விவிலியத்தில் கிருத்துவ வாழ்க்கை முறை விரிவாக இல்லையே ஏன்?

புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறையைக் கூறும் பகுதி, பழைய ஏற்பாட்டில் யூத வாழ்க்கை முறையைக் கூறும் பகுதி விரிவாக இருப்பதைப் போன்று விரிவாக இல்லையே - ஏன்?

கிருத்தவர்களை வேட்டையாடிய ரோம அரசர்கள் உருவாக்கியுள்ள புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறையை விரிவாகச் சேர்த்தால் அப்பகுதியில், கிருத்தவர்கள் ரோம ஆட்சியாளர்களின் பிடியில் பட்ட பாடுகளின் அனுபவமாகத்தானே இருக்கும்; அதை எப்படி ரோம ஆட்சியாளர்களின் புதிய ஏற்பாட்டில் சேர்க்க முடியும்?. முடியாது.

இது முதல் காரணம், இரண்டாம் காரணம், கிருத்தவ மதப் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில், கிருத்தவ வாழ்க்கை முறைப்பகுதி இல்லாமல் இருப்பதால் தானே, கிருத்தவ அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை மேற்கோளாக வாசிக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகிறது.

இதன் வழி இயேசு கிருத்துவின் ஆன்மீகச் செய்தி பழைய ஏற்பாட்டின் அரசியல் செய்திக்கு உட்படுத்தப்படுகிறது. இவற்றை உள்ளத்தில் கொண்டே ரோம ஆட்சியாளர்களால், புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறை பற்றிய செய்திகள் இணைக்கப்படவில்லை.

இவற்றை நாம் அறிய வேண்டுமானால் பைபிளை விட்டு திருச்சபை வரலாற்றுக்கு போக வேண்டி இருக்கிறது. இது ஐரோப்பிய ஆட்சியாளர்களின் இயேசு கிருத்துவின் இரட்சிப்பின் செய்திக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும்.

இந்த திட்டமிட்ட சதிகளால் ஐரோப்பியர்கள் அடைந்துள்ள இலாபங்கள் யாவை?

இன்று வரை உலகில் வாழ்ந்த உலகளாவிய ஆட்சியாளர்களில் முன்னிலையில் இருப்பவர்கள் ஐரோப்பியாவில் வாழும் ஐரோப்பியர்களும், ஐரோப்பாவிலிருந்து வேறு நாடுகளில் குடியேறி அங்கு ஆட்சி அமைத்த ஐரோப்பியர்களும் மட்டுமே.

இந்த நிலை இவர்களுக்கு கிடைக்க காரணமாக இருப்பவை இவர்களால் தொகுக்கப்பட்ட பைபிளும், பைபிளுக்கு இவர்களுடைய அரசியல் நோக்கில் இவர்களால் போதிக்கப்பட்டு வரும் விளக்கங்களுமே ஆகும்.

இவர்களால் தொகுக்கப்பட்ட பைபிளும், பைபிளுக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கங்களும், கடந்த ஆண்டுகளாக கிருத்தவ மதம் என்னும் நிலையில் ஐரோப்பியர் தலைமையிலேயே இன்று வரை இயங்கி வருகின்றன. இவர்களை மீறி யாரும் இதில் நுழையவும், இயங்கவும் முடியாதபடி கிருத்தவ மதத்தின் சட்டதிட்டங்கள் ஒரு சர்வாதிகார அமைப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

ஆகவே ஐரோப்பியர்களிடம் இரண்டு வகையான படைகள் இருக்கின்றன.

1. மற்றவர்களுடைய உடலை அடிமைப்படுத்த பயன்படும் படைக்கருவிகளைக் கொண்ட போர்ப் படை

2. மற்றவர்களுடைய உள்ளத்தை மூளைச் சலவை செய்து அடிமைப்படுத்தும் கிருத்தவ மதத் தலைவர்களும் பிரச்சாரர்களும் அடங்கிய மூளைச் சலவைப்படை.

கற்றுக் கொடுத்தல் வேறு; மூளைச் சலவை செய்தல் வேறு.

கற்றுக் கொடுத்தல் மற்றவர்களைச் சிந்திக்கவும், கேள்விகள் கேட்கவும் தூண்டுதல்.

மூளைச் சலவை செய்தல் நம்பு, சிந்திக்காதே, கேள்விகள் கேட்காதே என்று சிந்தனையைத் தடுத்தல்.

உடலை வன்முறையின்வழி அடிமைப்படுத்தும் போர்ப்படை அரசியல் களத்திலும், உள்ளத்தை மூளைச் சலவைச் செய்து அடிமைப்படுத்தும் படை, ஆன்மீகக் களத்திலும் இடைவிடாது வேலை செய்துக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஐரோப்பியர் தங்கள் இனம் குறித்தும், நிறம் குறித்தும், தங்கள் ஆட்சி குறித்தும், செல்வம் குறித்தும், செல்வாக்குக் குறித்தும் பெருமைக் கொண்டு மற்றவர்களை அற்பமாக எண்ணும் ஆணவ நிலையில் இருக்கின்றனர் என்பதும், இயேசு கிருத்துவின் இரட்சிப்பு என்பது இவர்களுக்கு பயன்படும் ஒரு கருவி என்பதும் இவர்களுடம் நாம் நடத்திய கடிதப் போக்குவரத்தின் வழி நமக்குப் புரிந்தது.

"போப்பாண்டவர் பதவி" எனபது கிருத்துவின் மீட்பைச் சிறப்பிக்கும் பதவி என நாம் நம்பி, போப்பாண்டவருக்கு கடிதம் எழுதிய பொழுது, அப்பதவி ரோம ஆட்சியாளர்களின் அரசியலுக்கான பதவி என்பதை நாம் புரிந்துக் கொள்ளுமாறு போப்பாண்டவரின் பதில் இருந்தது.

போப்பாண்டவர் தேர்தலில் உள்ள குறைகளை நாம் சுட்டிக்காட்டி அதை நிறைவு செய்வதற்கான வழிவகைகளை நாம் எழுதிய பொழுது அவர்களால் அதற்கு பதில் எழுத இயலவில்லை.

அவ்வாறே உலகம் முழுவதிலும் உள்ள ஆங்கிலத்திருச்சபையின் தலைவராகிய "Arch Bishop of Canterbury" யுடன் நடத்திய கடிதப் போக்குவரத்திலும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பதவியே திருச்சபைத் தலைவர் பதவி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

அவ்வாறே பெந்தகொஸ்தே சபைக் கொள்கையின் உலக தலைவர்களோடு நடத்திய கடிதப் போக்குவரத்தும், அவர்களுடைய அரசியல் சிந்தனையையே நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

இன்று உலகிலுள்ள இனவெறி, நிறவெறி, ஜாதிவெறி அனைத்தையும் ஐரோப்பியர், கிருத்தவ மதத்தின் வழி எவ்வாறு பாதுகாத்து வளர்த்து வருகின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

இவர்கள் இவ்வாறு நடந்துக் கொள்வதற்கு அடிப்படைக் காரணம் என்ன? - அறியாமை

இவர்கள் கையில் விளக்கை வைத்துக் கொண்டு குழியில் விழுவது ஏன்? குருட்டாட்டம். மனிதனுக்கும், குரங்குக்கும் ஐரோப்பியர்களுக்கு வேறுபாடு தெரியாது.

ஐரோப்பியர்கள் எக்காலத்திலும் ஆன்மீகச் சிந்தனை உள்ளவர்கள் அல்லர் என்பது வரலாறு. வணிகத்தில் சிறந்தவர்கள். மற்றவர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதில் வல்லவர்கள்.

"Man is a Social Animal" என நம்புகிறவர்கள்:

இவர்கள், அறிவியலில், அதாவது உடலைப்பற்றிய ஆய்வாகிய அறிவியலில் சிறந்தவர்கள். உலகிலுள்ள உயிரினங்களுக்கு இருக்கும் உயிரைப் பற்றியும், மனிதருக்கு மட்டுமே இருக்கும் ஆன்மாவைப் பற்றியும், மனிதருக்கு ஆன்மாவைக் கொடுத்த கடவுளைப் பற்றியும், கடவுளை உணர முடியாது தடுக்கும் ஆணவம் பற்றியும் இவர்களுக்குத் தெரியாது.

ஐரோப்பாவில் எந்த மதமும் உருவாகவில்லை. உலக மதங்கள் அனைத்தும் ஆசியாவில் மட்டுமே உருவாகியுள்ளன. இதனால் ஆன்மீக விசயத்தில் ஐரோப்பியர்களைக் குறை கூறிப் பயனில்லை. ஐரோப்பா ஒரு குளிர் கண்டம். இதனால் ஐரோப்பியர்கள் இயற்கையுடன் போராட வேண்டும். அவர்களுடைய கவனம் அதில் செல்லவில்லையானால் அவர்கள் இயற்கையால் அழிக்கப்பட்டு விடுவார்கள்.

ஆகவே அவர்கள் தங்கள் கவனத்தை எல்லாம் இவ்வுலக வாழ்விற்காகவே செலவழிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்காகவே தங்கள் நேரத்தைச் செலவழிக்கின்றார்கள். இதனால் இந்த உலக வாழ்வு நிலையில், அரசியலிலும், வணிகத்திலும் சிறந்து விளங்குகின்றார்கள்.

ஆன்மிகம் அவர்கள் கையில் மாட்டிக் கொண்டதே தவிர, அவர்கள் ஆன்மீகத்தை தேடிச் சென்று கண்டடைந்தவர்கள் அல்லர். ரோம அரசனாகிய கான்ஸ்டன்டின் ஆட்சியில் கிருத்துவம் இயல்பாக அவனுடைய அரவணைப்பின் கீழ் வந்தது. அதுவும், அரசியல் வெற்றிக்கான அவனுடைய காட்சியில் சிலுவையைப் போன்ற சின்னம் அவனுடைய அரசியல் வெற்றிக்குப் பயன்பட்டமையால், கிருத்துவத்தை அரவணைத்தான். பின்னரும் இவர்கள் வளர ரோம ஆட்சியாளர் கிருத்துவத்தை அவர்களுடைய அரசியலுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுவது ஆட்சியாளர்களின் இயல்பு.

அந்த இயல்பின்படி அவர்கள் செய்து வருகின்றார்கள். இதனால் அவர்களைக் குறை கூறிப் பயனில்லை.

தொடரும்...!!!

பி.கு:
 
1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
 
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842
 
3) பெந்தகோஸ்தே தலைவர்கள் என்று பலர் இருக்கின்ற காரணத்தாலும், அச்சபைப் பிரிவு அண்மைக்காலத்தில் தோன்றியதாக இருப்பதாலும், அவர்களுடன் நடத்திய கடிதப் போக்குவரத்துத் தவிர, மற்ற இருபெரும் அமைப்புகளுடனும் நடத்திய கடிதப் போக்குவரத்து இந்த நூலின் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு