சனி, 30 ஜனவரி, 2010

சிறுமியின் கடிதங்கள் - 1



உண்மை சொல் அம்மா!!!
நீ நேசித்த தென்றல் மீது கோபம் கொள்கிறாய்
   துவைத்த துணிகளை அவை தெரியாது மண் சேர்த்துவிடும் பொழுது!!
மழையிடமும் கோபம் கொள்கிறாய்
    அவை உலர்ந்த துணிகளை தெரியாது நனைத்திடும் பொழுது!!

நீ நேசிக்கும் அனைத்தின் மேலும்  ஒருகாலம் கோபம் கொள்கிறாய் 
  அவை உன் உழைப்பை வீணாக்கும் பொழுது!
பின் ஏனம்மா என்னை பார்த்து மட்டும் புன்னகைக்கிறாய் 
நீ கஷ்டப்பட்டு துவைத்த துணிகளை
   கஷ்டப்படாது அழுக்காக்கி கொண்டு வந்து நிற்கும் பொழுது!!!"

                                                                                                                                       இப்படிக்கு!!!
                                                                                                                                         - உன் அருமை மகள்

2 கருத்துகள்:

Sounds great சொன்னது…

நாககரஸ்ஸ்ஸ், உனது படைப்புகள் அற்புதமானவை என்று அனைவருக்கும் தெரியும். நீ இன்னும் நிறைய கதைகளும், கவிதைகளும் எழுத வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

Unknown சொன்னது…

un padaipugal anaithum arumai nanbanae ........super

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...