சென்ற பதிவில் இரண்டு விடயங்களைப் பற்றி பார்த்து இருந்தோம்.
௧) கிருத்துவ அமைப்புகள் எவ்வாறு அரசியல் அமைப்புகளாக செயல்படுகின்றன என்றும்
௨) வெறும் பணத்திற்காக சமயத்தினை உண்மையாக நேசிப்பவர்கள் மத மாற்றம் செய்ய மாட்டார்கள் என்றும் கண்டு இருந்தோம்.
இப்பொழுது நாம் இந்தியாவில் 'மத மாற்றத்தில்' தொடர்பினை உடைய மற்றுமொரு சமயமான இந்து சமயத்தினைப் பற்றிப் பார்க்க வேண்டும். "என்ன இந்து மதம் 'மத மாற்றத்தில்' தொடர்பினைக் கொண்டு இருக்கின்றதா...இந்துக்கள் எங்கே அடுத்த சமய மக்களை மதம் மாற்ற முயற்சிக்கின்றார்கள்...வீணாக வதந்திகளைப் பரப்பாதீர்கள்" என்று கூற வருகின்றீர்களா...சற்று பொறுங்கள். இது ஒரு வட்டம்... கிருத்துவ அமைப்புகள் மக்களை மதம் மாற்றுகின்றன...இந்து மக்கள் மதம் மாறுகின்றனர்...இந்து மதம் மத மாற்றத் தடைச் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்து மக்கள் அடுத்த மதத்திற்கு போவதை தடுக்க பார்க்கின்றது. எனவே மத மாற்றத்தோடு இந்து சமய மக்களும் சரி இந்து சமய அமைப்புகளும் தொடர்புக் கொண்டுத் தான் இருக்கின்றன. இப்பொழுது நாம் இந்து மக்கள் ஏன் மதம் மாறுகின்றனர் என்றும் இந்து சமயம் ஏன் அவர்கள் மதம் மாறுவதை தடுக்கப் பார்க்கின்றது என்றும் தான் காண வேண்டி இருக்கின்றது.
எந்த ஒரு சமய மக்களும், அவர்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட மற்றொரு சமயத்தினை வெறும் பணத்திற்காக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மேலும் நமது கலாச்சாரம் குடும்பங்கள் கூட்டாக சேர்ந்து வாழும் சமூகத்தினை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட ஒன்றாகும். எனவே ஒருவன் சமயம் மாறுகின்றான் என்றால் அவன் அதுவரை அன்பினால் கட்டுண்டு கிடந்த அந்த குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து செல்லும் நிலையாகவே அது இருக்கும்.எனவே அத்தகைய நிலையில் தனி ஒருவன் வெறும் பணத்திற்காக அனைத்தையும் துறந்து விட்டு செல்ல மாட்டான். அவ்வாறு செல்லவும் அவனது சமுகம் அவனை எளிதில் விடாது.
ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தநிலையிலும் மக்கள் மதம் மாறத்தான் செய்கின்றார்கள். இதன் காரணம் என்னவென்று நாம் இப்பொழுது ஆராய வேண்டி இருக்கின்றது. அட என்னங்க "அப்பாவி படிப்பறிவில்லாத மக்களை அவர்கள் சமயக் கருத்துக்களைப் பரப்பி மூளைச் சலுவை செய்கின்றார்கள். அதன் விளைவாகவே மக்கள் மதம் மாறுகின்றார்கள்...இதைப் போய் இன்னும் ஆராயணும் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க" என்று கூறுகின்றீர்களா...இப்பொழுது ஒருக் கேள்வி, சமயங்களின் தேவை யாது? அவைகளின் கடமை யாது?
வெறுமனவே காசினை வாங்கிக் கொண்டு பூசை செய்வதா? இல்லை வெறும் மந்திரங்களை மட்டுமே ஓதிக் கொண்டு கல்லுக்கு அபிசேகம் செய்வதா? அவ்வாறு செய்தால் தான் இறைவன் மகிழ்ச்சியாக இருப்பார் என்றக் கருத்தினைப் பரப்புவதா?. ஆம் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் இதோ ஏதோ கேள்விகளை சித்தரான சிவவாக்கியார் உங்களுக்காக எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே கேட்டு வைத்து விட்டு சென்று இருக்கின்றார்
"`நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"
நிற்க.
சமயங்கள் என்பன அவைகள் கூறும் முழுமுதற் கடவுளின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக் கூறியும், அம்மக்கள் அக்கருத்துக்களின் வழி அன்பாய் நின்று இறுதியில் அச்சமயங்கள் கூறும் பரம்பொருளை அடைவதற்குரிய வழிகளாக இருக்க வேண்டியவைகளே அன்றி வேறு கொள்கைகளை உடையனவைகளாக இருத்தல் இயலாது. இறைவனை அறியாத நிலையில் இருக்கும் மக்களை, இருட்டில் வழி தெரியாது கடலில் தத்தளிக்கும் படகுகளை எவ்வாறு கலங்கரை விளக்கம் பத்திரமாக ஒளியினைக் காட்டி கரை சேர்க்க உதவுகின்றதோ, அதனைப் போல் அற ஒளிக் காட்டி இறைவனை உணர்ந்து அவனை அடையும் வழியினை காட்டுவதே சமயங்களின் குறிக்கோளாக இருக்க முடியும். இருக்கவும் வேண்டும்.
கிருத்துவ சமயம் என்றால் கிருத்துவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று மக்களை நல்வழி படுத்தி அவர்கள் கிருத்துக் கூறிய நெறிப்படி வாழ செய்ய வேண்டும்.
இசுலாமிய சமயம் என்றால் அல்லாவின் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
சைவம் சிவனை அடைவதற்கான வழிகளை மக்களுக்கு கூற வேண்டும்.
வைணவம் பெருமாளினை அடைவதற்கான வழிகளை மக்களுக்கு கூற வேண்டும்.
அவ்வாறுக் கூறி மக்களின் அறியாமையை போக்க வேண்டும். மக்களிடத்து ஆன்மீக கருத்துக்களைக் கொண்டுச் சென்று அவர்களைத் தெளிவுற செய்ய வேண்டும். அவ்வாறு இருக்க 'எங்கள் சமயத்து மக்கள் அறியாமையில் இருக்கின்றனர்...அதனை மற்ற சமயத்து மக்கள் பயன்படுத்திக் கொண்டு மாற்றி விடுகின்றனர்" என்றுக் கூறுவது உங்கள் சமயத்து கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்று நீங்களே ஒப்புக் கொள்வதைப் போலத் தானே இருக்கின்றது. அப்பொழுது தவறு எங்கே இருக்கின்றது. மதம் மாறுபவன் அறியாமையால் மாறுகின்றான் என்றால் அவனை அந்த அறியாமை இருளில் வைத்தது யார்? அந்த அறியாமை இருளைப் போக்காமல் அதனில் குளிர் காய்ந்தது யார்? என்றாவது ஒரு நாள் அவன் அறியாமை நீங்கித் தான் தீர வேண்டி இருக்கின்றது. அந்நிலையில் அவன் அறியாமையை நீங்கள் விலக்கவில்லை என்றால் இன்னொருவன் நீக்குகின்றான் அதனைக் குறை கூறுவது எங்கனம் நியாயம்.
இப்பொழுது ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே கூற விரும்புகின்றேன். அலுவலகத்தில் எனது இசுலாமிய நண்பர் ஒருவர் தினமும் குர்ஆனில் இருந்து சில வரிகளைப் படித்து விட்டு வந்து அதனை என்னிடம் கூறி அதற்குரிய விளக்கமும் கூறுவார். நானும் ஆர்வமாக கேட்டுக் கொள்வேன். அச் செயலுக்கு அவர் கூறிய காரணம் "இது எங்களுடைய கடமை...அல்லாவின் கருத்துக்களை படித்து அதனை மக்களுக்கு கூற வேண்டும் என்பது எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை". அருமையான ஒரு செயல் தான். இறைவனின் கருத்துக்களாக அவர்கள் நம்பும் கருத்துக்களை மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றே அவர்கள் முயல்கின்றனர். இங்கே தான் நாம் இந்து சமயதினைக் காண வேண்டி இருக்கின்றது...
கிருத்துவர்களின் புனித நூல் விவிலியம் - அக்கருத்துக்களை மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ளலாம். மேலும் விவிலியத்தினை மக்கள் அனைவரும் படிக்கவும் செய்யலாம். தன்னிடம் விவிலியம் அல்லாத அல்லது விவிலியக் கருத்துக்களை அறியாத ஒரு கிருத்துவனை நீங்கள் காண முடியாது.
இசுலாமியர்களின் புனித நூல் குரான் - குரானின் கருத்துகளையும் மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ளலாம்...படிக்கவும் செய்யலாம். அதைப் போன்றே அனைத்து இசுலாமியர்களும் நிச்சயம் குரானை தங்களுடன் வைத்து இருப்பர்.
இப்பொழுது இந்து சமயத்தினைப் பற்றிப் பார்க்கலாம் (சைவ வைணவ சமயங்களுக்கும் சரி இந்து சமயத்திற்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை என்றே நாம் மற்ற பதிவுகளில் கண்டுக் கொண்டு வருகின்றோம்...அந்த விடயங்கள் இங்கே தேவை இல்லை என்பதால் அதனை பற்றிப் பார்க்காமல் இந்து சமயத்தினை பற்றி மட்டுமே காண்போம்).
இந்து சமயத்தின் புனித நூல் என்ன?
இக்கேள்விக்கு பெரும்பாலானோர் வேதங்கள் என்றே விடை தருவர்.
சரிப்பா வேதம் என்றால் என்ன? அவற்றில் என்ன கூறி இருக்கின்றது? என்றால் பெரும்பாலான மக்களுக்கு விடை நிச்சயம் தெரியாது. காரணம் விவிலியம் மற்றும் குரான் ஆகிய நூல்களைப் போன்று அனைத்து மக்களும் வேதங்களைப் படித்து விட முடியாது. இந்து சமயத்தில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு சிலருக்கே அவ்வேதங்களை பயிலும் உரிமையை இந்துச் சமயம் வழங்கி இருக்கின்றது. அதுவும் எந்த அடிப்படையில்...பிறப்பின் அடிப்படையில். அதனால் தான் வேதங்கள் என்று அறிந்த மக்களுக்கு வேதங்கள் என்றால் என்னவென்றும் வேதத்தில் என்ன கருத்துக்கள் கூறி இருக்கின்றன என்றும் தெரியாத நிலை இருக்கின்றது. ஒருவேளை ஒரு சாதாரண மனிதன் வேதங்கள் என்ன தான் சொல்லுகின்றன என்று பக்தி ஆர்வத்தில் வேதங்களைப் படித்து விட்டான் என்றால் அவனை என்ன செய்ய வேண்டும் என்றும் இந்து சமயத்தில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்". - மனுநூல் அத்தியாயம் 12, ஸ்லோகம் 4
அருமையான சட்டம் அல்லவா. இந்த சட்டத்தினை நாம் முழுமையாக அறிய வேண்டும் என்றால் சூத்திரன் என்பவன் யார் என்றே நாம் அறிய வேண்டி இருக்கின்றது. ஏனென்றால் நம்மில் பலர் அந்தச் சட்டம் சூத்திரன் என்ற ஒருவனைத் தானே கூறுகின்றது அச்சட்டம் நமக்கு பொருந்தாது என்றே எண்ணக்கூடும். அந்த எண்ணம் ஒரு வேளை சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம். சரி நாம் ஏன் வீணாக யூகிக்க வேண்டும். சூத்திரன் யார் என்று மனுநூலையே கேட்டுவிடலாமே. அதற்கு முன்னர் இந்து சமயம் மக்களை பிரித்து வைத்து இருக்கும் நான்கு பிரிவுகளை(பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன்) சற்று நினைவில் கொள்வது நல்லதாக இருக்கும். இப்பொழுது மனுநூலைக் காணலாம்..."ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்". - மனு நூல் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம்.
"பிராமணனுக்கு பஞ்சு நூலாலும் சத்திரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது." - மனுநூல் அத்தியாயம் 2 சுலோகம் 44
மேலே உள்ள வாக்கியங்களின் மூலம் சூத்திரன் என்பவன் பிரமனின் காலில் இருந்து பிறந்தவன் என்றும் அவனைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தவரும் பூணூல் பூண்டு இருப்பர் என்றே நாம் அறிந்துக் கொள்ளலாம். எனவே பூணூல் போடாத எவரும் வேதங்களைப் படிக்க கூடாது...படிக்கவும் முடியாது இந்து சமயத்தில். இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் வேதங்களைப் படிக்க இந்து சமயத்தில் அனுமதி இருக்கின்றதா இல்லையா என்று. ஆச்சர்யவசமாக இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையில் தொண்ணூறு சதவீதம் (90%) பேருக்கு இந்து சமயம் அந்த அனுமதியை வழங்கி இருக்கவில்லை. வேதங்களை படிப்பதற்கு மட்டும் என்றில்லை, சூத்திரர்கள் என்ற மக்களுக்கு மேலும் பல அனுமதிகளை இந்து சமயம் வழங்கி இருக்கவில்லை.
"அட என்னங்க வேதங்கள் இறைவன் அருளியவை...எவ்வளவு சிறப்பு மிக்கவை... அவற்றை எவ்வாறு சூத்திரன் படிக்கலாம்...தகுதியானவர் தானே படிக்கலாம்...அடுத்தப் பிறப்பில் அவன் புண்ணியம் செய்து இருந்தான் என்றால் பிராமனாகவோ அல்லது மற்ற வர்ணத்தில் ஒருவனாகவோ பிறந்து வேதங்களைப் படிக்கலாம்" என்று கூறினீர்கள் என்றால், இதோ மீண்டும் சிவவாக்கியார் வருகின்றார் சில கேள்விகளோடு...
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.
ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில் மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
இதில் வேதத்தையும் யாகத்தையும் கிழிக்கும் அவர், தகுதியானவர் என்று கூறப்படுபவர்களை
பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?
நோக்கி கேள்விகளை வீசுகின்றார்...மேலும் அதோடு நிற்காது மறுபிறப்பையும் ஒரு கை பார்க்கின்றார்,
கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே
எனவே மேலே உள்ள வரிகள் மூலம் வேதங்களின் இறவாத்தன்மையும் அத்தகைய வேதங்களை ஒரு சிலர் தான் படிக்கலாம் என்பது ஒரு சிலரின் சதிதான் என்றும் நாம் அறிய முடிகின்றது. சரி இப்பொழுது நாம் அதனுள் செல்ல வேண்டியதில்லை.
கிருத்துவ சமயமும் இசுலாமியச் சமயமும் அவைகளின் புனித நூல்களை அனைவரும் படிக்கலாம் என்றும் அச் சமயங்களின் ஆலயங்களுக்குள் அச்சமயத்தினர் எவர் வேண்டும் என்றாலும் எவ்வித பாகுபாடுமின்றி வரலாம் என்றுமே கூறுகின்றன. ஆனால் இந்துச் சமயமோ புனித நூல்கள் என்றுக் கூறப்படுபவையை ஒரு சிலர் தான் படிக்க வேண்டும் என்றும் மற்ற மக்கள் எவரும் அதனை படிப்பது ஏன்..அதனைப் பற்றிக் கேட்டாலே பாவம் என்றுக் கூறுகின்றது. இந்நிலையில் அவ்வாறு அவர்களின் புனித நூல்கள் என கூறப்படுபவைகளில் உள்ள இறைவனின் கருத்தினை அறிய முடியாத மக்கள் மற்ற சமயத்தில் இறைவன் கூறி உள்ள கருத்தினை அறிய வாய்ப்பு கிட்டினால் கற்பார்களா மாட்டார்களா? இங்கே மறுக்கப்படும் அனுமதி அங்கே கிட்டினால் அவர்கள் செல்வார்களா மாட்டார்களா? கற்பார்கள் தானே...செல்வார்கள் தானே...அதனை நாம் தவறென்று நாம் எவ்வாறு கூற இயலும்.
சரி இன்னும் வேறு சில விடயங்களையும் நாம் இப்பதிவுத் தொடர்பாக காண வேண்டி இருக்கின்றது....
காண்போம்...!!!
௧) கிருத்துவ அமைப்புகள் எவ்வாறு அரசியல் அமைப்புகளாக செயல்படுகின்றன என்றும்
௨) வெறும் பணத்திற்காக சமயத்தினை உண்மையாக நேசிப்பவர்கள் மத மாற்றம் செய்ய மாட்டார்கள் என்றும் கண்டு இருந்தோம்.
இப்பொழுது நாம் இந்தியாவில் 'மத மாற்றத்தில்' தொடர்பினை உடைய மற்றுமொரு சமயமான இந்து சமயத்தினைப் பற்றிப் பார்க்க வேண்டும். "என்ன இந்து மதம் 'மத மாற்றத்தில்' தொடர்பினைக் கொண்டு இருக்கின்றதா...இந்துக்கள் எங்கே அடுத்த சமய மக்களை மதம் மாற்ற முயற்சிக்கின்றார்கள்...வீணாக வதந்திகளைப் பரப்பாதீர்கள்" என்று கூற வருகின்றீர்களா...சற்று பொறுங்கள். இது ஒரு வட்டம்... கிருத்துவ அமைப்புகள் மக்களை மதம் மாற்றுகின்றன...இந்து மக்கள் மதம் மாறுகின்றனர்...இந்து மதம் மத மாற்றத் தடைச் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்து மக்கள் அடுத்த மதத்திற்கு போவதை தடுக்க பார்க்கின்றது. எனவே மத மாற்றத்தோடு இந்து சமய மக்களும் சரி இந்து சமய அமைப்புகளும் தொடர்புக் கொண்டுத் தான் இருக்கின்றன. இப்பொழுது நாம் இந்து மக்கள் ஏன் மதம் மாறுகின்றனர் என்றும் இந்து சமயம் ஏன் அவர்கள் மதம் மாறுவதை தடுக்கப் பார்க்கின்றது என்றும் தான் காண வேண்டி இருக்கின்றது.
எந்த ஒரு சமய மக்களும், அவர்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட மற்றொரு சமயத்தினை வெறும் பணத்திற்காக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மேலும் நமது கலாச்சாரம் குடும்பங்கள் கூட்டாக சேர்ந்து வாழும் சமூகத்தினை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட ஒன்றாகும். எனவே ஒருவன் சமயம் மாறுகின்றான் என்றால் அவன் அதுவரை அன்பினால் கட்டுண்டு கிடந்த அந்த குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து செல்லும் நிலையாகவே அது இருக்கும்.எனவே அத்தகைய நிலையில் தனி ஒருவன் வெறும் பணத்திற்காக அனைத்தையும் துறந்து விட்டு செல்ல மாட்டான். அவ்வாறு செல்லவும் அவனது சமுகம் அவனை எளிதில் விடாது.
ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தநிலையிலும் மக்கள் மதம் மாறத்தான் செய்கின்றார்கள். இதன் காரணம் என்னவென்று நாம் இப்பொழுது ஆராய வேண்டி இருக்கின்றது. அட என்னங்க "அப்பாவி படிப்பறிவில்லாத மக்களை அவர்கள் சமயக் கருத்துக்களைப் பரப்பி மூளைச் சலுவை செய்கின்றார்கள். அதன் விளைவாகவே மக்கள் மதம் மாறுகின்றார்கள்...இதைப் போய் இன்னும் ஆராயணும் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க" என்று கூறுகின்றீர்களா...இப்பொழுது ஒருக் கேள்வி, சமயங்களின் தேவை யாது? அவைகளின் கடமை யாது?
வெறுமனவே காசினை வாங்கிக் கொண்டு பூசை செய்வதா? இல்லை வெறும் மந்திரங்களை மட்டுமே ஓதிக் கொண்டு கல்லுக்கு அபிசேகம் செய்வதா? அவ்வாறு செய்தால் தான் இறைவன் மகிழ்ச்சியாக இருப்பார் என்றக் கருத்தினைப் பரப்புவதா?. ஆம் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் இதோ ஏதோ கேள்விகளை சித்தரான சிவவாக்கியார் உங்களுக்காக எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே கேட்டு வைத்து விட்டு சென்று இருக்கின்றார்
"`நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"
நிற்க.
சமயங்கள் என்பன அவைகள் கூறும் முழுமுதற் கடவுளின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக் கூறியும், அம்மக்கள் அக்கருத்துக்களின் வழி அன்பாய் நின்று இறுதியில் அச்சமயங்கள் கூறும் பரம்பொருளை அடைவதற்குரிய வழிகளாக இருக்க வேண்டியவைகளே அன்றி வேறு கொள்கைகளை உடையனவைகளாக இருத்தல் இயலாது. இறைவனை அறியாத நிலையில் இருக்கும் மக்களை, இருட்டில் வழி தெரியாது கடலில் தத்தளிக்கும் படகுகளை எவ்வாறு கலங்கரை விளக்கம் பத்திரமாக ஒளியினைக் காட்டி கரை சேர்க்க உதவுகின்றதோ, அதனைப் போல் அற ஒளிக் காட்டி இறைவனை உணர்ந்து அவனை அடையும் வழியினை காட்டுவதே சமயங்களின் குறிக்கோளாக இருக்க முடியும். இருக்கவும் வேண்டும்.
கிருத்துவ சமயம் என்றால் கிருத்துவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று மக்களை நல்வழி படுத்தி அவர்கள் கிருத்துக் கூறிய நெறிப்படி வாழ செய்ய வேண்டும்.
இசுலாமிய சமயம் என்றால் அல்லாவின் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
சைவம் சிவனை அடைவதற்கான வழிகளை மக்களுக்கு கூற வேண்டும்.
வைணவம் பெருமாளினை அடைவதற்கான வழிகளை மக்களுக்கு கூற வேண்டும்.
அவ்வாறுக் கூறி மக்களின் அறியாமையை போக்க வேண்டும். மக்களிடத்து ஆன்மீக கருத்துக்களைக் கொண்டுச் சென்று அவர்களைத் தெளிவுற செய்ய வேண்டும். அவ்வாறு இருக்க 'எங்கள் சமயத்து மக்கள் அறியாமையில் இருக்கின்றனர்...அதனை மற்ற சமயத்து மக்கள் பயன்படுத்திக் கொண்டு மாற்றி விடுகின்றனர்" என்றுக் கூறுவது உங்கள் சமயத்து கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்று நீங்களே ஒப்புக் கொள்வதைப் போலத் தானே இருக்கின்றது. அப்பொழுது தவறு எங்கே இருக்கின்றது. மதம் மாறுபவன் அறியாமையால் மாறுகின்றான் என்றால் அவனை அந்த அறியாமை இருளில் வைத்தது யார்? அந்த அறியாமை இருளைப் போக்காமல் அதனில் குளிர் காய்ந்தது யார்? என்றாவது ஒரு நாள் அவன் அறியாமை நீங்கித் தான் தீர வேண்டி இருக்கின்றது. அந்நிலையில் அவன் அறியாமையை நீங்கள் விலக்கவில்லை என்றால் இன்னொருவன் நீக்குகின்றான் அதனைக் குறை கூறுவது எங்கனம் நியாயம்.
இப்பொழுது ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே கூற விரும்புகின்றேன். அலுவலகத்தில் எனது இசுலாமிய நண்பர் ஒருவர் தினமும் குர்ஆனில் இருந்து சில வரிகளைப் படித்து விட்டு வந்து அதனை என்னிடம் கூறி அதற்குரிய விளக்கமும் கூறுவார். நானும் ஆர்வமாக கேட்டுக் கொள்வேன். அச் செயலுக்கு அவர் கூறிய காரணம் "இது எங்களுடைய கடமை...அல்லாவின் கருத்துக்களை படித்து அதனை மக்களுக்கு கூற வேண்டும் என்பது எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை". அருமையான ஒரு செயல் தான். இறைவனின் கருத்துக்களாக அவர்கள் நம்பும் கருத்துக்களை மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றே அவர்கள் முயல்கின்றனர். இங்கே தான் நாம் இந்து சமயதினைக் காண வேண்டி இருக்கின்றது...
கிருத்துவர்களின் புனித நூல் விவிலியம் - அக்கருத்துக்களை மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ளலாம். மேலும் விவிலியத்தினை மக்கள் அனைவரும் படிக்கவும் செய்யலாம். தன்னிடம் விவிலியம் அல்லாத அல்லது விவிலியக் கருத்துக்களை அறியாத ஒரு கிருத்துவனை நீங்கள் காண முடியாது.
இசுலாமியர்களின் புனித நூல் குரான் - குரானின் கருத்துகளையும் மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ளலாம்...படிக்கவும் செய்யலாம். அதைப் போன்றே அனைத்து இசுலாமியர்களும் நிச்சயம் குரானை தங்களுடன் வைத்து இருப்பர்.
இப்பொழுது இந்து சமயத்தினைப் பற்றிப் பார்க்கலாம் (சைவ வைணவ சமயங்களுக்கும் சரி இந்து சமயத்திற்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை என்றே நாம் மற்ற பதிவுகளில் கண்டுக் கொண்டு வருகின்றோம்...அந்த விடயங்கள் இங்கே தேவை இல்லை என்பதால் அதனை பற்றிப் பார்க்காமல் இந்து சமயத்தினை பற்றி மட்டுமே காண்போம்).
இந்து சமயத்தின் புனித நூல் என்ன?
இக்கேள்விக்கு பெரும்பாலானோர் வேதங்கள் என்றே விடை தருவர்.
சரிப்பா வேதம் என்றால் என்ன? அவற்றில் என்ன கூறி இருக்கின்றது? என்றால் பெரும்பாலான மக்களுக்கு விடை நிச்சயம் தெரியாது. காரணம் விவிலியம் மற்றும் குரான் ஆகிய நூல்களைப் போன்று அனைத்து மக்களும் வேதங்களைப் படித்து விட முடியாது. இந்து சமயத்தில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு சிலருக்கே அவ்வேதங்களை பயிலும் உரிமையை இந்துச் சமயம் வழங்கி இருக்கின்றது. அதுவும் எந்த அடிப்படையில்...பிறப்பின் அடிப்படையில். அதனால் தான் வேதங்கள் என்று அறிந்த மக்களுக்கு வேதங்கள் என்றால் என்னவென்றும் வேதத்தில் என்ன கருத்துக்கள் கூறி இருக்கின்றன என்றும் தெரியாத நிலை இருக்கின்றது. ஒருவேளை ஒரு சாதாரண மனிதன் வேதங்கள் என்ன தான் சொல்லுகின்றன என்று பக்தி ஆர்வத்தில் வேதங்களைப் படித்து விட்டான் என்றால் அவனை என்ன செய்ய வேண்டும் என்றும் இந்து சமயத்தில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்". - மனுநூல் அத்தியாயம் 12, ஸ்லோகம் 4
அருமையான சட்டம் அல்லவா. இந்த சட்டத்தினை நாம் முழுமையாக அறிய வேண்டும் என்றால் சூத்திரன் என்பவன் யார் என்றே நாம் அறிய வேண்டி இருக்கின்றது. ஏனென்றால் நம்மில் பலர் அந்தச் சட்டம் சூத்திரன் என்ற ஒருவனைத் தானே கூறுகின்றது அச்சட்டம் நமக்கு பொருந்தாது என்றே எண்ணக்கூடும். அந்த எண்ணம் ஒரு வேளை சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம். சரி நாம் ஏன் வீணாக யூகிக்க வேண்டும். சூத்திரன் யார் என்று மனுநூலையே கேட்டுவிடலாமே. அதற்கு முன்னர் இந்து சமயம் மக்களை பிரித்து வைத்து இருக்கும் நான்கு பிரிவுகளை(பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன்) சற்று நினைவில் கொள்வது நல்லதாக இருக்கும். இப்பொழுது மனுநூலைக் காணலாம்..."ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்". - மனு நூல் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம்.
"பிராமணனுக்கு பஞ்சு நூலாலும் சத்திரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது." - மனுநூல் அத்தியாயம் 2 சுலோகம் 44
மேலே உள்ள வாக்கியங்களின் மூலம் சூத்திரன் என்பவன் பிரமனின் காலில் இருந்து பிறந்தவன் என்றும் அவனைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தவரும் பூணூல் பூண்டு இருப்பர் என்றே நாம் அறிந்துக் கொள்ளலாம். எனவே பூணூல் போடாத எவரும் வேதங்களைப் படிக்க கூடாது...படிக்கவும் முடியாது இந்து சமயத்தில். இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் வேதங்களைப் படிக்க இந்து சமயத்தில் அனுமதி இருக்கின்றதா இல்லையா என்று. ஆச்சர்யவசமாக இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையில் தொண்ணூறு சதவீதம் (90%) பேருக்கு இந்து சமயம் அந்த அனுமதியை வழங்கி இருக்கவில்லை. வேதங்களை படிப்பதற்கு மட்டும் என்றில்லை, சூத்திரர்கள் என்ற மக்களுக்கு மேலும் பல அனுமதிகளை இந்து சமயம் வழங்கி இருக்கவில்லை.
"அட என்னங்க வேதங்கள் இறைவன் அருளியவை...எவ்வளவு சிறப்பு மிக்கவை... அவற்றை எவ்வாறு சூத்திரன் படிக்கலாம்...தகுதியானவர் தானே படிக்கலாம்...அடுத்தப் பிறப்பில் அவன் புண்ணியம் செய்து இருந்தான் என்றால் பிராமனாகவோ அல்லது மற்ற வர்ணத்தில் ஒருவனாகவோ பிறந்து வேதங்களைப் படிக்கலாம்" என்று கூறினீர்கள் என்றால், இதோ மீண்டும் சிவவாக்கியார் வருகின்றார் சில கேள்விகளோடு...
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.
ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில் மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
இதில் வேதத்தையும் யாகத்தையும் கிழிக்கும் அவர், தகுதியானவர் என்று கூறப்படுபவர்களை
பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?
நோக்கி கேள்விகளை வீசுகின்றார்...மேலும் அதோடு நிற்காது மறுபிறப்பையும் ஒரு கை பார்க்கின்றார்,
கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே
எனவே மேலே உள்ள வரிகள் மூலம் வேதங்களின் இறவாத்தன்மையும் அத்தகைய வேதங்களை ஒரு சிலர் தான் படிக்கலாம் என்பது ஒரு சிலரின் சதிதான் என்றும் நாம் அறிய முடிகின்றது. சரி இப்பொழுது நாம் அதனுள் செல்ல வேண்டியதில்லை.
கிருத்துவ சமயமும் இசுலாமியச் சமயமும் அவைகளின் புனித நூல்களை அனைவரும் படிக்கலாம் என்றும் அச் சமயங்களின் ஆலயங்களுக்குள் அச்சமயத்தினர் எவர் வேண்டும் என்றாலும் எவ்வித பாகுபாடுமின்றி வரலாம் என்றுமே கூறுகின்றன. ஆனால் இந்துச் சமயமோ புனித நூல்கள் என்றுக் கூறப்படுபவையை ஒரு சிலர் தான் படிக்க வேண்டும் என்றும் மற்ற மக்கள் எவரும் அதனை படிப்பது ஏன்..அதனைப் பற்றிக் கேட்டாலே பாவம் என்றுக் கூறுகின்றது. இந்நிலையில் அவ்வாறு அவர்களின் புனித நூல்கள் என கூறப்படுபவைகளில் உள்ள இறைவனின் கருத்தினை அறிய முடியாத மக்கள் மற்ற சமயத்தில் இறைவன் கூறி உள்ள கருத்தினை அறிய வாய்ப்பு கிட்டினால் கற்பார்களா மாட்டார்களா? இங்கே மறுக்கப்படும் அனுமதி அங்கே கிட்டினால் அவர்கள் செல்வார்களா மாட்டார்களா? கற்பார்கள் தானே...செல்வார்கள் தானே...அதனை நாம் தவறென்று நாம் எவ்வாறு கூற இயலும்.
சரி இன்னும் வேறு சில விடயங்களையும் நாம் இப்பதிவுத் தொடர்பாக காண வேண்டி இருக்கின்றது....
காண்போம்...!!!



.jpg)

















.jpg)