வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

என்னவள்!!!-1



"தோட்டத்தில் பூக்கள் வைத்துப் பார்த்திருக்கின்றேன்
         பூக்களே தோட்டம் வைப்பதை உன் வீட்டில் தான் கண்டிருக்கின்றேன்!!!
அன்று விழுந்த பனித்துளியைத் தாங்கி
         மண் பார்த்து நிற்கும் நாணலாய்
அன்று பூத்த பூக்கள் சூடி
         மண் பார்த்து நிற்கின்றாய் உன் கண் நான் பார்க்கும்போது நாணமாய்!!!
'நீ கைராசிக்காரியாம்!!!' ஊரில் சொல்லிக்கொள்கிறார்கள்
         ஊரெங்கும் பூக்கின்றன வெள்ளை உரோசாக்கள்
ஆனால் உன் வீட்டில் மட்டும் பூக்கின்றனவாம் உரோசாக்கள் சிவப்பாய்!!!
         தண்ணீர் ஊற்றிப் பூக்கள் வளர்க்கும் அவர்கள் எப்படி அறிவார்கள்,
நீ வெட்கம் ஊற்றிப் பூக்கள் வளர்ப்பதை!!!

கருத்துகள் இல்லை:

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...