இந்தியாவில் கட்டப்பட்ட முதல் இசுலாமிய மசூதி எங்கே இருக்கின்றது என்று தெரியுமா?

அது தமிழகத்திலேயே தான் இருக்கின்றது. ‘சேரமான் ஜம்மா மஸ்ஜித்’ என்று சேர மன்னன் சேரமான் பெருமாளுக்கு கட்டப்பட்ட அந்த மசூதி இன்று திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்காளூர் தாலுக்காவில் மேதாலா என்னும் இடத்தில் அமைந்து இருக்கின்றது.

பொதுவாக இசுலாமியர்கள் வடக்கில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் என்ற எண்ணமேதான் நம்மிடம் இருக்கின்றது. ஆனால் அதற்கு மாறாக இசுலாமியர்களான அராபியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சேர நாட்டின் வழியாக வாணிப ரீதியான நட்பு முறை இருந்திருக்கின்றது என்பதனை இந்த மசூதி நிரூபணம் செய்து கொண்டே இருக்கின்றது. வடக்கே இசுலாமியர்கள் படை எடுத்து வருவதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் இசுலாமிய மக்களுடன் நட்புறவுக் கொண்டு வாணிக உறவினைக் கொண்டிருந்தது. எனவே தான் தமிழகம் அனைத்து சமய மக்களும் அமைதியாக வாழும் ஒரு தேசமாக இருக்கின்றது.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு