பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 ஜூன், 2010

புறப்படு கலைஞனே!!!

இதோ, காலத்தின் கட்டளையால் மேலும் சில பிரிவுகள். அப்பிரிவுகளை எண்ணியே இப்பதிவு.

காலம் உன்னை சில ஓவியங்கள் கொண்டு ஒரு ஓவியனாய் வரைந்து கொண்டு இருக்கின்றது. காலத்தின் ஓவியம் நீ... உந்தன் ஓவியங்கள் நீ கடந்த காலங்கள்...

உன்னுடைய பல ஓவியங்கள் கொண்டே நீ முழுமை பெறுகின்றாய். உன்னுடைய ஓவியங்கள் பிரிவில் முழுமை பெறுகின்றன. எனவே பிரிவை எண்ணி நீ வருந்தாதே... அவை உன்னை முழுமையாக்கும் என்பதை மறவாதே...சென்று வாருங்கள் தோழர்களே ... மீண்டும் சந்திப்போம்...






எங்கள் வாழ்வில் நீ பதித்து விட்டுச் சென்ற
வழித்தடங்கள்
சந்தேகம் இன்றி எங்களின் அக்காலத்து
உயிர்வளித் தடயங்கள்...

கேளும் தோழா,
பிரிவு ஒரு சித்திரம்...
ஓவியனே ஓவியமாகிப் போகும் ஒரு விசித்தரம்!!!

உயிர் கொண்டு வரைந்தாய்-
உயிர் தந்தாய்
காலம் பல கடந்து
கோலம் சில புனைந்தாய்...
நீ உழைத்தாய்
ஓவியம் தழைத்தது!!!

அந்தோ!!!
முற்றுப் பெறா ஓவியம் என்றும் ஓவியம் ஆவதில்லை...
இதோ,
ஓர் புள்ளியிலே தோன்றியது
ஓர் புள்ளியிலே முடிகின்றது
இடையில் முடியாது நீ நிற்கின்றாய் - ஓவியனாய்
நாங்களும் நிற்கின்றோம் - உன் ஓவியமாய்!!!

முகில் நீங்கா துளிகள்
பயனில்லை இம்மண்ணினிலே...
அதை போல்
ஓர் ஓவியத்திலே முடிவடையும் ஓவியன்
ஒளிர்வதில்லை பாரினிலே!!!

புறப்படு கலைஞனே,
இன்னும் பல ஓவியங்கள் காத்து இருக்கின்றன
உன் கரம் பட்டு தழைக்க... புன்னகைக்க...!!!

வெள்ளி, 7 மே, 2010

இது பிரிவுக் காலம்


இதோ மிகக் குறைந்த காலத்தில் இரண்டாவது பிரிவு. காலங்கள் வேகமாகத்தான் ஓடுகின்றன. நட்சத்திர கூட்டத்தினுள் ஒன்றாய் இருந்த பரணி நட்சத்திரத்திற்கு மட்டும் இன்று தரணியை சுற்றி பார்க்க ஆசை வந்து விட்டது.
சுற்றாது சூரியன் என்றும் பூமியை. இது விதி. அதை போல் நட்சத்திரங்களின் பாதையும் அவைகளின் விதிப்படியே. மாறாது.எனவே சோகத்திலும் அமைதி காத்தன மற்ற நட்சத்திரங்கள். சென்று வா பரணியே. உலகை வென்று வா!!! உன் பாதை வேறு. உன் பயணம் வேறு. மீண்டும் ஒரு நாள் நம் வழிகள் சந்திக்கும். அன்று சந்திப்போம் புன்னகையோடு. இன்று பிரிவோம் கண்ணீரோடு . 





"அறிவுரை வழங்கும் தரணியில்
    நல்லுரை உதிர்த்த பரணியே - பொய்யல்ல
தோழர்களின் நலனுக்காக
   அன்பால் கட்டும் அரண் நீ- என்றால்!!!

நாம் பிரியும் தருணம்
    நெருங்கிவிட்டதை உணர்கின்றேன்
ஆம்,
நம் அர்த்தமில்லா வார்த்தைகளை
இதோ
அர்த்தமாய் மௌனங்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன!!!
இது பிரிவுக் காலம் தான்!!!

எதை நோக்கி உன் பயணம்,
இலக்கின்றி காற்றில் பயணிக்க
     நீ மரம் துறந்த இலை அல்லவே...
நீ பறவை
   அதுவும் அண்டங்கள் அளக்க எத்தனிக்கும் பறவை!!!
காலத்தால் கட்டுண்ட சிறகுகள்
    இன்று காலத்தாலே விடுவிக்கப்பட்டு விட்டன...

