தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஏப்ரல், 2015

ஆதாம் முகடு (சிவனொளி பாதமலை) - முதல் மனிதனின் காலடித் தடம்!!!

சமயங்களைப் பற்றியே நம்முடைய பதிவுகளில் நாம் பெருவாரியாகக் கண்டு வந்துக் கொண்டிருக்கின்றோம். முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். நம்முடைய கூற்றுகளுக்கு சான்றாகப் பல்வேறு விடயங்களையும் நாம் கண்டே தான் வந்துக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறு பல்வேறு சமய நூல்களும் சரி இதிகாச நூல்களும் சரி கடலினில் மூழ்கிய ஒரு கண்டத்தினைப் பற்றிப் பேசுகின்றன என்றும் எவ்வாறு அந்த செய்திகள் தமிழர்கள் கூறும் குமரிக்கண்டத்தினுடன் பொருந்திப் போகின்றது என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது அதனைப் பற்றித் தான் நாம் மற்றுமொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. முதல் மனிதனின் காலடித்தடம் என்றும் சிவனின் காலடித் தடம் என்றும் புத்தனின் காலடித் தடம் என்றும் உலக சமயங்கள் அனைத்தும் உரிமைப் பாராட்டும் ஒன்றைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் இலங்கையைப் பற்றி காண வேண்டி இருக்கின்றது.

இலங்கை...இந்தியாவின் தெற்கில் கண்ணீர் துளிப்போல் அமைந்து இருக்கும் ஒரு தீவு. குமரிக்கண்டமானது எங்கே அமைந்து இருந்தது என்று தமிழர்கள் கூறுகின்றனரோ அப்பகுதியில் ஒரு சிறிய நிலப்பரப்பாக இலங்கை வீற்று இருக்கின்றது. இலங்கை என்று இன்று இருக்கும் இந்தத் தீவானது கடற்கோள்களால் அழிந்தது போக மீதி இருக்கும் குமரிக்கண்டத்தின் ஒரு பகுதி என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
குமரிக்கண்டமானது கடற்கோள்களால் அழிந்தது சரி. ஆனால் முழுமையாக அழிந்ததா அல்லது அதன் பகுதிகளில் இன்னும் எஞ்சி இருக்கும் பகுதிகள் இருக்கின்றனவா என்றால் இன்னும் பகுதிகள் எஞ்சி இருக்கும் என்றே தான் நாம் கருத முடிகின்றது. நம்முடைய பூம்புகார் நாகரீகமாக இருக்கட்டும் அல்லது ஏனைய கடற்கோள்களால் அழிந்த இடங்களாக இருக்கட்டும், அவற்றின் பகுதிகள் மீதம் இருக்கத் தான் செய்கின்றன. அவ்வாறு இருக்கையில் அவற்றை விட மிகப் பெரியதாக கருதப்படும் குமரிக்கண்டத்தின் பகுதிகளும் மிஞ்சி இருக்கத் தான் வேண்டும். சரி இருக்கட்டும்...இப்பொழுது இலங்கையில் இருக்கும் ஒரு மலையினைப் பற்றித் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
இலங்கையில் இருக்கும் ஒரு மலையான ஆதாம் முகடு மலை (அல்லது) சிவனொளி பாதமலை ஒரு வரலாற்றுச் சிறப்பும் சமயச் சிறப்பும் மிக்க ஒரு மலையாகும். அந்த மலையின் உச்சியில் ஐந்தடி பதினோரு அங்குலம் அளவிலான ஒரு மனிதனின் காலடித் தடம் இருக்கின்றது.
 
அதனை,
 
சிவனின் பாதம் – என்று சைவர்கள் அழைப்பர்
 
முதல் மனிதனான ஆதாமின் பாதம் – என்று இசுலாமியர்களும் கிருத்துவர்களும் அழைப்பர். அவர்களின் கருத்தின்படி முதல் மனிதனான ஆதாம் உலகில் வந்த பொழுது முதன் முதலில் பதிந்த காலடித்தடம் அது.
 
புத்தனின் பாதம் (ஸ்ரீ பாதம்) – என்று பௌத்தர்கள் அழைப்பர். அவர்களின் கருத்தின்படி புத்தர் இந்த உலகினை விட்டுச் செல்லும் பொழுது இறுதியாக பதிந்த காலடித்தடம் அது.
 
அந்த மலையானது சைவர்கள், இசுலாமியர்கள், கிருத்துவர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய நான்கு சமயத்தினருக்கும் புனிதமான ஒரு இடமாக இருக்கின்றது. இறைவன் மனிதனை படைத்தது அங்கே தான் என்றே அவர்கள் நம்புகின்றனர்.
 
குமரிக்கண்டத்தில் மனிதன் தோன்றினான் என்று தமிழர்கள் கூறுவதும், குமரிக்கண்டத்தின் பகுதிகளுள் ஒன்று என்று கருதப்படும் இலங்கையில் முதல் மனிதனின் காலடித்தடம் இருக்கின்றது என்று சமயங்கள் கூறுவதும் சிந்திக்கத்தக்கவைகளாக இருக்கின்றன.

தொடர்புடைய இடுகைகள்:

திங்கள், 26 ஜனவரி, 2015

சாதிகளும் நான்கு வருணங்களும் - 2!!!

சென்ற பதிவினில் இரண்டு இனக்குழுக்கள் போரினால் ஒன்றிணையும் பொழுது, தோற்ற இனக்குழுவானது முற்றிலுமாக அடிமைகளாகவும் எதிரிகளாகவும் மாறி விடுகின்றது என்றே நாம் கண்டோம். கூடவே நான்கு வருணம் எனப்படும் பிரிவுகளில் முதல் மூன்று வர்ணங்கள் ஆரியர்களையும் இறுதி இரண்டு வர்ணங்கள் அடிமைகளையும் எதிரிகளையும் குறிக்கின்றன என்பதனையும் கண்டோம்.

பிராமணர் - வேத வேள்வி செய்வோர் (ஆரியர்)
க்ஷத்ரியர் - அரசாள்வோர் (ஆரியர்)
வைசியர் - வணிகம் செய்வோர் (ஆரியர்)
சூத்திரர் - அடிமைகள் (திராவிடர்)
பஞ்சமர் - எதிரிகள் (திராவிடர்)

இதைத் தான் நாம் இப்பொழுது சற்று விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் ஒரு நிகழ்வினை இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. பெரிய நிகழ்வு தான்...மராட்டிய மன்னன் சிவாஜியின் பட்டமேற்பு விழாவென்றால் சும்மாவா என்ன? ஆனால் கி.பி பதினேழாம் நூற்றாண்டில் நடந்துக் கொண்டிருக்கும் அந்த விழாவினில் ஒரு சிறு பிரச்சனை இருந்துக் கொண்டு தான் இருக்கின்றது. பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை...அன்றிருந்த பழக்க வழக்கங்களின்படி சமய பெரியோர்களாக அங்கே கருதப்பட்ட பிராமணர்கள், சிவாஜிக்கு முடிசூட்ட மறுக்கின்றனர். அவ்வளவே. அதற்கு அவர்கள் காரணமாய் கூறிய விடயம் 'சிவாஜி க்ஷத்ரியன் அல்ல...ஆகவே அவனுக்கு முடி சூட்டும் சடங்கினை நாங்கள் செய்ய மாட்டோம்' என்பதே ஆகும். இக்கட்டான அந்தச் சூழலில் சிவாஜியின் நண்பரான அவாஜி என்பவர் சிவாஜியின் வம்சாவழி வரலாற்றினை சிறிது மாற்றி சிவாஜி என்பவர் மேவாரில் இருக்கும் இராஜ்புட் வம்சத்தினரின் வழியில் வந்தவர் என்றே கூறுகின்றார். அவ்வாறு அவர் கூறுவதற்கு காரணம் இராஜ்புட் வம்சத்தினை சத்திரியர்கள் என்றே பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு இருந்தனர். எனவே சிவாஜியும் இராஜ்புட் வம்சம் என்று கூறி விட்டால் அவரை சத்திரியர் என்றே பிராமணர்கள் ஏற்றுக் கொள்வார்கள் தானே. எனவே தான் அவர் அவ்வாறு கூறுகின்றார். அதனை பிராமணர்கள் தீவிர சிந்தனைக்குப் பின்னர் ஏற்றுக் கொண்டு சிவாஜிக்கு உரிய சடங்குகளைச் செய்கின்றனர். ('சூத்திரர்கள் யார்' என்ற அம்பேத்கரின் நூலில் இருக்கும் தகவல்)

சிவாஜி தனியான பல இராஜ்யங்களை தன் வசம் வைத்து இருந்தாலும் அவரை சத்திரியன் என்று பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவரை எப்பொழுது இராஜ்புட் வம்சாவழியைச் சார்ந்தவர் என்ற கருத்து எழுகின்றதோ அப்பொழுது அவரை அவர்கள் சத்திரியர் என்று ஏற்றுக் கொள்ளுகின்றனர். அதாவது பிராமணர்களின் பார்வையில் இராஜ்புட் வம்சத்தினைச் சார்ந்தவர்கள் சத்திரியர்களாக அறியப்படுகின்றனர். நிற்க

இங்கே நாம் காண வேண்டிய விடயம் என்னவென்றால் பிராமணர்களால் சத்திரியர்கள் என்று அறியப்படும் இராஜ்புட்டுகள் - இந்தியர்கள் அல்ல என்பதே ஆகும். அவர்கள் இந்திய தேசத்தின் மேல் பல்வேறு காலங்களில் படையெடுத்து வந்த ஹுன்னேர்கள், சகர்கள், குஷானர்கள் போன்ற பல்வேறு அந்நிய இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் யாரும் இந்திய தேசத்தினைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆனால் கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கு பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வட இந்தியாவினைக் கைப்பற்றினர் என்பது நம்முடைய பாட புத்தகத்தினில் காணப்படாத ஒரு வரலாறு. அவ்வாறு அவர்கள் ஒன்றிணைந்த பொழுது அவர்களுக்கு அவர்கள் இட்டுக் கொண்ட பெயர் தான் இராஜ்புட். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இராஜ்புட் என்ற பெயர் இருந்தமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இராஜ்புட்களைத் தான் சத்திரியர்கள் என்று பிராமணர்கள் கூறி இருக்கின்றனர்.

இந்திய தேசத்தினைச் சார்ந்த அரசரான சிவாஜியை சூத்திரன் என்று கூறிய பிராமணர்கள், அந்நிய நாட்டினில் இருந்து வந்த ராஜ்புட்களை சத்திரியர்கள் என்று கூறி இருக்கின்றனர். ஏன் அவர்கள் அவ்வாறு கூற வேண்டும் என்றே நாம் கண்டோம் என்றால் மீண்டும் நான்கு வருணத்தில் வந்து நாம் நிற்க வேண்டி இருக்கின்றது.

சகர்கள், ஹுன்னேர்கள், குஷானர்கள், சுங்கர்கள் போன்ற அந்நிய நாட்டினைச் சார்ந்தவர்கள் ஆரியர்கள் என்ற பொதுப் பெயரில் ஒன்றிணைந்து வட இந்தியாவின் ஆட்சியைப் பிடிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆரியர்கள். எனவே அவர்களில் அரசாள்பவர்கள் க்ஷத்ரியர்களாக அறியப்படுகின்றனர். ஆரியப் பிரோகிதர்களான பிராமணர்களும் அவர்களின் சக ஆரியர்களான இராஜ்புட்களை அறிந்துக் கொண்டு அவர்களை சத்திரியர்கள் என்று உரிமைப் பாராட்டுகின்றனர். அதே சமயம் அவர்கள் ஆட்சியினை திராவிடர்களிடம் (இந்திய மக்களிடம்) இருந்து வட இந்தியாவினில் பறித்து இருக்கின்றனர். எனவே அந்த மக்கள் அனைவரையும் சூத்திரர் என்றே அவர்கள் கருதவும் செய்து இருக்கின்றனர். அதாவது வட இந்தியாவினைப் பிடித்த அந்நியர்களின் கூட்டம் தாங்கள் கைப்பற்றிய இடத்தை ஆரியவர்த்தம் என்று அழைத்துக் கொண்டு தங்களிடையே மூன்று பிரிவுகளை வகுத்துக் கொள்கின்றது.

பிரோகிதர் (பின்னாளில் பிராமணர்) - சமய வழிபாடுகளைச் செய்பவர்
க்ஷத்ரியர் - ஆள்பவர்
வைசியர் - வணிக வேலைகளைச் செய்பவர்.

இந்தப் பிரிவுகள் அனைத்தும் ஆரியர்களையே குறிக்கும். ஆரியர்கள் கைப்பற்றிய இடத்தில் இருந்த இந்திய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் என்றே அழைக்கப்பட்டனர். அதாவது ஆரியர்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட இந்திய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் ஆயினர். எனவே தான் அடிமைகள் என்று குறிக்கப்படும் சொல்லான சூத்திரர்கள் என்பது அம்மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தப் பிரிவுகள் முழுக்க முழுக்க ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பிரிவுகளே ஆகும். அவர்கள் எந்த இடங்களில் ஆட்சி செய்கின்றனரோ அந்த இடங்களில் மட்டுமே இந்தப் பிரிவுகள் இருக்கும். மாறாக மற்ற இடங்களில் அப்பிரிவுகளுக்கு எந்தொரு அர்த்தமும் இருக்காது. உதாரணமாக வட இந்தியாவினை கைப்பற்றிய ஆரியர்களின் மத்தியில் மட்டுமே பிரோகிதர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய பிரிவுகள் இருக்க முடியும். மாறாக அவர்களின் ஆட்சிகளுக்கு உட்படாத ஏனைய அரசுகளில், உதாரணமாக தமிழக அரசுகளையே எடுத்துக் கொள்ளலாம், அப்பிரிவுக்கு எந்த ஒரு செல்வாக்கும் இருக்காது. எனவே தான் அவர்களை ஆரியர்கள் பஞ்சமர்கள் அல்லது எதிரிகள் என்றே குறித்து வைக்கின்றனர். காரணம் ஆரியர்களின் பிரிவுகளும் அவர்களது தேசத்து சட்ட நூலான மனு தர்மமும் ஏனைய அரசுகளில் துளி கூட செல்வாக்குப் பெறாது. இந்தியாவில் அப்பொழுது இருந்த மற்ற அரசுகள் ஆரியர்களின் அந்த அரசுக்கு எதிரியாக இருந்தமையினால் அவர்களை பஞ்சமர் என்றே ஆரியர்கள் குறித்து வைக்கின்றனர்.

எனவே ஆரியர்களின் பார்வையில், பிராமணர் சத்திரியர் வைசியர் என்பன அவர்களின் மத்தியில் இருந்த தொழிற் பிரிவுகள் (இவற்றில் பிற்காலத்தில் அரசியல் பலத்தோடு சமயங்களின் செல்வாக்கையும் சூழ்ச்சிகளால் பெற்றமையினால் பிராமணர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மாறி விட்டனர். அது பெரிய கதை. அதனை நாம் மற்ற பதிவுகளில் கண்டு வருகின்றோம்).

சூத்திரர் - ஆரியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இந்திய மக்கள். இவர்கள் ஆரியர்களின் மனுதர்ம சட்டத்திற்கு உட்பட்டவர்கள். எனவே தான் இவர்களை அடிமைகள் என்று ஆரியர்கள் அழைக்கின்றனர்.
பஞ்சமர் - ஆரியர்களின் ஆட்சிக்கு உட்படாத மற்ற இந்திய ஆட்சியைச் சார்ந்தவர்கள். இவர்களிடம் மனு தர்மமும் செல்லாது ஆரியர்களின் வர்ணாஸ்ரம தர்மமும் செல்லாது. எனவே தான் இவர்களை பஞ்சமர்கள் என்று ஆரியர்கள் அழைக்கின்றனர். மேலும் இவர்கள் கடவுளிடம் இருந்து தோன்றவில்லை என்றும் அவர்கள் கூறிச் சென்று உள்ளனர்.

இதனால் தான் கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகையில் 90% பேர் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் இருக்கின்றனர். 10% பேர் மட்டும் பிராமணர்களாகவும், சத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் இருக்கின்றனர்.

அதனால் தான் சிவாஜி அரசனாக இருந்தாலுமே அவன் இந்திய மண்ணைச் சார்ந்தவனாக இருந்ததினால் அவனை சூத்திரன் என்றே அவர்கள் அழைத்தனர். மேலும் இன்று தமிழகத்தில் உயர் சாதியாக அறியப்படும் சைவ வெள்ளாளர், பிள்ளைமார் போன்ற சாதிகளும் ஆரிய நான்கு வர்ணம் என்று வரும் பொழுது 'சற் சூத்திரர் - சிறந்த அடிமை' என்றே அழைக்கப்படுகின்றனர்.

அதாவது தமிழ் நாட்டில் சைவ வெள்ளாளர்கள் உயர்ந்த சாதி. ஆனால் ஆரியர்களின் பார்வையில் அவர்கள் சிறந்த அடிமைகள். காரணம் என்ன? ஒரு இந்தியன் மனு தர்மத்தின்படி அல்லது நான்கு வர்ணத்தின் படி என்றுமே ஒரு சூத்திரனாகவோ அல்லது பஞ்சமனாகவோ தான் இருக்க முடியுமே அன்றி அவனால் ஒரு பிராமணனாகவோ அல்லது சத்திரியனாகவோ ஆக முடியாது. இதைத் தமிழ் தேசியம் பேசுவோர் அறிந்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அறியாமல் தமிழர்களிடம் இருந்த தொழிற்பிரிவுகள் தான் நான்கு வர்ணமாக மாறி இருக்கின்றது என்றே கூறிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் நிச்சயமாய் தமிழர்களின் வரலாறு மீண்டு வர வாய்ப்பே இருக்காது.

அவர்கள் ஏற்கனவே அனைத்தையும் அவர்களின் வசதிக்கு ஏற்றாப்போல் மாற்றி வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். இதில் நீங்களாய் போய் நாங்களும் ஏமாறத் தயார் என்றே கூறினீர்கள் என்றால் நிலைமை மோசமாகத் தான் போகும்.

எனவே தொழில் அடிப்படையில் அமைந்த சாதிப் பிரிவுகள் என்பது வேறு.

பள்ளர், பறையர், நாடார், வெள்ளாளர், தேவர், கவுண்டர், நாயுடு, ரெட்டியார், நாயக்கர் - போன்றவைகள் சாதிய பிரிவுகள். (இவற்றுக்கு இடையே எப்பொழுது எவ்வாறு ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன என்பது வேறு வரலாறு. அதனையும் நாம் பின்னர் காணலாம்)

பிராமணர், சத்திரியர், வைசியர் - என்பன ஆரியர்களின் பிரிவுகள். அவர்களின் பார்வையில் நாம் மேலே கண்டுள்ள அனைத்து சாதிகளும், அது தமிழர்களின் சாதியப் பிரிவுகளாக இருக்கட்டும் அல்லது தெலுங்கு மக்களின் சாதிப் பிரிவுகளாக இருக்கட்டும், ஒன்று அடிமைகள் என்று அர்த்தம் பொதிந்த சூத்திரப் பிரிவினைச் சார்ந்ததாக இருக்கும் அல்லது எதிரி என்று முத்திரைக் குத்தப்பட்ட பஞ்சமர் பிரிவினைச் சார்ந்ததாக இருக்கும். அவ்வளவே.

எனவே சாதிப் பிரிவுகளும் நான்கு வர்ணமும் ஒன்று என்று கூறுவது ஒன்று அறியாமையில் கூறும் ஒன்றாக இருக்கும். அல்லது மீண்டும் திராவிட இனத்தினை அடிமைப்படுத்தும் சூழ்ச்சியின் குரலாகவே இருக்கும்.

சாதிப் பிரிவுகளும் வர்ணப் பிரிவுகளும் ஒன்றல்ல!!!!

அவ்வளவே!!!

தொடர்புடைய இடுகைகள்:

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்...!!!
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 1
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 2
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 3
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 4
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 6
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 7
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 8
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 9
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 11
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 12

 

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சாதிகளும் நான்கு வருணங்களும் - 1!!!

இன்று தமிழகத்தில் 'திராவிடம்' என்ற சொல்லுக்கு எதிராகவும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும் குரல்கள் வலுவாக தமிழ்த் தேசியம் பேசும் நண்பர்களிடம் இருந்து எழுந்து கொண்டே இருக்கின்றது. அவர்கள் முன் வைக்கும் கூற்றுகளில் நியாயம் இல்லாமலும் இல்லை.

"தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி இப்படி எல்லாருமே திராவிடர் அப்படின்னு சொல்றீங்க...ஆனா தமிழ் நாட்டைத் தவிர வேற எங்கேயும் இத சொல்றது கிடையாது...தெலுங்கர் தன்னை தெலுங்கு அப்படின்னு தான் சொல்றாப்ல...கன்னடரும் தன்னை கன்னடம் அப்படின்னு தான் சொல்றாப்ல...ஆனா தமிழன் மட்டும் தான் தன்னை திராவிடன்னு சொல்லிக்கிட்டு இருக்கணும்...அப்படி அவன் சொல்லிக்கிட்டு இருந்தாத் தான் அவன தொடர்ந்து தெலுங்கு மக்கள் ஆட்சி பண்ணிகிட்டே இருக்க முடியும்..என்ன?" என்று அவர்கள் கேட்கும் கேள்வியில் நிச்சயம் உண்மை இருக்கத்தான் செய்கின்றது.

மேலும் "தெலுங்கு மன்னர்களான நாயக்கர் ஆட்சியில தான்யா தமிழன் தாழ்ந்தான்...தெலுங்குகாரனுங்க அவனுங்க ஆட்சியில தான் கிட்டத்தட்ட எல்லா கோவிலையும் பிராமணன்கிட்ட கொடுத்தானுங்க...மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாக இருக்கட்டும்...பழனி முருகன் கோவிலாக இருக்கட்டும்...பிராமணன் அங்கே உள்ள போனதுக்கு நாயக்க மன்னர்கள் தானப்பா காரணம்...அப்ப அடிமையாகப் போன தமிழர்கள் இன்னிக்கு வரைக்கும் அடிமையாகத் தானயா இருக்காங்க...அதனால தமிழனுக்கு எதிரி பிராமணன் மட்டும் கிடையாது ஆனா திராவிடன் அப்படின்னு சொல்லியே முதுகுல குத்துன தெலுங்கு மக்களும் தான்" என்றும் அவர்கள் கூறும் வாதங்களில் வரலாற்று உண்மைகளும் இன்னும் ஆழமாக ஆராயக்கூடிய பல்வேறு விடயங்களும் ஒளிந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

மாபெரும் வரலாற்றினையும் பழம்பெருமையையும் கொண்டிருந்த ஒரு சமூகம் தன்னுடைய அடிமை நிலையில் இருந்து விடுதலைப் பெற்று மீண்டும் தன்னுடைய வரலாற்றினை அறிய முற்படுகையில் நிச்சயமாய் ஒரு எழுச்சி இருக்கத்தான் செய்யும். அதுவும் தமிழ் சமூகம் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக கல்வியறிவு மறுக்கப்பட்டு மூட நம்பிக்கைகளில் ஒடுக்கப்பட்டு இருந்த ஒரு சமூகமாகவே இருக்கின்றது. அத்தகைய ஒரு சமூகம் இன்று மீண்டும் கல்வியறிவினைப் பெற பெற தன்னுடைய இனத்தின் வரலாற்றையும் பெருமையையும் அறிந்துக் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது. எனவே இயல்பாகவே மேற்கூறிய கேள்விகள் அவர்களின் முன்னே எழத் தான் செய்யும். மேலும் அக்கேள்விகளுக்கு விடையினைத் தேடுவதும் இங்கே முக்கியமானதொன்றாகத் தான் இருக்கின்றது.

ஆனால் அத்தகைய தேடுதல்களின் பொழுது அனைத்து விடயங்களையும் நன்றாக கவனித்தே ஒரு முடிவிற்கு யாராக இருந்தாலும் வர வேண்டும். அநேக விடயங்களை தமிழ் தேசியம் பேசுவோர் சரியாக முன் வைத்தாலும் அவர்களும் பல இடங்களில் தவறுகள் செய்யத்தான் செய்கின்றனர். அதில் முக்கியமான ஒரு தவறு சாதியையும் வருணத்தையும் பிரித்து அறிவதில் வருகின்றது. அதைத் தான் நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கூற்று இது தான். தமிழர்கள் தான் உலகின் முதல் மக்கள். அவர்கள் தமிழகத்தில் இருந்து கிளம்பிச் சென்று உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லுகின்றனர். தமிழர்கள் தங்களைத் தாங்களே செய்யும் தொழில்களின் அடிப்படையில் நான்காக வகுத்துக் கொள்கின்றனர். தங்களின் இனக் குழுவின் செயல்பாட்டினை முன்னேற்றுவதற்காகவே அவர்கள் அத்தகைய பிரிவினை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த பிரிவுகளானது,

அந்தணர் - வழிபாடுகளைச் செய்பவர்/அறிஞர்
அரசர் - மக்களை ஆள்பவன்
வணிகர் - வணிகம் செய்பவர்
வேளாளர் - விவசாயம் செய்பவர்.

இவ்வாறு தமிழர்கள் செய்துக் கொண்ட பிரிவுகளே அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்றடைந்து உருவாக்கிய நாகரீகங்களிலும் காணப்படுகின்றன என்றே அவர்கள் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் எடுத்துக்காட்டாய் எகிப்து, இசுபானியா (Spain), சப்பான் போன்ற நாகரீகங்களைக் காட்டுகின்றனர். அவ்வாறு எடுத்துக்காட்டுவதன் மூலமாக அவர்கள் கூற வருவது இது தான். சாதிகளை ஆரியர்கள் கண்டுப்பிடித்தார்கள் என்பது வடிகட்டின பொய். சாதிகள் என்பது தமிழர்கள் தொன்றுதொட்ட காலத்தில் உருவாக்கியது. அதன் அடிப்படையிலேயே தான் பின்னர் நான்கு வருணங்கள் உருவாகி உள்ளன. எனவே நான்கு வருணங்களை உருவாக்கியது தமிழர்கள் தாம் என்பது தான் அவர்களின் வாதமாக இருக்கின்றது.

அவர்களின் கூற்றுப்படி தமிழர்களின் மத்தியில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. நான்கு வருணத்திலும் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. எனவே இரண்டும் ஒன்று தான். அவ்வளவே. அதாவது,

அந்தணர் = பிராமணர் = வழிபாடுகளைச் செய்பவர்
அரசர் = சத்திரியர் = அரசாள்பவர்
வணிகர் = வைசியர் = வணிகம் செய்பவர்
வேளாளர் = சூத்திரர் = விவசாயம் மற்றும் இதர வேலைகளைச் செய்பவர்கள்.

'ஆகா...எவ்வளவு அருமையாகப் பொருந்துகின்றது. இந்த எளிமையான பொருத்தத்தைக் கூட காண முடியாது 'நான்கு வருணத்தை' ஆரியர்கள் கொண்டு வந்தார்கள் என்று கூறிக் கொண்டு இருக்கின்றார்களே இந்த திராவிடம் பேசுவோர். நான்கு வருணம் என்பது தமிழர்கள் கொண்டிருந்த நான்கு பிரிவுகளின் மற்றொரு வடிவமே அன்றி வேறல்ல.' என்பதே அவர்களின் கூற்றாக இருக்கின்றது. இங்கே தான் பிரச்சனை இருக்கின்றது. ஆகையால் நாம் இதனை மறுத்தாக வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் அந்த தொழிற் பிரிவுகளைப் பற்றியும் நான்கு வருண அமைப்பினைப் பற்றியும் காண வேண்டி இருக்கின்றது.

முதலில் தொழிற்பிரிவுகளைப் பற்றிக் காண்போம். அந்தணர், அரசர், வணிகர்,வேளாளர் ஆகிய நான்கு பிரிவுகளும் தமிழர்கள் மத்தியில் இருந்த பிரிவுகளைக் குறிக்கின்றன. இவைகள் செய்யும் தொழிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை அல்ல. எனவே,

ஒரு அந்தணன் அரசனாகலாம். ஒரு அரசன் வணிகனாகலாம். ஒரு வேளாளன் அந்தணன் ஆகலாம். இதில் யாதொரு பிரச்சனையும் எழப் போவதில்லை. செய்யும் தொழிற்கு ஏற்றார்ப் போல் மக்கள் பிரிந்துக் கொள்கின்றனர். அவ்வளவே. இதில் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. நிற்க.

இங்கே மற்றுமொரு முக்கியமான விடயத்தினைத் தான் நாம் இங்கே கண்டாக வேண்டி இருக்கின்றது. மேற்கூறிய பிரிவுகள் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியாக இருக்குமே அன்றி பல்வேறு இனங்களுக்கு ஒரே பிரிவு இருக்க முடியாது. அதாவது,

அந்தணன், அரசன், வணிகன், வேளாளர் - ஆகிய பிரிவுகள் தமிழர்களிடையே இருந்தது என்றால் அது அந்தந்த தமிழ் இனக் குழுக்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கும்.

அதைப் போன்றே பாரோ (Pharoah - அரசன்), ப்ரீஸ்ட் (Priest - வழிபாட்டு குரு), வணிகர் (Artisans) , விவசாயிகள் - என்ற பிரிவுகள் எகிப்து நகர மக்களிடையே காணப்படுமானால் அந்த பிரிவுகள் எகிப்து இன மக்களுக்கு மட்டுமே உரியனவாக இருக்கும். ஒரு தமிழ் வணிகன் எகிப்தில் சென்று வணிகம் செய்தாலும் அவனை அவர்கள் அவர்களது வணிக பிரிவினில் ஒருவனாக வைத்துக் காண மாட்டார்கள். அந்நிய நாட்டினைச் சார்ந்தவனாகத் தான் பார்ப்பார்கள். செய்யும் தொழில் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் இருவரும் வெவ்வேறு இனக் குழுவினைச் சார்ந்தவர்கள்.

இந்நிலையில் எகிப்து நகர மக்கள் தமிழகத்தின் மீது படை எடுத்து வந்து வென்று விட்டார்கள் என்றால் நிலைமை எவ்வாறு இருக்கும்? எகிப்து மக்கள் தாங்கள் கொண்டிருந்த அதே நான்கு பிரிவுகளைக் கொண்டு இருப்பார்கள். கூடுதலாக அடிமைகள்/எதிரிகள் என்ற ஒரு பிரிவில் தமிழ் இனக்குழுவைச் சார்ந்த அனைவரும் சேர்க்கப்பட்டு இருப்பார்கள் (அவர்கள் அந்தணர்களாக இருக்கலாம் அல்லது அரசர்களாக இருக்கலாம், அல்லது வணிகர்களாக இருக்கலாம் - அவர்கள் யாராக இருந்தாலும் ஒன்று அடிமையாக இருப்பர் அல்லது எதிரியாக கருதப்பட்டு அழிக்கப்பட்டு இருப்பர்). இது தான் இயல்பு.

எனவே இரண்டு இனக்குழுக்கள் போரினால் ஒன்றிணையும் பொழுது, தோற்ற இனக்குழுவானது முற்றிலுமாக அடிமைகளாகவும் எதிரிகளாகவும் மாறி விடுகின்றது. அதாவது தமிழர்கள் தங்களைத் தாங்களே அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று கருதிக் கொண்டாலும் எகிப்தியர்கள் அவர்கள் அனைவரையும் அடிமைகள் அல்லது எதிரிகள் என்று தான் கருதுவர். நிற்க

இந்த அடிப்படையில் தான் நாம் நான்கு வர்ணப் பிரிவினைக் கண்டாக வேண்டி இருக்கின்றது (உண்மையில் அது நான்கு அல்ல ஐந்து பிரிவுகள்).

பிராமணர் - வேத வேள்வி செய்வோர் (ஆரியர்)
க்ஷத்ரியர் - அரசாள்வோர் (ஆரியர்)
வைசியர் - வணிகம் செய்வோர் (ஆரியர்)
சூத்திரர் - அடிமைகள் (திராவிடர்)
பஞ்சமர் - எதிரிகள் (திராவிடர்)

இந்தப் பிரிவுகளில் முதல் மூன்று பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆரியர்களாக கருத்தப்படுவதையும் ஏனைய இரு பிரிவுகளைச் சார்ந்தவர்கள் திராவிடர்களாக கருதப்படுவதையும் நான்கு வர்ணத்தைப் பற்றி நன்கு அறிந்து இருக்கும் மக்கள் அறிந்தே தான் இருக்கின்றனர். இதைத் தான் தமிழ் தேசியம் பேசும் மக்கள் சற்று கவனிக்க வேண்டி இருக்கின்றது. இனக்குழுக்களுள் வழங்கப்படும் நான்கு தொழிற்பிரிவுகளும் நான்கு வருண அமைப்பும் ஒன்று என்றால் ஏன் ஒரு இனம் மட்டும் அடிமையாகவும் எதிரிகளாகவும் கருதப்பட்டு இருக்கின்றது?

இந்த கேள்விக்குத் தான் நாம் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.காண்போம்...!!!

தொடரும்...!!!


தொடர்புடைய இடுகைகள்:

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்...!!!
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 1
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 2
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 3
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 4
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 6
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 7
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 8
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 9
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 11
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 12

வியாழன், 8 மே, 2014

அறிவுத் திருடர்கள் - செம்புப் பானை

நெறைய பேச வேண்டி இருக்குங்க...ஊருக்குள்ள அம்புட்டு நடக்குது...ஆனா எல்லாத்தையும் கவனிக்கவும் மாத்தவும் யாருக்குங்க நேரம் இருக்கு நமக்கு இருக்குற வேலைய பாக்குறதுக்கே நேரம் சரியா இருக்கு...இருந்தாலும் சில விசயமெல்லாம் சொல்லித் தான் ஆக வேண்டி இருக்குங்க...என்ன பண்றது நாட்டு நெலம அப்படி இருக்கு...
 
எல்லாம் ஆரம்பிச்சது இந்த டாடா கம்பெனிகாரன் வெளம்பரத்துல தானுங்க. ஏதோ 'டாடா வாட்டர் பிளஸ்' ஆம்...இது தண்ணிக்கும் மேலேயாம்...அப்படின்னு அவனுங்களே சொல்லிக்கிட்டானுங்க...அட என்னடா இது தண்ணின்னு சொல்றானுங்க ஆனா தண்ணிக்கும் மேல அபப்டின்னு சொல்றானுங்களே...அப்படி என்னத்தான் இருக்குன்னு பார்த்தோம்னா...அந்த தண்ணில செம்பு இருக்காம். அது உடம்போட நோய் எதிர்ப்பு சக்திய கூட்டிடுதாம்...அதனால அந்த தண்ணிய குடிச்சா ஆரோக்கியமா இருப்போமாம். இப்படி சொல்லி தண்ணிய பாட்டிலே அடைச்சி வியாபாரம் பண்ண வந்துட்டானுங்க.
 
ஆகா நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தண்ணீரா...மாபெரும் கண்டுபிடிப்பு அப்படின்னு கொண்டாடி இருக்கலாம் தான்...ஆனா பிரச்சனை என்னன்னா இது ஒண்ணும் புதிய விசயமே இல்லை அப்படிங்கிறது தான்.
 
சின்ன வயசுல எங்க வீட்ல எல்லாம் தண்ணிய செம்புப் பானைல தான் வச்சி இருப்பாங்க...அந்த தண்ணிய குடிச்சிபுட்டு ஆடாத ஆட்டமும் இல்லை...சுத்தாத இடமும் இல்லை...தண்ணி மாறிடுச்சி அதுனால உடம்புக்கு சேரல அப்படின்னு படுத்ததும் கிடையாது. ஆடுற இடத்துல எல்லாம் தண்ணி எங்க கிடைக்குமோ அங்க எல்லாம் கிடைக்குற தண்ணிய குடிச்சிபுட்டு ஆடிகிட்டே இருப்போம்.
 
ஆனா பாருங்க மக்களே...ஒழுங்கா இருந்தவனுங்ககிட்ட 'உங்க தண்ணில கிருமி இருக்கு...குடிச்சா நோய் வரும்' அப்படின்னு பீதிய கிளப்பியே 'மினெரல் வாட்டர்' ஐ வியாபாரம் பண்ண ஆரம்பிச்சானுங்க...கூடவே தண்ணீர் ஐ சுத்தப்படுத்தும் கருவிகள் அப்படின்னு இன்னொரு பக்கமும் வியாபாரத்த பெருக்குனானுங்க. கிருமி, நோய் அப்படின்னு பயத்த உண்டு பண்ணியே நம்மகிட்ட இருந்தத அழிச்சிபுட்டு அவனுக்கு எது காச தருமோ அத தலைல கட்டுனானுங்க.
 
என்ன ஆச்சி மக்கழே...இப்ப எல்லா வீட்லயும் அவனுங்க குடுக்குற மினெரல் வாட்டர் தான். ஆனா குழந்தைங்க ஆரோக்கியமா இருக்குதுங்களா...ஒரு வீட்டு தண்ணிய குடிச்சுட்டு அடுத்த வீட்டு தண்ணிய குடிச்சாலே தண்ணி சேரல அப்படின்னு நோயில் படுத்துடுதுங்க...நோய் எதிர்ப்பு சக்தி அப்படின்னு ஒண்ணு ஊசியோ இல்லை மாத்திர போட்டாலோ தான் வருது...இயற்கையாவே நோய் எதிர்ப்பு சக்தி இன்றைய குழந்தைகள் கிட்ட ரொம்ப கம்மியாயிடுச்சி. அதாவது காசையும் குடுத்துபுட்டு நம்மள நம்மளே நோயாளியாவும் ஆக்கிக்கிறோம்.
 
இப்ப பாருங்க மக்கழே...
 
நம்ம முன்னாடி எத வழக்கமா வச்சி இருந்தோமோ...அதையையே ஏதோ புதுசு மாதிரி நம்மகிட்டயே வந்து விக்குறானுங்க...செம்பு கலந்த தண்ணிய குடிச்சா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா ஆகுமாம் (டேய்...அதைத் தான்டா நாங்க மொதல குடிச்சிக்கிட்டு இருந்தோம்). ஆனா இந்த ரெண்டுக்கும் நடுவுல என்ன நடந்து இருக்குனு நீங்களே பார்த்துகோங்க மக்கழே...
 
1) நம்மகிட்ட இயல்பாகவே இருந்த ஒரு அறிவை பயத்தால் இழந்து இருக்கோம்.
2) இலவசமாக குடிச்சிக்கிட்டு இருந்த தண்ணிய காசு கொடுத்து வாங்க ஆரம்பிச்சி இருக்கோம்.
3) ஆரோக்கியமான ஒரு சமூகம் நோய்வாய்பட்ட ஒரு சமூகமா மாறி இருக்கோம்.
 
இப்ப நம்ம எத தொலச்சோமோ அதையே புது வியாபாரமா கொண்டு வந்து இருக்கானுங்க...இலவசமா எத குடிச்சிக்கிட்டு இருந்தோமோ அத இப்ப காச கொடுத்து குடிக்க சொல்றானுங்க...அம்புட்டு தான் மக்கழே...இது நியாயமா மக்கழே...விட்டா எங்கள் காற்று காற்றுக்கும் மேலே...இதில் ஆக்சிஜென் இருக்குது அப்படின்னு சொல்லி காத்தையும் விப்பானுங்க...இது நியாயமா மக்கழே!!!
 
ஆகையால் மக்கழே...சொந்தமா வீட்டுக்கு வீடு ஒரு செம்புப் பானையை வாங்கி வச்சிகோங்க மக்கழே...ஆரோக்கியமான தண்ணிய இலவசமாகவே குடித்து வளம் பெருக மக்கழே...
 
1) செம்புக் கலந்த தண்ணி இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
2) அதனால் வலுவான புதிய இளைய தலைமுறை வளரும்...அதற்கு காசிருந்தால் தான் தண்ணீர் என்ற நிலை தெரியாது.
3) செம்பு பானைகள் பொதுவாக கனமாக இருப்பதனால் அதனை தூக்கி வைத்து சுமப்பது என்பது உடலுக்கான உடற்பயிற்சியாகவும் அமையும் (குடும்பத் தலைவர்களுக்கு உதவும்)
 
சரி மக்கழே...இப்போ கெளம்புறேன்...அடுத்த பிரசாரத்துல சந்திப்போம்...!!!
 
வரேன் மக்கழே...!!!

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

தமிழர் சமயத்தின் ஆதிக் கோவிலை விடுவிக்கப் போராட்டம் - இரண்டாம் கட்டம்

இன்று தமிழர்களும் சரி தமிழர்களால் உருவாக்கப்பட்ட சமயங்களும் சரி அடிமைத்தளையில் கட்டுண்டு கிடக்கின்றனர். மாபெரும் அறிவுக் களஞ்சியத்திற்கு உரிமையாளர்களான தமிழர்கள் அச்சிறப்பினை அறியாது அறியாமையிலும் மூட நம்பிக்கைகளிலும் உழன்றுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இருந்து அவர்களை விடுவிக்க அவர்களது உண்மையான வரலாற்றையும் அவர்களது சிறப்பையும் அவர்களை அறியச் செய்து அவர்களது உரிமைகளை அவர்கள் மீட்டு எடுக்க செய்வதன் மூலமே முடியும். அவ்வாறு தமிழர்கள் விடுதலை அடைந்தால் தான் அவர்களது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'தென்னாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்ற உயர்ந்த உண்மைகள் வெளியாகி உலகில் இன்று நிலவிக் கொண்டு இருக்கும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் சண்டைகளுக்கும் ஒரு நிரந்திரமான முடிவினைக் கொண்டு வர முடியும். அத்தகையத் தீர்வு தமிழ் இனம் விடுதலை அடைவதில் தான் அடங்கி இருக்கின்றது. அதன் ஒரு கூறாக தான் தமிழர் சமயத்தின் விடுதலைப் போராட்டங்கள் நிகழப் பெறுகின்றன. நிற்க.

இங்கே நிச்சயம் பல கேள்விகள் எழும்பும்...மாற்றுக் கருத்துக்களும் தான். அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.

1) கபாலீசுவரர் ஆதிக் கோவில் கத்தோலிக்கர்களால் இடிக்கப்பட்டது ஏன்?

2) அதன் மீது இயேசுவின் சீடரான தோமாவிற்காக சாந்தோம் பேராலயம் கட்டப்பட்டது ஏன்?

3) ஏன் அப்பேராலயம் 1950 இல் போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது?

4) கபாலீஸ்வரர் பெயர்க் காரணம் என்ன? இப்பொழுது புனையப்பட்டுள்ள கதையான கபாலத்தில் பிச்சை எடுத்தவர் என்பது கடவுளுக்குப் பொருந்துமா?

5) கபாலீஸ்வரர் கோவிலில் பலி பீடம் இருக்கின்றது ஆனால் பலி இல்லை...அது ஏன்?

6) காசியில் உள்ள சிவலிங்கத்தை தொட்டுக் கும்பிட இயலும் தமிழர்களுக்கு கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை தொட்டு வணங்க சங்கராச்சாரியார்கள் தடை விதித்து உள்ளது ஏன்?

7) உருவ வழிபாட்டை ஏற்காத 'நான் தான் கடவுள்' என்ற நாத்திக கொள்கையை அடிப்படையாக கொண்ட நாத்திக சமயமான ஸ்மார்த்த சமயத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்களின் கட்டுப்பாட்டுக்கு எப்பொழுது/எவ்வாறு இறை நம்பிக்கையை உடைய சைவ வைணவ சமயங்கள் சென்றன?

என்பன போன்ற பல கேள்விகளுக்கும் அக்கூட்டத்தில் பதில்கள் அளிக்கப்படும். மேலும்,

உடலைப் பற்றி ஆராய்வது அறிவியல்...உயிரைப் பற்றி ஆராய்வது மெய்யியல்...இறைவனைப் பற்றி ஆராய்வது இறையியல். இந்த மூன்றையும் ஆராயும் மனிதனின் ஆறாவது அறிவிற்கு காரணமான ஆன்மாவைப் பற்றி ஆராய்வது ஆன்மவியல். ஆன்மவியலில் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் அடங்கி விடுகின்றன. உலக மொழிகளில்தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆன்மவியலின்உலகவளாவிய சிறப்பும் கூட்டத்தில் விளக்கப்படும்.

தமிழர் வரலாற்றில், சமயங்களின் வரலாற்றில், சமூக மாற்றத்தில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவர்கள் தயைக் கூர்ந்து கலந்துக் கொள்ளலாம்.

கண்ணால் காண்பதும் பொய்...காதால் கேட்பதும் பொய்...தீர விசாரிப்பதே மெய்.

பி.கு:

1) வரலாற்றைக் குறித்து நாம் பல பதிவுகளை கண்டு வந்துக் கொண்டு இருக்கின்றோம். அப்பதிவுகளை கீழே உள்ள இணைப்பில் காணலாம்...

சமயங்களும் வரலாறும் - முகப்புப் பக்கம்

2) மேலும் தொடர்புடைய பதிவுகள்

தமிழர் ஆன்மீக எழுச்சிப் போராட்டம் - 19-01-2014
தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் என்ன...!!!
கேரளத்து சீரியக் கிருத்துவர்களுக்கும் தோமாக்கும் தொடர்பு இருக்கின்றதா...!!!

புதன், 15 ஜனவரி, 2014

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட மூல காரணம் யார்?


தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் என்ன...!!!

தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் இயேசு கிருத்துவிற்கு எதிரானதாக கத்தோலிக்கத் திருச்சபை இருப்பதா?




இன்றைக்கு இருக்கும் சாந்தோம் ஆலயத்தில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு இருப்பதனால் அதனை பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனைக் கூறும் இந்தியத் தொல்பொருள் துறையின் கடிதம் கீழே. போப் பெனிடிக்டின் காலத்தில் தோமா பற்றிய சான்றுகள் அழிக்கப்பட்டு உள்ளன என்பது இதன் மூலம் நாம் அறிய முடிகின்றது.

ஞாயிறு, 23 ஜூன், 2013

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி - இறுதிப் பகுதி

இன்றைக்கு தமிழகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றது. தமிழ் நாட்டின் வளங்களும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ் மொழியோ புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதன் செல்வங்கள் மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் இருக்கின்றன. இதனைக் தடுக்க வேண்டிய தமிழ் மக்களோ ஒரு புறம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்...மற்றொரு புறமோ அவர்களுக்குள்ளேயே நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று வேறுபாடுகளைக் கூறிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றனர். உண்மையிலேயே இக்கட்டான ஒரு நிலை தான்.

இந்நிலையில் தமிழர்களின் இத்தகைய நிலைக்கு காரணம் என்ன என்று நாம் தேடினோம் என்றால் விடை பிராமணர்கள்/ஆரியர்கள் என்றே வருகின்றது. அனால் இன்று தமிழர்கள் பலரே இக்கூற்றினை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..."அட என்னங்க...எதுக்கு எடுத்தாலும் பிராமணன் தானா...இங்க ஒவ்வொரு சாதிக்காரனும் சாதி வெறி பிடித்து அடுத்த சாதிக்காரன் கூட சண்டை போடுறான்...அதுக்கு எப்படி பிராமணன் காரணமாக இருப்பான்?...பேராசை பிடிச்சி தமிழகத்தை சுரண்டுறது பல தமிழ் மக்கள் தான்...அதுக்கும் பிராமணனை குறைக் கூறினால் எவ்வாறு?" என்பதே அவர்களின் கருத்தாக இருக்கின்றது.

இப்பொழுது இவர்களின் இந்தக் கேள்விக்கே நாம் விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது.

தமிழர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து இருக்கின்றனர். சிலர் உயர்ந்த சாதிகள் என்றும் பலர் தாழ்ந்த சாதிகள் என்றுமே இன்று பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வுகள் மூலமாகத் தான் இன்று சாதிப் பிரச்சனைகள் பெரும்பாலும் எழுகின்றன. இப்பொழுது ஒரு கேள்வி...எதனால் ஒரு மனிதன் அவன் சாதியை உயர்ந்த சாதி என்று எண்ணுகின்றான்?

இறைவன் அவ்வாறு படைத்தான் என்று அவன் நம்புவதினால் அவன் அவ்வாறு எண்ணுகின்றான். அவன் அவ்வாறு இறைவன் சாதிகளைப் படைத்தான் என்று நம்புவதற்கு காரணம் அவனிடம் அவ்வாறு தான் கூறப்பட்டு இருக்கின்றது. அதனை அவன் கேள்வி கேட்காமல் நம்புகின்றான். அவ்வளவே. மாறாக அவன் அவனது சமய நூல்கள் அனைத்தையும் கற்று அதனில் அவனது சாதி உயர்ந்த சாதி என்று கூறப்பட்டு இருப்பதனால் அவன் உயர்ந்தவன் என்ற எண்ணத்தினைக் கொண்டு இருக்கவில்லை. அவ்வாறு அவன் அவனது சமய நூல்களில் மெய்யாகவே தேடி இருந்தான் என்றால் அவனுக்கும் சாதி ஏற்றத் தாழ்விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதனை அவன் அறிந்து இருப்பான். ஆனால் நீங்களே எண்ணிப் பாருங்கள் இன்று எத்தனைத் தமிழர்களுக்கு அவர்களின் சமய நூல்களோ அல்லது கருத்துக்களோ தெரியும்? நூல்களின் பெயர்களே அறியாத தமிழர்கள் தான் அதிகம் இருக்கின்றனர்.

இந்நிலையில் அவனிடம் அவன் சாதி உயர்ந்த சாதி என்றுக் கூறப்படுகின்றது அவன் அதனை அப்படியே நம்புகின்றான். அவ்வாறு அவனிடம் கூறுபவர்கள்/கூறியவர்கள் யார்?

கோவிலைக் கைப்பற்றி அங்கே அமர்ந்துள்ள பிராமணர்கள். அவர்கள் அவ்வாறு ஏன் கூற வேண்டும்? இறைவன் மனிதனை வர்ணங்களாகப் பிரித்து உள்ளான் என்றால் அவர்களுக்கு இயல்பாகவே முதல் இடம் ஒதுக்கப்பட்டு விடும். மற்ற மக்கள் அனைவரும் அவர்களுக்கு கீழ் நிலையில் தான் இருப்பர். அதனால் அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். இறைவன் கூறினான் என்றுக் கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்வர் என்பதனால் இறைவனின் பெயரினை பயன்படுத்தி மக்களை அவர்கள் பிரித்து வைக்கின்றனர்.

சைவ வைணவ சமயங்களுக்கு துளியும் தொடர்பில்லாத சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கையை தங்களின் சுயநல ஆதிக்கத்திற்காக அச்சமயங்களுடன் சேர்த்து மக்களை அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர். அதனால் தான் அவர்களை தமிழகத்தின் இழி நிலைக்கு காரணம் என்று சொல்கின்றோம். இங்கே நாம் மேலும் சில விடயங்களைக் காண்பது நலமாக இருக்கும்.

1) வரலாற்றில் இருந்து நாம் கி.பி 12 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் தமிழ் கோவில்கள் பிராமணர்களின் கீழ் போகின்றன என்றும் விசயநகர பேரரசில் தான் அனைத்து கோவில்களும் பிராமண மயமாக்கப் படுகின்றன என்றும் நாம் அறிகின்றோம். அதற்கு முன்னர் அக்கோவில்களில் பூசை செய்துக் கொண்டு இருந்தவர்கள் தமிழர்கள் தாம்.

இந்நிலையில் இன்று 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு பிராமணர்கள் உச்ச நீதி மன்றத்தில் தடை வாங்கி வைத்து இருக்கின்றனர். கேட்டால் மற்ற சாதியினர் அர்ச்சகர் ஆனால் தீட்டு பட்டுவிடுமாம். சைவ ஆகமங்களிலும் சரி ஏனைய சமய நூல்களிலும் சரி இன்ன சாதியினர் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று எந்தக் குறிப்பும் இல்லாத பொழுது இவர்கள் எதன் அடிப்படையில் மற்ற சாதியினர் அர்ச்சகர் ஆவதை தடுக்கின்றனர்? மேலும் விசயநகர அரசின் காலத்தில் தான் இவர்களே கோவிலை தமிழர்களிடம் இருந்து கைப்பற்றி இருக்கின்றனர்...அப்படி இருக்கையில் அக்கோவில்கள் அதற்கு முன்பு வரை தீட்டுப் பட்டா இருந்தன?

அப்படி இருக்கையில் கோவிலில் வேற்று சாதியினரை விடாது இருப்பதன் காரணம் கோவிலின் மேல் தங்களுக்கு உள்ள பிடியினை விடக் கூடாது என்ற அரசியல் எண்ணம் தானே...இதனை அவர்களால் மறுக்க முடியுமா?

2) இராச இராச சோழன் காலத்திலும் அதனைத் தொடர்ந்த காலத்திலும் சரி கோவில்களில் தமிழ் ஒலிக்கப்பட்டுக் கொண்டு இருந்து இருக்கின்றது. இந்நிலையில் இன்று இவர்கள் தமிழை தீட்டு மொழி...நீச பாஷை என்று கூறுவதன் காரணம் என்ன?

சமசுகிருதம் போய் தமிழ் மீண்டும் வந்து விட்டால் கோவில்களில் இவர்களது செல்வாக்கு சரிந்து விடும் என்பதனாலா...இல்லை தமிழ் வெளிச்சத்திற்கு வந்து விட்டால் சைவ வைணவ சமயங்களை தாங்கள் அடிமைப்படுத்தி வைத்து இருக்கும் விடயம் வெளியே வந்து விடும் என்பதனாலா?

3) படித்தால் கேள்வி கேட்டு விடுவான் என்ற காரணத்தினாலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்றது. இந்நிலையில் சுதந்திரம் பெற்ற பின்னர் இராசாசி என்ற பிராமணர் குலக் கல்வியினைக் கொண்டு வந்து 3000 பள்ளிகளை மூடியது எதனால்?

அவன் அவன் அவனவன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற வர்ணாசிரம தர்மத்தினை நிலை நாட்டுவதற்குத் தானே...இதனை மறுக்க முடியுமா?

4) அக்குலக் கல்வி திட்டத்தினை ஒழித்து 6000 பள்ளிகூடங்களையும் இன்ன பல திட்டங்களையும் அமைத்து தமிழர்களின் வளமும் தரமும் வளர காரணமாக இருந்த காமராசரைக் கொல்ல பிராமணர்கள் முயன்றது ஏன்? (இதனைப் பற்றி மேலும் படிக்க இணைப்பு: காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் )

ஒரு தமிழனின் கீழ் தமிழர்கள் வளர்கின்றனரே என்பதினாலா அல்லது ஒரு சூத்திரன் அரசாள்வதா என்ற மனு தர்ம வெறியினாலா?

5) அவன் அவன் அவனவன் வேலையை செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்...அப்படி என்றால் மந்திரம் ஓதுவது தானே உமது வேலை...அதை விட்டுவிட்டு அரசினை ஆள்வதற்கும் அரசாங்க பணிகளுக்கும் நீங்கள் ஏன் சண்டை இடுகின்றீர் என்று பிராமணர்களை காந்தி கேட்டதன் காரணமாகத் தான் அது வரை பிராமணர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடிய காந்தியை பிராமணர்களே கொலை செய்தார்கள் என்ற பெரியாரின் கூற்றினை மறுக்க முடியுமா?

6) ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உரிமைகள் கிடைக்க இட ஒதுக்கீட்டை வ.பி. சிங் தலைமையிலான அரசு 1989 ஆம் ஆண்டு நிறைவேற்ற, அந்த ஒரே காரணத்திற்காக அவரது ஆட்சியை ஒரு வருடத்தில் கலைத்தனர் பிராமணர்கள் என்றும் இட ஒதுக்கீட்டின் மூலமாக, இது வரை எந்த மக்களின் வளர்ச்சியை தடுத்து பிராமணர்கள் பிழைப்பினை ஒட்டிக் கொண்டு இருந்தனரோ, அம்மக்களும் தமக்கு சமமாக வந்து விடுவர் என்று எண்ணியதினாலேயே 1991 இல் தனியார்மயக் கொள்கைக்கு குடைப்பிடித்து அமெரிக்காகாரனை இந்தியாவினுள் வர வைத்தனர் பிராமணர்கள் என்று நாம் கூறினால் அவர்களால் மறுக்க முடியுமா? இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமலுக்கு வந்ததற்கு பின்னர் பெருமளவு வேலைகள் தனியாருக்கு சென்றதற்கும், அரசாக செயல்பாடுகள் முடங்கியதற்கும் பிராமணர்களே காரணம் என்று நாம் கூறினால் அதனை மறுக்க முடியுமா? நாட்டினை விற்றாலும் விப்பேன் ஆனால் மற்ற மக்களோடு ஒருத்தனாய் இருக்க மாட்டேன் என்ற மனு தர்ம வெறி தானே இங்கே தெரிகின்றது?

இதோ 2010 இல் எடுத்த ஒரு ஆய்வு...தலைசிறந்த தனியார் நிறுவனங்களில் மேலான பதவிகளை வகிப்பவர்களில் 93% சதவீதம் பேர் உயர் சாதியினரே என்பதனை அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது (இவர்கள் இந்திய சனத்தொகையில் வெறும் 10% அவ்வளவே).

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொமொரு விடயம் என்னவென்றால் சிரியன் கிருத்துவர்களும் உயர் சாதியாய் அறியப்பட்டு இருக்கின்றார்கள். இவர்கள் சிரியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்து தங்கியவர்களே அன்றி மதம் மாறியவர்கள் அல்ல. அவ்வாறு இருக்க எவ்வாறு அவர்கள் உயர் சாதியாய் இருக்கின்றனர் என்பதும் ஆய்வுக்கு உரியது.

பிராமணர்கள் எவ்வாறு தங்களின் செல்வாக்கு நீடித்துக் கொண்டே இருப்பதற்கு முயன்றுக் கொண்டே இருக்கின்றனர் என்பதற்கு இன்னும் பல விடயங்களையும் காரணங்களையும் நாம் கூறிக் கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கின்றன.

இத்தனைக் காரியங்களையும் அவர்கள் தைரியமாகச் செய்வதற்கு சமயங்கள் உதவி புரிகின்றன. அதனால் தான் சமயங்களின் மீது உள்ள பிடியினை அவர்கள் விட மறுக்கின்றனர். அவர்களுக்குத் தெரியும் சமயங்களின் மேல் உள்ள அவர்களது பிடி தமிழினாலும் தமிழர்களினாலும் மட்டுமே பறிபோகக் கூடும் என்று.

ஏன் என்றால் பிராமணர்களுக்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை தமிழ் உணர்த்திக் கொண்டு இருக்கின்றது. சமசுகிருதம் என்பது தேவ மொழி இல்லை என்பதை தமிழ் தான் தைரியமாக பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றது. அக்கருத்துக்கள் வெளியே வந்தால் நிச்சயமாக பிராமணர்களின் செல்வாக்கு சரியும்...அதனால் தான் அவர்களால் இயன்ற அளவு தமிழர்களையும் தமிழையும் ஒடுக்க முயன்றுக் கொண்டே இருக்கின்றனர்.

"விடுதலைப் புலிகள் தான் இராசீவ் காந்தியை கொன்றவர்கள்" என்று புலிகளின் மீது முதன் முதலில் பழியினைப் போட்டவர் சுப்பிரமணிய சுவாமி என்ற பிராமணர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இராசீவ் காந்தியின் கொலையில் சுப்பிரமணிய சாமிக்கும் தொடர்பு இருக்கின்றது என்ற கூற்றும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழ் இனம் படும் இன்னல்களுக்கு இதுவே தான் அடிப்படைக் காரணம். சண்டையிட்டுக் கொள்வது தமிழ் மக்கள் தான்...ஆனால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு காரணி அவர்கள் அல்ல. அவர்கள் அறியாமையில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு இருக்கின்றனர்.

இந்நிலை தொடரும் வரை தமிழ் இனம் எழப் போவது கிடையாது....பழம் பெருமை பேசிக் கொண்டே காலத்தினைக் கடத்த வேண்டியது தான். தமிழ் மக்கள் ஒன்றிணைந்தால் தான் தமிழ் இனம் விடுதலைப் பெரும். தமிழ் இனம் விடுதலைப் பெற்றால் தான் தமிழ் விடுதலைப் பெரும்...தமிழ் விடுதலைப் பெற்றால் தான் தமிழில் உள்ள அறிவியலும் ஆன்மீகமும் விடுதலைப் பெரும். அப்பொழுது தான் இந்திய தேசம் முழுவதும் இந்த சாதி ஏற்றத் தாழ்வு என்ற நோய் குணமாகும்.

அதற்கு தமிழ் இளைஞர்கள் முன் வர வேண்டும். தமிழ் வரலாறு, அறிவியல், ஆன்மிகம் போன்றவற்றினை மீட்டு மீண்டும் ஒரு நல்ல சமூகத்தினை கட்டமைக்க இன்றைய இளைஞர்கள் வர வேண்டும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது கோட்பாட்டின் அடிப்படையில் வேற்றுமைகள் இல்லாது அன்பின் அடிப்படையிலும் சகோதரத்துவத்தின் அடிப்படையிலும் நமது வாழ்வினையும் சரி சமூகத்தினையும் அமைக்க வேண்டும். அக்கடமை தமிழ் இளைஞர்களின் கைகளிலேயே இன்று இருக்கின்றது.

நமது சமூகம் அன்பின் சமூகம்....இங்கே நமக்கு யாருக்கும் எதிரிகள் அல்ல...பிராமணர்களும் நமது எதிரிகள் அல்ல...அவர்களும் மனிதர்கள் தான். அனைத்து மனிதர்களும் சமம் என்று அவர்கள் கருதினால் பிரச்சனைகளே இல்லையே...அவர்கள் கருதாது இருப்பதினால் தான் பிரச்சனை. அப்பிரச்சனைகள் அனைத்திற்கும் முடிவினைக் கொண்டு வர தமிழால் இயலும். தமிழால் மட்டுமே இயலும்.

தமிழ் நமக்காக காத்து இருக்கின்றது. என்ன செய்ய போகின்றோம்... வெறும் தமிழ் பெருமையினைப் பேசிக் கொண்டு இருக்கப் போகின்றோமா இல்லை தமிழை வைத்து மாபெரும் சமூகத்தினைக் கட்டமைக்கப் போகின்றோமா?

என்ன செய்யப் போகின்றோம் நாம் என்பதில் அடங்கி இருக்கின்றது எதிர்காலம்.

இத்துடன் தமிழர்களின் சாதி ஏற்றத்தாழ்வினைக் குறித்த இந்தத் தொடர் ஒரு முடிவிற்கு வருகின்றது. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

தென்னாடுடைய சிவனே போற்றி....எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) முந்தையப் பதிவுகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11

சனி, 22 ஜூன், 2013

தமிழர்கள் ஆண்ட பரம்பரையா ?- தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி 11

சென்றப் பதிவில் எவ்வாறு தமிழர்கள் அவர்களைத் தவறாக சத்திரியர்கள் என்றுக் கருதிக் கொண்டு இருக்கலாம் என்று கண்டோம். இப்பொழுது நாம் இங்கே மற்றுமொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. ஒரு நாடார் இனப் பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது கிட்டிய விடயம் தான் அது.

இன்று நாடார்களும் தாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் தாங்கள் சத்திரிய வம்சத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் கருத்தினைக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் இங்கே சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால் சில காலங்களுக்கு முன்பு வரை நாடார் இன மக்கள் பஞ்சமர்கள் என்ற நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

பள்ளர் பறையர் சாணார் சக்கிலியர் என்று பஞ்சமர்களாக வைக்கப்பட்டு இருந்த மக்களுள் சாணார் என்ற மக்கள் தான் இன்று நாடார்கள் என்று அழைக்கப் பெறுபவர்கள். அப்படி இருக்கையில் பஞ்சமர்கள் என்று தாழ்த்தி வைக்கப்பட்டு இருந்த அவர்களும் தாங்கள் சத்திரியர்கள் என்றுக் கூறுகின்றனரே? அது எவ்வாறு என்று கேள்வியினை எழுப்பியப் பொழுது அதற்கு விடையாய் அப்பெரியவர் சொன்னது..."விசய நகர ஆட்சியில் தான் நாடார்கள் தாழ்த்தப்பட்டு பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டனர்" என்பதே.

அதாவது விசயநகர படை எடுப்பின் பொழுது இங்கே அரசாண்டுக் கொண்டு இருந்த தமிழ்த் தலைவர்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். அதனால் தான் சாணார்கள் பஞ்சம வரிசையில் இருந்தனர் என்பதே அவர் கூறிய விளக்கத்தின் பொருள் ஆகும்.

சரி...சரியான ஒரு விளக்கமாகத்தான் படுகின்றது. இதன் அடிப்படையில் பார்த்தோம் என்றால் பஞ்சம வரிசையில் வைக்கப்பட்டு இருந்த அனைவருமே அக்காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்து இருக்கலாம் தானே....பள்ளர்கள் பறையர்கள் போன்ற தமிழ் மக்களும் விசயநகர அரசின் கீழ் தாழ்த்தப்பட்டு இருக்கலாம் தானே...? இதையே அப்பெரியவரிடம் கேட்ட பொழுது அவரால் அதனை ஏற்க முடியவில்லை..."அது எப்படி தம்பி...அவங்க எல்லாம் முன்னாடியே தாழ்த்தப்பட்டவங்க அப்படின்னு சமயங்களில் இருக்கே..." என்றே அவர் கூறினார். சமயங்களில் இருந்தமைக்கு சான்றுகளை அவரால் தர முடியவில்லை இருந்தும் மற்ற மக்களும் விசயநகர ஆட்சியின் காலத்தில் தாழ்த்தப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணத்தினை அவரால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பிரச்சனையே அதில் தான் இருக்கின்றது.

இன்றைக்கு தங்களை ஆண்ட இனம் என்றுக் கூறிக் கொள்ளும் மக்களுள் பெரும்பான்மையான மக்கள் தங்களின் சாதிப் பெருமையினைப் பேசுவதற்கே அவ்வாறு கூறுகின்றனர். அவர்களைப் பொறுத்த வரை அவர்கள் சாதி உயர்ந்த சாதி...அதே சமயம் மற்ற சாதிகள் தாழ்ந்த சாதிகள். அவ்வளவே.

ஒருவன் தன்னை சத்திரியன் என்று எப்பொழுது கூறுகின்றானோ அவன் அப்பொழுது தன்னை விட மேலாக பிராமணன் இருக்கின்றான் என்றும் தனக்கு கீழாக சூத்திரன் என்று ஒருவன் இருக்கின்றான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். மேலும் மனிதர்களைப் பிறப்பால் பிரிக்கும் மனு நீதியையும் அவன் ஏற்றுக் கொள்கின்றான். இந்த நிலைப்பாட்டால் தமிழர்களுக்கோ அல்லது தமிழ் நாட்டுக்கோ யாதொரு நலனும் கிட்டப் போவதில்லை...மாறாக சாதிச் சண்டைகள் வன்முறைகள் நிம்மதி இன்மை போன்றத் தீமைகள் தான் கிட்டப்பெரும்.

இந்த நிலைப்பாடு, சாதி ஏற்றத்தாழ்வு என்றால் என்ன...நமது சமயங்கள் அதைத் தான் கூறுகின்றனவா...தமிழனின் வரலாற்றில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்தனவா என்பதனைப் போன்ற விடயங்களை அறியாமல் அறியாமையிலேயே தமிழன் இருக்கின்றனத் தன்மையினால் ஏற்படுகின்ற ஒன்றாகும்.

உதாரணத்திற்கு...இன்று மக்களிடையே சில கேள்விகளை வையுங்கள்...

உலகின் முதல் மொழி என்ன என்றுக் கேட்டால் சமசுகிருதம் என்றுக் கூறுவார்கள்...வேதங்கள் என்ன என்றுக் கேட்டால் அவை ரிக், யசுர்,சாம அதர்வண வேதங்கள் என்றுக் கூறுவார்கள்...இறைவன் மனிதனை எத்தனைப் பிரிவுகளாகப் பிரித்து இருக்கின்றான் என்றுக் கேட்டால் நான்கு...அவை பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்றுக் கூறுவர். இவைகள் சரியானவைகளா இல்லையா என்பதனைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது...அவர்களுக்கு அவ்வாறு தான் சொல்லித் தரப் பட்டு இருக்கின்றது...அதனால் அதை அவர்கள் கூறுகின்றனர்.

இதே நிலையில் தான் இன்று தாங்கள் ஆண்ட இனத்தவர்கள்...சத்திரியர்கள்... என்றுக் கூறிக் கொள்ளும் தமிழர்கள் இருக்கின்றனர். நிற்க.

தமிழ் இனம் என்பது ஒரு மாபெரும் இனம்....மிகப்பெரிய வரலாறு...பண்பாடு...நாகரீகம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கிய/விளங்கும் ஒரு இனம் அது. அத்தகைய நாகரீகத்தை வெறும் மன்னர்கள் மட்டுமா கட்டி இருப்பார்கள். இல்லை...!!! பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், வீரர்கள், கலைஞர்கள், சான்றோர்கள் போன்ற மேலும் பல சிறந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் தமிழ் நாகரீகம். அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு இனம் தமிழ் இனம்.

அப்படிப்பட்ட ஒரு இனம் இன்று ஒன்றும் இல்லாது கிடக்கின்றது. அது கண்ட சிகரங்கள் வெறும் வரலாறாய் உறைந்துக் கிடக்கின்றது. இந்நிலையில் தான் தமிழ் இனத்திற்கு உரிமைக் கொண்டாடும் குரல்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்று பெரும்பாலான சாதிகள், 'நாங்கள் ஆண்ட இனம்' என்றுக் கூறிக் கொண்டு சோழனுக்கும் பாண்டியனுக்கும் உரிமைக் கொண்டாடுகின்றனவேத் தவிர எந்த சாதியும் நாங்கள் அறிஞர்களாக இருந்தவர்கள்...ஆன்மீகச் சான்றோர்களாக இருந்தவர்கள்...என்று உரிமை பாராட்ட பெருமளவில் முன்னே வருவது இல்லை.

ஆண்ட இனத்திற்குத் தான் அத்தனைப் போட்டியும்... !!! ஏன் அரசர்களும் வீரர்களும் மட்டும் சேர்ந்து உருவாக்கிய நாகரீகமா தமிழ் நாகரீகம்? இல்லையே!!! அப்படி இருக்கையில் ஆண்ட இனத்திற்கு மட்டும் போட்டி இருப்பது எதனால் என்றே நாம் கண்டோம் என்றால் விடையாய் வருவது இன்றைய சமூகத்தின் பொது நிலையான எண்ண ஓட்டமே ஆகும்.

ஒருவன் பத்து பேரினை அடித்தான் என்றால் அவன் வீரன். அவன் தான் பெரியவன். அப்படி வீரத்துடன் இருந்தால் தான் கௌரவம்...அது தான் அவன் குலத்திற்கு...சாதிக்கு அழகு...பெருமை. இந்த எண்ண ஓட்டத்தினில் தான் இன்று பெரும்பாலான சாதிகள் ஆண்ட சாதிகள் என்ற பட்டத்திற்கு போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன. 'ஆள்வது' என்ற ஒரு விடயத்தினை மாபெரும் பொறுப்பாகப் பார்க்காமல் வெறும் பெருமையாகக் காணும் நிலை மட்டுமே அவர்களிடையே பெருவாரியாக இருக்கின்றது. 'வீரப் பரம்பரைக்குத்' தான் அனைத்துப் போட்டியும் இருக்கின்றவே ஒழிய 'அறிஞர் பரம்பரை'...'ஆன்மீகப் பரம்பரை' போன்றவைக்கு போட்டிகள் பெருவாரியாக இங்கே இருப்பதில்லை. இது ஒரு மிகவும் மோசமான நிலை ஆகும்.

எடுத்துக்காட்டுக்கு புலிகளை எடுத்துக் கொள்வோம்...ஈழத்தில் அவர்கள் பல பிரிவுகளைக் கொண்டு பல கடமைகளை செய்து வந்தனர். அவைகள் அனைத்தும் இன்று ஒடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் மீண்டும் முன்னேறி வரும் நிலையில்...அவர்களுக்குள்ளேயே 'ஏய் நான் வான்புலி...நான் உயர்ந்தவன்...நீ கடற்புலி...நீ தாழ்ந்தவன்' என்று பிரிவினைகளைக் கொண்டு இருந்தால் உண்மையான எழுச்சி என்பது அங்கே இருக்குமா? இருக்காது தானே. அதைப் போன்று தான் தமிழகத்திலும்...தோற்கடிக்கப்பட்டு இருக்கும் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக எழவில்லை என்றால் தமிழ் இனம் இன்று இருக்கும் நிலையிலேயே தான் தொடர்ந்து இருக்கும்.

தமிழர்களின் அரசர்கள் மட்டும் கொல்லப்படவில்லை...ஆன்மீகத் தலைவர்களும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். தமிழர்களின் அரசுகள் மட்டும் அடிமைப்படுத்தப்படவில்லை அவர்களின் அறிவியலும் சரி ஆன்மீகமும் சரி சேர்ந்தே தான் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் தமிழ் இனம் விடுதலைப் பெற வேண்டும் என்றால் அடிமைப்படுத்தப் பட்ட அனைத்துத் துறைகளும் விடுதலைப் பெற வேண்டும். அனைத்துத் துறைகளும் விடுதலைப் பெற அனைத்து தமிழ் இனங்களும் ஒன்றிணைய வேண்டும். சாதி ஏற்றத்தாழ்வு என்பது தமிழ் மண்ணுக்கு உரியதல்ல என்றும் நான் வீரன் என்றால் அவன் அறிஞன் என்ற சகோதர நேசமும் தெளிவும் வர வேண்டும்...இத்தெளிவு வரலாற்றினைப் பார்த்தால் மட்டுமே கிட்டும்.

நாடார்கள் என்பவர்கள் சாணார்கள் என்று கண்டோம் அல்லவா. அந்தச் 'சாணார்' என்றச் சொல் 'சான்றோர்' என்றச் சொல்லின் திரிபே ஆகும்.

சான்றோர்--->சான்றார்--->சானார் என்றே மருவி உள்ளது. தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்ற ஒரு கூற்றும் இங்கே கருதத்தக்கது.

திருவள்ளுவர் பறையர் சாதியைச் சார்ந்தவர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வள்ளுவ சாதி என்றே ஒரு சாதி இருக்கின்றது...அதுவும் தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருக்கின்றது. சைவ கோவிலான சிதம்பரத்தில் பூசை செய்து வந்த நாயனார் பறையர் இனத்தைச் சார்ந்தவர் என்பதும் அவர் கொலை செய்யப்பட்டார் என்பதும் வரலாறு.

இதனைப் போன்று ஒவ்வொரு தமிழ் இனத்திற்கும் மிகப் பெரிய வரலாறு இருக்கின்றது...அது மறைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழர்கள் விடுதலைப் பெற வேண்டும் என்றால் அவ்வரலாற்றினை நாம் ஆய்வு செய்து மக்களை ஒன்றிணைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் என்று எவருமே தமிழகத்தில், தமிழ் கலாச்சாரத்தில் கிடையாது. ஏன் பிறப்பின் அடிப்படையில் பிரிவுகளே தமிழகத்தில் கிடையாது...தொழில் அடிப்படையான பிரிவுகள் தான் தமிழர்களின் பிரிவுகள். இதனை ஆய்வுகள் நிச்சயம் உறுதி செய்யும்.

இதனை உணராது நான் ஆண்ட சாதி அவன் தாழ்ந்த சாதி என்று தமிழர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டை இட்டுக் கொண்டு இருந்தனர் என்றால் தொடர்ந்து அடிமையாகவே நமக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருந்து விட வேண்டியது தான்....உண்மையிலேயே தமிழ் இனத்தினைக் கட்டி எழுப்பிய மக்கள் நம்மை அப்பொழுது நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) முந்தையப் பதிவுகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |

தமிழர்கள் சத்திரியர்களா? - தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10

சென்ற பதிவில் தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் அல்லது பஞ்சமர்கள் தாம் என்றே கண்டு இருந்தோம். இங்கே தான் சில நண்பர்கள் சில கேள்வியினை எழுப்புகின்றனர். "அதெப்படி தமிழர்கள் அனைவரையும் சூத்திரன் அல்லது பஞ்சமன் என்றுக் கூறுகின்றீர்?...நாங்கள் ஆண்ட இனம்...அப்படி என்றால் நாங்கள் சத்திரியர்கள் அல்லவா? அவ்வாறு இருக்கையில் சத்திரியர்களான எங்களை எவ்வாறு சூத்திரர் மற்றும் பஞ்சமர் என்று கூறுகின்றீர்?"

இது தான் அக்கேள்வி. இக்கேள்விக்குத் தான் நாம் விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது. காரணம் இன்றைக்கு நம்முடைய நாட்டினில் 'யார் ஆண்ட இனம்' என்றும் 'நாங்கள் ஆண்ட இனத்தவர்' என்றும், கேள்விகளும் சரி முழக்கங்களும் சரி எல்லாத் திசைகளில் இருந்தும் கேட்ட வண்ணம் தான் இருக்கின்றது. அக்கேள்விகளுக்கு சரியான விடையினை அறியாது நம்மால் தமிழ் இனத்தை ஒன்றிணைக்க முடியாது.

சரி இப்பொழுது இக்கேள்விகளுக்கு விடையினைத் தேட நாம் இரு விடயங்களைக் காண்பது நலமாக இருக்கும்.

ஒன்று...மருத்துவர் இராமதாசு அவர்களின் ஒரு கூற்று. வன்னியர்கள் சத்திரியர்கள் என்றும் அவர்கள் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியவர்கள் என்றும் அவர் கூறி இருந்தார்.

இப்பொழுது இக்கூற்றினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்கள். சைவ வைணவ சமயங்களைப் பின்பற்றும் அவர்கள், இறைவன் உலகினையும் மனிதர்களையும் படைத்தான் என்ற கருத்தினை உடையவர்கள். அவ்வாறு இருக்க அக்னி குண்டத்தில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது இறைவன் மனிதனைப் படைத்தான் என்றக் கோட்பாட்டிற்கு ஏதுவான ஒன்றா அல்லது எதிரான ஒன்றா? நிச்சயம் எதிரான ஒன்று தான்.

அவ்வாறு இருக்க இறைவன் மனிதனைப் படைத்தான் என்ற நம்பிக்கையினைக் கொண்டவர்கள் எதற்காக நாங்கள் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றினோம் என்றுக் கூற வேண்டும்?

இக்கேள்விக்கான விடை நமக்காக கி.பி ஏழாம் நூற்றாண்டில் காத்துக் கொண்டு இருக்கின்றது. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் அக்காலத்தில் தான் வடக்கே இருந்த இந்திய அரசனைக் கொன்று விட்டு ஆரியர்கள், இந்தியாவில் அவர்கள் பிடித்த பகுதியினை ஆரியவர்த்தம் என்றுப் பெயரிட்டு ஆட்சிப் புரியலாயினர் என்றும் அவர்கள் அவர்களுள் அமைத்துக் கொண்ட பிரிவுகள் தாம் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர் என்றும். சத்திரியர்கள் என்பவர்கள் ஆரியர்களுள் போர் செய்யும் பிரிவினைச் சார்ந்தவர்கள்.

அவ்வாறு வட இந்தியாவின் ஒரு பகுதியினை பிடித்த அவர்கள் அவர்களுக்கென்று இட்டுக் கொண்ட கதை தான் 'நாங்கள் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியவர்கள்' என்பது. ஆரியர்கள் இறைவனை அறியாதவர்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தீ வழிபாடு தான். அதனால் தான் அவர்கள் மேலான பொருளாக கருதிய நெருப்பில் இருந்து அவர்கள் தோன்றியதாக அவர்கள் கதையினைக் கட்டி விட்டனர். "நாங்கள் உயர்ந்தவர்கள்...நாங்கள் மேலான தேவனாக வணங்கும் அக்னியில் இருந்து நாங்கள் தோன்றி இருக்கின்றோம்" என்ற பொருளிலேயே அவர்கள் அக்கதையினைப் புனைந்துக் கொண்டனர்.

பிற்காலத்தில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பிராமணர்கள் சூழ்ச்சியினால் நுழைய, அவர்கள் பரப்பிய கதைகளும் பரவுகின்றது. ஒரு காலத்தில் மக்கள் பிராமணர்களின் வர்ணாசிரமதர்மம் (இறைவன் மனிதனை நான்கு வர்ணமாகப் படைத்தான்) என்ற ஒரு கூற்றினை ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டப் பொழுது, அரசர்கள் என்றால் அவர்கள் சத்திரியர்கள் என்றக் கருத்து பரவ ஆரம்பித்தது.

அதாவது அரசையும் சரி ஆன்மீகத்தையும் சரி பிராமணர்கள் பிடித்தாயிற்று. அவர்கள் சொல்வது தான் ஆன்மிகம்/சட்டம் என்ற நிலையும் வந்தாயிற்று. மேலும் அவர்கள் சொல்வதனை சரி பார்க்க நூல்களைப் படிக்கலாம் என்றால் நூல்களை பிராமணர்கள் தவிர எவரும் படிக்கக் கூடாது என்ற சட்டம் வேறு இருக்கின்றது. இந்நிலையில் பிராமணர்கள் கூறுவது/கூறியது தானே உண்மை என்ற நிலை இருக்கும்.

அவர்கள் சொன்னார்கள் "பிராமணர்கள் உயர்ந்தவர்கள்...அரசர்கள் சத்திரியர்கள்...வணிகர்கள் வைசியர்கள்...அடிமைகள் சூத்திரர்கள்...இது இறைவன் கூறியது" என்று, அடிமையாய் இருந்த மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். எதிர்த்தவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று அழிக்கப்பட்டனர்/ ஒடுக்கப்பட்டனர்.

பிராமணர்கள் கூறிய அக்கூற்றினை வேறு வழியில்லாது நம்பிய மக்கள் அரசர்கள் என்றால் சத்திரியர்கள் என்றே எண்ணிக் கொண்டனர். சத்திரியர்கள் எங்கே இருந்து தோன்றினர்....?அக்னிக் குண்டத்தில் இருந்து தோன்றினர்... எனவே நான் சத்திரியன் என்றால் நானும் அக்னிக் குண்டத்தில் இருந்து தோன்றி இருக்க வேண்டும் என்றே மக்களும் எண்ணிக் கொள்ளத் தலைப்பட்டனர்.

அதன் விளைவு தான் இன்று தமிழர்கள் தங்களை சத்திரியர்கள் என்றும் தாங்கள் அக்னிக் குண்டத்தில் இருந்து தோன்றியவர்கள் என்றும் கூறிக் கொண்டு இருப்பது.

சத்திரியர்கள் என்பது ஆரியர்களின் ஒரு பிரிவு, அதற்கும் தமிழர்களுக்கும் சரி இந்தியாவிற்கும் சரி சைவ வைணவ சமயங்களுக்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை. இது பிராமணர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தமிழன் சத்திரியன் என்றுக் கூறினால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் கூற்றின் படியும் மனு நீதியின் படியும் இன்று இந்தியாவில் இருப்பது இரண்டே வகை மக்கள் தான்...ஒரு சாரார் பிராமணர் மற்றொருவர் சூத்திரர். ஒருவர் ஆரியர் மற்றொருவர் திராவிடர். அவ்வளவே.

ஆனால் நம் மக்கள் தான் அறியாது தங்களை சத்திரியர்கள் என்றுக் கூறிக் கொண்டு இருக்கின்றனர். காரணம் தெளிவான வரலாற்றுப் பார்வையும் ஆன்மீக அறிவும் இன்னும் நம் மக்களிடையே பரவவில்லை...காரணம் இன்னும் நம் இனம் முழுமையாக விடுதலை அடையவில்லை.

பாண்டியர்களோ, சோழர்களோ, சேரர்களோ, பல்லவர்களோ சத்திரியர்கள் கிடையாது. அவ்வாறு இருக்கையில் அவர்களின் வம்சாவளியினர் மட்டும் எவ்வாறு சத்திரியர்களாக இருப்பார்கள்?

ஒரு எடுத்துக்காட்டுக்கு ரஷ்ய நாடு தமிழர்களின் மீது படை எடுத்து வந்து வென்று விட்டது. ரஷ்யர்களின் அரசனின் பொதுப் பெயர் ஜார் என்பது ஆகும். இந்நிலையில் ஆள்பவர்களை ஜார் என்று அழைக்கின்றனர், நானும் ஒரு காலத்தில் ஆட்சி புரிந்தவன் தான்...எனவே நானும் ஜார் தான் என்று ஒரு தமிழன் கூறுவான் ஆயினில் அது சரியான ஒன்றாக அமையுமா?

அதனைப் போன்று தான் தமிழன் தன்னை சத்திரியன் என்று அழைத்துக் கொள்வதும் பொருந்தாத ஒன்றாகும்...தமிழன் தன்னை தமிழ் அரசன் என்றுக் கூறிக்கொள்ளலாம்...பாண்டியன் என்றோ சோழன் என்றோ சேரன் என்றோ பல்லவன் என்றோ இன்னும் அநேக தமிழ் அரச பெயர்களின் மூலமாகவோ அவனை அழைத்துக் கொள்ளலாம்...அது சரியானதொன்றாக இருக்கும்.

அதனை விடுத்து தான் ஆண்ட இனம் அதனால் நான் சத்திரியன் என்று ஒருவன் கூறுகின்றான் என்றால் அது அவர்களது அறியாமையைத் தான் காட்டும். ஒரு மனிதன் எப்பொழுது தன்னை சத்திரியன் என்று அழைத்துக் கொள்கின்றானோ அப்பொழுதே அவன் மனு நீதியையும் வருணாசிரமத்தையும் சாதி ஏற்றத் தாழ்வினையும் ஏற்றுக் கொள்கின்றான்.

அது தமிழர்களுக்கு உரியதல்ல....இத்தெளிவினை நாம் நமது சமயங்களின் வாயிலாகவே அறிந்துக் கொள்ள முடியும்.

சத்திரியன், அரசன், ஜார் (TSAR), பாரோ (Pharoah) - போன்ற சொற்கள் ஆட்சிப் புரிபவர்களைக் குறிக்கும். ஆனால் இவை அனைத்தும் பொருளில் ஒன்றாய் இருந்தாலும் வெவ்வேறு இனங்களுக்கு உரிய சொற்கள்.

எனவே எவ்வாறு ஒரு தமிழன் ஜார் இனத்தைச் சார்ந்தவனாக இருக்க முடியாதோ அதனைப் போன்றே அவன் சத்திரிய இனத்தினைச் சார்ந்தவனாக இருக்க முடியாது.

சரி இருக்கட்டும்...இப்பொழுது இரண்டாவது விடயத்தினைப் பற்றி சற்றுக் காண்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) முந்தையப் பதிவுகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |

ஞாயிறு, 2 ஜூன், 2013

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 9

சென்ற பதிவில் எவ்வாறு சோழர்கள் எவ்வாறு சூழ்ச்சிக்கு வீழ்ந்து இருக்கலாம் என்றே கண்டோம். இப்பொழுது இன்னொரு விடயத்தினை நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது. அது, இராச இராச சோழனின் காலத்தில் மக்களுள் வருணப் பாகுபாடுகளோ அல்லது பிறப்பால் ஏற்றத் தாழ்வு முறைகளோ இருந்ததா இல்லையா என்பதே அது.

இதனைக் குறித்து நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். என்னுடைய பார்வை இராச இராச சோழனின் காலத்தில் வருணப் பாகுபாடுகளோ அல்லது பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளோ தமிழக மண்ணில் இருந்ததில்லை என்பதே. இதனை நான் அத்தோழரிடம் கூறிய பொழுது அவர் ஏற்கவில்லை. அவர் அக்கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை கொண்டு இருந்தார்.

பின்னர் சில நாட்கள் கடந்தன...மீண்டும் அந்த நண்பரிடம் பேசும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது பேசுகையில் அவர் இராச இராச சோழனின் காலத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளோ அல்லது வருணப் பாகுபாடுகளோ இல்லாது இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றது என்றே கூறினார். அதற்கு அவர் கூறிய காரணம்,

இரு நாடுகள் இருக்கின்றன. இரண்டிலும் நூறு மக்கள் இருக்கின்றனர் என்றே வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஒரு நாட்டினில் திறமையின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். அதாவது நூறு பேரில் சண்டை இடும் திறமையும் வலிமையையும் ஒரு நாற்பது பேரிடம் இருக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். அந்த நாற்பது பேரினை வைத்துக் கொண்டு ஒரு படையினை ஒரு நாடு உருவாக்குகின்றது. மற்றொரு நாடோ பிறப்பின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்து படையினை உருவாக்குகின்றது. அதாவது நூறு பேரில் நாற்பது பேர் போர் செய்யும் குலத்தில் பிறந்து இருக்கின்றார்கள். அப்படிப் பிறந்த அவர்கள் அனைவருமே போர் செய்ய வல்லுனர்களாக இருக்க முடியுமா? வாத்தியார் பையன் மக்கு என்பதனைப் போல் அந்த நாற்பது பேரினில் பலர் போர் செய்யும் தகுதி இல்லாது தான் இருப்பர். அது தான் நியதி.

இந்நிலையில் இந்த இரண்டு நாடுகளும் போர் புரிந்தன என்றால் எந்த நாடு வெல்லும்? திறமையின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடா அல்லது பிறப்பின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடா?

திறமையின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடு தானே வெல்லும். இதனைக் கொண்டு பார்க்கும் பொழுது இராச இராச சோழன் பெற்ற வெற்றிகள் யாவையும் பிறப்பின் அடிப்படையில் அமைந்த படையினை வைத்து பெற்று இருக்க முடியாது. திறமையின் அடிப்படையில் படையினை அவன் வைத்து இருந்தான் என்றால் தான் அவ்வெற்றிகளை அவன் பெற்று இருக்க முடியும். எனவே இராச இராச சோழனின் காலத்தில் தமிழகத்தில் வருணப் பாகுபாடுகளோ அதன் தாக்கமான பிறப்பால் ஏற்றத் தாழ்வு முறைகளும் இல்லை என்றே நாம் கருத முடியும்.

இது தான் அவர் கூறியக் காரணம். சரியான காரணம் தானே. இப்பொழுது இந்தக் காரணத்தினைத் நாம் இன்னும் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது, ஆனால் அதனைப் பின்னர் காண்பது நலமாக இருக்கும் என்பதினால் இப்பொழுது சோழர்களுடன் நம் பயணத்தினைத் தொடரத் தான் வேண்டி இருக்கின்றது.

இராச இராசன் பிறப்பால் வேற்றுமைகளைக் காணும் அரசினை வைத்து இருந்தான் என்றால் அவன் பெற்ற வெற்றிகளை அவன் பெற்று இருக்க முடியாது, எனவே அவன் காலத்திலும் சரி அவனின் மகனின் காலத்திலும் அத்தகைய நடைமுறை அதாவது பிறப்பால் ஏற்றத் தாழ்வினைக் காணும் நடைமுறை தமிழ் மண்ணில் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே நாம் கருத முடிகின்றது அல்லவா. இதனை மெய்ப்பிப்பதனைப் போல் அவர்கள் காலத்தில் சோழ பேரரசின் புகழ் சிறந்து விளங்குகின்றது.

அதனைப் போலவே எப்பொழுது சாளுக்கிய சோழனாக குலோத்துங்கன், இறுதி சோழனான அதி இராசேந்திர சோழனின் மர்மமான மரணத்தினைத் தொடர்ந்து அரியணை ஏறுகின்றானோ அப்பொழுது இருந்து சோழர்களின் ஆட்சி வீழ்ச்சிப் பாதைக்குச் சென்று இருக்கின்றது.

சூழ்ச்சியினால் வந்த அரசன் வலுவான அரசனாக இருக்க முடியாது. அவனை வைத்துக் கொண்டு மற்றவர்கள் பல காரியங்களை செய்துக் கொள்ள முடியும். அரசன் நமது கைகளுக்குள் இருந்தால் நம் விருப்பப்படி அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்....ஆன்மீகத்திலும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்....என்ன சரி தானே.

அது தான் தமிழகத்தில் நடந்து இருக்கின்றது என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அரசனைக் கைக்குள் வைத்து இருந்தால் அவனை மட்டுமே கட்டுப் படுத்த முடியும், ஆனால் ஆன்மீகத்தினை கையில் வைத்து இருந்தால் யாரை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை ஆரியர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால் அரசனின் துணையுடன் ஆன்மீகத்தினை தங்களின் பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரு நாட்டினைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசனை வெல்ல வேண்டும். அதனைப் போன்று ஆன்மீகத்தை தங்களுக்கு உரிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களைக் கொல்ல வேண்டும். அது தான் தமிழக வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றது. சித்தர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணர்களை எதிர்த்த சித்தர்கள் காடுகளுக்குள் விரட்டப்படுகின்றனர். பின்னர் அதுவும் போதாதென்று உயிருடன் குகைகளுள் அடைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுக்கு 'ஜீவ சமாதி' அடைந்தார் என்று பட்டத்தையும் தந்து சிறப்பித்தனர் என்பது வரலாறு. மேலும் சிலரை உயிருடன் எரித்து விட்டு அவர் முக்தி அடைந்து விட்டார் என்றப் பட்டத்தையும் தந்து அவர்கள் கொலை செய்யப்பட்டதை மறைத்த செயல்களும் இங்கே நிகழத் தான் பெற்று இருக்கின்றன.


அதனைப் போன்றே இறுதி நாயன்மாரான நந்தனாரின் கொலையும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரின் கொலையும் நிகழப் பெற்று சைவ கோவிலின் தலைமையிடமான சிதம்பரமும், வைணவக் கோவிலின் தலைமையிடமான திருவரங்கமும் பிராமணர்களின் வசம் செல்லுகின்றது.

சோழர்களின் வீழ்ச்சியும், தமிழக கோவில்கள் பிராமணர்களின் கைகளின் செல்வதும் தற்செயலான செயல்களா அல்லது ஒரு மிகப் பெரிய சதியின் பகுதிகளா என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

சோழர்களின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து பாண்டியர்கள் சிறிது வலு பெறுகின்றார்கள். ஆனால் அவர்களும் என்ன செய்ய முடியும், நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம் ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பாண்டியர்களும் சிறிதுக் காலத்தில் வீழ்ச்சியினைத் தான் அடைகின்றனர்.

இக்காலத்தில் தான் பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது.


கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...

"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல் வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன் வகையறாவினரையும் விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க வைத்தான்" என்றே பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் என்ற நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

இதைப் போன்ற நிலை தான் பழனிக் கோவிலிலும் நிகழ்ந்து இருக்கின்றது என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மன்னராட்சிக் காலத்தில் அரசன் நமக்குத் துணை நின்றான் என்றால் நாம் கூறுவது தானே உண்மை. அவ்வாறே உண்மைகள் புனையப்படுகின்றன...தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இக்கொடுமைகளை எதிர்த்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், வீரர்கள் ஆகியோர் அனைவரும் தாழ்த்தப்படுகின்றனர். அவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைக்கு தாழப்பட்டவர்களாக இருப்பவர்கள். மேலும் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக மாற்றம் பெறத் துவங்கியது இக்காலத்தில் தான் என்பதும் சிலரும் கூற்று.

பிராமணர்களின் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்து அதிகாரங்களையும் செல்வங்களையும் பெற்ற தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்றே மாற்றப்பட்டார்கள். இன்றுக் கூட சைவ வைணவ மடங்களில் இருப்பவர்கள் பிராமண செல்வாக்கு உடனேயே இருப்பதும், சமசுகிருதத்தை மீறி தமிழ் வர கூடாது என்று இருப்பதும், அம்மடங்களில் குறிப்பிட்ட சாதியினரே இருக்கலாம் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதனையும் நாம் காணத் தானே செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காக அவர்களுக்கு பிராமணர்கள் கொடுத்த பட்டம் தான் சற்சூத்திரர். அதாவது சிறந்த அடிமைகள் என்றே பொருள் வரும்.

தமிழன் பிராமணனோ, சத்திரியனோ அல்லது வைசியனோ கிடையாது...அவன் சூத்திரன் அல்லது பஞ்சமன். அதன் அடிப்படையில் தான் பிராமணர்கள் தங்களுக்கு உதவிய தமிழர்களை சிறந்த அடிமைகள் என்ற பொருள் படி 'சற் சூத்திரர்' என்றும்...ஒன்றுமே செய்யாது இருந்த சாதாரண மக்களை அடிமைகள் என்னும் பொருள் படி 'சூத்திரர்' என்றும், அவர்களை எதிர்த்த தமிழ் அறிஞர்களை பஞ்சமர்கள் என்றும் பிரித்து வைக்கலாயினர்.

அரசனின் செல்வாக்கினைப் பெற்ற பிராமணர்களை மக்களால் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று. தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து அடிமைகளாயினர். கல்வியினைக் கண்ணாக மதித்து வந்த ஒரு சமூகம் அறியாமை இருளில் மூழ்கத் தொடங்கியது....இன்று வரை அது அவ்வாறு தான் இருக்கின்றது.

தொடரும்....!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 8

இராச இராச சோழன்!!!

என்ன தான் சொல்லுங்க... இந்தப் பெயரைக் கேட்ட உடன் ஒரு பெருமித உணர்ச்சி தமிழர்களுக்குள் வருவதனைத் தடுக்க முடியாது தான். காரணம் அவன் செய்த செயல்கள் அத்தகையவை. தமிழர்களின் புகழை மீண்டும் உலகறியச் செய்தவன் அவன்....செந்தமிழை வளர்த்தவன் அவன்...தமிழரின் பெருமையை நிலை நாட்டியவன் அவன்... என்று இராச இராச சோழனை கொண்டாடுவதற்கு இங்கே ஆயிரம் காரணங்களைக் கூறுவதற்கு ஆட்கள் இருக்கின்றனர்.

அதைப் போலவே அக்கூற்றுக்களை மறுப்பதற்கும் ஆட்கள் இருக்கின்றனர். அவர்களின் கூற்றின் படி இராச இராச சோழன் என்ற மன்னன் ஒரு பிராமண அடிவருடி என்றும் அவனின் காலத்தில் தான் தமிழர்களும் சரி பெண்களும் இழிவுப்படுத்தப் பட்டு அடிமைகளாயினர் என்றே அவர்கள் கருதுகின்றனர் என்று நமக்குப் புலனாகின்றது.

அட என்னடா இது...ஒரு தரப்பினர் இராச இராச சோழனை தமிழ் இனக் காவலனாகக் காணுகின்றனர்...அதே சமயம் அவனை மற்ற சிலரோ தமிழ் இனத்தினை இழிவுப் படுத்த வந்த ஒருவனாகப் பார்கின்றனரே..ஏன் இந்த முரண்பாடு என்ற எண்ணம் நிச்சயம் நம்முள் எழும்...அந்நிலையில் ஏன் அந்த முரண்பாடுகள் என்றக் கேள்விக்கு நாம் விடையினைத் தேடத் தான் வேண்டி இருக்கின்றது. இருந்தும் சாதி ஏற்றத் தாழ்வுகளைக் குறித்து நாம் கண்டுக் கொண்டு வரும் இத்தொடரில் அக்கேள்விக்கான விடையினைத் தேடுவது என்பது தொடர்பில்லாது சென்று விட வாய்ப்புகள் இருப்பதினால் அதனைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாகக் காண முயலலாம். இருந்தும் இராச இராச சோழனுக்காக அம்முரண்பாடுகளைக் குறித்து நாம் இங்கே சிறிது பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

௧) இராச இராச சோழன் பிராமண அடிவருடி என்றால்.... அவன் ஆட்சியில் கோவில்கள் அனைத்திலும் பிராமணர்களே இருந்து இருக்க வேண்டும்... ஆனால் உண்மை என்னவென்றால் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு பின்னர் அமைந்த விசய நகரப் பேரரசிலும் தான் கோவில்கள் பிராமணர்களின் கைவசம் செல்லுகின்றது. அது வரை கோவில்களில் தமிழர்களே இருந்து இருக்கின்றார்கள். மேலும் கோவில்களில் தமிழே ஒலித்து இருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் அவனை எவ்வாறு பிராமண அடிவருடியாக கருத முடியும்.

௨) இராச இராசன் தேவ அடியார்கள் முறையை அறிமுகப்படுத்தினான். அதன் மூலம் பெண்களைத் தாழ்த்தினான் என்ற ஒரு கூற்று இருக்கின்றது...

இக்கேள்விக்கு விடையினைக் காண நாம் பிரபாகரனையும் புலிகளையும் காண வேண்டி இருக்கின்றது. புலிகளில் பெண்களுக்கு என்று இடம் தனியே இருந்தது. அவ்வீர தமிழ் மகளிர் பெண் புலிகள் என்றே அழைக்கப்பட்டனர். புலிகளின் காலத்தில் அவர்களுக்கு நிச்சயம் சிறப்பான நிலை இருந்து இருக்கும்...ஆனால் அதே நிலை இன்று நிலவும் என்றா கூற முடியும்? இழிவான நிலைக்கு அவர்கள் சிங்களவர்களால் தள்ளப் பட்டு இருப்பார்கள் தானே. அதற்காக புலிகளின் காலத்திலேயும் பெண் புலிகள் இன்று இருந்த நிலையிலேயே இருந்தார்கள் என்றுக் கூற முடியுமா? அதே நிலையைத் தான் நாம் தேவ அடியார்கள் முறையிலும் காண வேண்டி இருக்கின்றது.

சமணசமயத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. அவள் அடுத்தப் பிறவியில் ஆணாக பிறந்தால் ஒழிய அவளுக்கு முக்தி கிடையாது. ஆனால் சைவ வைணவ சமயங்களிலோ பெண்ணுக்கு சிறப்பான இடம் இருந்தது. அவ்விடத்தை கோவிலிலும் கொண்டு வந்தவன் தான் இராச இராச சோழன். கோவில் என்பது இறைவனை நாம் நினைக்கும் இடம். அங்கே ஆணும் பெண்ணும் சமம் தான் என்று அவன் கொண்டு வந்த ஒரு திட்டம் தான் தேவ அடியார்கள் திட்டம். ஆனால் பிற்காலத்தில் தமிழர்களின் கோவில்களையும் சமயத்தினையும் ஆட்க்கொண்ட ஆரியர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய விசய நகரப் பேரரசின் மன்னர்கள் அத்திட்டத்தினை அவ்வாறே வைத்து இருப்பரா அல்லது அவர்களின் வசதிக்கேற்ப மாற்றி இருப்பரா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. (இதனைப் பற்றியும் விரிவாக வேறு பதிவில் காணலாம்)

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் இராச இராச சோழன் கோவிலினுள் பெண்களுக்கு இடம் கொடுத்து அவர்களின் நிலையை உயர்த்தினானே ஒழிய தாழ்த்தவில்லை. அப்பெண்களின் நிலை தாழ்த்தப்பட்டது விசய நகர பேரரசின் காலத்திலேயே ஆகும்.

௩) இராச இராசன் சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தான்...தமிழை அவன் வளர்க்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழன் உருவாக்கிய ஒரு மொழிக்கு தமிழன் முக்கியத்துவம் கொடுத்தது என்ன தவறு? மேலும் அவனின் காலத்தில் கோவிலுள் சமசுகிருதம் இருந்ததா இல்லை தமிழ் இருந்ததா? தமிழ் தானே இருந்தது. அப்படி இருக்க இராச இராசன் தமிழை வளர்க்கவில்லை என்று நாம் எவ்வாறு கருதுவது.

எனவே இராச இராச சோழன் பிராமண அடிவருடி என்பதற்கோ அவன் தமிழை வளர்க்க வில்லை என்பதற்கோ சான்றுகள்பெரிதாய் ஏதும் இல்லை. மேலும் இத்தலைப்பினைப் பற்றி நாம் பின்னர் விரிவாக காணலாம். இப்பொழுது நாம் மீண்டும் ஆதித்தக் கரிகாலனின் மரணத்திற்கு செல்ல வேண்டி இருக்கின்றது.

ஆதித்த கரிகாலன்...சோழர்களின் பட்டத்து இளவரசன். இவன் சதியால் கொலை செய்யப்பட்டு இருக்கின்றான் என்றே நாம் கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறிகின்றோம். பட்டத்து இளவரசனை யார் கொலை செய்வார்?

ஆட்சியினைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொலை செய்வார்கள். அந்நிலையில் ஆதித்த கரிகாலனைக் கொன்றால் நன்மை யாருக்கு வரும் என்று பார்த்தால் பொதுவாக அடிபடும் பெயர்கள் எவை என்றால்

குந்தவை
மதுராந்தகன்
இராச இராச சோழன்
பாண்டிய ஆபத்துதவிகள்

ஆச்சர்யமாக இருக்கின்றது அல்லவா...இன்றைய வரலாறு இராச இராச சோழனையும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் தான் நாம் உடையாளூர் கல்வெட்டுக்களைக் காண வேண்டி இருக்கின்றது.

உடையாளுர்க் கல்வெட்டுக்கள் ஆதித்தக் கரிகாலனை பிராமணர்கள் கொன்று விட்டனர் என்றும் அவர்களின் நிலங்களை இராச இராசன் பறிக்க உத்தரவிட்டான் என்றும் இருக்கின்றது. இதன் மூலம் பிராமணர்களே ஆதித்தக் கரிகாலனை கொன்று இருக்கின்றனர் என்ற ஒரு கருத்து நம்மிடையே வருகின்றது.

இந்நிலையில் தான் இன்னொரு கல்வெட்டுக் கூறும் செய்தியினை நாம் காண வேண்டி இருக்கின்றது. அக்கல்வெட்டு இராச இராசனின் காந்தளூர்ச் சாலைப் போரினைப் பற்றிக் கூறுகின்றது.

காந்தளூர்ச் சாலைப் போர் என்பது இராச இராசன் அரசனாக முடியேற்றப் பின்னர் நடத்திய முதல் போர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. காந்தளூர்ச் சாலை என்பது ஒரு பாட சாலை. அங்கே போர் கலைகள் பயிற்றுவிக்கப் பட்டுக் கொண்டிருந்தன என்றும் அது பிராமணர்களின் (ஆரியர்கள்) கட்டுக்குள் இருந்த ஒரு அமைப்பு என்றும், அங்கிருந்த நபர்களின் சூழ்ச்சியால் தான் தனது அண்ணன் கொலை செய்யப்பட்டான் என்பதினால் தான் தனது முதல் யுத்தத்தினை காந்தளூர்ச் சாலைக்கு எதிராக நடத்தினான் இராச இராச சோழன் என்றே ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். (புத்தகம்: இராச இராச சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் - அலைகள் பதிப்பகம். மேலும் பல கருத்துக்களும் இப்போரினைப் பற்றி இருக்கத் தான் செய்கின்றன...ஆனால் அவற்றை நாம் வேறொரு பதிவில் பின்னர் காணலாம்).

இப்போதைக்கு இராச இராசன் அவனது அண்ணனை பிராமணர்கள்/ஆரியர்கள் கொன்று விட்டார்கள் என்றும் அதனால் தான் அவன் காந்தளூர் சாலையின் மீது போர் தொடுத்தான் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது என்பதனை நாம் அறிகின்றோம்.

இங்கே தான் நாம் மற்றொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. சோழர்கள் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிம்மதியாக இருக்கவில்லை. போர்கள் அவர்களை அழைத்துக் கொண்டே தான் இருந்தன. அதுவும் வடக்கில் இருந்து யுத்தம் அவர்களுக்கு தூது விட்டுக் கொண்டே இருந்தது. (வடக்கே ஆரியர்களின் செல்வாக்கு ஏற்கனவே பலமாக இருந்தது என்று நாம் கண்டிருக்கின்றோம்)

இந்நிலையில் சோழ மன்னர்களின் வீழ்ச்சி வடக்கில் இருந்தவர்களுக்கு நிச்சயம் உதவும் தானே. அப்படிப்பட்ட ஒரு வீழ்ச்சிக்காக சோழ மன்னர்களை சதியால் கொல்ல முயலலாம் தானே...அதனால் தான் ஆதித்த கரிகாலன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் நாம் கருதலாம் தானே. நிற்க

ஆனால் அந்த சூழ்ச்சிகளானது இராச இராச சோழனின் காலத்திலும் சரி அவனின் மைந்தன் இராசேந்திர சோழனின் காலத்திலும் எடுபடாமல் சென்று விட்டதினை நாம் வரலாற்றினில் காணுகின்றோம். ஆனால் பின்னர் வந்த சோழர்கள்அத்தகைய சதிகளை கண்டறிந்து வென்றார்களா என்பது மிகப் பெரிய கேள்வியாகவே இருக்கின்றது. காரணம் சாளுக்கியர்களும் சோழர்களும் ஒன்றிணைந்து சாளுக்கிய சோழர்கள் என்று உருவாகி இருக்கின்றனர். சாளுக்கியர்களுடன் போரிட்டு வந்துக் கொண்டிருந்த சோழர்கள் அவர்களுடன் இணைந்ததற்கு காரணம் என்ன?

சோழ அரசனான அதி இராசேந்திர சோழன் மர்மமான நிலையில் வாரிசின்றி இறக்க சாளுக்கிய வம்சத்தைச் சார்ந்த முதலாம் குலோத்துங்கன் அரியணை ஏறுகின்றான். எதனால் அதி இராசேந்திர சோழன் இறந்தான்? சாளுக்கியர்கள் அரியணை ஏற அவன் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டானா? என்பதெல்லாம் ஆராய வேண்டிய விடயங்களாகத் தான் இருக்கின்றன. ஆராய வேண்டியக் காரணம்...அதற்குப் பின்னர் தமிழ் நாட்டினை தமிழரே முழுமையாக ஆண்ட நிலை இன்று வரை பெருமளவு வரவே இல்லை என்ற உண்மை தான்.

தமிழர்களுள் சாதி ஏற்றத் தாழ்வுகளும், தமிழர்கள் தாழ்த்தப்பட்டமையும் ஏற்படத் தொடங்கியது அக்காலத்தில் இருந்து தான் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார்.
(தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005)

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

இதன் மூலம் இராச இராசனின் காலத்தில் பெண்கள் தாழ்தப்பட வில்லை என்று நாம் அறிய முடிகின்றது தானே. (தகவல் அறிய உதவிய ம. செந்தமிழன் அவர்களுக்கு நன்றி)

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...