சனி, 24 ஏப்ரல், 2010
சிறுமியின் கடிதங்கள் - 2
புரியவில்லை அம்மா உன் அன்பு
உலகிற்கு வளர்ந்தவளாக தெரியும் நான்
எப்படி உன் கண்களுக்கு மட்டும்
சிறுமியாகவே தெரிகின்றேன்" என்றேன்
“ஏன் என்றால் நீ இன்னும் சிறுமி தான்" என்றாய் புன்னகைத்துக் கொண்டே.
“நான் சிறுமி அல்ல! வளர்ந்து விட்டேனாக்கும்” என்றேன்.
“ஆம்! வளர்ந்து விட்டாய்…சிறுமியாகவே!!!” என்றாய்.
உண்மை புரிந்தது அம்மா,
காலங்களில் உன் பாசம் வளரும்
ஆனால்
உன் பார்வையில் நான் வளர்வதில்லை என்று !!!!
இப்படிக்கு,
- உன் அன்பு மகள்!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!
தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...

-
"சில நேரங்களில் ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகின்றது தோழரே...அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு விட்ட இந்தச் சமூகத்தில் நாம் எ...
-
ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோ...
2 கருத்துகள்:
எனக்குத் தெரிந்த ஒரு பாட்டி அடிக்கடி சொல்லலுவாள்,"ஊருக்கே ராசாவானாலும் தாய்க்கு அவன் மகன் தானே என்று".தாயின் பாசம் எப்போதுமே மாறுவதில்லை.
"தாயின் பாசம் எப்போதுமே மாறுவதில்லை." - உண்மை தான் அன்பரே !!!
கருத்துரையிடுக