விவிலியத்தில் அழித்தல் - அரமேய மொழி

அரமேயத்தில் மட்டுமே பரலோக இராஜ்யம்

புதிய ஏற்பாட்டு நூல்களில் இயேசு கிருத்து பேசிய அரமேயத்தில் முதலில் எழுதப்பட்ட மத்தேயு நூலில் மட்டுமே பரலோக இராஜ்யம் என்னும் பெயர் குறிக்கப்படுகிறது.

அரமேயத்திலிருந்து கிரேக்க மொழிக்கு மாற்றப்பட்ட மத்தேயு நூலிலேயே கூட "பரலோக இராஜ்யம்" என்னும் பெயருக்கு பதிலாக "தேவனுடைய இராஜ்யம்" என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளமை ரோம ஆட்சியாளர்களின் கைவரிசையையே காட்டுகிறது.

கிருத்தவத்தின் மூலமொழி ஆசியாவில் பிறந்த இயேசு கிருத்து பேசிய ஆசிய மொழியாகிய அரமேய மொழியாக இருத்தலே நியாயமானது.

அரமேய மொழியிலுள்ள நூல்களையெல்லாம் அழித்து விட்டு, ஐரோப்பிய மொழியாகிய கிரேக்க மொழியே கிருத்தவத்தின் மூல மொழி எனக் கூறுவது திட்டமிட்ட சதி ஆகும் என்பதில் ஐயம் இல்லை.

அரமேய மொழியில் எழுதப்பட்டு உள்ள நூல்கள் பழைய ஏற்பாட்டில் இருக்கின்றன. இந்தியாவில் அசோகருடைய கல்வெட்டு அரமேய மொழியில் இருக்கிறது. மத்தேயு நூலும் முதலில் அரமேயத்தில் எழுதப்பட்டது.

இப்படி இருக்க அரமேய மொழி பண்படாத மொழி எனக் கற்றுக் கொடுப்பது இயேசு கிருத்துவுக்கு எதிரான செயல் ஆகும்.

மேலும் இயேசு கிருத்து பேசிய அரமேய மொழியில் இயேசு கிருத்துவைப் பற்றிய நூல்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றனவா? என்னும் கேள்விகளுக்கு இப்பொழுது கிடைக்கும் பதில் அழிக்கப்பட்டு இருக்கின்றன என்பதேயாகும். இவ்வாறு அழிக்கப்பட்ட நூல்களில் பரலோக இராஜ்யம் பற்றிய விரிவான நூல்களும் அடங்கி இருக்க வாய்ப்பு உண்டு என்பதை எவரும் மறுத்தல் இயலாது. ஏனெனில் இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பு பரலோக இராஜ்யத்தைக் கற்றுக் கொடுக்க வந்த வருகை என்பதில் ஐயம் இல்லை.

விவிலியத்தில் மறைத்தல் - பலிக் கோட்பாடு

இயேசு கிருத்து உலக மீட்பர் என்பதை நிலைநாட்டுவது அவர் தம்மைப் பலியாக்கிய பலிக்கோட்பாடு. கடவுள் உலகில் மனிதனாகப் பிறந்து மனிதரை மீட்க தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தார் என்பதே கிருத்தவத்தின் ஆணிவேரான பலிக்கோட்பாடு.

இந்தப் பலிக் கோட்பாடு யூதர்கள் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியாவின் வருகைக் கோட்பாட்டுக்கு நேர் எதிரானது.

வருகைக் கோட்பாட்டில் இறந்தார், உயிர் பெற்றார், இரண்டாம் முறை வருவார் என்பன இன்றியமையாதவை.

இதனால், இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியாத பேதுரு, யோவான் போன்றவர்கள், இயேசு கிருத்து இறந்தார்; மீண்டும் உயிர் பெற்றார்; இதற்கு நாங்கள் சாட்சிகள் (அப். 2 :32) என்று பிரசங்கித்ததை நாம் பார்க்கின்றோம்.

இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை விரிவாக லூக்கா எழுதிய பின்னர், வெகுகாலம் கழித்து ஐரோப்பியர் தலைமையில் உருவாக்கப்பட்ட, அபோஸ்தலர் விசுவாசப் பிரமாணம், அதநாசியஸ் விசுவாசப் பிரமாணம், நிசேயா விசுவாசப் பிரமாணம் முதலிய விசுவாசப் பிரமாணங்களில் இயேசு கிருத்துவின் பலிக் கோட்பாடு முழுவதுமாக மறைக்கப்பட்டு, யூதர்கள் எதிர்பார்த்த இரண்டாம் வருகைக் கோட்பாடான, இறந்தார், உயிர் பெற்றார், திரும்ப வருவார் என்னும் இரண்டாம் வருகைக் கோட்பாட்டை வற்புறுத்தல், இயேசு கிருத்துவின் உலக மீட்புக் கோட்பாட்டுக்கு எதிரான ஐரோப்பிய அரசியல் சதி ஆகும். இதனை எவரும் மறுத்தல் இயலாது.

திரித்தல்
வெட்டல்
ஒட்டல்
இணைத்தல்
மாற்றல்
ஏமாற்றல்
அழித்தல்
மறைத்தல்

ஆகிய எட்டு முறைகளின் வழி இன்றும் ஐரோப்பியர் கிருத்தவ மக்களையும், உலக மக்களையும், கடவுள் நிலைநாட்டிய ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையிலிருந்து மாற்றி, சாத்தானின் கையிலுள்ள அரசியல் தனியுடைமை வாழ்க்கை முறையில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை எவரும் மறுத்தல் இயலாது.

மன்னர் ஆட்சிக் காலமும் மக்கள் ஆட்சிக் காலமும்:

சாத்தானின் கையிலுள்ள அரசியல் தனியுடைமை வாழ்க்கை முறை மன்னர் ஆட்சிக்காலத்திற்கு உரியது. இப்பொழுது உலகில் நடைபெற்று வருவது மக்கள் ஆட்சிக்காலம். மன்னர் ஆட்சிக்காலம் படிப்படியாக மறைந்து வருகின்றது. மக்கள் ஆட்சிக்காலத்திற்கு உரியது இயேசு கிருத்து கற்றுக் கொடுத்த ஆன்மீகப் பொதுஉடைமை வாழ்க்கை முறையாகும்.

ஆன்மீகப் பொது உடைமையும் அரசியல் பொது உடைமையும்:

ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கைமுறை வேறு; அரசியல் பொது உடைமை வாழ்க்கைமுறை வேறு.

அரசியல் பொதுஉடைமை அரசியலுக்கு உரிய வன்முறையாலும் அடக்குமுறையாலும் வருவது.

ஆன்மீகப் பொதுஉடைமை வாழ்க்கைமுறை மனமாற்றத்தால் வருவது. மனமாற்றம் பரலோக இராஜ்யக் கொள்கையால் வருவது. பரலோக இராஜ்யக் கொள்கையைப் புரிய வைத்து மனமாற்றத்தை உருவாக்கி ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கைமுறைக்கு வழி நடத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர்; புதிய ஏற்பாட்டு ஆவியானவர்.

பழைய ஏற்பாட்டு ஆவி, வன்முறையை அடிப்படையாகக் கொண்ட தனியுடைமை வாழ்க்கை முறையையுடைய அரசியலுக்கு வழிநடத்துவது. ஆகவே பழைய ஏற்பாட்டு ஆவி வேறு; புதிய ஏற்பாட்டு ஆவி வேறு.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


விவிலியத்தில் ஏமாற்றல் - வேத வாக்கியம்

புதிய ஏற்பாட்டிலுள்ள இயேசு கிருத்துவின் கொள்கைகள், பழைய ஏற்பாட்டிலுள்ள யூத மதக் கொள்கைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கு ஏற்ப புதிய ஏற்பாட்டு வசனங்களுக்கு, ஏமாற்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. அவற்றின் முக்கியமான ஒன்று

"வேத வாக்கியங்கள் யாவும் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.' (2தீமோ. 3:16) என்னும் பகுதியாகும்.

உலகத்தில் எத்தனையோ வேதங்கள் இருக்கின்றன. இந்துக்களின் வேதம் இருக்கிறது. இசுலாமியர்களின் வேதம் இருக்கிறது. கிருத்தவர்களின் வேதம் இருக்கிறது. யூதர்களின் வேதம் இருக்கிறது. இவற்றில் இங்கே இந்த வாக்கியத்தால் குறிக்கப்படும் வேதம் எது? என்று கூர்ந்து ஆராய்ந்தால், இந்த அதிகாரத்தின் 10ஆம் வசனத்தில் இருந்து தெளிவாக கிருத்துவ வேதத்தை மட்டுமே குறிக்கின்றனவே தவிர, யூத வேதத்தை நினைப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

ஆனால், ஐரோப்பியர் அரசியலுக்கு உட்பட்ட திருச்சபைத் தலைவர்கள் இந்த வசனம், உலகிலுள்ள வேதங்களில், யூத வேதத்தையும் கிருத்துவ வேதத்தையும் இணைத்துக் கூறுகிறது என்று போதிப்பது, இயேசு கிருத்துவின் ஆன்மீகக் கொள்கைகளை, யூத மதத்தின் அரசியல் கொள்கைகளுக்கு உட்படுத்தும் ஏமாற்று போதனை என்பது விளங்கும்.

ரோம ஆட்சியாளர்களின் அரசியலுக்குப் பழைய ஏற்பாடு தேவையே தவிர, புதிய ஏற்பாடு பயன்படாது. இதனால் புதிய ஏற்பாட்டுக் கருத்துக்களைப் பழைய ஏற்பாட்டுக் கருத்துக்களுக்கு உட்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இன்றியமையாததாகிறது.

புதிய ஏற்பாட்டிலுள்ள இயேசு கிருத்துவின் கொள்கைகளின்படி,

பணக்காரன் நரகத்திற்குரியவன்;
பிரபுக்கள் நரகத்திற்கு உரியவர்கள்;
அரசன் நரகத்திற்கு உரியவன்;

என்றா ரோம ஆட்சியாளர் போதிக்க முடியும்?

"பணக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன்;
பிரபுக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
அரசன் ஆசீர்வதிக்கப்பட்டவர்"

என்று கற்றுக் கொடுக்கப் புதிய ஏற்பாடு பயன்படாது. பழைய ஏற்பாடு தான் பயன்படும். இதற்கேற்ப புதிய ஏற்பாட்டுக் கருத்துகளைப் பழைய ஏற்பாட்டுக் கருத்துக்களுக்கு உட்படுத்திப் போதிக்க வேண்டிய நிலை ஆட்சியாளர்களின் தயவில் வாழுகிறவர்களுக்கு ஏற்படுகிறது.

இந்த நிலையே உலகத் திருச்சபைகளில் நடைபெற்று வருகிறது.

இதற்கேற்பவே "பரலோக இராஜ்யம்" என்பது "தேவனுடைய இராஜ்யம்" அல்லது "கடவுளுடைய இராஜ்யம்" என்று ஆக்கப்பட்டு உள்ளது.

"பரலோக இராஜ்யம்" என்பது ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையைக் குறிப்பதை முன்னர் கண்டுள்ளோம்.

"தேவனுடைய இராஜ்யம்" என்பது அதற்கு நேர் எதிரான தனியுடைமை வாழ்க்கை முறையைக் குறிப்பது என்பது எண்ணிப்பார்த்தால் புரியக் கூடிய ஒன்றாகும்.

எவ்வாறு?

கடவுள் அல்லது தேவன் என்பது யூதர்களுடைய உள்ளத்தில் அவர்களுடைய விடுதலைக்குக் காரணமான யெகோவா கடவுளையே நினைவுப்படுத்தும். "தேவனுடைய இராஜ்யம்" என்பது யெகோவா கடவுளின் அருமைப் பிள்ளைகளாகிய இசுரவேலின் இராஜ்யத்தை நினைவுபடுத்தும்.

"இசுரவேல் இராஜ்யம்" என்பது இசுரவேலருக்கு மட்டுமே உரிமையுடைய தனியுடைமை இராஜ்யம் என்பதைக் குறிக்கிறது. ஆகவே உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்குப் பொதுவான ஆன்மீகப் பொதுஉடைமை வாழ்க்கை முறை என்பது மாற்றப்பட்டு, இசுரவேலரின் தனியுடைமை வாழ்க்கை முறையைக் குறிப்பதாக மாற்றி, ஆன்மீக வாழ்க்கை முறை அரசியல் வாழ்க்கை முறைக்கு மாற்றப்படுகிறது.

இசுரவேலரின் அரசியல் வாழ்க்கை முறையைப் பாராட்ட வைத்து அதன் வழி ரோம அரசியலின் வாழ்க்கை முறையை நியாயப்படுத்த அது பயன்படுகிறது.

புதிய ஏற்பாட்டுக் கோட்பாட்டின்படி

"கடவுள் இராஜ்யம்" - என்பது வேறு;
"பரலோக இராஜ்யம்" - என்பது வேறு
.

"கடவுள் இராஜ்யம்" என்பது கடவுள் எப்பொழுது முதல் இருக்கின்றாரோ? அப்பொழுது முதல் கடவுள் இராஜ்யம் இருக்கிறது. கடவுள் இராஜ்யத்திற்கு வெளியே, அவருடைய ஆட்சிக்கு வெளியே வேறு எந்த ஆட்சியையும் கிடையாது; இருக்க முடியாது.

கடவுள் மனிதனைப் படைத்த பொழுது அவருடைய ஆட்சி உரிமையில் மனிதனுக்குப் பங்கு கொடுத்தார்.

"பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்." (ஆதி. 1:26-28)

மனிதன் அந்த ஆட்சி உரிமையை சாத்தானிடத்தில் இழந்து விட்டான். இதனால் பூலோக ஆட்சி உரிமை சாத்தானிடம் இருக்கிறது.

இந்த நிலையே லூக். 4:5-7 இல் விளக்கப்படுகிறது.

"பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்;நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்." (லூக். 4: 5-7)
1. ஆகவே கடவுளுடைய இராஜ்யத்தின் ஒரு பகுதியாக சாத்தானுடைய இராஜ்யம் விளங்கிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் சாத்தான் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்டே ஆக வேண்டும்.

2. இயேசு கிருத்து போதித்த பரலோக இராஜ்யமும் கடவுளுக்கு எதிரானது அன்று. இதனால் பரலோக இராஜ்யமும் கடவுளின் இராஜ்யத்தின் ஒரு பகுதியே.
 
3. இவற்றைப் போன்றே, கிருத்துவுக்கு எதிரான அந்திக் கிருத்துவும் கடவுளை எதிர்க்க முடியாது. அந்திக் கிருத்துவின் இராஜ்யமும் கடவுள் இராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

இதனால் கடவுள் இராஜ்யத்திற்குள்,

1. சாத்தானின் இராஜ்யம்
2. பரலோக இராஜ்யம்
3. அந்திக் கிருத்துவின் இராஜ்யம்.

ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்றன.

இதனால் பரலோக இராஜ்யம் என்பதை கடவுளின் இராஜ்யம் என்று குறிக்கும் பொழுது, பரலோக இராஜ்யத்தின் தனிச் சிறப்பு மறைக்கப்படுகிறது. ஆகவே எந்த விதத்திலும் இது தவறானது ஆகும்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


விவிலியத்தில் மாற்றல் - பரலோக இராஜ்யம்

"பரலோக இராஜ்யம்" என்னும் கொள்கைப் பெயரை "தேவனுடைய இராஜ்யம்" என்னும் கொள்கைப் பெயராக ரோம ஆட்சியாளர்கள் மாற்றியது ஏன்?

இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பும், இயேசு கிருத்துவின் பலியும், இயேசு கிருத்துவின் உயிர்த்தெழுதலும், இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யத்தை இப்பூலோகத்திலே நிலைநாட்டும் வரிசையான முயற்சிகளாகும்.

"பரலோக இராஜ்யம்" என்பது தன்னல வாழ்க்கை முறையில் இருந்து நீங்கி, பொது நல வாழ்க்கை முறையை ஏற்று வாழும் ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையாகும் என்பதை ஓரளவு பார்த்து உள்ளோம்.

பரலோக வாழ்க்கை அனுபவத்தை இப்பூலோகத்திலே பெற்று அனுபவிக்கும் வாழ்க்கை முறையை உடையதே பரலோக இராஜ்ய வாழ்க்கை முறையாகும்.

இந்த அனுபவத்தைக் கொடுப்பவர் பரிசுத்த ஆவியானவர். பரிசுத்த ஆவியானவரிடம் தம்மை ஒப்படைத்து, பரிசுத்த ஆவியானாவர் தம் உள்ளத்திலே அமர்ந்திருந்து தம்மை வழி நடத்தும் அனுபவத்தைப் பெற்றவர்கள், 1. தியாகம் 2. இழப்பு 3. துன்பம் ஆகிய மூன்று நிலைகளிலும் தம் உள்ளத்தில் இன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் அனுபவத்தில் வாழ்வார்கள்.

தியாகம் - என்பது தாமே விரும்பி தம் பொருளையும், தம்மையும் தியாகம் செய்தல்

இழப்பு - என்பது இயற்கையாகவோ, செயற்கையாகவோ இழப்பு ஏற்படுதல்

துன்பம் - இயற்கையாகவோ, செயற்கையாகவோ துன்பம் வருதல்

இந்த மூன்று நிலைகளிலும், பரிசுத்த ஆவியின் நிறைவையும், வழி நடத்தலையும் அனுபவிக்கிறவர்கள் துன்பம் அனுபவிப்பதில்லை. அவர்கள் வாழ்க்கை இவ்வுலகிலும் இன்பமானது. மறு உலகிலும் இன்பமானது. இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை. இதுவே பரலோக இராஜ்ய அனுபவம்.

இதை மனிதர்களுக்குக் கொடுக்கவே மகனாகவும், பரிசுத்த ஆவியாகவும் இருமுறை கடவுள் இவ்வுலகிற்கு வந்தார்.

இரண்டாம் வருகையில் நிலைநாட்டப்பட்டதே பரலோக இராஜ்யம். ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை.

இரண்டாம் வருகையில் நிலைநாட்டப்பட்ட ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை என்பது பொருளாசையைக் கைவிட்டு அனைவருடனும் பகிர்ந்து உண்டு வாழ்தல். இது பணக்காரனாக வேண்டும் என்னும் எண்ணத்திற்கு எதிரானது. இதனால் பணக்காரனாக வாழும் வாழ்க்கை முறை இயேசு கிருத்துவால் கண்டிக்கப்படுகிறது. பணக்காரன் ஆக விருப்பமுடையவன், நரகத்தை அடைவான் என்று கூறப்படுகிறது.

"பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்;" (மத். 6:19)

"இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." (மத். 6:24)

"ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்." (லூக். 18:25)

"அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது." (லூக். 18:240

"தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்." (லூக். 12:20)

" மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்." (லூக். 16:25)

இயேசு கிருத்துவின் இத்தகைய போதனைகளால் ஈர்க்கப்பட்ட மக்கள், கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியின் வருகையால் வழி நடத்தப்படும் பொழுது, தங்கள் ஆஸ்திகளை விற்று, அதை அனைவருக்கும் பொதுவாக வைத்து ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர் என்பதைப் பார்க்கின்றோம்.
 
"விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" (அப். 2: 44 - 46).
 
இதையே நாம் அப்.4 : 24-37, ஆம் பகுதியிலும் காணுகின்றோம்.
 
ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையில் பண ஆசைக்கு இடம் இல்லை. உலக மக்களுக்கு முன் மாதிரியான வாழ்க்கை முறையாக அது அமைந்து இருந்தது. அதுவே பரலோக ராஜ்யத்தை வெளிப்படுத்தும் பரலோக வாழ்க்கை முறையாக இருந்தது.

திருச்சபை வரலாற்றில் கடவுளால் உருவாக்கப்பட்ட ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டமைக்குக் காரணமாக, யூத மதமும், ரோம அரசும் செயல்பட்டதை நாம் திருச்சபை வரலாற்றில் பார்க்கின்றோம். யூதர்களும் பூலோக ஆட்சியை எதிர்பார்த்தவர்கள். ரோமர்களும் பூலோக ஆட்சியில் இருந்தவர்கள்.

பூலோக ஆட்சி சாத்தானுடைய அதிகாரத்தில் இருப்பதை லூக். 4:5-7 தெளிவாக விளக்குகிறது.
 
"பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்." (லூக். 4:5-7)
 
ஆயினும் இயேசு கிருத்துவால் அவர் வாழ்நாளில் விளக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிலை நாட்டப்பட்ட ஆன்மீகப் பொது உடைமையின் வாழ்க்கை முறை இன்று நம்மாலும் மற்றவர்களாலும் சிந்திக்கப்பட திருச்சபை வரலாறு நமக்குத் துணை புரிகிறது.

ஆகவே, பழைய ஏற்பாட்டின் வழி, யூதக் கிருத்துவர்கள் எதிர்பார்த்த இரண்டாம் வருகை சாத்தானோடு தொடர்புடைய இவ்வுலக ஆட்சி ஆகும்.

ஆனால், புதிய ஏற்பாட்டின் வழி இயேசு கிருத்துவால் விளக்கப்பட்டு, கடவுளின் இரண்டாம் வருகையில் பரிசுத்த ஆவியினால் நிலைநாட்டப்பட்ட ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை, பரலோக இன்பத்தை இப்பூலோகத்தில் அனுபவிக்கும் ஆன்மீக அனுபவம் ஆகும்.

ஆகவே, பழைய ஏற்பாட்டு வாழ்க்கை முறை வேறு; புதிய ஏற்பாட்டு வாழ்க்கை முறை வேறு.

பழைய ஏற்பாட்டு வாழ்க்கை முறை சாத்தானோடு தொடர்பு உடையது. அதாவது இவ்வுலக ஆட்சியோடு தொடர்பு உடையது. புதிய ஏற்பாட்டு வாழ்க்கை முறை பரலோக இராஜ்யத்தோடு தொடர்பு உடையது.

இந்த இரண்டு வாழ்க்கை முறைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்ட வாழ்க்கை முறை என்பது 2கொரிந். 3 ஆம் அதிகாரத்தில் சரியாக விளக்கப்படுகிறது.

"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?" - (2கொரிந். 3: 5-8)

கி.பி. 312 இல் ரோம ஆட்சியாளராகிய கான்ஸ்டன்டைன், அதுவரை வேட்டையாடப்பட்டு வந்த கிருத்தவர்களை, வேட்டையாடுவதை தடுத்தாரே தவிர, இயேசு கிருத்துவின் மீட்பை உணர்ந்து மனம் மாறிக் கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டவர் அல்லர்.

கலிங்கப் போரில் இறந்த வீரர்களின் குவியலைக் கண்ட அசோகர் மனம் மாறி பௌத்தத்தை ஏற்றுக் கொண்டு, பௌத்தத்தைப் பரப்ப தம் சொந்த மக்களையும் அனுப்பியதைப் போன்ற மாற்றத்தை நாம் கான்ஸ்டன்டைனில் காணுவதற்கில்லை.

கிருத்துவத்தை வேட்டையாடியதை நிறுத்தி, கிருத்துவத்தைத் தம் அரசியலுக்கு பயன்படுமாறு அவர் காலத்தில் புதிய ஏற்பாட்டின் தொகுப்பு வேலை தொடங்கப்பட்டு, திரித்தல், வெட்டல், ஒட்டல், இணைத்தல், மாற்றல் முதலிய பணிகளைச் செய்து கிருத்துவம் ரோம ஆட்சிக்கு கி.பி 312 முதல் இன்று வரை 1700 ஆண்டுகள் பயன்படுமாறு திறமையாகச் செயல் பட்டுள்ளமையை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம்.

இதற்கு ரோம ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட கருவி இரண்டாம் வருகைக் கோட்பாடு.

இரண்டாம் வருகைக் கோட்பாட்டின் வழி, புதிய ஏற்பாட்டிலுள்ள இயேசு கிருத்துவின் கொள்கைகள், பழைய ஏற்பாட்டில் உள்ள யூத மதக் கொள்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு கடந்த 1700 ஆண்டுகளாக மூளைச்சலவை செய்யப்பட்டு, பணக்காரன் லாசரு கதையில் இயேசு கிருத்து கூறி இருப்பதைப் போன்று, கிருத்தவர்கள் நரகத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றார்கள்.

இதில் மிகவும் பரிதாபப்பட வேண்டிய செய்தி கிருத்தவர்கள் தாங்கள் பழைய ஏற்பாட்டின் வழி நரகத்திற்கு ஆயுத்தப்படுத்தப்படுகின்றோம் என்பதை உணராமல் பைபிளைப் படிக்கும் பரிதாப நிலையேயாகும்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


விவிலியத்தில் இணைத்தல் - யாக்கோபு நிருபம்

இயேசு கிருத்துவின் சகோதரராகிய யாக்கோபின் நிருபம் புதிய ஏற்பாட்டில் இணைக்கப்பட்டு உள்ளது. எதற்காக? அவருடைய யூத மத விசுவாசத்திற்காக; கிருத்துவ விசுவாசத்திற்காக அன்று.

"அனனியா சப்பீராள் மரணத்திற்குப் பின்னர், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று." (அப். 5:11)
"மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை" (அப். 5:13) 

காரணம் அனனியா சப்பீராளிடம் பேதுரு நடந்துக் கொண்ட முறை கிருத்து போதித்த முறை அன்று; அன்பின் முறை அன்று; ஆணவத்தின் முறை ஆகும்.

இதனால், பேதுருவின் தலைமை, இயேசு கிருத்துவின் சகோதரராகிய யாக்கோபிடம் சென்றது என்பதைப் பார்க்கின்றோம்.

"மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்;" (அப். 21:18)

இது ஆரம்ப கால யூதக் கிருத்தவர்களின் நிலையை வெளிப்படுத்துகிறது.

இயேசு கிருத்துவின் சகோதரராகிய யாக்கோபு, மற்றவர்களுடன், உயிர்த்தெழுந்த கிருத்துவைக் கண்டவர் என்று 1.கொரிந்தியர் 15 ஆம் அதிகாரத்தில் பவுல் கூறி உள்ளார்.

"பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்" - 1 கொரி (15:7)

சகோதரர் என்னும் முறையில் உயிர்த்தெழுந்த கிருத்துவைத் தாயோடும் மற்றவர்களோடும் பார்த்தவரே, (அப். 1:14) தவிர, பவுலைப் போன்று மனம் மாறி கிருத்துவை ஏற்றுக் கொண்டவராக பைபிளில் குறிப்பு இல்லை.

"அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்." (அப். 1:14)

இயேசு கிருத்து உயிரோடு இருந்த காலத்தில் இயேசு கிருத்துவின் சிறப்பை உணர முடியாமல் கேலியாகப் பேசியவர்களில் இவரும் உண்டு. (யோவான் 7: 3-5)

"அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்." (யோவான் 7: 3-5)

ஆகவே யூத மத நம்பிக்கையிலிருந்து இவர் மாறியமைக்கான சான்று பைபிளில் இல்லை.

1. யூத மத நம்பிக்கையின்படி புறஜாதியாரை யூதர்களுக்குச் சமமானவர்கள் என்பதை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. (அப். 15:13-21)

2. இதனால் புறஜாதியாரோடு ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவதை இவர் எதிர்த்தார் என்று கலாத்தியர் 2:11-15 இன் வழி நாம் அறிகின்றோம்.

இவர் எதிர்த்தமையால் இவரைச் சேர்ந்த யூதர்களும் பேதுருவை எதிர்த்ததையும், இதனால் பேதுரு மாய்மாலம் பண்ணியதையும், பவுல் முகம் முகமாய் எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டமை கூறப்பட்டு உள்ளது.

3. பவுல் யூத மதக் கொள்கையிலிருந்து விலகி, கிருத்துவ இயக்கக் கொள்கையைப் போதித்தமையைத் தவறு என்று கண்டித்து அதற்குத் தண்டனை கொடுத்ததை அப். 21:21-24 காட்டுகிறது. 

"புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்.ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்;"(அப். 21:21-24)

4. இயேசு கிருத்துவின் பலியால் மீட்படைந்து கிருத்துவ இயக்கத்தை நடத்திய பவுலின் கொள்கை தவறானது என்று கண்டித்ததுடன் இயேசு கிருத்துவின் பலிக்கு எதிராக மீண்டும் எருசலேம் கோவிலில், யூத முறையின்படி பலியிடக் கட்டளையிட்டார். வேறு வழியின்றி அப்போதைய திருச்சபைத் தலைவரான யாக்கோபின் கட்டளையை நிறைவேற்ற தான் பலியிட உடன்படுவதாக பவுல் அறிவித்தார். (அப். 21:26)

"அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்." (அப். 21:26)

5. அவரால் எழுதப்பட்ட யாக்கோபு நிருபம் கிருத்தவர்களுக்காக எழுதப்பட்டது அன்று.  சிதறி இருக்கின்ற பன்னிரண்டு கோத்திரத்திற்கு எழுதப்பட்டது. (யாக். 1:1)

"தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:" (யாக். 1:1)

சிதறியிருக்கும் 12 கோத்திரத்தில் உள்ள கிருத்தவர்களுக்குக் கூட எழுதப்படாமல், கிருத்துவ இயக்கத்திற்குத் தொடர்பே இல்லாத யூத மதத்தவருக்கு எழுதப்பட்ட நிருபம். கிறித்தவக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண்பட்ட யூதர்களுக்கு யாக்கோபு எழுதிய நிருபம் பைபிளின் கிருத்துவப் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இணைக்கப்பட்டது ஏன்?

6. இந்த நிருபம் புதிய ஏற்பாட்டின் வைப்பு முறையில் பேதுரு நிருபங்களுக்கு முன்னர் வைக்கப்பட்டு இருக்கும் முறை ரோம ஆட்சியாளர்களின், கிருத்துவக் கொள்கைக்கு எதிரான யூத மதக் கொள்கையின் பற்றுதலை வெளிப்படுத்துகிறது.

பவுல் பன்னிருவரில் ஒருவர் அல்லர். சிறப்பாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர். அவருடைய நிருபங்களும் சிறப்பானவை. அவை வரிசையாகத் தொகுக்கப்பட்டு உள்ளன. கிருத்தவ விசுவாசத்திற்காகப் பவுலைத் தண்டித்த யூத விசுவாசத்தை உடைய யாக்கோபின் நிருபம் பேதுருவின் நிருபங்களுக்கு முன்னர் சிறப்பிடம் கொடுக்கப்பட்டு இருப்பதற்கு ரோமர்களின் அரசியலே காரணம்; ஆன்மிகம் அன்று.

இந்த நிருபம் கிருத்துவப் பகுதியில் இணைக்கப்பட்டு இருப்பதற்கும் ரோம ஆட்சியாளர்களின் அரசியல் தேவையே காரணம் ஆகும்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


விவிலியத்தில் ஒட்டல் - 7 வசனங்கள்

இயேசு கிருத்து முதல், திருச்சபைத் தலைவர்களை, கி.பி 312 வரை கொலை செய்த ரோம ஆட்சியாளர், புதிய ஏற்பாட்டை உருவாக்கும் பொழுது, திருச்சபையில் இருந்து ரோம ஆட்சியாளருக்கு எதிர்ப்புணர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுவது இயல்பு.

இந்த இயல்பின்படி கடவுளின் ஊழியக்காரர்களாக திருச்சபைத் தலைவர்களை மட்டுமே கிருத்துவப் பொது மக்கள் நினைப்பதை மாற்றி, அரசாங்கத்தின் பணியாட்களும், கடவுளின் ஊழியக்காரர்களே என மூளைச் சலவை செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்.

இந்த முறையில் திருச்சபை மக்களை மூளைச்சலவை செய்யும் பகுதி புதிய ஏற்பாட்டில் ஒட்டப்பட்டு உள்ளது. அவ்வாறு ஒட்டப்பட்ட ரோமர் 13 ஆம் அதிகாரத்தின் 1 முதல் 7 வசனங்களில் நாம் பார்க்கலாம்.

"ஆட்சியாளர்களின் பணியாட்கள் அனைவரும் கடவுளின் ஊழியக்காரர்களே" என்று கூறும் இப்பகுதியின் நோக்கம், இயேசு கிருத்து முதல், திருச்சபைத் தலைவர்கள் வரை கொலை செய்யப்படக் காரணம், அவர்கள் ஆட்சியாளர்களாகிய கடவுளின் ஊழியக்காரர்களுக்கு விருப்பமில்லாத காரியங்களைப் பேசியதும் செயல்பட்டதுமேயாகும் என்று பொது மக்கள் நம்ப வேண்டும் என்பது தானே! இந்த எதிர்பார்ப்பை இன்று வரை ஐரோப்பிய ஆட்சியாளர்களின் தலைமையிலுள்ள திருச்சபைகள் நிறைவேற்றி வருகின்றன என்பதைப் பார்க்கின்றோம்.

அவ்வாறு ஒட்டப்பட்ட 7 வசனங்கள், (ரோமர்-13 1:7)

1. எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

2. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்

3. மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.

4. உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.

5. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.

6. இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.

7. ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


விவிலியத்தில் திரித்தல் - இரண்டாம் வருகை

ரோமர்கள் கிருத்துவத்தை அரவணைத்து தங்கள் அரசியலுக்கு அடிமைப்படுத்தி வருவதனால், இயேசு கிருத்துவின் ஆன்மீகச் செய்திகள் அனைத்தும் ரோம ஆட்சியாளர்களின் அரசியலுக்கு ஆதரவான செய்திகளாகத் திரிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு திரிக்கப்பட்ட செய்திகளில் ஒன்றே இரண்டாம் வருகை பற்றிய செய்தி என்பது விளங்குகிறது.

இதில் திரிப்பதற்கு என்ன இருக்கிறது? பேதுரு, யோவான், பவுல் போன்றவர்களின் நம்பிக்கைகளும் எழுத்துக்களும் தானே அப்படியே கொடுக்கப்பட்டு உள்ளன. ஒன்றையும் கூட்டியதாகவும் குறைத்ததாகவும் தெரியவில்லையே? அப்படி இருக்க தொகுத்தவர்களை எப்படிக் குறை கூறலாம்? என்னும் கேள்வி நியாயமாகத் தோன்றலாம். ஆழ்ந்து நோக்கினால் அதில் நியாயமில்லை என்பது புரியும். எவ்வாறு?

நாம் முன்பு பார்த்தவாறு இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பை, பேதுரு, யோவான், பவுல் போன்றவர்கள் அறிய இயலாத சூழலில், அவர்கள் தங்கள் நம்பிக்கையை எழுதி உள்ளார்கள்.

இவர்கள் இறந்த பின்னர், புதிய சூழலில் லூக்கா அனைத்தையும் விசாரித்துத் தெளிவாக எழுதிய பிறகு, பழைய நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு அதன் மீது தங்கள் அரசியல் ஆதாயக் கருத்துகளை உருவாக்கிப் போதித்து வருவது எவ்வளவு பெரிய மோசடி செயலாகும் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது. இதுவரை நாம் பார்த்து வந்துள்ளவாறு, இன்றும் உலகம் முழுவதுமுள்ள கிருத்தவர்கள் எதிர்பார்க்கும் இரண்டாம் வருகை பற்றி ஐரோப்பியர் தலைமை தாங்கி நடத்தி வரும் போதனைகள் யாவும் அவர்களால் திரிக்கப்பட்ட போதனைகள் என்பதை யாரால் மறுக்க முடியும்?

கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியானவரின் வருகையை மறைத்து, யூத மேசியாவின் வர இருக்கும் வருகையாகத் திரித்து போதித்து வருவது மோசடி என்று கூறுவதைத் தவிர வேறு எவ்வாறு கூறுவது?

விவிலியத்தில் வெட்டல் - பவுல் கொல்லப்பட்டமை

திருச்சபை வரலாற்றைக் கூறும் அப்போஸ்தலர் நடபடிகளை எழுதியுள்ள லூக்கா, கி.பி 84இல் இறந்துள்ளார். அதுவரை எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்து அறிந்து எழுதி உள்ளார். இவர் பவுலுடன் மிக நெருக்கமாக அவருடைய ஊழியத்தில் செயல்பட்டு உள்ளார்.

பவுல், பேதுரு போன்றவர்கள் ரோம ஆட்சியாளர்களால் கொலை செய்யப்பட்ட பிறகே திருச்சபை வரலாற்றை எழுதத் தொடங்கி உள்ளார்.

பவுல் கைது செய்யப்பட்டு, ரோமாபுரியில் காவலில் வைக்கப்பட்டு இருந்த பொழுது அவருடன் தாம் இருந்ததைப் பற்றி எழுதி உள்ளார்.

இதுவரை எழுதி உள்ள லூக்கா, பவுல் கொலை செய்யப்பட்ட பின்னர் எழுதத் தொடங்கிய நூலில் பவுல் ரோம ஆட்சியாளர்களால், கொலை செய்யப்பட்ட வரலாற்றை ஏன் எழுதவில்லை? என்னும் கேள்வி எழுகின்றது.

பவுல், பேதுரு போன்ற தலைவர்கள் ரோம ஆட்சியாளர்களால் கொலை செய்யப்பட்ட வரலாற்றை லூக்கா எழுதவில்லையா? அல்லது அந்த நூலைத் தொகுத்த ஆட்சியாளர்கள் பவுல், பேதுரு போன்ற தலைவர்கள் கொலை செய்யப்பட்ட வரலாற்றை வெட்டி விட்டார்களா? என்னும் கேள்விக்கு, ரோம ஆட்சியாளர் மேல் வாசிக்கின்றவர்களுக்கு வெறுப்பு வரும் பகுதியை வெட்டி நீக்கி விட்டார்கள் என்பதே இயல்பான பதில் ஆகும்.

அதாவது ரோம ஆட்சியாளர்களால் தொகுக்கப்பட்ட புதிய ஏற்பாடாகிய 27 நூல்களில் ரோமர்களின் மேல் வாசிக்கிறவர்களுக்கு வெறுப்பு வரும் பகுதிகள் வெட்டப்பட்டன என்பதில் ஐயம் இல்லை. இது ஆட்சியாளர்களுக்கு உரிய இயல்பு.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


பூலோக இராஜ்யத்தின் பிடியில் பரலோக இராஜ்யம்

இயேசு கிருத்து கூறிய

"என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல"

என்பது என்ன ஆயிற்று? ரோம ஆட்சியாளர்களின் பூலோக இராஜ்யத்தின் பிடியில் பரலோக இராஜ்யம் மறைக்கப்பட்டு மறைந்து கிடக்கிறது.

