பிறவிக் கரை-
நீயோ ஆழ்கடல் மௌனம்!
மௌனத்தில் பிறப்பெடுத்து
ஆர்ப்பரித்துக் கரைச் சேர்ந்து
மீண்டும் மௌனத்திற்கே திரும்பும் அலையாய் நான்!!!
ஆர்ப்பரிப்பாய் மனம்...
மௌனமாய் நீ...
ஆர்ப்பரிக்கும் வரை மௌனம் புலப்படுவதில்லை -
மௌனமோ என்றும் ஆர்ப்பரிப்பதில்லை!!!
எம்பிரானே!
மௌனத்தின் சிறப்பு மௌனத்தால் அறியப்படுவதில்லை
இதோ
இவ்ஆர்பரிப்புகளுக்கு நடுவேயே அதன் அர்த்தம் புரியும்
என்றோ
காலத்தால் அலையாய் இப்பயணம்?
உன் எண்ணப்படியே பயணிக்கின்றோம்
வழிகள் நீ தந்தவை...
பயணமும் நீ வகுத்தவை...
பயணிப்பது மட்டுமே நாங்கள் செய்பவை!!!
வழித்துணையாய் நீ இருக்கையில்
கவலைகள் எதற்கு இவ்வாழ்க்கையில்!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!
தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...

-
"சில நேரங்களில் ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகின்றது தோழரே...அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு விட்ட இந்தச் சமூகத்தில் நாம் எ...
-
ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோ...
4 கருத்துகள்:
//மௌனத்தில் பிறப்பெடுத்து
ஆர்ப்பரித்துக் கரைச் சேர்ந்து
மீண்டும் மௌனத்திற்கே திரும்பும் அலையாய் நான்!!!
//
அருமையான வரிகள்!!!
தங்கள் பதிவிற்கு நன்றி நரேன்!!!
மௌனத்தில் பிறப்பெடுத்து
ஆர்ப்பரித்துக் கரைச் சேர்ந்து
மீண்டும் மௌனத்திற்கே திரும்பும் அலையாய் நான்!!!
-இந்த வரிகள் என்னைக் கவர்ந்தன...
நன்றி பிரகாஷ் ... தொடர்ந்து படியுங்கள் ... அப்படியே உங்கள் கருத்துகளையும் என்னை செம்மையாக்க பதியுங்கள்
கருத்துரையிடுக