புகைவண்டி கடப்பதற்காக
நிலவு நிற்குமா – நிற்கின்றாய்!!!
நானும் நிற்கின்றேன்
வெட்கம் சூழ்ந்த உன் முகத்தை கண்டுகொண்டு!!!
கடந்து சென்ற புகைவண்டி நிச்சயம் சொல்லி இருக்க வேண்டும்
'பாவம் அவனை ஒரு முறை பார்த்து விடு என்று!!! '
திரும்பினாய்
" என்ன வேண்டும்!!!" என்றாய் எதுவும் அறியாதவள் போல்
"உன் காதல்!!" என்றேன் ....
மறுகணம் மேகம் மறைத்த நிலவை போல்
ஜன கூட்டத்தினுள் பறந்து மறைகிறாய்!!!
" மெதுவாகவே எடுத்து வா
உன் காதலை,
காத்திருப்பேன்
என் வாழ்க்கையோடு!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக