தூய தோமா (St. Thomas)!!!

நிச்சயம் கிருத்துவர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயராக இருக்கக் கூடும். சென்னை வாழ் மக்களுக்கும் ஒருவேளை சாந்தோம் (Santhome), பரங்கி மலை (St.Thomas Mount) போன்ற இடங்களின் வாயிலாக இந்த பெயர் அறிமுகமாகி இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு இந்தப் பெயர் அவ்வளவு பரிச்சியமாக இருக்குமா என்பது சந்தேகமே...எனவே தூய தோமா இந்தியாவிற்கு வந்தாரா இல்லையா என்பதனை காணும் முன் நாம் சற்று அவரைப் பற்றி அறிந்துக் கொள்வது நல்லது என்று நினைக்கின்றேன்.

விவிலியத்தின்படி தோமா இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவர். இயேசுவின் கூடவே இருந்து அவரின் கருத்துக்களை கேட்டு, பின்னர் அக்கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்காக மற்ற சீடர்களைப் போலவே இவரும் வேறு நாடுகளுக்கு கிளம்பியவர். அவ்வாறு கிளம்பி இவர் வந்தடைந்த நாடு தான் இந்தியா. இங்கே தான் பிரச்சனை தொடங்குகின்றது.

தோமா இந்தியா வந்தார் என்று ஒரு கூட்டம் கூற மற்றொரு கூட்டமோ தோமா இந்தியா வந்தது வெறும் கட்டுக்கதை, தோமா இந்தியா வந்ததற்கு சான்றுகள் எதுவும் இல்லை என்கின்றது. எனவே இப்பொழுது தோமா இந்தியா வந்தாரா இல்லையா... வந்தார் எனில் அதற்கு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் நாம் தோமாவின் இந்திய வரலாற்றினை சற்று சுருக்கமாக கண்டு விடலாம்.

வரலாற்று குறிப்புகளின் படி தோமா இந்தியாவிற்கு கி.பி 52 ஆம் ஆண்டில் வருகின்றார். வந்து இறங்கிய இடம் அன்றைய சேர நாடான இன்றைய கேரளா. பின்னர் 20 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து இயேசுவின் கருத்துக்களைப் பரப்பியப் பின் தமிழகத்தில் சிலரால் அவர் கொல்லப்படுகின்றார். அவ்வாறு அவர் கொலையுண்ட இடமே இன்றைய பரங்கி மலையாகும். பின்னர் அவர் அன்றைய தமிழகத்தின் அரசனால் சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றார். அவ்வாறு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடமே இன்றைய சாந்தோம் ஆகும். நிற்க.

இப்பொழுது நாம் அந்தக் கதையினையும் அதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களின் கூற்றினையும் சற்று காண்போம்.

௧) தோமா இந்தியா வந்து இருக்கவே முடியாது. ஏனெனில் அத்தனை தூரம் அக்காலத்தில் பயணித்து ஒருவர் வந்து இருக்க முடியும் என்பது நம்ப முடியாத ஒன்று. எனவே தோமா இந்தியாவுக்கு அதுவும் சேர நாட்டிற்க்கு வந்தார் என்பது கட்டுக்கதையே என்பது தோமாவை மறுப்பவர்களின் ஒரு முக்கிய கூற்றாகும்.

ஆனால் உண்மையோ வேறாக இருக்கின்றது, தோமாவின் காலத்துக்கு முன்பே கிரேக்கர்களும், ரோமர்களும், யூதர்களும் இந்தியாவுடன் வணிக தொடர்பில் இருந்தது...அதுவும் குறிப்பாக தமிழகத்துடன் தொடர்பில் இருந்தது சங்க இலக்கியங்களின் மூலமும் மற்றும் பல்வேறு சான்றுகள் மூலமும் நமக்கு புலனாக வருகின்றது. தமிழர்கள் அவர்கள் அனைவரையும் யவனர் என்ற பொது பெயரினைக் கொண்டே அழைத்தனர். உதாரணமாக...

'யவனர் தந்த வினைமாண் நன்கலம்...' அகநானூறு 149 
'யவனர் இயற்றிய வினைமாண் பாவை ...' நெடுநல்வாடை 101 

போன்ற சங்க இலக்கியங்கள் மூலம் யவனர்கள் அக்காலத்திலேயே தமிழகத்துடன் தொடர்பில் இருந்து இருக்கின்றனர் என்பது நமக்கு புலனாகின்றது.

மேலும் இயேசுவின் காலத்தில் ரோமப் பேரரசினை ஆண்ட ஆகசுடசு (Augustus Ceaser) என்ற மன்னனின் காலத்துக்கு உட்பட்ட ரோம நாணயங்கள் பல மதுரை மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் அதிகமாக கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.

மேலும் அசோகரின் கல்வெட்டுகளில் கூட அவரின் ஆளுமைக்கு கீழே இருந்த யவன மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மேலும் அசோகரின் கல்வெட்டுகள் அரேமிய மொழியிலும் கிடைப்பது இங்கே கவனிக்கத்தக்கது ஏனெனில் இயேசு பேசிய மொழி அரேமியமே.

எனவே சான்றுகள் இவ்வாறு இருக்க தோமா இந்தியா வந்து இருக்க வாய்ப்புகள் இருக்கத் தான் செய்கின்றன. சரி... இப்பொழுது நாம் மறுப்பவர்களின் மற்றொரு கூற்றினையும் கண்டு விடலாம்.

௨) தூய தோமா இந்தியாவின் வட பகுதியில் தட்சசீலத்தில் கொண்டாபோரோசு (Gondophares) என்னும் மன்னனை சந்தித்ததாக செய்திகள் இருக்கின்றன. ஆனால் அத்தகைய ஒரு அரசன் அங்கே வாழ்ந்ததாக எந்த ஒரு சான்றுமே இல்லை. கொண்டாபோரோசு என்பது ஒரு கற்பனைப் பாத்திரமே. எனவே தோமா இந்தியாவிற்கு வந்தார் என்பதும் ஒரு கற்பனையே. இது தோமாவை மறுப்பவர்களின் மற்றுமொரு கூற்றாகும்.

ஆனால் சமீத்திய ஆராய்ச்சிகள் கொண்டோபோரோசு என்ற மன்னன் ஒருவன் வட நாட்டில் ஆட்சி செய்து வந்து இருக்கின்றான் என்று கண்டு பிடித்து இருக்கின்றன. அவ்வரசனின் நாணயங்களும் பல கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. எனவே தோமாவின் வரலாற்றில் கூறப் படும் இந்த அரசன் உண்மையாகவே இருந்து இருக்கும் பொழுது தோமாவும் உண்மையாகவே இந்தியாவுக்கு வந்து இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

௩) தோமாவை மறுப்பவர்கள் கூறும் மூன்றாவது கருத்து. அவ்வாறே தோமா இங்கே வந்து இருந்தார் என்றால் அவரின் தாக்கங்கள் இங்கே தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை. எனவே அவர் இந்தியா வந்தது என்பது வெறும் கட்டுக்கதையாகத் தான் இருக்கும்.

ம்ம்ம்....உண்மையான கூற்று. தோமா இந்தியா வந்து இருந்தார் என்றால் அவர்தம் கருத்துக்கள் இங்கே பல மாற்றங்களை உருவாக்கி இருக்க வேண்டுமே....அத்தகைய மாற்றங்கள் உருவாக்கி இருந்தன என்றால் தானே தோமா இங்கே வந்தார்...அவர் இயேசுவின் கருத்துக்களை பரப்பினார் என்பதனை நாம் நம்ப முடியும். எனவே இப்பொழுது தோமா பரப்பிய கருத்துக்களை நாம் அறிய வேண்டி இருக்கின்றது.

தோமா ஒரு கிருத்துவர் தான். அதில் மாற்றுக் கருத்துக்களே கிடையாது. ஆனால் அவர் இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கக் கூடிய ஐரோப்பியக் கிருத்துவரா என்றால் இல்லை என்பதே பதில் ஆகக் கூடும். தோமா ஒரு ஆசியக் கிருத்துவர்.

என்னங்க குழப்புறீங்க...ஐரோப்பிய கிருத்துவம் அப்படின்னு சொல்றீங்க...ஆசிய கிருத்துவம் அப்படின்னு சொல்றீங்க... கிருத்துவம் அப்படினாலே ஒண்ணுதானுங்களே அத எப்படி நீங்க பிரிக்குறீங்க என்று கேட்கின்றீர்களா...!!! அந்தக் கேள்விக்கு விடையினைக் காணும் முன் உங்களுக்கு ஒருக் கேள்வி.

கிருத்துவ சமயத்தின் சின்னம் எது?

சிலுவை அப்படின்னு சொல்றீங்களா. அப்படி என்றால் உங்களுக்கு ஒருத் தகவல்.

கி.பி நான்காம் நூற்றாண்டு வரை சிலுவை கிருத்துவர்களின் சின்னமாக இருக்கவில்லை. நான்காம் நூற்றாண்டில் எப்பொழுது ரோம பேரரசின் மன்னனான கான்சண்டீன் (Constantine) கிருத்துவ சமயத்தை அரச சமயமாக ஏற்றுக் கொள்கின்றானோ அப்பொழுது தான் சிலுவையும் கிருத்துவத்தின் சின்னமாக உருவாகின்றது.

அதற்கு முன்னர் வரை, இயேசுவின் காலத்திலும் சரி...தோமாவின் காலத்திலும் சரி சிலுவைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான். சிலுவை என்பது மக்களைக் கொள்ளும் ஒரு ரோமானிய கொலைக் கருவி. அவ்வளவே. அத்தகைய சிலுவையைத் தான் ரோமர்கள் கிருத்துவத்தின் சின்னமாக ஆக்குகின்றார்கள். அப்படியாக்கப்பட்ட கிருத்துவத்தைத் தான் நாம் ஐரோப்பியக் கிருத்துவம் என்கின்றோம்.

தோமா அப்படிப்பட்ட கிருத்துவர் அல்ல. அவர் சிலுவையை வழிபடவில்லை. அவர் வழி வேறு.

அது என்ன வழி... சான்றுகள் இருக்கின்றனவா... என்றுக் கேட்கின்றீர்களா...!!!

ஆம்...சான்றுகள் இருக்கின்றன. அச் சான்றுகளுடன் இயேசுவுக்கு பின்னர் வளர்ந்த கிருத்துவத்தைப் பற்றியும் நாம் இப்பொழுது நம் பயணத்தில் காண வேண்டி இருக்கின்றது....!!!

காண்போம்... அடுத்த பதிவில்....!!!

பயணிப்போம்...!!!

இன்னொரு முக்கியத் தகவல்:

தமிழகம் வந்த தோமாவினை அவரின் மரணத்திற்குப் பின் சாந்தோம் என்ற இடத்தில அடக்கம் செய்தனர் என்பதனை நாம் கண்டோம்.

'சாந்தோம்' என்பது போர்சுகிசிய சொல்.

சாந்தோம் என்றால் தூய தோமா என்றே அர்த்தம். இன்று அந்த இடத்தில தூய தோமாவின் நினைவாக ஒரு தேவாலயம் இருக்கின்றது.

சாந்தோம் தேவாலயம். நிச்சயம் சென்னையில் இருக்கும் அனைவரும் இதனைக் கண்டு இருப்பர் என்றே நம்புகின்றேன்.

இந்த தேவாலயம் தோமாவின் நினைவாக கட்டப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் நாம் அறியாத சில விடயங்களும் இந்த தேவாலயத்தில் இருக்கின்றன.

தோமா இறந்தது கி.பி 72 ஆம் ஆண்டில். ஆனால் இந்த தேவாலயம் கட்டப்பட்டதோ கி.பி 16 ஆம் நூற்றாண்டில். இந்தியாவுக்கு அப்பொழுது வந்த போர்சுகிசியர்களால் தான் இந்த தேவாலயம் கட்டப்பட்டது.

இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது.

தோமா இறந்தது கி.பி 72 ஆம் ஆண்டில். வரலாற்றின் படி அன்றைய தமிழக மன்னன் அவரை சிறப்பித்து அவரை அடக்கம் செய்த இடத்தில் ஒரு ஆலயத்தினை கட்டுகின்றான் என்று நாம் கண்டு இருக்கின்றோம். அப்படி இருக்க, கி.பி 16 நூற்றாண்டில் போர்சுகிசியர்கள் வந்து ஒரு தேவாலயத்தினைக் கட்டுகின்றார்கள் என்றும் காண்கின்றோம். அப்படி என்றால் தமிழக அரசன் தோமாவினை சிறப்பித்து கட்டிய ஆலயம் என்ன ஆனது...அது எந்த ஆலயம் என்றக் கேள்விகள் எழலாம்...!!! அக்கேள்விகளுக்கு விடை இதோ...

தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது மயிலாப்பூரில், அவரை மதித்து தமிழக அரசனால் கட்டப்பட்ட ஆலயம் - கபாலீஸ்வரர் கோவில். அந்தக் கோவிலை கி.பி 16 நூற்றாண்டில் வந்த போர்சுகிசியர்கள் இடித்து விட்டு சாந்தோம் தேவாலயத்தினை கட்டுகின்றனர். அவ்வாறு இடித்த கபாலீஸ்வரர் கோவிலை வேறு இடத்தில் கட்டுகின்றனர். இது வரலாறு. (சாந்தோம் வரலாறு)

அதாவது இன்று சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் சுமார் 400 ஆண்டுகள் முன்னர் வரை இருந்தது கபாலீஸ்வரர் கோவில். அக்கோவில் ஆனது தூய தோமாவினை சிறப்பித்துக் கட்டப்பட்டதாகும். நிற்க.

இத்தகவலை நான் இங்கே கூறியது, இந்து கோவிலை கிருத்துவர்கள் இடித்து விட்டனர் என்ற ஒரு கருத்தினை விதைக்க அல்ல. ஏனெனில் தோமாவின் காலத்தில் அவ்விரு மதங்களுமே வேர் ஊன்றி இருக்க வில்லை. மாறாக கிருத்துவராக சித்தரிக்கப்படும் தோமாவை சிறப்பித்து இந்து கோவில் என்றுக் கூறப்படும் ஒரு கோவில் ஏன் கட்டப்பட்டது என்றக் கேள்வியினை எழுப்பத் தான் அக்கருத்தினை நான் பகிர்வு செய்து இருக்கின்றேன். மேலும் இக்கோவிலே சைவ சமயத்தின் முதல் கோவில் என்று கூறப்படுவதும் இங்கே முக்கியமான ஒரு தகவலாகும்.

தோமா - கிருத்துவர்.
கபாலீஸ்வரர் கோவில் - சைவ கோவில்.


இவ்வாறு இருக்க தூய தோமாவை சிறப்பித்து ஒரு சைவ கோவில் கட்டப்பட்டது எதனால்?....இதையும் நம்முடைய பயணத்தில் காண்போம்.

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21

2 கருத்துகள்:

Does the name of King Gondophorus make the Acta- Historical? What is the Opinion of Roman Church?

Holy sees Publisher- Burn Oares & Wash Boune Ltd has Published Multi Volume -Butler's Lives of Saints Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-

.. the Syrian Greek who was probably the fabricator of the Story would have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.. Pages 213-218, in Volume December.
http://www.india-forum.com/forums/index.php?/topic/1494-thomas-in-india-history-of-christianism-in-india/page__st__60

I quote from Rev.George Menachery Edited St. Thomas Christians Encyclopedia,Vol-2, Article DID St.Thomas Really Come to INDIA- From a Doubters point of View by
Rev H.COMES. It explains-

Heracleon- (II Century) is the earliest author to throw a light on St.Thomas's carrier; his grandparents might have known the Apostle. Now, discussing the problem of witness and blood martyrdom, he states in a casual way, as something well known, that Matthew, Philip, Thomas, and Levi(Thaddaues) had not met violent deaths. And Clement of Alexandria (150-211/16 A.D.) who quotes this Passage of Heracleon and corrects some of his ideas, does not challenge this facts.

செயின்ட் தாமஸ் கலைக்களஞ்சியம் என்னும் கேரள சர்ச் வெளியீட்டில்- வரலாற்று நோக்கில் ஏனும் ஆய்வில் எழுதிய பாதிரியார்- ஜெருசலேமில் 2ம் நூற்றாண்டுப் பதிவுபடி, தோமோ அங்கே சாதாரண முறையில் இயற்கை மரணம் என்கிறாரே? அதன் பிற்காலத்திய ஆதாரமற்ற குறிப்புகள் ஏன் உதவும்?

Few Questions my friend,

//What is the Opinion of Roman Church?//

Jesus and all of his followers were not romans. And if you turn back history you could see that the christians were hunted down in the earlier days by romans... So how does the Roman church become one which stands for christianity.


//Does the name of King Gondophorus make the Acta//

FYI - the existence of Gondophorous was considered as a myth some years back but now it has been proved that he existed. So let's wait and see what the history shall un cover.

And regarding the rest will try to see in my posts...And i am really interested to hear ur views abt the story of kapaleeswarar temple.

Can u kindly explain please

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு