பெண்….
யாரிவள்…
சாந்தமான காந்தமா…
இல்லை
அண்டம் வாழும் அண்டமா….
ஆதியா??? அந்தமா???...
அல்லது
வெறும் குயில்களின் சந்தமா….
இவள் எண்ணங்கள் என்ன…
ஆழம் அறியா கடலா…
அல்ல
மலரில் எழுதிய மடலா???
அனைவரும் படிக்கும் புத்தகம் இவள் தான்…
பக்கங்களில் பாசம் ஊட்டுகிறாள்
நேசம் காட்டுகிறாள்…
அர்த்தங்கள்??? – அதற்கு மட்டும் புன்னகைக்கிறாள்!!!
மௌனத்தில் உருக்கும் என்னை
கண்ணீரில் கரைக்கிறாள்
பின் புன்னகையில் மீண்டும் உயிர்பிக்கிறாள்…!!!
புரிந்த புதிரே…
விழி அசைவில் காலத்தை மாற்ற அறிந்தவள் நீ…
அறியாதிருப்பாயோ….
நீயின்றி நாங்கள் இல்லை என்று!!!
