வெள்ளி, 1 ஜனவரி, 2010

விண்ணில் இல்லா நட்சத்திரம்


சிறு வயதில் நான் நட்சத்திரங்களை எண்ணுவேனாக்கும்" என்றாள்!!!
"நானும் தான்" என்றேன்
"ஆ!!! மாட்டினாயா!!! அப்படி என்றால் சொல்
விண்ணில் நட்சத்திரம் எத்தனை என்று?" என்றாள்
புன்னகைத்தேன்...
"அது எல்லாம் எனக்குத் தெரியாது… ஆனால்
அன்று பார்த்த நட்சத்திரங்களில்
ஒன்று இன்று விண்ணில் இல்லை..." என்றேன்...
மங்கித்தான் போய் விட்டன நட்சத்திரங்கள்
என்னவள் நாணத்தின் முன்!!!
அந்தோ வீழ்த்தத் தான் நினைக்கிறாள்
அறிந்து என்னை ஞானத்தால்
ஆயினும் வீழ்த்தித் தான் செல்கிறாள்
அறியாது நாணத்தால்!!!...

கருத்துகள் இல்லை:

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...