உனக்காக,
உள்ளங்கள் காத்திருக்கின்றன வெல்ல
  செல்வங்கள் காத்திருக்கின்றன அள்ள
நேரம் கனிந்து விட்டது தோழனே-
   சிறகை விரிக்க ... தொலை தூரம் பறக்க!!!

புறப்படு...
 எட்டுத் திசையும் உன் சிறகு எட்ட வேண்டும்
    நீ பறக்கையில் இமயமும் உன் கால் தட்ட வேண்டும்!!!
இருந்தது போதும்,
இரவை அலங்கரிக்கும் நட்சத்திரமாய்...
  ஓர் அறை ஓரச்சித்திரமாய்...
மாறி விடு ஓர் கதிரவனாய்
   ஒளி வீசும் பகலவனாய்!!!
நாளை சொல்கின்றோம்....
அதோ அந்த தரணியின்
    உதயசூரியன் எங்கள் பரணி என்று!!!
புறப்படு...
 உன் பயணங்கள் காத்து இருக்கின்றன!!!
நேசத்துடன் வாழ்த்துகள்!!!"
                                                  - வழிப்போக்கன்

சனி, 1 மே, 2010

பிரிவோம் சந்திப்போம்

வாழ்வில் தவிர்க்க முடியாத சிலவற்றுள் பிரிவும் ஒன்று. இதோ, இந்த ஹைதராபாத் மாநகருக்கு வந்து கழிந்த இரண்டு வருடங்களில் என் சக பயணியாய், தோழனாய் பயணித்தவர் விடை பெரும் நேரம் வந்து விட்டது. பாதைகள் ஒன்றானாலும் பயணங்கள் ஒன்றல்லவே!!! இதோ பயணத்திற்கு ஏதுவாக பாதைகளும் பிரிகின்றன... அவர் பிரியும் தருணம் வந்துவிட்டது. உதட்டில் புன்னகையும் கண்ணில் கண்ணீரும் ஒரு சேர சுமக்கும் ஜீவன் மனிதன் மட்டுமே. சுமக்கின்றோம்...!!!!

இந்த கவிதை அவருக்காக... என் வழிப்பயணத்தில் அவர் சிந்திய மணித்துளிகளுக்காக!!! அந்த மணித்துளிகள் சிப்பியில் விழுந்த மழைத்துளிகள்... வீற்றிருக்கும் என்றும் முத்தாய்... அந்த முத்தை கொண்டே இந்த பாமாலை... அந்த முத்துக்காக!!!   


"கரைகின்றன காலங்கள்...
     நம்மையும் கரைத்துக்கொண்டே...
இதோ,
ஒரு வழி இரு வழிகளாய்
    பிரிந்து கிடக்கின்றது.....
இரு விழியோ ஒரு துளியால்
     நிறைந்து துடிக்கின்றது!!!
பிரிவு...
இத்தனை காலங்களாய் நிற்காது
  அத்தனை கண்ணீர்களை பருகியும்
இதோ புன்னகையோடு
   நம்மை நோக்கி வருகின்றது - தாகத்தோடு!!!
ஆம்!!!
   இது கண்ணீரின் நேரம் தான்!!!
சந்திப்பவர்கள் அனைவரும் பிரிவதுபோல்
   பிரிந்தவர்கள் அனைவரும் சந்திப்பதில்லை!!!

பயணம்,
ஒரே பாதையில் பயணித்தும்
    நம் பயணங்கள் ஒன்றல்ல!!!
இதோ,
   உன் வெற்றியை தேடி
        உன் பயணத்தை தொடங்கி விட்டாய்...
  நேசத்துடன் வாழ்த்துகள்!!!  

உன்னுடன் பயணித்த பாதையை திரும்பிப் பார்க்கிறேன்
     நீ உதிர்த்த வார்த்தைகளும் கரைத்த காலமுமா
அங்கே பூத்தோட்டங்கலாய் மாறி இருக்கின்றன?
     வாழ்த்துகள்- பிரிவை வீழ்த்தும் திறன் உன்னிடம் இருக்கின்றது!!!

ஆம்,
  வெல்ல நினைத்தவர்கள் எதையும் வென்றது கிடையாது
     வாழ்வையும் சரி...பிரிவையும் சரி...
  வாழ நினைத்தவர்களே வென்றிருகிறார்கள் அவற்றை!!!
  நீ வாழ்ந்து இருக்கிறாய்...
    அந்த தோட்டங்கலாய் வீற்று இருப்பாய்-என்றும்!!! 

பிரிவோம் தோழா!!!
காலங்களில் நாளை என்றும் அழிவதில்லை...
நாளை இருக்கும் வரை என் நம்பிக்கையும் குறைவதில்லை!!!
மீண்டும் சந்திப்போம்!!!   "


                                             - வழிப்போக்கன்     

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...