சனி, 30 ஜனவரி, 2010
சிறுமியின் கடிதங்கள் - 1
உண்மை சொல் அம்மா!!!
நீ நேசித்த தென்றல் மீது கோபம் கொள்கிறாய்
துவைத்த துணிகளை அவை தெரியாது மண் சேர்த்துவிடும் பொழுது!!
மழையிடமும் கோபம் கொள்கிறாய்
அவை உலர்ந்த துணிகளை தெரியாது நனைத்திடும் பொழுது!!
நீ நேசிக்கும் அனைத்தின் மேலும் ஒருகாலம் கோபம் கொள்கிறாய்
அவை உன் உழைப்பை வீணாக்கும் பொழுது!
பின் ஏனம்மா என்னை பார்த்து மட்டும் புன்னகைக்கிறாய்
நீ கஷ்டப்பட்டு துவைத்த துணிகளை
கஷ்டப்படாது அழுக்காக்கி கொண்டு வந்து நிற்கும் பொழுது!!!"
இப்படிக்கு!!!
- உன் அருமை மகள்
செவ்வாய், 26 ஜனவரி, 2010
அன்னங்களின் தேவதை
"அன்னப் பறவைகள் காலத்தில் மரித்து விட்டனவா?" என்றாய்
"இல்லை!! அவை உருமாறிவிட்டன" என்றேன்
" உருமாறிவிட்டனவா!! யாராய்? " என்றாய்
"பெண்களாய்!!!" என்றேன்
"பொய் சொல்கிறாய்!!! எங்க விளக்கு பார்ப்போம்" என்றாய்
" பொய் அல்ல !! என்னில் இருந்து என்னை எடுத்து விட்டு
உன்னை மட்டும் விட்டு செல்கிறாய் ,
இது அன்னத்தின் செயல் தான் அல்லவா!!!" என்றேன்
இது அன்னத்தின் செயல் தான் அல்லவா!!!" என்றேன்
...புன்னகைத்தாய்!!!
" அப்படி என்றால் நானும் அன்னப்பறவையா?" என்றாய் வெட்கத்துடன்...
"இல்லை!!!
நீ அன்னங்களின் தேவதை" என்றேன்.
தேவதை என் தோழ் சாய்ந்தது!!!
வெள்ளி, 22 ஜனவரி, 2010
முதல் பனித்துளி
என்று விழுந்திருக்கும் என் மேல் முதல் மழைத்துளி - தெரியவில்லையடி
ஆனால்,
புதிதாய் உன் பார்வை என்னை உரசியபொழுது உடல் சிலிர்த்ததே
அன்று விழுந்திருக்கக்கூடும் என் மேல் முதல் பனித்துளி!!!
ஞாயிறு, 3 ஜனவரி, 2010
கல்லறை பூக்கள்
கல்லறை பூக்கள் யாவும்
தண்ணீரை கேட்பதில்லை
கண்ணீரை கொண்டே அவை பூக்கும்!!!
கண்ணீரில் பூத்த பூக்கள்
துயில் கொள்ளும் தேசம் இது
என்றிந்த தேசம் வாசம் வீசும்..!!!
தண்ணீரை கேட்பதில்லை
கண்ணீரை கொண்டே அவை பூக்கும்!!!
கண்ணீரில் பூத்த பூக்கள்
துயில் கொள்ளும் தேசம் இது
என்றிந்த தேசம் வாசம் வீசும்..!!!
வெள்ளி, 1 ஜனவரி, 2010
விண்ணில் இல்லா நட்சத்திரம்
சிறு வயதில் நான் நட்சத்திரங்களை எண்ணுவேனாக்கும்" என்றாள்!!!
"நானும் தான்" என்றேன்
"ஆ!!! மாட்டினாயா!!! அப்படி என்றால் சொல்
விண்ணில் நட்சத்திரம் எத்தனை என்று?" என்றாள்
புன்னகைத்தேன்...
"அது எல்லாம் எனக்குத் தெரியாது… ஆனால்
அன்று பார்த்த நட்சத்திரங்களில்
ஒன்று இன்று விண்ணில் இல்லை..." என்றேன்...
மங்கித்தான் போய் விட்டன நட்சத்திரங்கள்
என்னவள் நாணத்தின் முன்!!!
அந்தோ வீழ்த்தத் தான் நினைக்கிறாள்
அறிந்து என்னை ஞானத்தால்
ஆயினும் வீழ்த்தித் தான் செல்கிறாள்
அறியாது நாணத்தால்!!!...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!
தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...

-
"சில நேரங்களில் ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகின்றது தோழரே...அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு விட்ட இந்தச் சமூகத்தில் நாம் எ...
-
ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோ...