“ஒரு கொடிய யுத்தம் இங்கே நடந்து இருக்கின்றது.
இந்தப் பகுதியில் நெடுங்காலமாக நாகரீக வாழ்வினை மேற்கொண்டு வந்த மக்களின் மேல் அன்னியர்கள் படை எடுத்து வந்து உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையில் போர் மூண்டு உள்ளது. இறுதியில் அந்த நாகரீக மக்கள் தோற்கடிக்கப்பட்டு அந்த நாகரீகம் அந்த இடத்தில் ஒரு அழிவிற்கு வந்து இருக்கின்றது.” 

இது சிந்து சமவெளி நாகரீகத்தினைப் பற்றி ஆராய்ச்சிகளைச் செய்த சில அறிஞர்களின் கூற்று. அவர்களின் இந்தக் கூற்றினைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்கும் முன் சிந்து சமவெளி நாகரீகம் என்றால் என்ன என்பதினை நாம் அறிந்துக் கொள்வோம்.

சிறு வயதில் வரலாற்றுப் பாடத்தில் மொகன்சதாரோ மற்றும் கரப்பா நகரங்கள் பற்றி படித்து இருப்பீர்கள் தானே. அந்த நகரங்களையும் மேலும் பல நகரங்களையும் உள்ளடக்கி சிந்து நதியினைச் சுற்றி அமைந்து இருந்த நாகரீகமே சிந்து சமவெளி நாகரீகம் ஆகும்.

வளமையான பிரதேசம்…பண்பாடுள்ள மக்கள்… வளர்ச்சி அடைந்த கலைகள்… தெளிவான வாழ்கை முறை… வழிப்பாட்டுப் பழக்கங்கள் என அனைத்தும் பெற்று இந்த நாகரீகம் தலைச் சிறந்து விளங்கிற்று என்பதனை சரித்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய நாகரீகத்தின் மேல் அன்னியர்கள் படை எடுத்து வந்தமையினால் அந்த நாகரீகம் அழிவுற்றது என்றும் கூறும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஒருக் கருத்தினையும் கூறுகின்றனர்.

சிந்து சமவெளியில் கண்டெடுத்த எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களை ஒத்து இருக்கின்றன என்பதே அந்தக் கருத்து ஆகும்.

மேலும் அங்கு காணப்படும் கட்டிடங்கள் சுட்ட செங்கலினால் கட்டப்பட்டு இருக்கும் பாங்கையும் கணக்கில் கொண்டு அவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தினை திராவிட நாகரீகத்தினுடன் ஒப்பிடுகின்றார்கள்.

“என்ன திராவிட எழுத்துக்களா…அப்படி என்றால் அங்கே இருந்தது திராவிடர்களா? அவர்கள் மேல் படை எடுத்து வந்தவர்கள் யார்?” போன்ற கேள்விகள் உங்கள் மனதினில் தோன்றுகின்றனவா?அந்த கேள்விகளுக்கு சான்றுகளுடன் விடைக் கூறும் முன் சிந்து சமவெளியில் நடந்தது என்ன என்பதினை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது மிக்க அவசியம் ஆகின்றது.
சிந்து சமவெளி நாகரீகம்… நடந்தது என்ன?

சிந்து சமவெளி நாகரீகத்தில் தமிழர்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றார்கள்(திராவிடம் என்பது தமிழையே குறிக்கும் எனவே திராவிடர்கள் என்று அவர்கள் குறிப்பிடுவது அக்காலத்தில் தமிழர்களையே). அவர்களின் மேல் நாடோடிகளான ஆரியர்கள் படை எடுக்கின்றார்கள். ஆரியர்கள் என்பவர்கள் மத்திய ஆசியாவில் இருந்தும் ஐரோப்பியாவில் இருந்தும் வந்த மக்களை குறிக்கும் சொல்லே ஆகும் (இட்லேர் (Hitler) தன்னை ஆரியன் என்று கூறிக் கொண்ட செய்தியினை நினைவிற் கொள்ளுங்கள்). அப்பொழுது நடந்த யுத்தத்தில் சிந்து சமவெளி நாகரிக மக்கள் தோற்று பின்வாங்குகின்றார்கள். ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைகின்றார்கள்.

நில்லுங்கள்… யுத்தம் நடந்தது என்று சொல்லுகின்றீர்களே. அதற்கு சான்றுகள் இருக்கின்றதா? என்றால் அந்த யுத்தத்தினைப் பற்றிய செய்திகள் ஆரியர்களின் ரிக் வேதத்திலேயே இருக்கின்றது என்பதே பதிலாகும்.

ரிக் வேதத்தில் யுத்தத்தினைப் பற்றிய செய்தியா… சற்று விளக்கமாக காண்போம்.

ரிக் வேதம் என்பது ஆரியர்களால் பாடப்பட்ட பல்வேறு பாடல்களின் தொகுப்பே ஆகும். போர்க்களத்தில் எதிரியை வெல்ல அவர்கள் இந்திரனிடம் வேண்டிய பாடல்கள் தான் வேதங்களாக தொகுக்கப்பட்டு உள்ளது. வேதத்தினை படித்தவர் எவரும் இதனை எளிதில் உணர்ந்துக் கொள்வர். மேலும் இந்த வேதங்களில் சிவன் என்றப் பெயரே எங்கேயும் வரவில்லை.

ஒரே ஒரு இடத்தில் மட்டுமே ருத்திரன் என்றப் பெயர் வந்து இருக்கின்றது. அந்த ருத்திரன் என்றச் சொல்லும் சிவனை குறிக்கின்றதா என்பது சந்தேகமே.

ஆரியர்கள் அசுரர்களை எதிர்த்து போர் செய்ததாகவும், அந்த மூர்க்கத்தனமான அசுரர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றி வெற்றி பெற செய்யுமாறு இந்திரனை அவர்கள் வேண்டுமாறு அந்தப் பாடல்கள் அமைந்து இருக்கின்றன.

இப்பொழுது நாம் அந்த அசுரர்கள் என்ற வார்த்தையினை சிறிது நன்றாக பார்க்க வேண்டும்.

ஆரியர்கள் நாடோடிகள் என்று நாம் கண்டோம். அவர்கள் இன்புற்று இருக்க ‘சுரா’ பானம் என்ற மதுவகை ஒன்றினை அருந்துவார்கள் (இந்தச் செய்தியும் அந்த வேதங்களில் இருக்கின்றது). தமிழர்கள் அந்த சுரா பானத்தினைக் அருந்த மாட்டார்கள். எனவே சுரா பானத்தினை அருந்தாதவர்கள் அ’சுரர்கள்’ ஆகி விட்டனர்.
சுரர்கள் - சுரா பானத்தினைக் குடிப்பவர்கள்.
அசுரர்கள் - சுரா பானத்தினை அருந்தாதவர்கள்.
இவ்வாறு ஆரியர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் மீது போர் தொடுத்து அதில் வெற்றியும் கண்டனர். கண்டு இந்தியாவினுள் நுழைகின்றனர்.

சரி… ஆரியர்கள் சிந்து சமவெளியில் வென்று விட்டார்கள். அங்கிருந்த தமிழர்களின் நிலை என்னாயிற்று… அவர்கள் தமிழர்கள் என்று நீங்கள் எவ்வாறு கூறுகின்றீர்… என்றுக் கேட்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன் சில கேள்விகள்…

௧) சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படும் பொருட்கள் பல தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் பகுதியிலும் காணப்படுவதினை நீங்கள் அறிந்து இருக்கின்றீர்களா?

௨) கடலில் மூழ்கிய பூம்புகார் நகர நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தினைக் காட்டிலும் பழமையானது என்று உங்களுக்குத் தெரியுமா?

௩) ‘ஊர்’ என்ற வேர்ச் சொல் தமிழில் இருக்கும் பொழுது ‘செயபூர் (jaipur)’ என்றும் ‘கான்பூர்’ என்றும் ‘நாக்பூர்’ என்றும் வட நாட்டில் உள்ள ஊர்களுக்கு பெயர் இருப்பது ஏன் என்று எண்ணி இருக்கின்றீர்களா?


௫) சிந்து சமவெளி மக்கள் ‘சிவலிங்க வழிப்பாட்டு’ முறையினை பின்பற்றினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடையினை அளிக்க கடலுள் மூழ்கி இருந்த ஒருக் கண்டம் வெளிவர வேண்டும்.!!!

அடுத்த பதிவில் அந்த கண்டம் வெளிவரும்…!!!


முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8

தொடரும்…

பி.கு:

சிந்து சமவெளி நாகரீகம் இயற்கை மாற்றங்களால் அழிந்தது என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தியாவின் மீது படை எடுத்து வந்த ஆரியர்கள் சிந்து சமவெளிக் காலத்தில் வர வில்லை என்றும் அவர்கள் கி.மு 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் மீது படை எடுத்துக் கொண்டு வந்தவரே ஆவர் என்பதும் புதிய ஆராய்ச்சிகள் கூறும் முடிவுகள் ஆகும். இதனைப் பற்றி மேலும் படிக்க ஆரியர்கள் யார் -1 , ஆரியர்கள் யார் -2. அவ்வாராய்ச்சிகளின் படி சிந்து சமவெளி நாகரீகம் வேற்று இனத்தவரின் எவ்வித கலப்பும் இல்லாது திகழ்ந்த முழுமையான திராவிட/ தமிழ் நாகரீகம் என்றே நாம் கூற முடியும்.

7 கருத்துகள்:

நல்ல கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள்.

Very nice...keep it up

Nalla muyarchi. Vaalthukkal.

Vote potachi.

TM 2.

நல்ல கட்டுரை. மிகவும் மகிழ்ச்சி உள்ளது முருகதாஸ் கூறியது போல நான் தமிழன் என்பதில் பெருமை படுகிறான்.
உங்களால்
நன்றி சகோ

தங்களது கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே!!!

நண்பரே! அருமையான படைப்பு.. உங்கள் எழுத்து நடையின் ரசிகன் நான்!

உங்கள் கட்டுரையில் ஒரு சிறு குழப்பம். உலகில் தோன்றிய முதல் நாகரிகம் சிந்து நாகரிகம் எனவும் அதில் உள்ளவர்கள் பேசிய மொழி தமிழ் மொழி (திராவிடம்) என்றும் சுட்டி காட்டினீர்கள். விவிலியத்தின் படியும் உலகத்தில் எல்லோரும் ஒரே பாஷையை பேசியதாக கூறப்பட்டுள்ளது. எனவே சிந்து மக்கள் மீது போர் தொடுத்த ஆரியர்கள் எவ்வாறு தோன்றினர்? அவர்கள் பேசிய மொழி என்ன? இவற்றை சற்று விளக்க முடியுமா?

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு