வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

ஐயப்பன் - ஓரினைச் சேர்க்கையில் பிறந்தவரா?

சிவன் என்பவர் யார் - ஆண் கடவுள்.
பெருமாள் என்பவர் யார் - ஆண் கடவுள்.
ஐயப்பன் எவ்வாறு பிறந்தார் - சிவனும், மோகினி வடிவத்தில் பெருமாளும் ஒன்றிணைய ஐயப்பன் தோன்றினார்.
அப்படி என்றால் ஒரு ஆண் கடவுளும் மற்றொரு ஆண் கடவுளும் ஒன்றிணைந்து ஒரு குழந்தையைப் பெறுகின்றனர். இது ஓரினச் சேர்க்கையைக் குறிப்பது தானே?

என்றே தான் இன்று பெரும்பாலான இறை மறுப்பாளர்கள் கேள்வியினை முன் வைக்கின்றனர். இதற்கு விடையினைக் கூற முடியாமல் இறை நம்பிக்கையாளர்களும் திண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

அவர்கள் கேட்கும் கேள்வியும் மிகவும் சிக்கலானதொரு கேள்வி அல்ல...பொதுவான கேள்வி தான். அதனைப் போன்றே அதற்கு பதில் சொல்ல முடியாது இருக்கும் நிலையும் ஒரு பொதுவான நிலை தான். ஏனென்றால் சிவனும் பெருமாளும் ஆண் கடவுளர் என்றே அவர்கள் பொதுவாக அறிந்து இருக்கின்றனர். பிரச்சனை இங்கே தான் இருக்கின்றது...சமூகத்தில் பரவி இருக்கும் விடயங்களை 'பொதுவாக' மட்டுமே அறிந்து இருப்பதில் தான் இங்கே பிரச்சனையானது அடங்கி இருக்கின்றது. அதைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டும்...அதற்கு நாம் முதலில் வேறு சில 'பொதுவான' கருத்துக்களைக் காண வேண்டி இருக்கின்றது.

இன்று பொதுவாக நாம் பொதுவுடைமைவாதிகளைப் பார்த்து கேள்வி கேட்கலாம்...

'இந்த பொதுவுடைமைக்காரனுன்களே இப்படித் தான்பா...அமெரிக்காகாரன் கொண்டு வந்தா எதிர்பானுங்க...ஆனா ரஷ்யாகாரன கொஞ்சுவானுங்க...கேரளாவுல அணுவுலைய எதிர்பானுங்க...ஆனா தமிழ்நாட்டுல ஆதரிப்பானுங்க...தனி ஈழம் வேணாம்னு சொல்லுவானுங்க...ஆனா பாலஸ்தீன் வேணும்னு சொல்லுவானுங்க...எல்லாம் திருட்டுபயலுக...பொதுவுடைமையே திருட்டுத்தனம்...' என்றே நாம் கூறலாம்...!!!

இதனை நம்முடைய தோழர்கள் முற்றிலுமாக மறுக்க முடியாது...ஆனால் அவர்களுடைய பதில்கள் எவ்வாறு இருக்கும் என்றால்...

'தோழர்...!!! இன்றைக்கு பொதுவுடைமை என்றுக் கூறி கொண்டு அரசியல் செய்து கொண்டிருப்பவர்களுள் அனைவரும் உண்மையான பொதுவுடைமைவாதிகள் என்றுக் கூற முடியாது. அவர்கள் அரசியல்வாதிகள்...அரசியல் செய்கின்றார்கள்...அவர்களை வைத்து நீங்கள் பொதுவுடைமைக் கொள்கையையும்...உண்மையான பொதுவுடைமைவாதிகளையும் கணிக்காதீர்கள்...பொதுவுடமையினைப் பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்தப் புத்தகங்களைப் படியுங்கள்...பொதுவுடைமை என்பது தூய்மையானது என்று நீங்கள் அறிந்துக் கொள்வீர்கள்' என்றே அவர்கள் நமக்கு சில புத்தகங்களை அறிமுகப்படுத்தி வைப்பர்.

இந்நிலையில் பொதுவான கருத்துக்களை மட்டும் வைத்துக் கொள்ளாது, அவர்கள் தந்த நூலினைப் படித்து அதனைப் பற்றிச் சிந்தித்து உண்மை என்னவென்று அறிந்துக் கொள்வது தான் நாம் செய்ய வேண்டிய ஒரு செயலாக இருக்கும். அதைத் தவிர்த்து பொதுவான கருத்துக்களை மட்டுமே நாம் கொண்டிருப்போம் என்றால் அதனால் எந்தொரு பயனும் இல்லை.

மேற்கூறிய அதே எடுத்துக்காட்டு பெரியாரின் இயக்கங்களுக்கும் பொருந்தும். பெரியார் வாழ்ந்த காலகட்டத்தையும், அவரின் எழுத்துக்களையும், செயல்களையும் சிந்தனைகளையும் அறிந்துக் கொள்ளாது, இன்று அவரது பெயரினால் நடக்கும் கோமாளித்தனங்களை மட்டும் வைத்துக் கொண்டு பொதுவாக அவரை விமர்சனம் செய்வது என்பது பொருந்தாத ஒரு செயலாகும். இதனைச் சிந்திப்பவர் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

இப்பொழுது அதனைப் போன்றே தான் நாம் அய்யனாரையும் காண வேண்டி இருக்கின்றது. சமூகத்தில் பொதுவாக பரவி இருக்கும் கருத்துக்களைத் தவிர்த்து சமயங்கள் அடிப்படையாக எதனைக் கூறுகின்றன என்றே தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு நாம் கண்டோம் என்றால் நமக்கு விடையாக கிட்டுபவை இவை தாம்....

பெருமாள் என்றொரு கடவுள் தனித்து கிடையாது. இறைவனின் ஆற்றலினை சிலர் பெண்ணாக உருவகப்படுத்தினர். அது அம்மன் என்று பெண் உருவகமாயிற்று. இறைவனின் ஆற்றலினை சிலர் ஆணாக உருவகப்படுத்தினர். அது பெருமாள் என்று ஆண் உருவகமாயிற்று. அம்மனும் பெருமாளும் இரு வேறு தெய்வங்கள் அல்ல...அவர்கள் இறைவனின் ஆற்றலின் வெவ்வேறு உருவகங்களே...!!!

சைவ அறிஞரான கா.சு.பிள்ளை அவர்கள் பின் வருமாறு கூறுகின்றார்,

1) "சிவம் என்ற சொல் முழுமுதற் கடவுளைக் குறிக்கப் பயன் பட்ட போது எங்கும் நிறைத்து விளங்கும் கடவுளின் ஆற்றல் சக்தி எனப்பட்டது. கடவுள் தன் ஆற்றலினால் எல்லாம் செய்வது உயிர்கள் மேல் வைத்த அருள் காரணமாம் என்றக் கொள்கை எழுந்தப் போது சிவசக்தி அருள் எனவும் தாய் எனவும் வழங்கப்பட்டது." (இதில் இருந்து சக்தி என்பது இறைவனின் ஆற்றலே என்றும் அவ்வாற்றலைத் தான் பெண்ணாக உருவகப்படுத்தி இருக்கின்றனர் என்ற கருத்தும் இருக்கின்றது என்று நாம் அறிய முடிகின்றது.)
 
2) "கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்கு பெயராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று."

3) வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்ட பொழுது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண்வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக்கருத்தை உடைய ஆகம சுலோகமும் உண்டு. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீல நிறமே பேசப்படுதல் காண்க."
 
4) "கடவுளுடைய ஆற்றலே விஷ்ணு எனக் கொள்ளப்பட்டமையால் பெருமான் என்றச் சொல் சக்தியைக் குறிக்கும் ளகர முடிபோடமைந்து திருமாலைக் குறித்தல் காண்க." (அதாவது 'பெருமாள்' என்றப் பெயர் இறைவனின் சக்தியைக் ஆண் வடிவமாகக் குறிக்கும் பெயர் என்றே அவர் கூறுகின்றார்)

மேலும் திருநாவுக்கரசரும்,

“அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்று சக்தியும் பெருமாளும் ஒன்று என்றே கூறுகின்றார்.
அதனால் தான்,

சிவனுக்கு அம்மனின் மூலமாக இரண்டு குழந்தைகள் கூறப்படும் பொழுது சிவனுக்கு பெருமாளின் மூலமாகவும் இரண்டு குழந்தைகள் கூறப்படுகின்றன. மேலும் பெருமாளுக்கு வேறு குழந்தைகள் இல்லாத நிலையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சைவத்தில்,

சிவன் (இறைவன்) - சக்தி (ஆற்றல்) - முருகன்/பிள்ளையார் (மகன்)

என்றிருக்கும் நிலை தான் வைணவத்தில்

சிவன் (இறைவன்) - பெருமாள் (ஆற்றல்) - பிரமன்/ஐயப்பன் (மகன்)

என்று இருக்கின்றது.

எனவே உண்மையான சமயக் கருத்துக்களின் அடிப்படையில் ஐயப்பன் என்பவர் ஓரினச் சேர்க்கையின் மூலமாக பிறந்தவர் அல்ல. ஐயப்பனின் பிறப்பு ஒரு உருவகம் தான். ஏன் ஐயப்பனே ஒரு உருவகம் தான்...ஆனால் அதனைப் பற்றிய கருத்துக்கள் இங்கே தேவை இல்லை. அதனை நாம் மற்றொரு பதிவில் விரிவாக காணலாம்...

இங்கே நமக்குத் தேவையானது என்னவென்றால் ஐயப்பனின் பிறப்பு ஓரினைச் சேர்க்கையைக் குறிப்பது அல்ல என்பதே.

பி.கு:

தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்...மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்த காலத்தில் உருவான திராவிட இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும் இன்னும் 100 வருடங்களைக் கூட முழுமையாகக் காணவில்லை. இருந்தும் அவற்றுள் எத்தனை மாற்றங்கள். நூல்களைப் பத்திரமாக வைத்து இருக்கும் வசதி வாய்ப்புகள் வளர்ந்திருக்கின்ற இந்த காலத்திலேயே இத்தனை முரண்பாடுகள் இருந்தது என்றால்...அவ்வசதி இல்லாத காலத்தில் மன்னராட்சி நடக்கையில் கருத்துக்கள் எந்தளவு மாற்றப்பட்டு இருக்கும் என்பதனை நீங்கள் சிந்தித்தாலே அறிவீர்கள். எனவே சமயங்களைக் குறித்து நீங்கள் கற்கும் பொழுது பொதுவான கருத்துக்களை மற்றும் கருதாது, உங்களின் இயல்பின் படியே கேள்விகளைக் கேட்டே தெளிவாக அறிந்துக் கொள்ள முயலுங்கள்.

தொடர்புடைய இடுகைகள்:

சனி, 11 ஏப்ரல், 2015

மகாபலியும் மகாபலிபுரமும் - 1!!!

மகாபலியும் மகாபலிபுரமும்...!!! தமிழர்களுக்கு இவ்விரண்டு பெயர்களும் நன்றாகப் பழக்கப்பட்ட பெயர்கள் தான். சிறிதளவு வரலாற்று அறிவும் இதிகாச அறிவும் ஒருவனிடம் இருந்தது என்றால் தெளிவாக அவன் கூறி விடுவான்...

மகாபலி என்பது வாமன அவதாரம் என்று கருதப்படும் பெருமாளின் அவதாரங்களில் வரும் ஒரு அரசன் என்று. அன்றைய சேர நாடான இன்றைய கேரளாவில் வருடத்திற்கு ஒரு முறை மகாபலியின் (மாபலி) வருகை மிகவும் சிறப்பாக ஓணம் பண்டிகையென கொண்டாடப்படுகின்றது என்றும் மக்கள் பலரும் அறிவர்.

அதனைப் போன்றே மகாபலிபுரம் என்றால் அது தமிழகத்தின் தொண்டை நாட்டினில் (இன்றைக்கு சென்னைக்கு அருகில்) பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு சிற்ப நகரம் என்றுமே மக்கள் பலரும் அறிவர். இவை எல்லாம் மக்கள் பலரும் பெருவாரியாக அறிந்து இருக்கும் விடயங்கள். புராணக் கருத்துக்களை அறிந்துக் கொள்வதற்காகவும் சுற்றுப் பயணத்திற்காகவும் மட்டுமே அந்த விடயங்களை பெருவாரியான மக்கள் அறிந்து வைத்து இருக்கின்றனர். எனவே அந்தப் மகாபலி என்ற அரசனைக் குறித்தோ அல்லது மகாபலிபுரத்தின் தோற்றத்தின் காரணத்தைக் குறித்தோ அல்லது இவ்விரண்டு பெயர்களில் இருக்கும் ஒற்றுமையினைக் குறித்தோ அவர்கள் அறிந்து இருக்க வேண்டியத் தேவை இல்லை. ஆனால் அறியாத விடயங்களையும் உண்மையினையும் குறித்தே நாம் நம்முடைய பதிவுகளில் கண்டு வந்துக் கொண்டிருக்கின்றோம். அந்நிலையில் நாம் மகாபலியினைப் பற்றியும் மகாபலிபுரத்தினைப் பற்றியும் சற்றுத் தெளிவாக காண வேண்டி இருக்கின்றது.

மகாபலி என்ற அரசனை வாமன அதிகாரத்தில் வந்த பெருமாள் பாதாள உலகத்திற்கு அனுப்பி விடுகின்றார். இருந்தும் அவன் தனது மக்களை காண விரும்புவதனால் வருடத்திற்கு ஒரு முறை அவன் அவனுடைய நாட்டு மக்களை வந்து சந்தித்து அவர்களுடைய குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றே அவனுக்கு வரமும் அவர் அளிக்கின்றார்.  இது தான் சுருக்கமாக வாமன அவதாரத்தின் கதை. இங்கே தான் நாம் சில கேள்விகளை எழுப்ப வேண்டி இருக்கின்றது.

மகாபலி என்ற அரசன் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றனவா? அவ்வாறு அவன் இருந்தான் என்றால் அவன் ஆண்ட காலம் எது? இன்றைக்கு கேரள நாட்டினில் தான் மகாபலி சிறப்பாக கருதப்பட்டு வருகின்றான். இன்றைக்கு கேரளா என்று இருக்கும் இடமானது தமிழர்களின் சேர நாடே ஆகும். அவ்வாறு இருக்கையில் தமிழ் சங்க இலக்கியங்களில் மகாபலியைப் பற்றி குறிப்புகள் இருக்கின்றனவா?

இந்த கேள்விகளுக்கு விடை மகாபலி என்ற அரசன் வரலாற்றில் இருந்தமைக்கு சான்றுகள் இல்லை என்றே வருகின்றது. மேலும் அவனது காலத்தினை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் புராணக் கதைகளைக் கூறுவோர் கூறலாம்...ஆனால் சான்றுகள் இன்றி அதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே மகாபலி என்ற ஒரு வரலாற்று மன்னன் இருந்தமைக்கு சான்றுகள் புராணக் கதைகளைத் தவிர்த்து வேறு எந்த வடிவிலும் இல்லை. சரி இப்பொழுது மகாபலிபுரத்தினைப் பற்றி காண்போம். மகாபலிபுரத்தினைப் பற்றி பொதுவாக நாம் அறிந்து இருக்கும் விடயங்கள் என்னவென்றால்...

மகாபலிபுரம் உலகப்புகழ் பெற்ற ஒரு சிற்ப நகரமாகும். சிற்ப கலைகளின் மூலமாக இந்த நகரினை உலகப் புகழ் பெற வைத்தது பல்லவ மன்னவர்களாவர். இங்கே நாம் ஒரு கேள்வியினைக் காண வேண்டி இருக்கின்றது. பல்லவ மன்னர்கள் என்பவர்கள் யார்? என்பதே அந்த கேள்வியாகும்.

சங்க இலக்கியங்களில் அவர்களைப் பற்றியக் குறிப்புகள் இல்லை. தமிழ் கூறும் மூவேந்தர்களுள் அவர்கள் இல்லை...தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்று அறியப்பெறும் களப்பிரர்களின் காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் செல்வாக்குடன் இவர்கள் ஆண்டு வந்து இருக்கின்றனர். காஞ்சியும் மகாபலிபுரமும் இவர்களின் காலத்தில் சிறப்புற்று விளங்கி இருக்கின்றது. சமஸ்கிருதம் இவர்களுடைய ஆட்சியில் செல்வாக்கில் இருந்து உள்ளது. இப்படிப்பட்ட இவர்கள் யார்? தமிழர்களா அல்லது வேற்று இனத்தவர்களா?

இந்த கேள்விக்கு விடையினைக் கண்டோம் என்றால் அதுவும் தெளிவில்லாத நிலையில் தான் இருக்கின்றது. (பல்லவர்களைப் பற்றித் தனியாக ஒரு பதிவினில் காண்போம். இப்பதிவில் அவர்களைப் பற்றி விரிவாகக் காணத் தேவை இல்லை)

இந்நிலையிலேயே தான் நாம் மகாபலி என்ற பெயரினையும் மகாபலிபுரம் என்ற பெயரினையும் காண வேண்டி இருக்கின்றது. இவ்விரண்டு பெயர்களும் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. மகாபலி என்ற பெயர் தமிழகத்தின் மேற்குத் திசையில் பரவலாக அறியப்பட்டு இருக்கின்றது. மகாபலிபுரமோ தமிழகத்தின் கிழக்குத் திசையில் அமைந்து இருக்கின்றது. இந்நிலையில் மகாபலி என்ற அரசன் ஒருவன் அந்த நிலப்பரப்பு முழுமையினையும் ஆண்டானா என்ற கேள்வியினை நாம் முன் வைப்போமே என்றால் அதற்குரிய சான்றுகள் எவையும் நமக்கு கிட்டப் பெறவில்லை.

மேலும் பெருமாளின் அவதாரங்களைக் கூறும் நூல்களுள் மிகவும் பழமையான நூல் பரிபாடலாகும். இதன் காலம் கி.பி நான்காம் நூற்றாண்டு என்று கூறுவர் அல்லது அதற்கும் பிந்திய காலம் என்றும் கூறுவர். அத்தகைய அந்த நூலினில் வாமன அவதாரத்தினைப் பற்றியக் குறிப்பு இல்லை. எனவே வாமன அவதாரம் என்பது கி.பி நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுந்த ஒரு கதை என்றே நாம் கருத முடிகின்றது.

மேலும் சைவ சமயமானது இறைவன் ஒருமுறை தான் உலகிற்கு வந்தான் என்றுக் கூறுவதையும், பெருமாளினை சக்தியின் ஆண் வடிவமாகக் கருதுவதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. இவை அனைத்தையும் வைத்துப் பார்த்தால் மகாபலி என்றொரு அரசன் உண்மையில் வாழ்ந்து இருக்கவே இல்லை என்றே நாம் கருத வேண்டி வருகின்றது.

அந்நிலையில் சங்க இலக்கியங்களிலும் அந்த கால கட்டத்திலும் காணப்படாத மகாபலி என்கின்ற சொல், ஏன் பிற்காலத்தில் காணப்படுகின்றது என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் மகாபலி என்ற சொல்லினைக் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு அந்தச் சொல்லினை நாம் கண்டோம் என்றால்

மகாபலி - மகா + பலி = மிகப் பெரிய பலி என்றே அது பொருள் தருகின்றது.
மகாபலிபுரம் - மகா + பலி + புரம் = மிகப் பெரிய பலிக்கான இடம்.

இதனை வைத்துப் பார்க்கும் பொழுது, இங்கும் ஒரு கேள்வி எழுகின்றது. அது என்ன மிகப் பெரிய பலி? எது அந்த மிகப் பெரிய பலி?

இந்தக் கேள்விகளுக்குத் தான் நாம் இப்பொழுது விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

தொடரும்...!!!

தொடர்புடைய இடுகைகள்:

சமயங்களும் வரலாறும் - முகப்புப் பக்கம்
அம்மனும் பெருமாளும் 
தொண்டை நாடு சான்றோர் உடைத்து…!!! 

திங்கள், 6 ஏப்ரல், 2015

ஆதாம் முகடு (சிவனொளி பாதமலை) - முதல் மனிதனின் காலடித் தடம்!!!

சமயங்களைப் பற்றியே நம்முடைய பதிவுகளில் நாம் பெருவாரியாகக் கண்டு வந்துக் கொண்டிருக்கின்றோம். முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். நம்முடைய கூற்றுகளுக்கு சான்றாகப் பல்வேறு விடயங்களையும் நாம் கண்டே தான் வந்துக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறு பல்வேறு சமய நூல்களும் சரி இதிகாச நூல்களும் சரி கடலினில் மூழ்கிய ஒரு கண்டத்தினைப் பற்றிப் பேசுகின்றன என்றும் எவ்வாறு அந்த செய்திகள் தமிழர்கள் கூறும் குமரிக்கண்டத்தினுடன் பொருந்திப் போகின்றது என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது அதனைப் பற்றித் தான் நாம் மற்றுமொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. முதல் மனிதனின் காலடித்தடம் என்றும் சிவனின் காலடித் தடம் என்றும் புத்தனின் காலடித் தடம் என்றும் உலக சமயங்கள் அனைத்தும் உரிமைப் பாராட்டும் ஒன்றைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் இலங்கையைப் பற்றி காண வேண்டி இருக்கின்றது.

இலங்கை...இந்தியாவின் தெற்கில் கண்ணீர் துளிப்போல் அமைந்து இருக்கும் ஒரு தீவு. குமரிக்கண்டமானது எங்கே அமைந்து இருந்தது என்று தமிழர்கள் கூறுகின்றனரோ அப்பகுதியில் ஒரு சிறிய நிலப்பரப்பாக இலங்கை வீற்று இருக்கின்றது. இலங்கை என்று இன்று இருக்கும் இந்தத் தீவானது கடற்கோள்களால் அழிந்தது போக மீதி இருக்கும் குமரிக்கண்டத்தின் ஒரு பகுதி என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
குமரிக்கண்டமானது கடற்கோள்களால் அழிந்தது சரி. ஆனால் முழுமையாக அழிந்ததா அல்லது அதன் பகுதிகளில் இன்னும் எஞ்சி இருக்கும் பகுதிகள் இருக்கின்றனவா என்றால் இன்னும் பகுதிகள் எஞ்சி இருக்கும் என்றே தான் நாம் கருத முடிகின்றது. நம்முடைய பூம்புகார் நாகரீகமாக இருக்கட்டும் அல்லது ஏனைய கடற்கோள்களால் அழிந்த இடங்களாக இருக்கட்டும், அவற்றின் பகுதிகள் மீதம் இருக்கத் தான் செய்கின்றன. அவ்வாறு இருக்கையில் அவற்றை விட மிகப் பெரியதாக கருதப்படும் குமரிக்கண்டத்தின் பகுதிகளும் மிஞ்சி இருக்கத் தான் வேண்டும். சரி இருக்கட்டும்...இப்பொழுது இலங்கையில் இருக்கும் ஒரு மலையினைப் பற்றித் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
இலங்கையில் இருக்கும் ஒரு மலையான ஆதாம் முகடு மலை (அல்லது) சிவனொளி பாதமலை ஒரு வரலாற்றுச் சிறப்பும் சமயச் சிறப்பும் மிக்க ஒரு மலையாகும். அந்த மலையின் உச்சியில் ஐந்தடி பதினோரு அங்குலம் அளவிலான ஒரு மனிதனின் காலடித் தடம் இருக்கின்றது.
 
அதனை,
 
சிவனின் பாதம் – என்று சைவர்கள் அழைப்பர்
 
முதல் மனிதனான ஆதாமின் பாதம் – என்று இசுலாமியர்களும் கிருத்துவர்களும் அழைப்பர். அவர்களின் கருத்தின்படி முதல் மனிதனான ஆதாம் உலகில் வந்த பொழுது முதன் முதலில் பதிந்த காலடித்தடம் அது.
 
புத்தனின் பாதம் (ஸ்ரீ பாதம்) – என்று பௌத்தர்கள் அழைப்பர். அவர்களின் கருத்தின்படி புத்தர் இந்த உலகினை விட்டுச் செல்லும் பொழுது இறுதியாக பதிந்த காலடித்தடம் அது.
 
அந்த மலையானது சைவர்கள், இசுலாமியர்கள், கிருத்துவர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய நான்கு சமயத்தினருக்கும் புனிதமான ஒரு இடமாக இருக்கின்றது. இறைவன் மனிதனை படைத்தது அங்கே தான் என்றே அவர்கள் நம்புகின்றனர்.
 
குமரிக்கண்டத்தில் மனிதன் தோன்றினான் என்று தமிழர்கள் கூறுவதும், குமரிக்கண்டத்தின் பகுதிகளுள் ஒன்று என்று கருதப்படும் இலங்கையில் முதல் மனிதனின் காலடித்தடம் இருக்கின்றது என்று சமயங்கள் கூறுவதும் சிந்திக்கத்தக்கவைகளாக இருக்கின்றன.

தொடர்புடைய இடுகைகள்:

வியாழன், 29 ஜனவரி, 2015

விவிலியத்தில் மாற்றங்கள் இல்லையா?

பொதுவாக ஒவ்வொரு சமயத்தினைச் சார்ந்தவர்களிடமும் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை இருக்கத்தான் செய்கின்றது. அவர்கள் புனிதமாகக் கருதும் புனித நூல்கள் எவ்விதமான மாற்றங்களையோ அல்லது இடைச்செருகல்களையோ கொண்டிராது, அவர்களது இறைவன் முதலில் எவ்வாறு அந்த நூலினைத் தந்தானோ அவ்வாறே இன்றுவரை அந்த நூல் இருந்து வருகின்றது என்ற நம்பிக்கையைத் தான் அவர்கள் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் வரலாற்றை நாம் கண்டோம் என்றால் உண்மை நிலையோ வேறாகத் தான் இருக்கின்றது. அனைத்து சமயங்களின் நூல்களும் காலங்களில் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு வந்தே தான் இருக்கின்றன. அதற்கான காரணம் எளிது.

மக்களின் மத்தியில் எந்த கருத்து பரவலான ஆதரவைப் பெற்று இருக்கின்றதோ அக்கருத்தினை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கே மக்களில் பலர் முயல்வர் என்பது இயல்பான ஒரு விடயம். இந்த நூற்றாண்டில் மக்கள் ஆட்சியின் மத்தியில் எழுந்து இருக்கும் திராவிடக் கொள்கையையே பலர் தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருப்பதை நாம் கண்டுக் கொண்டு தானே இருக்கின்றோம். அப்படி இருக்கையில் மன்னராட்சிக் காலம் உலகம் முழுவதும் பரவி இருந்த காலங்களில் மக்களின் மத்தியில் எழுந்த சமயக் கருத்துக்களை அரசர்கள் தங்களது நலனுக்காக பயன்படுத்திக் கொள்வது என்பது நடக்கக்கூடிய ஒன்று தானே. அது தான் நடந்தும் இருக்கின்றது.

கிருத்துவ கருத்துக்கள் மக்களிடையே பரவியதைக் கண்ட ரோம பேரரசன் கிருத்துவ கருத்துக்களை தனக்கு சாதமாக வருவது போல் மாற்றி ஏற்றுக் கொண்டு கிருத்துவ சமயத்தினை கைப்பற்றிக் கொண்டான் என்பது வரலாறு. அதே போல் பக்தி இயக்கத்தின் விளைவாய் எழுந்த சமயக் கருத்துக்களான சைவ வைணவ கருத்துக்களை மாற்றி அதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு அதனைஆரியர்களான பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டனர் என்றதும் வரலாறு.

அவ்வாறு அரசியலால் கைப்பற்றப்பட்ட சமயக் கருத்துக்கள் காலம்தோறும் அவர்களுக்கு ஏற்ப மாற்றம் கண்டே வந்து இருக்கின்றன. வரலாற்று நிகழ்வுகள் அவ்வாறு இருக்க தன்னுடைய சமய நூலானது எவ்விதமான மாற்றமுமே இல்லாமல் முதலில் இருந்தவாறே இப்பொழுதும் இருக்கின்றது என்றுக் கூறுவது ஒன்று அவ்வாறு கூறுபவரின் அறியாமையைக் குறிக்கும் அல்லது அவ்வாறு கூறுபவர் அந்த சமய நூலில் நிகழ்ந்த மாற்றத்தினால் ஆதாயம் அடைந்து இருக்கின்றார் என்பதனையே குறிக்கும். சரி இருக்கட்டும் இப்பொழுது நாம் கிருத்துவ சமய நூலான விவிலியத்தையே காண வேண்டி இருக்கின்றது.

அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும் கூறுவதனைப் போல கிருத்துவச் சமயத்தினைச் சார்ந்தவர்களும் தங்களது நூலானது எவ்விதமான மாற்றங்களோ அல்லது இடைச்செருகல்களோ இல்லாமல் இறைவன் அளித்த வண்ணமே இருக்கின்றது என்றே கூறுகின்றனர். மேலும் மற்ற சமய நூல்களை எல்லாம் சாத்தானின் நூல்கள் என்றுக் கூறும் பழக்கமும் அவர்களுள் ஒரு சிலரிடம் இருக்கத்தான் செய்கின்றது. இந்நிலையில் தான் நாம் விவிலியத்தினைப் பற்றி சிறிது பார்க்க வேண்டி இருக்கின்றது.

முதலில் ருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo tolstoy) தன்னுடைய 'இயேசுவின் வாழ்க்கை - சுவிசேஷக் சிறுவரைவு (Gospel in brief - life of jesus)' என்ற நூலில் என்ன சொல்லுகின்றார் என்றே கண்டு விடலாம்.

"வாசகர்கள் ஒன்றினை நிச்சயம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். தத்துவஞானிகளான பிளாட்டோ(Plato), பிலோ(Philo), மார்கஸ் அரேலியஸ்(Marcus Aurelius) அவர்களைப் போல் அல்லாது இயேசு அவராக எந்த ஒரு புத்தகத்தையும் எழுதி வைக்கவில்லை. மேலும் சாக்ரடீசைப்(Socrates) போல் படித்த மக்களுக்கு தன்னுடைய போதனைகளை அவர் வழங்கவும் இல்லை.மாறாக பெரும்பாலும் கல்வி அறிவு பெற்றிராத மக்களிடமே அவர் பேசியும் போதித்தும் வந்தார். அவர் இறந்து வெகு காலத்திற்குப் பின்னரே மக்கள் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டதை எழுதி வைக்க ஆரம்பித்தனர்.

மேலும் வாசகர்கள் அக்காலத்தில் இயேசுவைக் குறித்து எழுதப்பட்ட பல்வேறுக் குறிப்புகளில் இருந்தே திருச்சபையானது முதல் மூன்று சுவிசேஷங்களைத் தேர்ந்து எடுத்தது என்பதனை நினைவுக்கூர வேண்டும். பின்னர் அவர்கள் நான்காவது சுவிசேசத்தையும் அவ்வாறே தேர்ந்து எடுத்தனர். அவ்வாறு திருச்சபை ஆனது இயேசுவைக் குறித்து எழுதப்பட்ட பல்வேறு குறிப்புகளில் இருந்து சிறந்ததைத் தேர்ந்து எடுக்கும் பொழுது பல்வேறு குழப்பமான பகுதிகளையும் அவர்கள் தேர்ந்து எடுக்கத்தான் வேண்டி இருந்தது. ஆகையால் தேர்ந்து எடுக்கப்படாத குறிப்புகளில் காணப்படும் மோசமான பகுதிகளைப் போல் தேர்ந்து எடுக்கப்பட்ட சுவிசேஷங்களிலும் மோசமான பல பகுதிகள் இருக்கின்றன என்பதனையும் வாசகர்கள் நினைவிற் கொள்ள வேண்டும்.

மேலும் தேர்ந்து எடுக்கப்பட்ட இந்த சுவிசேஷங்களும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் மூளைகளாலும் கைகளாலும் உருவாக்கப்பட்டு இருக்கும் படைப்புகள் தான் என்பதையும் வாசகர்கள் நினைவிற்கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவைகளில் பல பகுதிகள் சேர்க்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வந்தே தான் உள்ளன. நான்காம் நூற்றாண்டில் இருந்து நம்முடைய கைகளுக்கு வந்துள்ள படைப்புகள் எவ்விதமான நிறுத்தக் குறியீடுகளும் இல்லாமல் தொடர்ச்சியான எழுத்துக்களாக இருக்கும் வண்ணமே அமைந்து உள்ளன. எனவே அந்த நூல்களைப் படித்துப் புரிந்துக் கொள்வதில் வேறுபாடுகள் நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே எழத் துவங்கி விட்டன. அப்படி எழுந்த வேறுபாடுகளினால் இன்று நம்மிடையே கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் வகையான சுவிசேஷங்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன"

மேலே லியோ டால்ஸ்டாய் கூறி இருக்கும் கருத்தினைச் சுருக்கமாக காண வேண்டும் என்றால் - விவிலியத்தில் எந்த பகுதியையும் இயேசு எழுதவில்லை. இயேசுவை அறிந்தவர்கள் அல்லது கிருத்துவ சமயத்தினரின் நம்பிக்கைக்கு ஏற்ப பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்ட மக்கள் எழுதிய பல்வேறு குறிப்புகளில் ஒரு சில மட்டுமே விவிலியத்தில் தொகுக்கப்பட்டு இருக்கின்றது. அவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்ட குறிப்புகளிலும் மோசமான தெளிவில்லாத தவறான பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட பகுதிகள் காலம்தோறும் மக்களால்அவர்களுக்கு ஏற்றார்ப் போல் மாற்றம் செய்யப்பட்டே வந்து இருக்கின்றன. நிற்க.

விவிலியத்தைப் பற்றிய டால்ஸ்டாயின் கூற்று ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அவரைப் போன்று காலங்களில் இன்னும் பலரும் இந்தக் கருத்துக்களைக் கூறித் தான் சென்று உள்ளனர். இருந்தும் சான்றுகள் இன்றி நாம் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. விவிலியத்தில் மாற்றங்கள் இருக்கின்றது என்று யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ஆனால் சான்றுகள் இன்றி நான் நம்ப மாட்டேன் என்று கூறும் கிருத்துவர்கள் இருக்கத்தான் செய்வர். அவ்வாறு சான்றுகளைச் சோதித்துப் பார்த்து அறிந்துக் கொள்வது தான் நன்மையான செயலாகவும் இருக்கும். அவர்களுக்காக இந்த படம்,



இதில் விவிலியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு பகுதிகளுக்குள் எவ்வாறு முரண்பாடுகள் காணப்படுகின்றன என்பது சிறு சான்றுகளுடன் காட்டப்பட்டு உள்ளது. (இதனை தமிழில் தர வேண்டும் என்றே முயன்றேன். ஆனால் ஆங்கில விவிலியத்தில் உள்ள முரண்பாடுகள் இவை என்பதால் ஆங்கிலத்திலேயே தந்து விட்டேன். இந்தத் தகவலை நான் கண்டெடுத்த இணையத்தளத்தின் சுட்டியினை கீழே தந்து உள்ளேன்).

ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்களிலேயே இவ்வளவு வேறுபாடுகள் இருந்தால், அதுவும் தகவல்களைச் சேகரிக்கும் வசதிகளும் நூல்களை அச்சடிக்கும் வசதிகளும் பெருமளவு வளர்ந்து இருக்கும் இந்தக் காலத்தில், அக்காலத்தில் எவ்வளவு மாற்றங்கள் நடந்து இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவும் குறிப்பாக, இலத்தின் மொழியில் இருந்து ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் விவிலியத்தை மொழிப்பெயர்க்க முயன்றவர்களை திருச்சபையானது உயிரோடு எரித்த வரலாற்றினைக் காணும் பொழுது நிச்சயம் பல்வேறு மாற்றங்கள் விவிலியத்தில் செய்யப்பட்டு தான் உள்ளன என்பது புலனாகின்றது. அதனை எல்லாம் நாம் காண வேண்டும் என்றால் முதலில் விவிலியம் என்றால் என்னவென்றும் அதன் காலகட்டத்தில் நிலவிய சூழலினைக் குறித்தும் நாம் அறிந்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கின்றது. ஆனால் அது இங்கே தேவை இல்லை என்பதனால் அதனை வேறொரு பதிவில் விரிவாகக் காணலாம்.

இங்கே கிருத்துவ சமயத்தினை சார்ந்தவர்கள் சிந்திக்க வேண்டியது என்னவென்றால்,

  • ஏன் ஆங்கில மொழியாக்கங்களில் இவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன?
  • இயேசுவும் அவரது சீடர்களும் பேசிய மொழி அரமேயம். அவ்வாறு இருக்க விவிலியத்தின் மூல நூல்கள் கிரேக்கம் என்று ஏன் திருச்சபைக் கூற வேண்டும்?
  • இலத்தின் மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்தவர்களை, அவர்கள் விவிலியத்தை பொது மக்கள் புரிந்துக் கொள்ளுமாறு மொழிபெயர்த்தனர் என்ற ஒரே காரணத்திற்காக உயிரோடு எரித்தது ஏன்?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் கிருத்துவர்கள் விடையினைத் தேடினார்கள் என்றால் அவர்களுக்கு விடையாய் கிடைப்பது - ஆம். விவிலியத்தில் மாற்றங்கள் இருக்கின்றன என்பது தான். அதற்கு அவர்கள் உண்மையை ஆராய வேண்டும். ஆராய்வார்களா?

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்; பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" 1 - தெச.5 : 21 22 

தொடர்புடைய பதிவுகள்:


மேலே ஆங்கில விவிலிய நூல்களுள் இருக்கும் வேறுபாடுகளை நான் அறிந்துக் கொண்ட இணையத்தளம் - 

திங்கள், 26 ஜனவரி, 2015

சாதிகளும் நான்கு வருணங்களும் - 2!!!

சென்ற பதிவினில் இரண்டு இனக்குழுக்கள் போரினால் ஒன்றிணையும் பொழுது, தோற்ற இனக்குழுவானது முற்றிலுமாக அடிமைகளாகவும் எதிரிகளாகவும் மாறி விடுகின்றது என்றே நாம் கண்டோம். கூடவே நான்கு வருணம் எனப்படும் பிரிவுகளில் முதல் மூன்று வர்ணங்கள் ஆரியர்களையும் இறுதி இரண்டு வர்ணங்கள் அடிமைகளையும் எதிரிகளையும் குறிக்கின்றன என்பதனையும் கண்டோம்.

பிராமணர் - வேத வேள்வி செய்வோர் (ஆரியர்)
க்ஷத்ரியர் - அரசாள்வோர் (ஆரியர்)
வைசியர் - வணிகம் செய்வோர் (ஆரியர்)
சூத்திரர் - அடிமைகள் (திராவிடர்)
பஞ்சமர் - எதிரிகள் (திராவிடர்)

இதைத் தான் நாம் இப்பொழுது சற்று விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் ஒரு நிகழ்வினை இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. பெரிய நிகழ்வு தான்...மராட்டிய மன்னன் சிவாஜியின் பட்டமேற்பு விழாவென்றால் சும்மாவா என்ன? ஆனால் கி.பி பதினேழாம் நூற்றாண்டில் நடந்துக் கொண்டிருக்கும் அந்த விழாவினில் ஒரு சிறு பிரச்சனை இருந்துக் கொண்டு தான் இருக்கின்றது. பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை...அன்றிருந்த பழக்க வழக்கங்களின்படி சமய பெரியோர்களாக அங்கே கருதப்பட்ட பிராமணர்கள், சிவாஜிக்கு முடிசூட்ட மறுக்கின்றனர். அவ்வளவே. அதற்கு அவர்கள் காரணமாய் கூறிய விடயம் 'சிவாஜி க்ஷத்ரியன் அல்ல...ஆகவே அவனுக்கு முடி சூட்டும் சடங்கினை நாங்கள் செய்ய மாட்டோம்' என்பதே ஆகும். இக்கட்டான அந்தச் சூழலில் சிவாஜியின் நண்பரான அவாஜி என்பவர் சிவாஜியின் வம்சாவழி வரலாற்றினை சிறிது மாற்றி சிவாஜி என்பவர் மேவாரில் இருக்கும் இராஜ்புட் வம்சத்தினரின் வழியில் வந்தவர் என்றே கூறுகின்றார். அவ்வாறு அவர் கூறுவதற்கு காரணம் இராஜ்புட் வம்சத்தினை சத்திரியர்கள் என்றே பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு இருந்தனர். எனவே சிவாஜியும் இராஜ்புட் வம்சம் என்று கூறி விட்டால் அவரை சத்திரியர் என்றே பிராமணர்கள் ஏற்றுக் கொள்வார்கள் தானே. எனவே தான் அவர் அவ்வாறு கூறுகின்றார். அதனை பிராமணர்கள் தீவிர சிந்தனைக்குப் பின்னர் ஏற்றுக் கொண்டு சிவாஜிக்கு உரிய சடங்குகளைச் செய்கின்றனர். ('சூத்திரர்கள் யார்' என்ற அம்பேத்கரின் நூலில் இருக்கும் தகவல்)

சிவாஜி தனியான பல இராஜ்யங்களை தன் வசம் வைத்து இருந்தாலும் அவரை சத்திரியன் என்று பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவரை எப்பொழுது இராஜ்புட் வம்சாவழியைச் சார்ந்தவர் என்ற கருத்து எழுகின்றதோ அப்பொழுது அவரை அவர்கள் சத்திரியர் என்று ஏற்றுக் கொள்ளுகின்றனர். அதாவது பிராமணர்களின் பார்வையில் இராஜ்புட் வம்சத்தினைச் சார்ந்தவர்கள் சத்திரியர்களாக அறியப்படுகின்றனர். நிற்க

இங்கே நாம் காண வேண்டிய விடயம் என்னவென்றால் பிராமணர்களால் சத்திரியர்கள் என்று அறியப்படும் இராஜ்புட்டுகள் - இந்தியர்கள் அல்ல என்பதே ஆகும். அவர்கள் இந்திய தேசத்தின் மேல் பல்வேறு காலங்களில் படையெடுத்து வந்த ஹுன்னேர்கள், சகர்கள், குஷானர்கள் போன்ற பல்வேறு அந்நிய இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் யாரும் இந்திய தேசத்தினைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆனால் கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கு பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வட இந்தியாவினைக் கைப்பற்றினர் என்பது நம்முடைய பாட புத்தகத்தினில் காணப்படாத ஒரு வரலாறு. அவ்வாறு அவர்கள் ஒன்றிணைந்த பொழுது அவர்களுக்கு அவர்கள் இட்டுக் கொண்ட பெயர் தான் இராஜ்புட். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இராஜ்புட் என்ற பெயர் இருந்தமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இராஜ்புட்களைத் தான் சத்திரியர்கள் என்று பிராமணர்கள் கூறி இருக்கின்றனர்.

இந்திய தேசத்தினைச் சார்ந்த அரசரான சிவாஜியை சூத்திரன் என்று கூறிய பிராமணர்கள், அந்நிய நாட்டினில் இருந்து வந்த ராஜ்புட்களை சத்திரியர்கள் என்று கூறி இருக்கின்றனர். ஏன் அவர்கள் அவ்வாறு கூற வேண்டும் என்றே நாம் கண்டோம் என்றால் மீண்டும் நான்கு வருணத்தில் வந்து நாம் நிற்க வேண்டி இருக்கின்றது.

சகர்கள், ஹுன்னேர்கள், குஷானர்கள், சுங்கர்கள் போன்ற அந்நிய நாட்டினைச் சார்ந்தவர்கள் ஆரியர்கள் என்ற பொதுப் பெயரில் ஒன்றிணைந்து வட இந்தியாவின் ஆட்சியைப் பிடிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆரியர்கள். எனவே அவர்களில் அரசாள்பவர்கள் க்ஷத்ரியர்களாக அறியப்படுகின்றனர். ஆரியப் பிரோகிதர்களான பிராமணர்களும் அவர்களின் சக ஆரியர்களான இராஜ்புட்களை அறிந்துக் கொண்டு அவர்களை சத்திரியர்கள் என்று உரிமைப் பாராட்டுகின்றனர். அதே சமயம் அவர்கள் ஆட்சியினை திராவிடர்களிடம் (இந்திய மக்களிடம்) இருந்து வட இந்தியாவினில் பறித்து இருக்கின்றனர். எனவே அந்த மக்கள் அனைவரையும் சூத்திரர் என்றே அவர்கள் கருதவும் செய்து இருக்கின்றனர். அதாவது வட இந்தியாவினைப் பிடித்த அந்நியர்களின் கூட்டம் தாங்கள் கைப்பற்றிய இடத்தை ஆரியவர்த்தம் என்று அழைத்துக் கொண்டு தங்களிடையே மூன்று பிரிவுகளை வகுத்துக் கொள்கின்றது.

பிரோகிதர் (பின்னாளில் பிராமணர்) - சமய வழிபாடுகளைச் செய்பவர்
க்ஷத்ரியர் - ஆள்பவர்
வைசியர் - வணிக வேலைகளைச் செய்பவர்.

இந்தப் பிரிவுகள் அனைத்தும் ஆரியர்களையே குறிக்கும். ஆரியர்கள் கைப்பற்றிய இடத்தில் இருந்த இந்திய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் என்றே அழைக்கப்பட்டனர். அதாவது ஆரியர்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட இந்திய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் ஆயினர். எனவே தான் அடிமைகள் என்று குறிக்கப்படும் சொல்லான சூத்திரர்கள் என்பது அம்மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தப் பிரிவுகள் முழுக்க முழுக்க ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பிரிவுகளே ஆகும். அவர்கள் எந்த இடங்களில் ஆட்சி செய்கின்றனரோ அந்த இடங்களில் மட்டுமே இந்தப் பிரிவுகள் இருக்கும். மாறாக மற்ற இடங்களில் அப்பிரிவுகளுக்கு எந்தொரு அர்த்தமும் இருக்காது. உதாரணமாக வட இந்தியாவினை கைப்பற்றிய ஆரியர்களின் மத்தியில் மட்டுமே பிரோகிதர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய பிரிவுகள் இருக்க முடியும். மாறாக அவர்களின் ஆட்சிகளுக்கு உட்படாத ஏனைய அரசுகளில், உதாரணமாக தமிழக அரசுகளையே எடுத்துக் கொள்ளலாம், அப்பிரிவுக்கு எந்த ஒரு செல்வாக்கும் இருக்காது. எனவே தான் அவர்களை ஆரியர்கள் பஞ்சமர்கள் அல்லது எதிரிகள் என்றே குறித்து வைக்கின்றனர். காரணம் ஆரியர்களின் பிரிவுகளும் அவர்களது தேசத்து சட்ட நூலான மனு தர்மமும் ஏனைய அரசுகளில் துளி கூட செல்வாக்குப் பெறாது. இந்தியாவில் அப்பொழுது இருந்த மற்ற அரசுகள் ஆரியர்களின் அந்த அரசுக்கு எதிரியாக இருந்தமையினால் அவர்களை பஞ்சமர் என்றே ஆரியர்கள் குறித்து வைக்கின்றனர்.

எனவே ஆரியர்களின் பார்வையில், பிராமணர் சத்திரியர் வைசியர் என்பன அவர்களின் மத்தியில் இருந்த தொழிற் பிரிவுகள் (இவற்றில் பிற்காலத்தில் அரசியல் பலத்தோடு சமயங்களின் செல்வாக்கையும் சூழ்ச்சிகளால் பெற்றமையினால் பிராமணர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மாறி விட்டனர். அது பெரிய கதை. அதனை நாம் மற்ற பதிவுகளில் கண்டு வருகின்றோம்).

சூத்திரர் - ஆரியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இந்திய மக்கள். இவர்கள் ஆரியர்களின் மனுதர்ம சட்டத்திற்கு உட்பட்டவர்கள். எனவே தான் இவர்களை அடிமைகள் என்று ஆரியர்கள் அழைக்கின்றனர்.
பஞ்சமர் - ஆரியர்களின் ஆட்சிக்கு உட்படாத மற்ற இந்திய ஆட்சியைச் சார்ந்தவர்கள். இவர்களிடம் மனு தர்மமும் செல்லாது ஆரியர்களின் வர்ணாஸ்ரம தர்மமும் செல்லாது. எனவே தான் இவர்களை பஞ்சமர்கள் என்று ஆரியர்கள் அழைக்கின்றனர். மேலும் இவர்கள் கடவுளிடம் இருந்து தோன்றவில்லை என்றும் அவர்கள் கூறிச் சென்று உள்ளனர்.

இதனால் தான் கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகையில் 90% பேர் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் இருக்கின்றனர். 10% பேர் மட்டும் பிராமணர்களாகவும், சத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் இருக்கின்றனர்.

அதனால் தான் சிவாஜி அரசனாக இருந்தாலுமே அவன் இந்திய மண்ணைச் சார்ந்தவனாக இருந்ததினால் அவனை சூத்திரன் என்றே அவர்கள் அழைத்தனர். மேலும் இன்று தமிழகத்தில் உயர் சாதியாக அறியப்படும் சைவ வெள்ளாளர், பிள்ளைமார் போன்ற சாதிகளும் ஆரிய நான்கு வர்ணம் என்று வரும் பொழுது 'சற் சூத்திரர் - சிறந்த அடிமை' என்றே அழைக்கப்படுகின்றனர்.

அதாவது தமிழ் நாட்டில் சைவ வெள்ளாளர்கள் உயர்ந்த சாதி. ஆனால் ஆரியர்களின் பார்வையில் அவர்கள் சிறந்த அடிமைகள். காரணம் என்ன? ஒரு இந்தியன் மனு தர்மத்தின்படி அல்லது நான்கு வர்ணத்தின் படி என்றுமே ஒரு சூத்திரனாகவோ அல்லது பஞ்சமனாகவோ தான் இருக்க முடியுமே அன்றி அவனால் ஒரு பிராமணனாகவோ அல்லது சத்திரியனாகவோ ஆக முடியாது. இதைத் தமிழ் தேசியம் பேசுவோர் அறிந்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அறியாமல் தமிழர்களிடம் இருந்த தொழிற்பிரிவுகள் தான் நான்கு வர்ணமாக மாறி இருக்கின்றது என்றே கூறிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் நிச்சயமாய் தமிழர்களின் வரலாறு மீண்டு வர வாய்ப்பே இருக்காது.

அவர்கள் ஏற்கனவே அனைத்தையும் அவர்களின் வசதிக்கு ஏற்றாப்போல் மாற்றி வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். இதில் நீங்களாய் போய் நாங்களும் ஏமாறத் தயார் என்றே கூறினீர்கள் என்றால் நிலைமை மோசமாகத் தான் போகும்.

எனவே தொழில் அடிப்படையில் அமைந்த சாதிப் பிரிவுகள் என்பது வேறு.

பள்ளர், பறையர், நாடார், வெள்ளாளர், தேவர், கவுண்டர், நாயுடு, ரெட்டியார், நாயக்கர் - போன்றவைகள் சாதிய பிரிவுகள். (இவற்றுக்கு இடையே எப்பொழுது எவ்வாறு ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன என்பது வேறு வரலாறு. அதனையும் நாம் பின்னர் காணலாம்)

பிராமணர், சத்திரியர், வைசியர் - என்பன ஆரியர்களின் பிரிவுகள். அவர்களின் பார்வையில் நாம் மேலே கண்டுள்ள அனைத்து சாதிகளும், அது தமிழர்களின் சாதியப் பிரிவுகளாக இருக்கட்டும் அல்லது தெலுங்கு மக்களின் சாதிப் பிரிவுகளாக இருக்கட்டும், ஒன்று அடிமைகள் என்று அர்த்தம் பொதிந்த சூத்திரப் பிரிவினைச் சார்ந்ததாக இருக்கும் அல்லது எதிரி என்று முத்திரைக் குத்தப்பட்ட பஞ்சமர் பிரிவினைச் சார்ந்ததாக இருக்கும். அவ்வளவே.

எனவே சாதிப் பிரிவுகளும் நான்கு வர்ணமும் ஒன்று என்று கூறுவது ஒன்று அறியாமையில் கூறும் ஒன்றாக இருக்கும். அல்லது மீண்டும் திராவிட இனத்தினை அடிமைப்படுத்தும் சூழ்ச்சியின் குரலாகவே இருக்கும்.

சாதிப் பிரிவுகளும் வர்ணப் பிரிவுகளும் ஒன்றல்ல!!!!

அவ்வளவே!!!

தொடர்புடைய இடுகைகள்:

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்...!!!
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 1
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 2
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 3
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 4
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 6
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 7
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 8
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 9
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 11
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 12

 

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சாதிகளும் நான்கு வருணங்களும் - 1!!!

இன்று தமிழகத்தில் 'திராவிடம்' என்ற சொல்லுக்கு எதிராகவும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும் குரல்கள் வலுவாக தமிழ்த் தேசியம் பேசும் நண்பர்களிடம் இருந்து எழுந்து கொண்டே இருக்கின்றது. அவர்கள் முன் வைக்கும் கூற்றுகளில் நியாயம் இல்லாமலும் இல்லை.

"தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி இப்படி எல்லாருமே திராவிடர் அப்படின்னு சொல்றீங்க...ஆனா தமிழ் நாட்டைத் தவிர வேற எங்கேயும் இத சொல்றது கிடையாது...தெலுங்கர் தன்னை தெலுங்கு அப்படின்னு தான் சொல்றாப்ல...கன்னடரும் தன்னை கன்னடம் அப்படின்னு தான் சொல்றாப்ல...ஆனா தமிழன் மட்டும் தான் தன்னை திராவிடன்னு சொல்லிக்கிட்டு இருக்கணும்...அப்படி அவன் சொல்லிக்கிட்டு இருந்தாத் தான் அவன தொடர்ந்து தெலுங்கு மக்கள் ஆட்சி பண்ணிகிட்டே இருக்க முடியும்..என்ன?" என்று அவர்கள் கேட்கும் கேள்வியில் நிச்சயம் உண்மை இருக்கத்தான் செய்கின்றது.

மேலும் "தெலுங்கு மன்னர்களான நாயக்கர் ஆட்சியில தான்யா தமிழன் தாழ்ந்தான்...தெலுங்குகாரனுங்க அவனுங்க ஆட்சியில தான் கிட்டத்தட்ட எல்லா கோவிலையும் பிராமணன்கிட்ட கொடுத்தானுங்க...மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாக இருக்கட்டும்...பழனி முருகன் கோவிலாக இருக்கட்டும்...பிராமணன் அங்கே உள்ள போனதுக்கு நாயக்க மன்னர்கள் தானப்பா காரணம்...அப்ப அடிமையாகப் போன தமிழர்கள் இன்னிக்கு வரைக்கும் அடிமையாகத் தானயா இருக்காங்க...அதனால தமிழனுக்கு எதிரி பிராமணன் மட்டும் கிடையாது ஆனா திராவிடன் அப்படின்னு சொல்லியே முதுகுல குத்துன தெலுங்கு மக்களும் தான்" என்றும் அவர்கள் கூறும் வாதங்களில் வரலாற்று உண்மைகளும் இன்னும் ஆழமாக ஆராயக்கூடிய பல்வேறு விடயங்களும் ஒளிந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

மாபெரும் வரலாற்றினையும் பழம்பெருமையையும் கொண்டிருந்த ஒரு சமூகம் தன்னுடைய அடிமை நிலையில் இருந்து விடுதலைப் பெற்று மீண்டும் தன்னுடைய வரலாற்றினை அறிய முற்படுகையில் நிச்சயமாய் ஒரு எழுச்சி இருக்கத்தான் செய்யும். அதுவும் தமிழ் சமூகம் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக கல்வியறிவு மறுக்கப்பட்டு மூட நம்பிக்கைகளில் ஒடுக்கப்பட்டு இருந்த ஒரு சமூகமாகவே இருக்கின்றது. அத்தகைய ஒரு சமூகம் இன்று மீண்டும் கல்வியறிவினைப் பெற பெற தன்னுடைய இனத்தின் வரலாற்றையும் பெருமையையும் அறிந்துக் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது. எனவே இயல்பாகவே மேற்கூறிய கேள்விகள் அவர்களின் முன்னே எழத் தான் செய்யும். மேலும் அக்கேள்விகளுக்கு விடையினைத் தேடுவதும் இங்கே முக்கியமானதொன்றாகத் தான் இருக்கின்றது.

ஆனால் அத்தகைய தேடுதல்களின் பொழுது அனைத்து விடயங்களையும் நன்றாக கவனித்தே ஒரு முடிவிற்கு யாராக இருந்தாலும் வர வேண்டும். அநேக விடயங்களை தமிழ் தேசியம் பேசுவோர் சரியாக முன் வைத்தாலும் அவர்களும் பல இடங்களில் தவறுகள் செய்யத்தான் செய்கின்றனர். அதில் முக்கியமான ஒரு தவறு சாதியையும் வருணத்தையும் பிரித்து அறிவதில் வருகின்றது. அதைத் தான் நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கூற்று இது தான். தமிழர்கள் தான் உலகின் முதல் மக்கள். அவர்கள் தமிழகத்தில் இருந்து கிளம்பிச் சென்று உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லுகின்றனர். தமிழர்கள் தங்களைத் தாங்களே செய்யும் தொழில்களின் அடிப்படையில் நான்காக வகுத்துக் கொள்கின்றனர். தங்களின் இனக் குழுவின் செயல்பாட்டினை முன்னேற்றுவதற்காகவே அவர்கள் அத்தகைய பிரிவினை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த பிரிவுகளானது,

அந்தணர் - வழிபாடுகளைச் செய்பவர்/அறிஞர்
அரசர் - மக்களை ஆள்பவன்
வணிகர் - வணிகம் செய்பவர்
வேளாளர் - விவசாயம் செய்பவர்.

இவ்வாறு தமிழர்கள் செய்துக் கொண்ட பிரிவுகளே அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்றடைந்து உருவாக்கிய நாகரீகங்களிலும் காணப்படுகின்றன என்றே அவர்கள் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் எடுத்துக்காட்டாய் எகிப்து, இசுபானியா (Spain), சப்பான் போன்ற நாகரீகங்களைக் காட்டுகின்றனர். அவ்வாறு எடுத்துக்காட்டுவதன் மூலமாக அவர்கள் கூற வருவது இது தான். சாதிகளை ஆரியர்கள் கண்டுப்பிடித்தார்கள் என்பது வடிகட்டின பொய். சாதிகள் என்பது தமிழர்கள் தொன்றுதொட்ட காலத்தில் உருவாக்கியது. அதன் அடிப்படையிலேயே தான் பின்னர் நான்கு வருணங்கள் உருவாகி உள்ளன. எனவே நான்கு வருணங்களை உருவாக்கியது தமிழர்கள் தாம் என்பது தான் அவர்களின் வாதமாக இருக்கின்றது.

அவர்களின் கூற்றுப்படி தமிழர்களின் மத்தியில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. நான்கு வருணத்திலும் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. எனவே இரண்டும் ஒன்று தான். அவ்வளவே. அதாவது,

அந்தணர் = பிராமணர் = வழிபாடுகளைச் செய்பவர்
அரசர் = சத்திரியர் = அரசாள்பவர்
வணிகர் = வைசியர் = வணிகம் செய்பவர்
வேளாளர் = சூத்திரர் = விவசாயம் மற்றும் இதர வேலைகளைச் செய்பவர்கள்.

'ஆகா...எவ்வளவு அருமையாகப் பொருந்துகின்றது. இந்த எளிமையான பொருத்தத்தைக் கூட காண முடியாது 'நான்கு வருணத்தை' ஆரியர்கள் கொண்டு வந்தார்கள் என்று கூறிக் கொண்டு இருக்கின்றார்களே இந்த திராவிடம் பேசுவோர். நான்கு வருணம் என்பது தமிழர்கள் கொண்டிருந்த நான்கு பிரிவுகளின் மற்றொரு வடிவமே அன்றி வேறல்ல.' என்பதே அவர்களின் கூற்றாக இருக்கின்றது. இங்கே தான் பிரச்சனை இருக்கின்றது. ஆகையால் நாம் இதனை மறுத்தாக வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் அந்த தொழிற் பிரிவுகளைப் பற்றியும் நான்கு வருண அமைப்பினைப் பற்றியும் காண வேண்டி இருக்கின்றது.

முதலில் தொழிற்பிரிவுகளைப் பற்றிக் காண்போம். அந்தணர், அரசர், வணிகர்,வேளாளர் ஆகிய நான்கு பிரிவுகளும் தமிழர்கள் மத்தியில் இருந்த பிரிவுகளைக் குறிக்கின்றன. இவைகள் செய்யும் தொழிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை அல்ல. எனவே,

ஒரு அந்தணன் அரசனாகலாம். ஒரு அரசன் வணிகனாகலாம். ஒரு வேளாளன் அந்தணன் ஆகலாம். இதில் யாதொரு பிரச்சனையும் எழப் போவதில்லை. செய்யும் தொழிற்கு ஏற்றார்ப் போல் மக்கள் பிரிந்துக் கொள்கின்றனர். அவ்வளவே. இதில் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. நிற்க.

இங்கே மற்றுமொரு முக்கியமான விடயத்தினைத் தான் நாம் இங்கே கண்டாக வேண்டி இருக்கின்றது. மேற்கூறிய பிரிவுகள் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியாக இருக்குமே அன்றி பல்வேறு இனங்களுக்கு ஒரே பிரிவு இருக்க முடியாது. அதாவது,

அந்தணன், அரசன், வணிகன், வேளாளர் - ஆகிய பிரிவுகள் தமிழர்களிடையே இருந்தது என்றால் அது அந்தந்த தமிழ் இனக் குழுக்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கும்.

அதைப் போன்றே பாரோ (Pharoah - அரசன்), ப்ரீஸ்ட் (Priest - வழிபாட்டு குரு), வணிகர் (Artisans) , விவசாயிகள் - என்ற பிரிவுகள் எகிப்து நகர மக்களிடையே காணப்படுமானால் அந்த பிரிவுகள் எகிப்து இன மக்களுக்கு மட்டுமே உரியனவாக இருக்கும். ஒரு தமிழ் வணிகன் எகிப்தில் சென்று வணிகம் செய்தாலும் அவனை அவர்கள் அவர்களது வணிக பிரிவினில் ஒருவனாக வைத்துக் காண மாட்டார்கள். அந்நிய நாட்டினைச் சார்ந்தவனாகத் தான் பார்ப்பார்கள். செய்யும் தொழில் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் இருவரும் வெவ்வேறு இனக் குழுவினைச் சார்ந்தவர்கள்.

இந்நிலையில் எகிப்து நகர மக்கள் தமிழகத்தின் மீது படை எடுத்து வந்து வென்று விட்டார்கள் என்றால் நிலைமை எவ்வாறு இருக்கும்? எகிப்து மக்கள் தாங்கள் கொண்டிருந்த அதே நான்கு பிரிவுகளைக் கொண்டு இருப்பார்கள். கூடுதலாக அடிமைகள்/எதிரிகள் என்ற ஒரு பிரிவில் தமிழ் இனக்குழுவைச் சார்ந்த அனைவரும் சேர்க்கப்பட்டு இருப்பார்கள் (அவர்கள் அந்தணர்களாக இருக்கலாம் அல்லது அரசர்களாக இருக்கலாம், அல்லது வணிகர்களாக இருக்கலாம் - அவர்கள் யாராக இருந்தாலும் ஒன்று அடிமையாக இருப்பர் அல்லது எதிரியாக கருதப்பட்டு அழிக்கப்பட்டு இருப்பர்). இது தான் இயல்பு.

எனவே இரண்டு இனக்குழுக்கள் போரினால் ஒன்றிணையும் பொழுது, தோற்ற இனக்குழுவானது முற்றிலுமாக அடிமைகளாகவும் எதிரிகளாகவும் மாறி விடுகின்றது. அதாவது தமிழர்கள் தங்களைத் தாங்களே அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று கருதிக் கொண்டாலும் எகிப்தியர்கள் அவர்கள் அனைவரையும் அடிமைகள் அல்லது எதிரிகள் என்று தான் கருதுவர். நிற்க

இந்த அடிப்படையில் தான் நாம் நான்கு வர்ணப் பிரிவினைக் கண்டாக வேண்டி இருக்கின்றது (உண்மையில் அது நான்கு அல்ல ஐந்து பிரிவுகள்).

பிராமணர் - வேத வேள்வி செய்வோர் (ஆரியர்)
க்ஷத்ரியர் - அரசாள்வோர் (ஆரியர்)
வைசியர் - வணிகம் செய்வோர் (ஆரியர்)
சூத்திரர் - அடிமைகள் (திராவிடர்)
பஞ்சமர் - எதிரிகள் (திராவிடர்)

இந்தப் பிரிவுகளில் முதல் மூன்று பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆரியர்களாக கருத்தப்படுவதையும் ஏனைய இரு பிரிவுகளைச் சார்ந்தவர்கள் திராவிடர்களாக கருதப்படுவதையும் நான்கு வர்ணத்தைப் பற்றி நன்கு அறிந்து இருக்கும் மக்கள் அறிந்தே தான் இருக்கின்றனர். இதைத் தான் தமிழ் தேசியம் பேசும் மக்கள் சற்று கவனிக்க வேண்டி இருக்கின்றது. இனக்குழுக்களுள் வழங்கப்படும் நான்கு தொழிற்பிரிவுகளும் நான்கு வருண அமைப்பும் ஒன்று என்றால் ஏன் ஒரு இனம் மட்டும் அடிமையாகவும் எதிரிகளாகவும் கருதப்பட்டு இருக்கின்றது?

இந்த கேள்விக்குத் தான் நாம் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.காண்போம்...!!!

தொடரும்...!!!


தொடர்புடைய இடுகைகள்:

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்...!!!
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 1
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 2
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 3
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 4
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 6
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 7
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 8
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 9
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 11
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 12

கடவுள் ஒருவரா மூவரா - மூஒருமைக் கோட்பாடு ஒரு சிறு பார்வை - 2

சென்ற பதிவினில் ஒரே இறைவன் தான் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்பதனைக் குறிக்கும் மூஒருமைக் கோட்பாட்டினைப் பற்றிச் சிறிதுக் கண்டோம். மேலும் உலகில் உள்ள சமயங்களில் ஒரே ஒரு சமயத்தினில் மட்டுமே இக்கருத்து காணப்படும் என்றால் இக்கருத்தினை நாம் ஏற்றுக் கொள்வது என்பது இயலாத ஒரு செயலாகி விடும். ஏனென்றால் இறைவன் ஒருவனே என்றால் அவனைப் பற்றிய கருத்துக்களும் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அது இறைவன் என்ற ஒருவனின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விடும். இந்நிலையில் தான் ஒரே இறைவன் மூன்று நிலையில் இருக்கின்றான் எனப்படும் மூஒருமைக் கோட்பாட்டினைப் பற்றி நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. கிருத்துவ சமயத்தில் காணப்படும் இந்தக் கோட்பாட்டினை நாம் சென்ற பதிவினில் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது இதே கோட்பாடு வேறு சமயங்களில் இருக்கின்றதா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் சைவ வைணவ சமயங்களையும் மகாயான பௌத்தத்தையும் காண வேண்டி இருக்கின்றது. முதலில் பௌத்தத்தில் இருந்தே தொடங்குவோம்.

பௌத்த சமயம் புத்தரின் கொள்கைகளால் தோற்றுவிக்கப்பட்டது என்றே நாம் அறிவோம். இதன் தோற்றக் காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டு என்றே கணிக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று நம்மில் பலரும் அறிவோம். ஆனால் நம்மில் பெரும்பான்மையான மக்கள் அறியாத கருத்து என்னவென்றால் பௌத்த சமயத்தில் இரு பெரும் பிரிவுகள் இருக்கின்றது என்பதே ஆகும். அவை,

ஹீனயான (தேரவாத) பௌத்தம் - புத்த சமயத்தின் முதல் பிரிவு.
மகாயான பௌத்தம் - புத்த சமயத்தின் இரண்டாம் பிரிவு. காலம் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்து இன்று வரை.

இவ்விரண்டு பிரிவுகளைப் பற்றியும் நாம் முன்னரே சில பதிவுகளில் கண்டுவிட்டோம். இருந்தும் இங்கே நாம் அவற்றுக்கு இடையில் இருக்கும் சில வேறுபாடுகளை கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது.


மனிதன் தனது வினைப்பயன்களால் துயறுற்று மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழன்றுக் கொண்டு இருக்கின்றான். அவன் இந்த பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப அவனது அடுத்த பிறவி அமைகின்றது. வாழ்வு துன்பகரமானது. எனவே ஒவ்வொரு முறையும் மனிதன் பிறக்கும் போதும் துன்பத்திற்கே ஆளாகின்றான். ஆகையால் அவனது முழு கடமையும் அவனது வினைப் பயன்களைத் துறந்து முக்தி அடைவதே ஆகும். எப்பொழுது ஒரு மனிதன் தன்னுடைய புலன்களை அடக்கி பற்றற்று தன்னுடைய வினைகளைக் களைந்து விடுகின்றானோ அப்பொழுது அவன் முக்தி நிலையை அடைகின்றான். அவன் மறு பிறவி எடுப்பதில்லை. எனவே ஒவ்வொரு மனிதனின் கடமையும் அவன் முக்தி அடைவதே ஆகும். இது தான் ஹீனயான பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்த கொள்கையின்படி புத்தர் இரண்டு நிலைகளில் இருக்கின்றார்.

  • வினைகளில் சிக்கி இருக்கும் மனித நிலை
  • வினைகள் நீங்கப் பெற்ற முக்தி நிலை

ஹீனயான பௌத்தம் புத்தரை இந்த இரு நிலைகளிலேயே காணுகின்றது. ஆனால் மகாயான பௌத்தம் இந்த நிலையில் இருந்து மாறுபடுகின்றது. மகாயான பௌத்தம் புத்தரை மூன்று நிலையில் காணுகின்றது.

மகாயான பௌத்ததில் புத்தருக்கு மூன்று உடம்புகள் இருப்பதாக அறியப் படுகின்றது. மூன்று உடம்புகளாக அறியப்பட்டாலும் அவை ஒன்று தான் என்பதே மகாயான பௌத்ததின் கருத்து. இதனை 'திரி காயா' என அவர்கள் வழங்குவர். புத்தரின் மூன்று உடல்களானவை யாதெனின்

  • நிர்மாண காயா (Nirmana Kaya : படைக்கப்பட்ட திருமேனி) - இந்த நிலை மனித வடிவில் வந்த புத்தரைக் குறிக்கும். 
  • தர்ம காயா (Dharma kaya : அறத் திருமேனி) - இந்த நிலை புத்தரின் பரிசுத்த நிலையைக் குறிக்கும்.
  • சம்போக காயா (Sambhoga kaya : இன்பத் திருமேனி) - இந்த நிலை புத்தர் தன்னுடைய போதிசத்துவர்களை வழிநடத்துவதற்காக இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். இந்த நிலையில் சுயநலமற்று அனைவரும் ஒன்றே என்ற ஆன்மீக உணர்வினால் புத்தர் தன்னுடைய போதிசத்துவர்களை மற்ற மக்களுக்கு நன்மையைச் செய்து அவர்களையும் மீட்கும் வண்ணம் வழிநடத்துவார். இந்த நிலை ஒரு உணர்ச்சி நிலை. நிற்க.

இங்கே நாம் முக்கியமாக காண வேண்டியது என்னவென்றால் ஒரே புத்தர் தான் மூன்று நிலைகளில் இங்கே அறியப்படுகின்றார். அதாவது மனிதனாக வந்த புத்தர் (நிர்மாண காயா) மக்களுக்கு மீட்படையும் வழியைக் காட்டிவிட்டு என்றும் இருக்கும் பரிசுத்த நிலையுடன் (தர்ம காயா) இணைகின்றார். தர்மகாயா நிலையே என்றும் இருக்கும் மெய்யான நிலையாக இருக்கின்றது. பின்னர் தன்னை ஏற்றுக் கொண்ட போதிசத்துவர்களுக்கு வழிகாட்ட சம்போக காயா என்ற உணர்ச்சி வடிவினைக் கொண்டே புத்தர் வழிநடத்துகின்றார்.

மகாயான பௌத்தக் கொள்கையின்படி ஒருவன் தன்னுடைய வினைகளில் இருந்து நீங்கி போதிசத்துவ நிலையை (முக்திக்கு தயாரான நிலை) அடைந்து விட்டான் என்றால் அவனுடைய கடமை மற்றவர்களையும் அந்நிலைக்கு கொண்டு வருவதாகவே ஆகின்றது. ஒருவன் அவனது முக்தி நிலைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரக் கூடாது. மாறாக மனித குலத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் அவன் கடமையாற்ற வேண்டி இருக்கின்றது. இதுவே ஒவ்வொரு போதிசத்துவரின் கடமை.

வினைகளில் இருந்து விடுதலை அடைவதோடு ஹீனயான பௌத்ததில் ஒரு மனிதனின் கடமை முடிந்து விடுகின்றது. ஆனால் மகாயான பௌத்தமோ மக்கள் அனைவரும் ஒருவரே...எனவே ஒருவனின் முக்தி மற்றவர்களுக்கு பயன்படவில்லை என்றால் அம்முக்தியினால் யாதொரு பயனும் இல்லை என்றே கூறுகின்றது.

எனவே புத்தரை ஏற்றுக் கொண்ட போதிசத்துவர்களின் கடமை மற்ற மக்களை வழிநடத்துவதாகவே இருக்கின்றது. அவர்களின் அந்த கடமையில் அவர்களை புத்தர் தனது சம்போக காயா என்ற வடிவில் இருந்து வழிநடத்துகின்றார் என்பதே மகாயான பௌத்ததின் கருத்தாகும். சம்போக காயா நிலையில் புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் தனது தர்மகாயா நிலையுடன் ஒன்றிணைக்கின்றார். கனவுகள் மூலமாகவோ அல்லது காட்சிகள் மூலமாகவோ சம்போக காயா நிலை புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் வழிநடத்துகின்றார். எனவே தான் அந்த நிலையை ஓர் உணர்ச்சி நிலை என்றுக் கூறுகின்றனர். அதனை உணரத் தான் முடியும். சரி இருக்கட்டும். இங்கே நாம் கண்டது என்னவென்றால்,

பௌத்தத்திலும் ஓர் இறைவன் (புத்தர்) மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்ற கோட்பாடே இருக்கின்றது. இதுவும் கிருத்துவக் கோட்பாட்டினைப் போன்றே இருக்கின்றது.




மேலும் இக்கருத்துக்கள் கி.பி ஒன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே காணப்படுகின்றன எனபதும், பௌத்தரின் இயற்கைக்கு மீறிய பிறப்புக் கதையும் இன்னும் பல விடயங்களும் நிச்சயம் சிந்திக்கத் தக்கவைகளாகத் தான் இருக்கின்றன. இருந்தும் அவைகளை இந்த பதிவினில் காண்பது சரியானதொன்றாக இருக்காது. இந்தத் பதிவின் நோக்கம் ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருப்பதனைப் போன்ற கோட்பாடுகள் எந்தெந்த சமயங்களில் இருக்கின்றன என்பதனைப் பற்றிக் காண்பதே ஆகும். எனவே இப்பொழுது மகாயான பௌத்தத்திலும் ஒரே இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்ற கருத்து காணப்படுகின்றது என்பதனைக் கண்டாயிற்று. இனி நாம் இக்கோட்பாடு சைவ வைணவ சமயங்களில் இருக்கின்றதா என்றே காணலாம்...

தொடரும்...!!!

பி.கு:

தொடர்புடைய பதிவுகள் :

கடவுள் ஒருவரா மூவரா - மூஒருமைக் கோட்பாடு ஒரு சிறு பார்வை - 1
புத்தன் எத்தனை புத்தனடா…!!!

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

கடவுள் ஒருவரா மூவரா - மூஒருமைக் கோட்பாடு ஒரு சிறு பார்வை - 1

'மூவொருக் கோட்பாடு' என்பது ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்பதைக் குறிக்கும் ஒரு சொற்தொடர் ஆகும். இன்றைக்கு இச்சொல் பயன்பாடு என்பது கிருத்துவ சமயத்துடன் மட்டுமே தொடர்புடையதாக அறியப்பட்டு இருக்கின்றது.

தந்தை - பரிசுத்த ஆவி - மகன் என்ற மூன்று நிலைகளில் இறைவன் இருக்கின்றார் என்றே கிருத்துவ சமயம் விளக்கமும் அளிக்கின்றது. இக்கூற்றினை இறைவன் ஒருவனே என்றுக் கூறும் இசுலாமியர்கள் மறுப்பர். அவர்களின் கூற்றின் படி இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்பது கட்டுக் கதை. எல்லாம் வல்ல இறைவன் எதற்காக மூன்று நிலைகளில் இருக்க வேண்டும் என்பது அவர்களின் வாதம். இந்நிலையில் தான் மூவொருமைக் கோட்பாட்டினைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது.

பனிக்கட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அது உறைந்த நிலையில் இருக்கின்றது. கொஞ்சம் சூடேற்றுங்கள்.
நீராக மாறுகின்றது. அதனை நன்றாக கொதிக்க வையுங்கள்.
ஆவியாக மாறுகின்றது. அதனை குளிரடையச் செய்யுங்கள்.
மீண்டும் பனியாக மாறுகின்றது.


இங்கே நம்மிடம் மூன்று பொருட்கள் இருக்கின்றன. பனிக்கட்டி, தண்ணீர், நீராவி.

இவை மூன்றுமே மூன்று வெவ்வேறுப் பொருட்களா அல்லது ஒரே பொருளின் மூன்று தனிப்பட்ட தன்மைகளா. ஒரே பொருளின் மூன்று தன்மைகள் தானே. குளிர்ந்து இருக்கும் பொழுது பனிக்கட்டியாக இருப்பது சிறிது வெப்பத்தினால் தண்ணீராக மாறுகின்றது. அதுவே வெப்ப அளவுக் கூடினால் நீராவியாக மாறுகின்றது. மாற்றங்கள் காணினும் அது அடிப்படையில் ஒரே பொருள் தான். அதாவது ஒரே பொருள் தான் மூன்று காலநிலைகளில் மூன்று வேறுப் பொருள்களாக இருக்கின்றது.

இந்த அடிப்படையில் தான் நாம் இப்பொழுது ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்ற கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது. இக்கூற்று இன்று கிருத்துவ சமயத்தில் தான் மிகுதியாக அறியப்பட்டு இருப்பதனால் அச்சமயத்தையே எடுத்துக் கொள்வோம்.

கிருத்துவ சமயத்தின் கூற்றின் படி ஒரு இறைவன் தந்தை-பரிசுத்த ஆவி-மகன் என்ற மூன்று நிலைகளில் இருக்கின்றார். அது ஏன் அவ்வாறு இருக்கின்றார் என்று கிருத்துவம் கூறுகின்றது என்றே நாம் இப்பொழுதுக் காண வேண்டி இருக்கின்றது.

விவிலியக் கூற்றின் படி இறைவன் உலகைப் படைக்கின்றார். இது முதல் நிலை - தந்தை நிலை

பின்னர் மனிதன் தவறு செய்து பாவத்தில் விழுகின்றான். அவ்வாறு பாவத்தில் விழுந்த மனிதனை மீட்க இறைவனே மனிதனாக வந்து அவனுக்கு குருவாக இருந்து எவ்வாறு வாழ வேண்டும் என்றுக் காட்டிவிட்டு மீட்பினை வழங்கிய நிலை இரண்டாம் நிலை - மகன் நிலை.

எவ்வாறு வாழ வேண்டும் என்றும் காட்டியாயிற்று, மீட்பையும் வழங்கியாயிற்று அந்நிலையில் மனிதனை நல்வழியில் நடத்தி அந்த மீட்பினை அவன் பெற்றுக் கொண்டு மற்றவர்களையும் வழிநடத்தும் வண்ணம் ஒழுக்கமாக அவன் இருக்கும் வண்ணம் அவனை வழிநடத்துவது மூன்றாவது நிலையாகும் - இது தான் பரிசுத்த ஆவி நிலை.

இறைவன் உலகைப் படைத்த காலகட்டம் வேறு...மனிதனாக வந்து மீட்டுக் கொண்ட காலக் கட்டம் வேறு...மனிதனை மீட்பினைப் பெற்றுக் கொள்ள வழிநடத்தும் காலகட்டம் வேறு. ஒரே இறைவன் மூன்று காலகட்டங்களில் இவ்வாறு மூன்று வேறு செயல்களைச் செய்ததால் தான் ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்ற கருத்து இங்கே நிலைப் பெற்று இருக்கின்றது. ஒரு வேளை இறைவன் மனிதனாக உலகிற்கு வராமல் இருந்திருந்தாலோ, மனிதனை வழிநடத்த பரிசுத்த ஆவியாக இயங்காமல் இருந்தாலோ மூவொருமைக் கோட்பாடு என்பது தோன்றி இருக்காது.

எனவே ஒரே இறைவன் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் மூன்று நிலைகளில் செயல்பட்டதால் மூஒருமைக் கோட்பாடு என்ற கருத்து தோன்றி இருக்கின்றது. அதாவது

தந்தை நிலை - உலகைப் படைத்த நிலை
மகன் நிலை - பாவத்தில் இருந்த மனிதனுக்கு மீட்பினை அளித்த நிலை
பரிசுத்த ஆவி நிலை - மீட்பினை பெரும் வண்ணம் மனிதனை வழிநடத்தும் நிலை


ஒரே இறைவன் மூன்று நிலைகளில் மூன்று வெவ்வேறு தருணங்களில் செயல் பட்டதால் ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான், ஆனால் மூன்று நிலைகளில் இருந்தாலும் அவன் ஒருவனே என்ற கருத்து மூவொருமைக் கோட்பாடாக விளங்குகின்றது.

சரி இருக்கட்டும்...கிருத்துவ சமயம் ஓர் இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்றுக் கூறுகின்றது. இசுலாமோ இறைவன் ஒருவனே என்கின்றது. இதில் எது உண்மை? ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொரு சமயத்தினைச் சார்ந்தவர்களாலும் தர இயலும். அவ்வாறு இருக்க எதனை மெய் என்று அறிவது. உண்மையிலேயே இறைவன் என்று ஒருவன் இருந்தான் என்றால் அவனைப் பற்றிக் கூறும் சமயங்கள் ஒரே கருத்தினை அல்லவா கூற வேண்டும்.

மூவொருமைக் கோட்பாடு என்பது உண்மை என்றால் இறைவன் மனிதனாக உலகிற்கு வந்து மனிதர்களை மீட்டுக் கொண்டது, மனிதர்களை வழிநடத்துவது போன்ற விடயங்கள் மற்ற சமயங்களிலும் இருக்க வேண்டுமே. அதனை விடுத்து ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றைக் கூறினால், கூட்டிக் கழித்துப் பார்த்து இறைவன் இல்லை என்ற நிலைக்கு தானே வர இயலும். இந்நிலையில் தான் நாம் மற்ற சமயங்கள் கூறும் கருத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.

சைவ வைணவ சமயங்களும் மகாயான பௌத்தமும் நமக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன.

காண்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

இது ஆய்வாளர் தெய்வநாயகம் ஐயா அவர்களது ஆராய்ச்சியில் இருந்து நான் அறிந்தவனவற்றை நான் அறிந்த வண்ணமே மக்களுக்கு தர முயற்சிக்கும் ஓர் முயற்சியே ஆகும். சிந்திப்போம்..கேள்விகள் கேட்போம்..விழிப்படைவோம்.

ஞாயிறு, 18 மே, 2014

இயேசுவின் இரண்டாம் வருகை (25) - இறுதிப் பகுதி


இறுதிப் பகுதி - ஆன்மீகப் பொது உடைமை

"மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்" - லூக்.12:20

இவ்வுலகப் பொருளுக்காகவும், இவ்வுலக ஆட்சிக்காகவும் பைபிளைப் பயன்படுத்தும் ஐரோப்பியர், விளக்கைக் கையில் வைத்துக் கொண்டு, ஆழ்குழியில் விழும் குருடர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

இவ்வுலகப் பொருளுக்காகவும் செல்வாக்கிற்காகவும் ஐரோப்பியரின் மூளைச் சலவைப்படையின் ஊழியக்காரர்களாக வாழ்நாளை வீண் நாளாகக் கழிக்கும் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களைப் பார்த்து,

"நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று (மத் 7:13)

என்றும்

"நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்" (மத். 7:19)

கடவுளே மனிதனாக வந்து கற்றுக் கொடுத்தவற்றை ஊழியக்காரர் சிந்தனைக்குப் படைக்கின்றேன்.

" எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." (மத்: 23: 37-39)

"இது முதல் என்னைக் காணாதிருப்பீர்கள்" என்று வருத்தத்துடன் கூறியவர் மறைந்தே போய் விடவில்லை. திரும்பவும் காணப்பட்டார். உரிய காலத்தில் பரலோக இராஜ்யம் மலர்ந்தது.

பூலோக அரசின் ஆட்களாகிய யூதர்களாலும், ரோமர்களாலும் அது மறைக்கப்பட்டாலும், மன்னர் ஆட்சிக் காலம் மறைந்து மக்கள் ஆட்சிக் காலம் மலர்ந்து வரும் இக்காலத்தில் பரலோக இராஜ்யம், உலக மக்கள் ஆட்சியாக முழுமையடையப் போகிறது என்பதில் ஐயம் இல்லை.

பரலோக இராஜ்யமாகிய ஆன்மீகப் பொதுஉடைமை மலர்வதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா? என்னும் கேள்விக்கு "ஆம்" என்னும் பதில் வரலாற்று வழியில் கிடைக்கிறது.

ஆன்மீகத்தை மேலை நாடுகள் கையில் வைத்துக் கொண்டு ஆன்மீகத்திற்கு எதிரான தனியுடைமை நாடுகளாக இருக்கின்றன.

மனித நேயத்திற்குரிய பொது உடைமையைக் கையில் வைத்திருக்கும் கீழை நாடுகள், மனித நேயத்திற்கு எதிரான அடக்கு முறையால், அரசியல் பொது உடைமையைச் செயல்படுத்தி வருகின்றன.

இந்த இரண்டையும் இணைத்து அரவணைப்பவரே உலக இரட்சகராகிய நம்முடைய இயேசு கிருத்து.

இயேசு கிருத்து காட்டியுள்ள பரலோக இராஜ்யமாகிய ஆன்மீகப் பொது உடைமையை உலக மக்கள் அனைவரும் புரிந்துக் கொள்ளக்கூடிய முறையில் ஆறாவது அறிவுக்குரிய அறிவியல் வழியில் விளக்கும் ஊழியக்காரர்களின் படை புறப்பட்டால் வெற்றியடைவதற்கு காலம் கனிந்து இருக்கின்றது.

உலக மக்கள் அனைவரும் போரின்றி அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ விரும்பும் காலம் இது. சமாதானப் பிரபுவாகிய இயேசு கிருத்துவின் நற்செய்தியை ஆறாவது அறிவிற்குரிய அறிவியல் வழியில் புனித தோமாவின் நற்செய்திப் பணியின் விளைவாகிய தமிழர் ஆன்மவியல் அடிப்படையில் விளக்கிக்காட்டும் பொழுது அதை மறுப்பவர் எவரும் இருக்க இயலாது.

இன்று உலகில், பயங்கரவாதம் நடைபெறுவதற்குக் காரணம், மனித நேயமற்ற அடக்குமுறை, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள பெரும்பான்மையினர் அந்நாட்டிலுள்ள சிறுபான்மையினரை நியாயமில்லாமல் நசுக்குதல், நசுக்கப்படும் சிறுபான்மையினருக்கு நீதி வழங்க, அந்த நாட்டைத் தாண்டி உலக அளவில் நீதிமன்றம் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபை நாடுகளுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க முயலுகிறது. வீட்டோ அதிகாரமுள்ள ஐந்து நாடுகளின் கைப்பாவையாக ஐ.நா சபை செயல்படுவதைத் தவிர அதற்கு வேறு வழி இல்லை.

அகில இந்தியாவில் இருந்த 56 நாடுகளுக்கும் 56 படைகள் இந்தியாவில் இருந்தன.

இந்தியா ஒரே மக்களாட்சி நாடாக ஆனவுடன் 56 படைகள் மறைந்து ஒரு படை மட்டும் போதுமானதாயிற்று.

இதைப்போன்று உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ஒரே நாடு என்னும் நிலையில் உலக மக்கள் ஆட்சி அமைந்தால் இப்பொழுது படைகளுக்காகத் தனித் தனி நாடுகள் செய்யும் செலவுகள் அத்தனையும் மறைந்து விடும்.

அடுத்த கிரகத்திலிருந்து நம் உலகைப் பாதுகாக்கும் அமைப்பு மட்டுமே போதுமானதாகி விடும். உலகின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குக் காவல் துறை மட்டுமே போதுமானதாகி விடும்.

உலக மக்கள் ஆட்சி அமைந்தால் உலக மக்கள் அனைவருக்குமான உலக நீதிமன்றம் அமையும், உலக மக்கள் அனைவருக்கும் அப்பொழுது நீதி கிடைக்கும், பயங்கரவாதம் மறைந்து விடும்.

இதற்கு உழைக்கக்கூடியவர்கள் சமாதான கர்த்தராகிய இயேசு கிருத்துவின் ஊழியக்காரர்களே. இந்த ஊழியக்காரர்களுக்கு பயன்படும் கருவி தமிழர் ஆன்மவியல். இந்த ஊழியக்காரர்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். கிருத்துவைச் சேர்ந்தவர்கள், கிருத்து காட்டிய பரலோக இராஜ்ய வாழ்க்கை முறையாகிய ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறைக்கு உழைப்பவர்கள்.

அப்பொழுது உலகம் முழுவதும் ஒரே மனதையும் ஒரே மேய்ப்பரும் இருப்பார்.

அந்த மேய்ப்பர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிருத்து என்பதில் ஐயம் இல்லை.

எப்படி எனில்,

"காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்." (எபேசியர் 1: 9,10)

என்னும் வேத வசனங்களின் நிறைவேறுதலாக அது இருக்கும்.

பூலோகத்தில் நடைபெறும் பரலோக இராஜ்யத்தில்

"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்"
என்னும் நிலையும்
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்"

என்னும் நிலையும் இருக்கும். அனைவரும் இணைந்து ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையையுடைய பரலோக இராஜ்யத்தில் மகிழ்வுடன் வாழ்வர். இதற்கு நம்மை ஒப்படைப்போமாக.

முற்றும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

வியாழன், 15 மே, 2014

இயேசுவின் இரண்டாம் வருகை (24) - புனித தோமா வழிக் கிருத்துவம்

முந்தையைப் பதிவு

விசுவாச எழுச்சிக்குப் பயன்படும் புனித தோமா வழிக் கிருத்துவம்:

புனித தோமாவைப் போன்று மக்கள் ஆட்சிக் கால மக்கள் எதையும் மூடத்தனமாக நம்பாமல், அறிவுக்கேற்ற நிலையில் புரிந்துக் கொள்ள முயலுகின்றார்கள். இதனால் அறிவுக்கேற்ற நிலையில் விளக்கப்படாத எதையும் மூடத்தனமாக ஏற்றுக் கொண்டு நம்ப மக்கள் ஆட்சிக்கால மக்கள் தயாரில்லை. புனித தோமா இந்தியா வந்த பொழுது, இந்தியா அறிவுக்கேற்ற கேள்விகள் கேட்கும் நிலையிலேயே இருந்ததை இந்திய ஆன்மீக வரலாறு நமக்குக் காட்டுகிறது.

ஆன்மீகத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வினோத நிலை இந்தியாவில் இருந்தது. அது என்ன? பொதுவாக ஆன்மீகக் கொள்கை என்பது கடவுளை நம்பும் கொள்கை என எண்ணப்படுகின்றது. இந்தியாவைப் பொறுத்த அளவில் அந்த எண்ணம் தவறு என்பதைக் காட்டுகிறது.

கடவுளை அறியா பௌத்த மதமும், கடவுளை மறுக்கும் சமண மதமும் இந்தியாவில் தோன்றி வளர்ந்த பெருமைக்குரிய மதங்கள் ஆகும். இவை இரண்டும் வழிபாட்டோடு நிற்காமல் அவற்றிற்குரிய தத்துவங்களோடு கூடிய மதங்களாக வளர்ச்சி பெற்று, ஏறத்தாழ 500 ஆண்டுகள் இந்தியர் உள்ளங்களில் ஊடுருவி வளர்ந்திருந்தன.

வழிபாடு உலகில் மனிதர் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் இருந்திருக்கிறது. ஆனால் மதங்கள் அனைத்தும் ஆசியாக் கண்டத்தில் மட்டுமே உருவாகி வளர்ந்துள்ளன. மதங்கள் அனைத்தும் அடிப்படையில் 5 கேள்விகளுக்கு பதில் கொடுப்பனவாக இருக்கின்றன.

1. பிறக்கும் முன் நான் இருந்தேனா?
2. இருந்தால் எவ்வாறு இருந்தேன்?
3. இறந்தபின் நான் இருப்பேனா?
4. இருந்தால் எவ்வாறு இருப்பேன்?
5. இந்த நான்கு விடைகளின் அடிப்படையில் இந்த உலகில் நான் வாழ வேண்டிய முறை என்ன?

மேலேயுள்ள ஐந்து கேள்விகளுக்கும் கடவுளை மறுக்கும் சமண மதம், பிறவிச் சுழற்சிக் கொள்கையின் அடிப்படையில் பதில் கொடுக்கிறது. சமண சமயத்தின் பிறவிச் சுழற்சிக் கொள்கையையே பௌத்தமும் மேற்கொண்டது. இந்த பிறவிச் சுழற்சிக் கொள்கை இந்தியாவில் தோன்றிய இந்திய மதங்களுக்கு மட்டுமே உரிய ஒரு தனிச் சிந்தனை.

'இதனால் கடவுள் இருக்கின்றார்' என்று கூறிய உடனேயே இவ்வாறு கூறுகிறவரை மூட நம்பிக்கையாளர் என எண்ணி நகைக்கும் நிலை இந்தியாவில் இருந்தது. இதனால் கடவுள் இருக்கின்றார் என்பதை கடவுளை அறியா அவர்களுக்கு அறிவியல் வழியில் விளக்க வேண்டிய இன்றியமையாமை இந்தியாவில் ஏற்படுகிறது. இதை விளக்கிய பின்னரே, கடவுள் மனிதனாக இந்த உலகில் பிறந்து, மனிதனுக்கு மீட்பைக் கொடுக்கிறார் என்பதை அறிவியல் வழியில் நிலை நாட்ட முடியும்; நிலை நாட்ட வேண்டும்.

"கடவுள் இருக்கின்றார்" என்பதையும் "கடவுள் மனிதனாகப் பிறந்து, மீட்பை நிலைநாட்டி இருக்கின்றார்" என்பதையும் நிலைநாட்ட எவ்வளவு முயற்சியும், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்தலும் தேவை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய கடமை இன்றைய நமக்கு ஏற்படுகிறது.

கடவுளை அறியா பௌத்த சிந்தனைக்கும், கடவுளை மறுக்கும் சமண சிந்தனைக்கும் அடிப்படைச் சிந்தனையாக, தமிழ் நாட்டில் தோன்றிய ஆசீவக சிந்தனை இருப்பதாக அண்மைக்கால ஆராய்ச்சியாளர்கள் உரிமை பாராட்டுகின்றார்கள். அதற்குரிய காரணகாரியங்களையும் விளக்குகின்றார்கள். இது எண்ணிப்பார்க்க வேண்டிய புதிய கோணமாக இருக்கிறது. இதனால் இந்திய ஆன்மீகச் சிந்தனைக்கு தமிழர் சிந்தனையே அடிப்படையாக இருக்கிறதென்பது விளங்குகிறது.

ஆன்மீகமாகிய ஆற்றின் இரு கரைகள்

ஆன்மீகமாகிய ஆற்றின் இருகரைகளாக ஆத்திகமும் நாத்திகமும் விளங்குவது இயல்பான ஒன்றேயாகும். அந்த இயல்பின்படியான ஆன்மீக வளர்ச்சிப் படிகளை நாம் தமிழ் நாட்டில் பார்க்க முடியும். ஆத்திகரான தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், நாத்திகரான தந்தை பெரியாரும் இணை பிரியா நண்பர்கள் மட்டுமல்லாது, இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசிய பெருமை தமிழ் உலகத்தின் பெருமையாகும். இருவரும் ஒரே குறிக்கோளில் இணைந்தவர்கள். அதுவே சமுதாய நன்மை; மனித நேயம் ஆகும்.

தமிழ்நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் இத்தகைய, இணைப்பைப் பார்த்தல் அரிது. இதைப்போன்றே அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து செல்ல வேண்டும் என்பது அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் கருத்து.

"Science Without Religion is Lame
Religion Without Science is Blind"

என்னும் ஐன்ஸ்டீன் கருத்து உருவாவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நோக்கிச் சிந்தித்த பெருமையுடையது தமிழ்நாடு. உலகில் தமிழ் மொழியில் மட்டுமே அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து "ஆன்மவியல்" என்னும் கல்வி வளர்ந்து உள்ளது. இதில் அறிவியல், மெய்யியல், இறையியல், ஆணவவியல் ஆகிய நான்கும் அடங்கி இருக்கின்றன.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

சனி, 10 மே, 2014

இயேசுவின் இரண்டாம் வருகை (23) - மக்கள் ஆட்சியும் விசுவாசத் தளர்ச்சியும்


முந்தையப் பகுதி

சாத்தானையும் பயன்படுத்துகிறவர் கடவுள்

கடவுள் சாத்தானையும் பயன்படுத்துகிறவர். ஏனெனில் சாத்தான் கடவுளை மீறி எதுவும் செய்ய இயலாது. இதற்கு பைபிளில் சான்றுகள் இருக்கின்றன. சாத்தானையே பயன்படுத்துகின்றவர் என்றால் அவரால் ஐரோப்பியர்களை பயன்படுத்த முடியாதா?

