைக் காலம் தான் குப்தர்களாலும் அக்கதவினைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்க முடியும். குப்தர்கள் பின் வாங்குகின்றனர். ஹுன்னேர்கள் இந்தியாவின் உள்ளே நுழைகின்றனர். இது நடப்பது கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில்.

இந்நிலையில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஹுன்னேர்களின் ஆதிக்கம் பெருகுகின்றது. குப்தர்கள் வலு இழக்கின்றனர். பஞ்சாப் முதற்கண்ட பகுதிகளில் ஹுன்னேர்கள் பரவுகின்றனர். இறுதியாக கி.பி ஆறாம் நூற்றாண்டில் குப்த வம்சம் பல சிறு சிறு பிரிவுகளாக பிரிகின்றது. அத்தருணத்தில் தான் வரதர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். சிதறிக் கிடக்கும் பிரிவுகளை ஒன்றிணைத்து ஹுன்னேர்களை எதிர்க்கின்றனர். ஆனால் எவ்வாறு இறுதி மௌரியப் பேரரசன் சதியினால் வீழ்த்தப்பட்டு இறந்தானோ அவ்வாறே இறுதி வரத மன்னனும் சதியினால் இறக்கின்றான். அவனை கொள்பவன் அவனது அமைச்சன். அவனுடன் சேர்ந்தே அவனது இரு மகன்களும் கொல்லப்பட வரத அரசும் அதன் முடிவுக்கு வருகின்றது. இதன் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு.

எவ்வாறு பிரகதரத்தன் மரணத்தோடு மௌரியப் பேரரசு ஒரு முடிவுக்கு வந்ததோ. அதேப்போல் இறுதி வரத மன்னனான ஹர்ஷ வரதனின் (Harsha vardhan) மரணத்தோடு வட இந்தியாவில் திராவிடர்களின் இறுதிப் பேரரசும் ஒரு முடிவுக்கு வந்தது. அவனே இறுதியாக வட இந்தியாவினை ஆண்ட ஒரு உண்மையான இந்திய அரசன்.

அவனின் மறைவுக்குப் பின் வட இந்தியா ஒரு குழப்பமான நிலைக்குச் செல்கின்றது. பெரிய அரசர்களோ அரசுகளோ இல்லாத ஒரு நிலை வட இந்தியாவினில் இருக்கின்றது. தெற்கே அப்பொழுது தான் பல்லவர்கள் நிலைப்பெற்று இருக்கின்றனர்.

இந்நிலையில் தான் புதிதாய் ஒரு பெயரினை வைத்துக் கொண்ட சிறு குழுக்கள் வட மேற்குப் பகுதியில் இருந்து தோன்றுகின்றன. இனி வட இந்தியாவினை அடுத்த ஐநூறு ஆண்டுகள் ஆளப்போவது இந்த குழுவினரே. இக்குழுக்களின் பெயர்களை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். அட அது என்ன பெயர் அப்படின்னு கேட்கின்றீர்களா.

அது தான் ராஜ்புட்ஸ் (Rajputs). இன்றைய வட இந்தியாவிலும் பிரபலமான ஒரு பெயர். வட மேற்கில் பல காலத்தில் இந்தியா மீது படையெடுத்து வந்து இந்தியாவிலேயே தங்கி இருந்த சகர்கள், குசானர்கள் மற்றும் ஹுன்னேர்கள் போன்றவர்களே ஒன்றிணைந்து, குழப்பம் மிக்க அன்றைய இந்திய அரசியலிலில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்க ராஜ்புட்ஸ் என்ற பெயரில் வருகின்றனர். அரச வரதனின் மரணத்துக்கு பின் இவர்கள் வலு பெற்று வெளியே வருவதை வைத்து அரச வரதனின் கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்றே அறிஞர்கள் எண்ணுகின்றனர். அதுவும் குறிப்பாக அக்காலம் தொடங்கி இசுலாமியர்களின் படையெடுப்பு வரை வட இந்தியாவின் காலம் ராஜ்புட்ஸ் காலம் என்றே அழைக்கப் பெருவதும் இங்கே கவனிக்கத் தக்கது.

"ராஜ்புட்ஸ் என்பவர்கள் இந்தியா வந்து அங்கேயே தங்கிய சகர்கள், ஹுன்னேர்கள் மற்றும் குசானர்களின் வம்சாவளியினரே ஆவர். காலப்போக்கில் முற்றிலுமாக இந்திய மக்களுள் அவர்களை இணைத்துக் கொண்டு அவர்களின் தனித்தன்மையை இழந்து விட்டனர்." என்கின்றார் கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில.

மேலும் இன்றும் உள்ள ராஜ்புட்டுக்களின் இன வரலாற்றினை ஆராய்ந்தோம் என்றால் அவை நம்மை சகர்களுக்கோ அல்லது ஹுன்னேர்களுக்கோ அல்லது குசானர்களுக்கோ .. ஏன் கிரேக்கர்களுக்கு கூட நம்மை இட்டுச் செல்லும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சில ராஜ்புடுக்களின் இனமே 'ஹுனா ஜட் (Huna Jat)' என்று இருக்கின்றது...ஹுன்னேர்களுக்கு சாட்சியாக. நிற்க. இப்படிப்பட்ட ராஜ்புட்டுக்களைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. காரணம் அவர்களைக் காணாது இன்றைக்கு நம் நாட்டில் நாம் காணும் வருணாசிரம தருமத்தை நாம் அறிந்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் திகழும் ஒரு அரசியல் குழப்பமான தருணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அது வரை இந்தியாவை வெவ்வேறு தருணங்களில் படையெடுத்து வந்து ஆண்டு பின்னர் மக்களுடன் கலந்த அன்னியர்கள் ராஜ்புட்ஸ் என்ற பெயரில் ஒன்று சேருகின்றனர். நீண்ட நாட்கள் இந்தியாவினை அவர்கள் கண்டு இருக்கின்றனர். இந்தியா மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது. ஆன்மீக ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி. நிலைமை அவர்களுக்கு தோதாக இருக்கின்றது. வட இந்தியாவினை அவர்கள் கைக்கு கொண்டு வருகின்றனர். வட இந்தியாவில் அவர்களின் ஆட்சியை அமைக்கின்றனர்.

அந்த ஆட்சி தான் ஆரியவர்தம். ராஜஸ்தானில் உள்ள அபு மலையில் தான் ஆரியவர்த்தம் தொடங்கப்பெருகின்றது. இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்த ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் தான் ஆரியர்கள் என்றும் இக்காலத்திலேயே மனு தர்மமும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்றப் பிரிவுகளும் பிறந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிராமணர்கள் - மத சம்பந்த செயல்களைச் செய்யும் ஆரியர்கள்.
சத்திரியர்கள் - யுத்தம் செய்யும் ஆரியர்கள்.
வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்.
சூத்திரர்கள் - இந்தியர் அனைவரும்.

என்பதே அந்தப் பிரிவுகளின் அர்த்தம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இப்பிரிவுகளைக் கொண்டே சதிகளால் மக்களை ஏமாற்றி அவர்களின் சமயங்களைப் பிடித்து இந்திய மக்களை அடிமையாக்க அவர்களுக்கு அமைதியான ஐநூறு கால ஆண்டுக் காலங்கள் கிடைக்கின்றன என்றும் அக்காலங்களிலேயே சமய நூல்களின் அர்த்தங்களும் சரி வரலாறும் சரி மாற்றப் படுகின்றது, மேலும் காலப்போக்கில் சூத்திரர்கள் என்ற பிரிவுகளில் தங்களுக்கு ஏற்றார்ப்போல் பல பிரிவுகளை உருவாக்கிக் கொள்கின்றனர் அதாவது,

சிவாச்சாரியார் - பிராமண மயமாக்கப்பட்டவர்கள்.
சற்சூத்திரர் - ஆரியருக்கு துணை போனவர்கள்.
சூத்திரர் - ஆரியருக்கு அடிபணிந்தவர்.
பஞ்சமர் - ஆரியரை எதிர்த்தவர்கள்.
மலை சாதியினர் - மலைக்குத் தப்பி ஓடிப் போனவர்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு அவர்களுக்கு துணை போகும் பல விடயங்களில் ஒன்று தமிழர்கள்/இந்தியர்கள் உருவாக்கிய சமசுகிருத மொழியும் அவர்கள் உருவாக்கிய சைவ வைணவ சமயங்களுமே.

பல இனத்து மக்கள் கூடி இருக்கும் இந்தியாவில் கருத்துக்களைப் பரப்புவதற்கு தோதாக அனைத்து மொழிகளையும் கலந்த ஒரு மொழியை இந்தியர்கள் உருவாக்குகின்றனர் என்றும் அம்மொழியே பின்னர் அவர்களுக்கு எதிராய் பயன்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றினை மெய்ப்பிப்பது போல் கி.பி நூற்றாண்டுகளிலேயே அதுவும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு பின்னரே தெளிவான சமசுகிருத படைப்புகள் நமக்கு கிடைக்கின்றன. மேலும் சமசுகிருதத்தில் பல மொழிச் சொற்கள் இருப்பதும் அவர்களின் கூற்றுக்கு சான்றாகத் தான் அமைகின்றது. அதாவது சமசுகிருதத்தில் தமிழ், பாலி, அர்த்தமாகதி, கிரேக்கம், லத்தின், பாரசீகம் மற்றும் அரமேயச் சொற்கள் இருப்பது இது அந்த மொழிகளின் கலப்பில் உருவாக்கப்பட்ட ஒரு மொழியே ஆகும் என்றும் நாம் கருத வழி செய்கின்றது. சரி... இம்மொழியினை தங்களுக்கு உதவுமாறு ஆரியர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதனை நாம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

எனவே இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள் (Scythian), குசானர்கள் (Kushan), ஹுன்னேர்கள் (Huns), பெர்சியர்கள் (சுங்கர்கள் கன்வர்களை நினைவில் கொள்க), கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் தான் ஆரியர்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

முற்றும்.

ஆரியர்கள் யார் - 1

வரலாற்றினை நாம் திருப்பிப் பார்க்கும் பொழுது ஒன்று நமக்குத் தெளிவாகப் புலனாகின்றது.
சில விடயங்கள் மறக்கப்பட்டு இருக்கின்றன.
சில விடயங்கள் மறைக்கப்பட்டு உள்ளன.

அதுவும் இந்தியாவின் வரலாற்றினைப் பார்க்கும் பொழுது தெளிவானப் பக்கங்களை விட குழம்பிய பக்கங்கள் தான் அதிகம் தெரிகின்றது. குழம்பிய பக்கங்களில் பொதுவாக யாரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் நமது பயணத்திற்கான சில விடயங்கள் அந்த குழம்பியப் பக்கங்களில் இருப்பதினால் நாம் அப்பக்கங்களை இப்பொழுது கண்டுத் தான் ஆக வேண்டி இருக்கின்றது. அதற்கு முன் ஒருக் கேள்வி...

இந்தியாவின் மேல் இது வரை எத்தனை பேர் படை எடுத்து வந்து இருக்கின்றனர்?. இக்கேள்விகளுக்கு நாம் வரலாற்றில் படித்த பதில்கள் அனேகமாக முஹம்மது கோரியில் தொடங்கி ஆங்கிலேயர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் வரை சென்று முடியும். அதாவது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றைய தேதி வரை இப்பட்டியல் நீளும். இல்லை கோரிக்கு முன்னரும் படையெடுத்து வந்தவர்கள் தெரியும் என்கின்றீர்களா. நல்லது தான். ஏனெனில் நாம் அவர்களைத் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். அதற்கு முதலில் கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டி இருக்கின்றது. நமக்காக அங்கே பெர்சியப் பேரரசர் சைருஸ் இந்தியாவின் மேற்கு பகுதியான காந்தாரப் பகுதியில் காத்துக் கொண்டு இருக்கின்றார் ஒரு பெரும் படையோடு. வரலாற்றுக் குறிப்புகள் படி இந்தியாவின் மேல் படையெடுக்கும் முதல் அந்நிய அரசர் இவர். பொதுவாக இந்தியாவின் தெற்குப் பகுதிகளை விட வட மேற்குப் பகுதிகளே அதிகமாக தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. காரணம் தெற்கினை தாக்க வேண்டும் என்றால் கடல் வழியே வருவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் வட மேற்கோ அவ்வாறு இல்லை. திறந்தே இருக்கின்றது.

இந்நிலையில் தான் பெர்சியாவின் அரசர் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துகின்றார். வெற்றியும் பெறுகின்றார். இந்தியாவின் மேற்குப் பகுதிகளான காந்தாராவில் பெர்சிய ஆதிக்கம் தொடங்குகின்றது. காலப்போக்கில் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகள் முழுக்கவும் பெர்சியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. இது நடப்பது கி.மு 520 ஆம் ஆண்டு. நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் இவர்கள் பின்னர் அலெக்ஸாண்டரின் இந்தியப் படை எடுப்பின் பொழுது தோற்க்கடிக்கப்படுகின்றனர். அவர்களின் கீழே இருந்தப் பகுதி இப்பொழுது கிரேக்கர்களின் வசம் போகின்றது. இதன் காலம் கி.மு நான்காம் நூற்றாண்டு. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்த நூற்றாண்டு. இந்தியாவில் அலெக்சாண்டர் பல வெற்றிகள் பெற்றதும் பின்னர் பின் வாங்கியதும் வரலாறு. அது நமக்கு இப்பொழுது முக்கியமில்லை. முக்கியம் என்னவெனில் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் வேற்றவர்களின் தாக்குதல்கள் இருந்து இருக்கின்றது.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் பெர்சியர்களும், கி.மு நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்களும் இந்தியாவின் மேற்குப் பகுதியினை தாக்கி இருக்கின்றனர். முதலில் பெர்சியர்களுக்கும் காந்தாரப் பகுதியில் இருந்த இந்தியர்களுக்கும் யுத்தம் நடந்து இருக்கின்றது. அதில் வெற்றிப் பெற்ற பெர்சியர்கள் அங்குள்ள இந்தியர்களை ஆளுகின்றனர். அவர்களை தங்களுடைய மற்ற போர்களுக்கும் பயன்படுத்துகின்றனர். பின்னர் கி.மு நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் பெர்சியர்களை தோற்கடித்து காந்தாரப் பிரதேசத்தினைக் கைப்பற்றுகின்றார். இவ்வாறு முதலில் பெர்சியர்களின் தாக்கத்திற்கு உட்பட்ட காந்தாரம் பின்னர் கிரேக்கர்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றது. நிற்க.

மேலே உள்ள செய்திகள் மூலம் நாம் பல யுத்தங்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்து வடக்கே நிகழ்ந்துள்ளன என்று அறியப் பெறுகின்றோம். இவற்றை நாம் காண்பதற்கு காரணம் இந்த யுத்த காலத்திலேயே தான் ரிக் வேதத்தில் குறிக்கப்பட்டு உள்ள சில யுத்தத் தொடர்பான பாடல்கள் பாடப்பட்டு உள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

"ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது." என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது 'இந்தியாவின் வரலாறு' என்ற புத்தகத்தில் (E.W.Thompson - History of India). மேலும் ர.ச. ஷர்மாவின் " சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது." என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் - ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma - Looking for the Aryans).

டேவிட் பிரௌலே தனது 'ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley - The Myth of the Aryan Invasion of India)' என்ற தனது புத்தகத்திலே 'ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய - ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

இங்கே நாம் காண வேண்டி இருக்கின்றது இந்திய- ஈரானிய இனக்குழுக்கள் என்ற சொல்லையே. ஆய்வாளர்களின் கூற்றின் படி காந்தாரத்தை படை எடுத்து வென்ற பெர்சியர்கள் அங்கே இருந்தவர்களோடு திருமண முறைப்படி கலக்கின்றனர். அவ்வாறு மேற்கு இந்தியாவில் பல இனக்குழுக்கள் அக்காலத்தில் தோன்றின. அவர்களின் மூலமே இந்தியாவின் அரசியல் அமைப்புகள் வெளியே கசிந்து பின்னர் கிரேக்கம் மற்றும் பக்ட்ரியன் இனத்தவரும் இந்தியாவின் மேல் படை எடுத்தனர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு சான்றாக தட்சசீலத்தை ஆண்ட அம்பி என்ற அரசன் தான், இந்தியா அரசனான புருசோதமனின் மேல் தான் கொண்ட பொறாமைக் காரணமாக அலேசேண்டேருக்கு இந்தியாவின் மேல் படை எடுத்து வர ஒரு ஓலை அனுப்புகின்றான் என்பது வரலாறு. அந்த அம்பியும் ஒரு பெர்சிய கலப்பினத்தவன் என்று கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகின்றார் (K.L.Khurana - The Political and Cultural History of India).

"பெர்சிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவின் அரசியலில் உள்ள பலவீனங்களை உலகுக்கு வெளிப்படுத்தினர். இதுவே கிரேக்கர்களையும் பின்னர் பக்ட்ரியன்களையும் இந்தியாவின் மீது படையெடுத்து பின்னர் வரச் செய்தது."

"அம்பி பண்டைய இந்திய வரலாற்றில் தனது அரசியல் சுய நலத்துக்காக புருசோதமனுக்கு தோற்கடிக்க அலேசேண்டேரை இந்தியா வரக் கூறி ஓலை அனுப்பிய ஒரு துரோகியாகவே குறிக்கப்படுகின்றான்."

சரி... இப்பொழுது இந்தியாவின் மேற்கில் பல இனக்குழுக்கள் தோன்றிவிட்டன. அலேசேண்டேரும் இந்தியாவின் மீது போரிட்டு சென்று விட்டார். கிரேக்க தாக்கமும் பெர்சிய தாக்கமும் இந்தியாவின் மேற்கில் இருக்கின்றன. இக்காலத்தில் தான் இந்தியாவின் வரலாற்றில் குறிக்கப்பட்ட ஒரு மாபெரும் வீரன் தோன்றுகின்றான்.

சந்திர குப்த மௌரியன். - தோன்றி மௌரியப் பேரரசினை நிறுவுகின்றான். இவன் காலத்தில் சிதறுண்ட இந்தியாவின் மேற்குப் பகுதிகள் இவனது பேரரசில் இணைய ஆரம்பிகின்றன. அவற்றுடனே அந்த இந்திய - ஈரானிய இனக்குழுவினரும் தான். சந்திரா குப்தனுக்கு பின்னர் அவன் மகன் பிந்துசாரா வருகின்றான். அவன் பின்னர் இந்தியா கண்ட மாபெரும் சக்கரவர்த்தி அசோகன் வருகின்றார். கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே மௌரியப் பேரரரசின் கீழ் வருகின்றது. தெற்கே பாண்டியர்களையும் சோழர்களையும் தவிர்த்து. மௌரியப் பேரரசு அதனது பொற்காலத்தை அடைகின்றது. அந்த காலத்துடனையே ஒரு மாற்றமும் வருகின்றது.

அசோகன் புத்தத்தை தழுவுகின்றான். வன்முறையை கை விடுகின்றான். அன்பினைக் கைப் பிடிக்கின்றான். அன்பு வளர ஆரம்பிக்கின்றது. அதன் கூடவே பௌத்தமும். ஆனால் பேரரசு தளர்கின்றது. சிறு மன்னர்கள் தங்களை மௌரியப் பேரரசில் இருந்து பிரித்துக் கொள்ள தொடங்குகின்றனர்.

