ஒரு மாலை நேரம். ஒரு தென்றலோடு உரையாடிக் கொண்டு பூங்காவினில் நடந்துச் சென்று கொண்டு இருந்தேன்.

அவளைத் தென்றல் என்றால் சிலர் சண்டைக்கு வரலாம். இவள் தென்றலை விடவும் மெலிதானவள் எனலாம். தென்றல் கூட எதிர்க்காற்றாய் வீசும் போது அதன் கனம் தெரியும் ஆனால் இவள் ஒரு கணமும் கனப்பதில்லை என்று விளக்கமும் தரலாம்.

தவறு. இவள் கனக்கிறாள். இவள் என்னை பிரிந்து இருக்கும் கணங்களில் நினைவாய் கனக்கிறாள். எனவே இவள் தென்றல் தான்.


இவளைக் காண்பதற்கு இயற்கை அலங்காரம் சூடிக் கொண்டு நின்றது. 


 "விந்தையடி பெண்ணே நீ!!!
 இதோ பார்,
 நீ நடக்கையில் சிந்திய வண்ணங்களை
 மேகங்கள் எடுத்துச் சூடிக்கொள்வதை!!!" என்றேன்.

நின்றாள்.

நீ ஆரம்பித்துவிட்டாயா என்று சொல்வது போல் ஒரு பார்வையை என் பக்கம் வீசினாள். நீண்ட காலமாகவே கேட்க வேண்டும் என்று வைத்திருந்த கேள்வி ஒன்று நினைவிற்கு வந்தது.
"உன்கிட்ட ரொம்ப நாளாவே ஒண்ணு கேட்கணும்னு நினைத்து கொண்டிருந்தேன். கேட்கலாமா??" என்றேன்.
பெண்களுக்கே உரிய சந்தேகத்துடன் புருவத்தை உயர்த்தி ஒரு பார்வை பார்த்தாள். ஒரு வார்த்தையும் பேசாமல் தங்களது ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்துவது பெண்களுக்கு இயற்கை தந்த வரம் என்பதில் சந்தேகமே இல்லை.


"சற்றே புருவம் உயர்த்துகிறாள்
       அவளின் ஆளுமை உணர்த்துகிறாள்!!

"ஏய்! நீ சந்தேகப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. எதுவும் கேட்க வேண்டாம்னா சொல்லு... கேட்கல... முறைக்காத!!! என்றேன்.
"நான் ஒண்ணும் முறைக்கல" என்றாள்.
"அப்படினா கேட்கலாமா" என்றேன்
"ம்ம்ம்!!!". என்றாள்.

 "பேசுவதற்கு தான் கண்களை
        வைத்து இருக்கின்றாயே   
பின் ஏன் இதழ்களை தேவை இல்லாது
        அலங்கரித்து  கொண்டிருக்கிறாய்!!!" என்றேன்.

சற்று முகம் மலர்ந்தாள். பின் என்னை நோக்கித் திரும்பி


“..ம்ம்ம் ..!! கண்களால் முத்தமிட முடியாதே!!!”  என்று கூறி ஓடி மறைந்தாள்.

அப்படி என்றாள் இதழ்களுக்கு அலங்காரம் சரி தான்!!! 

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு