வியாழன், 25 பிப்ரவரி, 2010

என்னவள்!!!-2

என்று மாறியது என் பயண வழிகள் என்று தெரியவில்லை
அடுத்த தெருவிற்குச் செல்லும் வழி கூட இப்பொழுது உன் வீட்டைச் சுற்றியே!!!
உலக அழிவை நான் பள்ளிக்கு நேரத்தில் வரும் நாளெனக் கணக்கிட்டிருந்த‌
கணக்கு ஆசிரியர் மிரண்டு தான் போனார் -
பள்ளியில் முதல் மாணவனாய் - நான் ஒரு மாதமாய்!!!
'என்னடா திருந்திட்டியா என்றார்' புன்னகைத்தேன்...
'ஓ!! இதுதான் பிறவி பிழை - காதல் திருத்தமா??'


நன்றி உன் பள்ளிக்குத்தான் சொல்லவேண்டும்...
உன் பள்ளி நேரம் மட்டும் என் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம்
முன்னதாக இல்லாதிருந்தால்
திண்டாடி இருப்பேன்
ஏன் தாமதம் என்ற கேள்விக்குப் புது பதில்கள் தினம் தேடியே!!!

கருத்துகள் இல்லை:

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...