இந்நிலையில் தான் காலங்கள் ஓடுகின்றன. மௌரியப் பேரரசு இறுதியில் பிரகதரத்தனை வந்து அடைகின்றது. அவனுடைய பரமரையில் யாருக்கும் கிட்டாத ஒரு பெயர் இவனுக்கு கிட்டுகின்றது - 'மௌரியப் பேரரசின் கடைசி அரசன்' என்று. அதற்கு காரணமாக அமைவது புஷ்யமித்ர சுங்கன் (Pushyamitra sunga) என்ற இவனது படைத் தளபதி ஆவான்.

தன்னுடைய படை அணிவகுப்பை பிரகதரத்தன் காண சென்று இருந்த பொழுது அவனால் மிகவும் நம்பப்பட்ட படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கனால் கொலை செய்யப்படுகின்றான். மன்னனைக் கொன்ற புஷ்யமித்திரன் சதியால் அரசைப் பிடிக்கின்றான். இந்த புஷ்யமித்ர சுங்கன் - ஒரு பெர்சிய வம்சாவளியைச் சார்ந்தவன் என்பது வரலாறு. நமது மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஆரியன்.

இவ்வாறு கடைசி மௌரியப் பேரரசனைக் கொன்று மௌரியப் பேரரசை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த இவன் சுங்க அரசை நிறுவுகின்றான். இதுவே இந்திய மண்ணில் அமைந்த முதல் ஆரிய அரசு. காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு.

புத்தத்தை ஆதரித்த மண்ணில் புஷ்யமித்திரன் வேத வேள்விக் கொள்கைகளை வளர்க்கின்றான். இவனது காலத்திலையே இந்தியாவில் முதல் முறையாக வேத கால வழிபாட்டு முறைக்கு சான்றுகள் கிடைக்கின்றன. இக்காலத்துக்கு முன்னால் வேத வேள்விப் பழக்கம் இந்தியாவில் இருந்ததற்கு சான்றுகளே இல்லை. மேலும் இவனே இந்திய வரலாற்றில் அசுவமேத யாகம் செய்த முதல் ஆளாகவும் அறியப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவனின் காலத்தில் மீண்டும் மேற்குப் பகுதி கிரேக்கர்களின் வசம் செல்கின்றது. பக்ட்ரியன்(Bactria) இடத்தை ஆண்டு வந்த டெமெத்ரிஉஸ் (Demetrius) என்ற கிரேக்க அரசன் காந்தாரத்தை பிடிக்கின்றான். அதில் இருந்து நீண்ட காலத்துக்கு தட்சசீலம் கிரேக்கர்களின் கையிலேயே இருக்கின்றது. சரி இப்பொழுது மீண்டும் புஷ்யமித்ர சுங்கனிடம் வருவோம். புஷ்யமித்ரனின் பின்னர் அவனுடைய மகன் அக்னிமித்திரன் அரியணைக்கு வருகின்றான். அவ்வாறே சுங்கர்களின் ஆட்சி தொடர்கின்றது. வேத வேள்வியும் தான்.
ஆனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் போல சுங்கர்களும் ஆட்சியையும் சூழ்ச்சியால் ஒரு முடிவுக்கு வருகின்றது.

இம்முறை ஆட்சியை பிடிப்பவர்கள் கன்வர்கள் (Kanvar). ஒற்றுமை என்னவெனில் இவர்களும் ஒரு பெர்சிய இனக் குழுவை சேர்ந்தவர்கள் தான். இது நடப்பது கி.மு முதல் நூற்றாண்டில். இம்முறை ஆட்சியைப் பிடிப்பவன் வாசுதேவன் எனப்படும் ஒரு கன்வன். ஆனால் இவர்களின் ஆட்சியையும் நீண்ட நாள் நீடிக்கவில்லை கி.மு 75 இல் ஆரம்பித்த இவர்கள் ஆட்சி கி.மு 26 இல் முடிவடைகின்றது.

முடித்து வைப்பவர்கள் தெற்கில் இருந்து வந்த சாதவாகனர்கள் (Satavahanas). மௌரியப் பேரரசினை அடுத்து அன்னியரின் ஆட்சியினால் நிலவி வந்த குழப்பத்தை இவர்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.அந்நியர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு இந்தியாவில் வருகின்றது. தற்காலியமாக.

கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை இவர்கள் ஆண்டு வந்தக் காலத்தில் இந்தியா அமைதி நிலவும் ஒரு தேசமாக இருக்கின்றது. ஆனால் கிரேக்கர்கள் கைப்பற்றி இருந்த மேற்குப் பகுதியிலோ இன்னும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. மேற்கில் இருந்தும் சரி... மத்திய ஆசியாவிலும் இருந்தும் சரி அப்பகுதி எப்பொழுதும் தாக்குதலுக்கு உட்பட்டுக் கொண்டே இருந்தது.

கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி ஒன்றாம் நூற்றாண்டு வரை மேற்குப் பகுதி பல மாற்றங்களைச் சந்தித்து வந்து இருக்கின்றது. கிரேக்கர்களின் வசம் இருந்த காந்தாரப் பகுதியை கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் சகர்கள் (Sakar or Scythian) தாக்கிக் கை பற்றுகின்றனர். சகர்கள் என்பவர்கள் ஒரு ஈரானிய நாடோடி இனத்தவர். மத்திய ஆசியாவில் இருந்த அவர்களை குஷானர்கள் (Kushanars) என்ற சீன நாடோடி இனத்தவர் தோற்கடித்து துரத்த சகர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் நுழைகின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் இவர்களிடம் அக்னியை வழிபடும் பழக்கம் இருக்கின்றது. அவ்வாறு மேற்குப் பகுதியில் நுழைந்து இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியை பிடிக்கின்றனர்.

ஆனால் இவர்களால் நீண்ட காலம் அங்கே ஆட்சியில் நீடித்து இருக்க முடியவில்லை. காரணம் பார்தியர்களின் (Parthian) படை எடுப்பு. பார்தியர்கள் என்பவர்கள் இன்னொரு இரானிய நாடோடி இனத்தவரே. சகர்களை விட பலம் பொருந்திய இவர்களின் முன் சகர்கள் தோற்கின்றனர். காந்தாரம் பார்தியர்களின் கை வசம் செல்கின்றது. கி.மு முடிவில் இருந்து கி.பி முதல் நூற்றாண்டு வரை இவர்கள் வடமேற்கு இந்தியாவினை ஆட்சி செய்கின்றனர். இவ்வினத்தில் தான் நாம் முன்னர் கண்டு இருந்த கொண்டாபோராஸ் (Gondophares) என்ற அரசன் இருக்கின்றான். கொண்டாபோராஸ் இவனைத் தான் தோமா சென்று சந்தித்தார் என்று வரலாறு கூறுகின்றது.

இதுவே கி.மு வின் முடிவில் இந்தியா இருந்த நிலைமை.
வடமேற்கில் பல இரானிய படையெடுப்புக்கள் நிகழ்ந்து இருந்து இறுதியில் பார்தியர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். மத்தியில் சாதவாகனர்கள் இருக்கின்றனர். தெற்கில் பாண்டியர்களும் சோழர்களும் இருக்கின்றனர். மேலும் நாம் புஷ்யமித்திர சுங்கனைக் கண்டதுப் போல் பல பல இந்திய - இரானிய இனத்தவர் வடக்கே மக்களுள் இருக்கின்றனர். தெற்கே வணிகத்திற்காக வந்த ரோமர்கள் சிலர் தமிழ் மண்ணிலேயே தங்கியும் இருக்கின்றனர்.

பொதுவாக இந்தியாவில் அன்னியர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதுவரை சமசுகிருதம் குறித்தோ அல்லது பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற பிரிவுகள் இந்தியாவில் நிலவியதாகவோ எந்த ஒரு சான்றும் இல்லை.

இந்நிலையில் கி.பி யில் நடந்தது என்ன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...