இன்று வரை நூல்களையும் அழியாமல் பாதுகாத்து வந்திருக்கின்றார்கள். நூல்களும் அழியாமல் பாதுகாக்கப்பட்டமையால் தான் அவற்றின் அடிப்படையில் நாம் ஆய்ந்து உண்மை வரலாற்றை வெளியேக் கொண்டு வர வாய்ப்புக் கிடைத்து உள்ளது. இன்று உலகம் முழுவதும், அனைத்து நாடுகளிலும், அனைத்து பிரிவு மக்களிடத்திலும் பைபிள் இருக்கின்றதென்றால் இதற்கு காரணம் ஐரோப்பியர். கிருத்தவ மதம் இன்று ஓர் உலகப் பெரும் மதமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஐரோப்பியரே.

பரிசுத்த ஆவியானவர்

பைபிள் உருவாகாத காலத்தில் செயல்பட்ட பரிசுத்த ஆவியானவர் பைபிள் செல்லாத இடங்களிலும், பைபிளுக்கு தவறாக விளக்கம் கொடுக்கப்படும் இடங்களிலும் கூட அவருடைய செயலை யாரும் கட்டுப்படுத்த முடியாதல்லவா? எல்லா காரியங்களையும் அதனதன் காலத்தில் சிறப்பாக செயல்படுத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர்.

மக்கள் ஆட்சியும் விசுவாசத் தளர்ச்சியும்

மன்னர் ஆட்சிக் காலம் மறைந்து மக்கள் ஆட்சிக் காலம் உலகம் உழுவதும் மலர்ந்துக் கொண்டிருக்கின்ற இந்த காலத்தில், மக்கள் ஆட்சிக் காலச் சிந்தனையின் விளைவாகக் கேள்விகள் கேட்கத் தொடங்கும் பொழுது சரியான விடை கிடைக்காமையால் விசுவாசம் தளர்ந்து, வேறு மதங்களுக்கும், கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஐரோப்பியர் ஆட்சி செய்யும் இடங்களில் திருச்சபைகள் காலியாகி திருச்சபைக் கட்டடங்கள், விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எப்படியாவது ஆட்கள் வந்தால் போதும் என்னும் நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களை அவர்கள் அங்கீகரித்து அவர்களுடைய திருமணங்கள் திருச்சபைகளில் நடத்தப்படுகின்றன.

ஓரினச் சேர்க்கையாளர்கள் போதகர்களாகவும், பேராயர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். கிறித்தவக் கோவில்களுக்கு ஆட்கள் வந்தால் போதும் என்னும் நிலைக்கு ஐரோப்பியர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள். இதை ஆன்மிகம் என்று எவ்வாறு கூற முடியும்? இவையாவும் மன்னர் ஆட்சிக் காலப்பிடியில் இருந்து விடுபட்டு, மக்கள் ஆட்சிக்காலம் நடைபெறுவதால் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள், கிருத்தவ மதம் பற்றி மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து, மக்களுடைய விசுவாசத்தைப் பாதுகாக்கும் ஆற்றல் ஐரோப்பியர்களிடம் இல்லை.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
 
 
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

வியாழன், 8 மே, 2014

இயேசுவின் இரண்டாம் வருகை (22) - விவிலியத்தில் கிருத்துவ வாழ்க்கை முறை விரிவாக இல்லையே ஏன்?


விவிலியத்தில் கிருத்துவ வாழ்க்கை முறை விரிவாக இல்லையே ஏன்?

புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறையைக் கூறும் பகுதி, பழைய ஏற்பாட்டில் யூத வாழ்க்கை முறையைக் கூறும் பகுதி விரிவாக இருப்பதைப் போன்று விரிவாக இல்லையே - ஏன்?

கிருத்தவர்களை வேட்டையாடிய ரோம அரசர்கள் உருவாக்கியுள்ள புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறையை விரிவாகச் சேர்த்தால் அப்பகுதியில், கிருத்தவர்கள் ரோம ஆட்சியாளர்களின் பிடியில் பட்ட பாடுகளின் அனுபவமாகத்தானே இருக்கும்; அதை எப்படி ரோம ஆட்சியாளர்களின் புதிய ஏற்பாட்டில் சேர்க்க முடியும்?. முடியாது.

இது முதல் காரணம், இரண்டாம் காரணம், கிருத்தவ மதப் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில், கிருத்தவ வாழ்க்கை முறைப்பகுதி இல்லாமல் இருப்பதால் தானே, கிருத்தவ அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை மேற்கோளாக வாசிக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகிறது.

இதன் வழி இயேசு கிருத்துவின் ஆன்மீகச் செய்தி பழைய ஏற்பாட்டின் அரசியல் செய்திக்கு உட்படுத்தப்படுகிறது. இவற்றை உள்ளத்தில் கொண்டே ரோம ஆட்சியாளர்களால், புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறை பற்றிய செய்திகள் இணைக்கப்படவில்லை.

இவற்றை நாம் அறிய வேண்டுமானால் பைபிளை விட்டு திருச்சபை வரலாற்றுக்கு போக வேண்டி இருக்கிறது. இது ஐரோப்பிய ஆட்சியாளர்களின் இயேசு கிருத்துவின் இரட்சிப்பின் செய்திக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும்.

இந்த திட்டமிட்ட சதிகளால் ஐரோப்பியர்கள் அடைந்துள்ள இலாபங்கள் யாவை?

இன்று வரை உலகில் வாழ்ந்த உலகளாவிய ஆட்சியாளர்களில் முன்னிலையில் இருப்பவர்கள் ஐரோப்பியாவில் வாழும் ஐரோப்பியர்களும், ஐரோப்பாவிலிருந்து வேறு நாடுகளில் குடியேறி அங்கு ஆட்சி அமைத்த ஐரோப்பியர்களும் மட்டுமே.

இந்த நிலை இவர்களுக்கு கிடைக்க காரணமாக இருப்பவை இவர்களால் தொகுக்கப்பட்ட பைபிளும், பைபிளுக்கு இவர்களுடைய அரசியல் நோக்கில் இவர்களால் போதிக்கப்பட்டு வரும் விளக்கங்களுமே ஆகும்.

இவர்களால் தொகுக்கப்பட்ட பைபிளும், பைபிளுக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கங்களும், கடந்த ஆண்டுகளாக கிருத்தவ மதம் என்னும் நிலையில் ஐரோப்பியர் தலைமையிலேயே இன்று வரை இயங்கி வருகின்றன. இவர்களை மீறி யாரும் இதில் நுழையவும், இயங்கவும் முடியாதபடி கிருத்தவ மதத்தின் சட்டதிட்டங்கள் ஒரு சர்வாதிகார அமைப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

ஆகவே ஐரோப்பியர்களிடம் இரண்டு வகையான படைகள் இருக்கின்றன.

1. மற்றவர்களுடைய உடலை அடிமைப்படுத்த பயன்படும் படைக்கருவிகளைக் கொண்ட போர்ப் படை

2. மற்றவர்களுடைய உள்ளத்தை மூளைச் சலவை செய்து அடிமைப்படுத்தும் கிருத்தவ மதத் தலைவர்களும் பிரச்சாரர்களும் அடங்கிய மூளைச் சலவைப்படை.

கற்றுக் கொடுத்தல் வேறு; மூளைச் சலவை செய்தல் வேறு.

கற்றுக் கொடுத்தல் மற்றவர்களைச் சிந்திக்கவும், கேள்விகள் கேட்கவும் தூண்டுதல்.

மூளைச் சலவை செய்தல் நம்பு, சிந்திக்காதே, கேள்விகள் கேட்காதே என்று சிந்தனையைத் தடுத்தல்.

உடலை வன்முறையின்வழி அடிமைப்படுத்தும் போர்ப்படை அரசியல் களத்திலும், உள்ளத்தை மூளைச் சலவைச் செய்து அடிமைப்படுத்தும் படை, ஆன்மீகக் களத்திலும் இடைவிடாது வேலை செய்துக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஐரோப்பியர் தங்கள் இனம் குறித்தும், நிறம் குறித்தும், தங்கள் ஆட்சி குறித்தும், செல்வம் குறித்தும், செல்வாக்குக் குறித்தும் பெருமைக் கொண்டு மற்றவர்களை அற்பமாக எண்ணும் ஆணவ நிலையில் இருக்கின்றனர் என்பதும், இயேசு கிருத்துவின் இரட்சிப்பு என்பது இவர்களுக்கு பயன்படும் ஒரு கருவி என்பதும் இவர்களுடம் நாம் நடத்திய கடிதப் போக்குவரத்தின் வழி நமக்குப் புரிந்தது.

"போப்பாண்டவர் பதவி" எனபது கிருத்துவின் மீட்பைச் சிறப்பிக்கும் பதவி என நாம் நம்பி, போப்பாண்டவருக்கு கடிதம் எழுதிய பொழுது, அப்பதவி ரோம ஆட்சியாளர்களின் அரசியலுக்கான பதவி என்பதை நாம் புரிந்துக் கொள்ளுமாறு போப்பாண்டவரின் பதில் இருந்தது.

போப்பாண்டவர் தேர்தலில் உள்ள குறைகளை நாம் சுட்டிக்காட்டி அதை நிறைவு செய்வதற்கான வழிவகைகளை நாம் எழுதிய பொழுது அவர்களால் அதற்கு பதில் எழுத இயலவில்லை.

அவ்வாறே உலகம் முழுவதிலும் உள்ள ஆங்கிலத்திருச்சபையின் தலைவராகிய "Arch Bishop of Canterbury" யுடன் நடத்திய கடிதப் போக்குவரத்திலும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பதவியே திருச்சபைத் தலைவர் பதவி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

அவ்வாறே பெந்தகொஸ்தே சபைக் கொள்கையின் உலக தலைவர்களோடு நடத்திய கடிதப் போக்குவரத்தும், அவர்களுடைய அரசியல் சிந்தனையையே நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

இன்று உலகிலுள்ள இனவெறி, நிறவெறி, ஜாதிவெறி அனைத்தையும் ஐரோப்பியர், கிருத்தவ மதத்தின் வழி எவ்வாறு பாதுகாத்து வளர்த்து வருகின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

இவர்கள் இவ்வாறு நடந்துக் கொள்வதற்கு அடிப்படைக் காரணம் என்ன? - அறியாமை

இவர்கள் கையில் விளக்கை வைத்துக் கொண்டு குழியில் விழுவது ஏன்? குருட்டாட்டம். மனிதனுக்கும், குரங்குக்கும் ஐரோப்பியர்களுக்கு வேறுபாடு தெரியாது.

ஐரோப்பியர்கள் எக்காலத்திலும் ஆன்மீகச் சிந்தனை உள்ளவர்கள் அல்லர் என்பது வரலாறு. வணிகத்தில் சிறந்தவர்கள். மற்றவர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதில் வல்லவர்கள்.

"Man is a Social Animal" என நம்புகிறவர்கள்:

இவர்கள், அறிவியலில், அதாவது உடலைப்பற்றிய ஆய்வாகிய அறிவியலில் சிறந்தவர்கள். உலகிலுள்ள உயிரினங்களுக்கு இருக்கும் உயிரைப் பற்றியும், மனிதருக்கு மட்டுமே இருக்கும் ஆன்மாவைப் பற்றியும், மனிதருக்கு ஆன்மாவைக் கொடுத்த கடவுளைப் பற்றியும், கடவுளை உணர முடியாது தடுக்கும் ஆணவம் பற்றியும் இவர்களுக்குத் தெரியாது.

ஐரோப்பாவில் எந்த மதமும் உருவாகவில்லை. உலக மதங்கள் அனைத்தும் ஆசியாவில் மட்டுமே உருவாகியுள்ளன. இதனால் ஆன்மீக விசயத்தில் ஐரோப்பியர்களைக் குறை கூறிப் பயனில்லை. ஐரோப்பா ஒரு குளிர் கண்டம். இதனால் ஐரோப்பியர்கள் இயற்கையுடன் போராட வேண்டும். அவர்களுடைய கவனம் அதில் செல்லவில்லையானால் அவர்கள் இயற்கையால் அழிக்கப்பட்டு விடுவார்கள்.

ஆகவே அவர்கள் தங்கள் கவனத்தை எல்லாம் இவ்வுலக வாழ்விற்காகவே செலவழிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்காகவே தங்கள் நேரத்தைச் செலவழிக்கின்றார்கள். இதனால் இந்த உலக வாழ்வு நிலையில், அரசியலிலும், வணிகத்திலும் சிறந்து விளங்குகின்றார்கள்.

ஆன்மிகம் அவர்கள் கையில் மாட்டிக் கொண்டதே தவிர, அவர்கள் ஆன்மீகத்தை தேடிச் சென்று கண்டடைந்தவர்கள் அல்லர். ரோம அரசனாகிய கான்ஸ்டன்டின் ஆட்சியில் கிருத்துவம் இயல்பாக அவனுடைய அரவணைப்பின் கீழ் வந்தது. அதுவும், அரசியல் வெற்றிக்கான அவனுடைய காட்சியில் சிலுவையைப் போன்ற சின்னம் அவனுடைய அரசியல் வெற்றிக்குப் பயன்பட்டமையால், கிருத்துவத்தை அரவணைத்தான். பின்னரும் இவர்கள் வளர ரோம ஆட்சியாளர் கிருத்துவத்தை அவர்களுடைய அரசியலுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுவது ஆட்சியாளர்களின் இயல்பு.

அந்த இயல்பின்படி அவர்கள் செய்து வருகின்றார்கள். இதனால் அவர்களைக் குறை கூறிப் பயனில்லை.

தொடரும்...!!!

பி.கு:
 
1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
 
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842
 
3) பெந்தகோஸ்தே தலைவர்கள் என்று பலர் இருக்கின்ற காரணத்தாலும், அச்சபைப் பிரிவு அண்மைக்காலத்தில் தோன்றியதாக இருப்பதாலும், அவர்களுடன் நடத்திய கடிதப் போக்குவரத்துத் தவிர, மற்ற இருபெரும் அமைப்புகளுடனும் நடத்திய கடிதப் போக்குவரத்து இந்த நூலின் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...