இந்த நிலைக்கு ஏற்ப புதிய ஏற்பாட்டின் 27 நூல்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுக்கப்பட்டு, ஒழுங்கு செய்யப்பட்டு, ரோமர்களின் பூலோக இராஜ்யத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப 27 புத்தகங்களுக்கும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

பூலோக இராஜ்யத்தின் தலைவர்களால், அவர்களால் உருவாக்கப்பட்ட பைபிளுக்கு அவர்களுடைய பூலோக இராஜ்யத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப விளக்கம் கொடுக்கப்படுவது இயல்பான ஒன்றேயாகும்.

இதனால் பூலோக இராஜ்யத்தைக் கொடுக்கும் இரண்டாம் வருகை இன்னமும் நடைபெறவில்லை என்றும், அந்தப் பூலோக இராஜ்யத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்றும், பூலோக ஆட்சியாளர்களின் கையில் இருக்கும் திருச்சபைகளில் போதிக்கப்பட்டு வருகிறது.

வரலாற்றுப் பின்னணி

1. இயேசு கிருத்து ஆசியாவில் பிறந்த ஓர் ஆசியாக்காரர்.

2. இயேசு கிருத்துவின் சீடர்கள் அனைவரும் ஆசியாக்காரர்கள்.

3. இயேசு கிருத்து பேசிய அரமேய மொழி ஓர் ஆசிய மொழி.

4. கிருத்துவம் உருவான இடம் ஆசியா. இதனால், கிருத்துவம் ஓர் ஆசிய இயக்கம்.

5. கிருத்துவ வேதமாகக் கூறப்படும் பைபிளில் உள்ள நூல்கள் அனைத்தையும் எழுதிய அனைவரும் ஆசியாக்காரர்கள்.

6. கிருத்துவம் உட்பட உலகிலுள்ள அனைத்து மதங்களும் தோன்றிய இடம் ஆசியா.

ஆனால், ஆசியாவில் பிறந்த இயேசு கிருத்துவுக்கும், ஆசியாவில் தோன்றிய கிருத்துவ இயக்கத்திற்கும் எதிராகச் செயல்பட்டவர்கள் ஐரோப்பிய ஆட்சியாளர்கள். எவ்வாறு?

1. இயேசு கிருத்துவைக் கொலை செய்தவர் ரோம அரசனாகிய ஐரோப்பியர்.

2. கிருத்துவ இயக்கத்தைச் சேர்ந்த இயேசு கிருத்துவின் சீடர்களைக் கொலை செய்தவர்கள் ரோம ஆட்சியாளர்களாகிய ஐரோப்பியர்.

3. பவுல் போன்ற நற்செய்தியாளர்களைக் கொலை செய்தவர்கள் ரோம ஆட்சியாளர்களாகிய ஐரோப்பியர்.

4. கி.பி 312 வரை கிருத்துவ திருச்சபையை வேட்டையாடியவர்கள் ரோம ஆட்சியாளர்களாகிய ஐரோப்பியர்.

5. கி.பி 312 முதல் இன்று வரை கிருத்துவின் மீட்பின் செய்தியை அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்கள் ஐரோப்பியர். இதற்கு அவர்களுக்கு பயன்படும் கருவியாக அவர்களால் தொகுக்கப்பட்ட பைபிளைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆகவே, ஐரோப்பியர் கி.பி 312 வரை கிருத்துவையும், கிருத்துவின் மீட்பின் செய்தியைக் கூறும் கிருத்துவ இயக்கத்தையும் எதிர்த்து அழித்தவர்கள். கி.பி 312 முதல் ரோம ஆட்சியாளருக்கு உதவும் முறையில் திரித்தல், வெட்டல், ஒட்டல், இணைத்தல், மாற்றல், ஏமாற்றல், அழித்தல், மறைத்தல் ஆகிய எட்டு வகைகளில் பைபிளை உருவாக்கி, அதன் வழி கிருத்துவத்தை அரவணைத்து தங்கள் அரசியலுக்கு அடிமைப்படுத்தி வருகிறார்கள் என்பது வரலாறு.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


இயேசு கிருத்து நிலைநாட்டிய இராஜ்யம்

இயேசு கிருத்து "என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல" என்றார். (யோ. 18:36)

இதைப் புரிந்து கொள்ள இயலாத, தோமா நீங்கலான மற்ற சீடர்கள், இயேசு கிருத்து இரண்டாம் வருகையில் இந்த உலக இராச்சியமாகிய யூத இராச்சியத்தை ஏற்படுத்த வருவார் என்று போதித்தமை அவர்கள் இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறிய முடியாமல் ஏற்பட்டதன் விளைவைக் காட்டுகிறது என்பதைப் பார்த்தோம்.

திருச்சபை தவறாகப் போதிப்பது ஏன்?

இயேசு கிருத்து நிலைநாட்ட விரும்பியது பூலோக இராஜ்யமா? பரலோக இராஜ்யமா? என்னும் கேள்வி எழுந்தால் அவர் நிலைநாட்ட விரும்பியது பரலோக இராஜ்யம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆனால் அவர் பெயரால் செயல்படும் கிருத்துவத் திருச்சபை இன்று வரை, அவர் நிலைநாட்ட விரும்பியது பூலோக இராஜ்யமாகிய யூத இராஜ்யமாகிய இசுரவேல் இராஜ்யம் என்றும், இரண்டாம் வருகையில் இசுரவேலருக்கு இராஜ்யத்தை மீட்டுக் கொடுப்பார் என்றும் போதித்து வருவது ஏன்? என்னும் கேள்வி எழுகின்றது.

பரலோக இராஜ்யத்தை நிலைநாட்ட விரும்பிய இயேசு கிருத்துவின் செய்தி பூலோக இராஜ்யத்தை ஆளும் ரோம ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டு உள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது.

இயேசு கிருத்துவின் செய்தியை வரலாற்று அடிப்படையில் கூறும் நூல் பைபிள். இந்த பைபிளில் இயேசு கிருத்துவின் செய்தியைக் கூறும் வரலாற்றுப் பகுதி புதிய ஏற்பாடு. புதிய ஏற்பாட்டிலுள்ள 27 நூல்களைத் தொகுத்து, அவற்றை ஒழுங்குப்படுத்தித் திருச்சபைக்குக் கொடுத்து, திருச்சபையை கி.பி 312 முதல் இன்று வரை கடந்த 1700 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறவர்கள் ரோம ஆட்சியாளர்கள்.

இன்றும் திருச்சபையின் உலகத் தலைவராக விளங்கும் போப்பாண்டவர், தன்னுடைய அரசியல் இராஜ்யத்திற்கும் கிருத்துவ மதத்திற்கும் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்றார். அவருடைய அரசியல் தூதர்கள் உலக நாடுகளில் பரவி இருக்கின்றார்கள்.

ஆகவே, கிருத்துவ மதம் ரோமர் ஆட்சிக்கு உட்பட்ட ஓர் அரசியல் மதமாக இன்று விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


மூவொரு கடவுள் என்னும் உண்மையை உணர்ந்தவர் புனித தோமா மட்டுமே. எவ்வாறு?

இயேசு கிருத்து உயிர்த்தெழுந்ததைக் கூறிய மகதலேனா மரியாளின் செய்தியை அவருடைய சீடர்களில் யாருமே நம்பவில்லை. உயிர்த்தெழுந்த கிருத்துவை நேரில் பார்த்த பிறகே நம்பினார்கள்.

மற்ற சீடர்கள் தாங்கள் பார்த்த செய்தியை தோமாவிடம் கூறிய பொழுது, அவர் அறிவியல் ரீதியாக நான் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று உறுதியாகச் சொன்னதற்குக் காரணம் அவர்கள் ஓர் ஆவியைப் பார்த்திருக்கலாம் என எண்ணினார் என்பது நமக்குத் தெரிகிறது.

இதனால் தாம் தோமா,

"மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றார்." (யோ. 20:25)

இவ்வளவு தெளிவாகப் பேசிய தோமா இயேசு கிருத்து அவர் முன் தோன்றி

" நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு," (யோ. 20:27)

என்று கூறிய பொழுது உண்மையை அறிந்து உணர்ந்து

"என் ஆண்டவரே! என் தேவனே!" (கடவுளே) (யோ.20:28)

என்றார். தோமா இவ்வாறு இரண்டு சொற்களால் இரண்டு உண்மைகளை வெளியிட்டார்.

"என் ஆண்டவரே" என்பது அவருக்கு குருவாகிய மனிதனாக வாழ்ந்த இயேசு கிருத்துவைக் குறிப்பிடுகிறது.

"என் தேவனே" என்பது மற்ற சீடர்களுக்கு விளங்காத அடிப்படை உண்மையாகிய இயேசு கிருத்து கடவுள் என்பதைக் குறிப்பிடுகிறது.

அதாவது இயேசு கிருத்து யூதர்கள் எதிர்பார்த்த யூத இனத்தில் பிறந்த, யூத இனத்தின் மீட்பராகிய இவ்வுலக அரசன் அல்லர். உலக மீட்பராகிய பரலோக அரசனாகிய கடவுள் என்பதைக் குறிக்கிறது.

அவர் பார்த்த உருவம், உயிர்தெழுந்த கிருத்துவின் உருவம். அந்த உருவத்தில் தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகிய மூவொரு கடவுளின் நிலை இருக்கிறது என்பதை உணர்ந்து உலகுக்கு முதன் முதலில் அறிவித்த பெருமை தோமாவையே சேர்க்கிறது. எவ்வாறு?

1. மகனும் தந்தையும் இணைந்த நிலை

"இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்". (லூக். 23:46)

என்று கூறினார்.

"என் ஆவியை உமது கையில் ஒப்படைக்கின்றேன்" எனக் கூறி தம் ஆவியைப் பிதாவிடம் ஒப்படைத்த பொழுது பிதாவும் மகனும் ஒன்றாகி விட்டார்கள்.

2. தந்தை மகனுடன் பரிசுத்த ஆவியும் இணைந்த நிலை

"(உயிர்த்தெழுந்த இயேசு) அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;" (யோ. 20:22)

என்று கூறிய பொழுது பிதாவிலும் மகனிலுமிருந்து பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டு வருவதை அந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

இதனால், உயிர்த்தெழுந்த கிருத்து, தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகிய மூவொருவராய் இருப்பது தெளிவுப்படுத்தப்படுகிறது.

மற்றச் சீடர்களின் நிலை

தோமாவைத் தவிர மற்ற சீடர்கள், இயேசு கிருத்துவை யூத இனத்தின் மீட்பராகிய யூத இனத்தினர் என்பதாக மட்டுமே அறிந்திருந்தார்கள் என்பதும், தோமா மட்டுமே உயிர்த்தெழுந்த கிருத்து உலக மீட்பராகிய மூவொரு கடவுள் என்பதாக அறிந்துக் கொண்டார் என்பதும் நமக்கு விளங்குகின்றன.

மூவொரு கடவுளாகத் தோமாவால் புரிந்து கொல்லப்பட்ட இந்த நிலையை மற்றச் சீடர்களுக்கு அவர் விளக்கினார் என்பதற்கு பைபிளில் ஆதாரம் இல்லை. விளக்கினாலும் அவர்களால் புரிந்து கொள்ள இயலுமா? என்பது அடுத்த கேள்வி. ஏனெனில் அவர்கள் யோசேப்புக்குப் பிறந்த யூதனாக இயேசுவை நம்பினார்கள் என்பதைப் பார்த்தோம்.

கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியானவரின் பொழிவைப் பெற்ற பின்னர், இயேசு கிருத்து கொடுத்த கட்டளையாகிய

"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்" (அப். 1:8)

இதன் படி, உலகின் கடைசி வரை தோமா சென்று விட்டார் என்பதை உலகில் வேறு எங்கும் இல்லாமல், தமிழகத்திலுள்ள அவருடைய அடக்க இடம் சுட்டிக் காட்டுகிறது. இதனால், அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்திற்குப் பின்னர் அவரைப் பற்றிய செய்தி எதுவும் பைபிளில் இல்லை.

தொடரும்....!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

முந்தையப் பகுதி

இரண்டாம் வருகை நிறைவேறி விட்டதா? திட்டமாய் அறிவது எவ்வாறு?

அப்படியானால், இயேசு கிருத்து கூறி இருந்தபடி இரண்டாம் வருகையில் நிறைவேற வேண்டிய பரலோக இராஜ்யம் நிலை நாட்டப்பட்டு விட்டதா? அவற்றை எவ்வாறு திட்டமாய் அறிவது? என்னும் கேள்விகள் எழுகின்றன.

இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையைக் கூறும்,

மத்.16:28 ஆம் வசனத்திற்கு

"இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (மத்.16:28).
 
Full Life Study Bible-இன் அடிக்குறிப்பில் கீழ்க்காணுமாறு விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

"COMING IN HIS KINGDOM. the "Son of man coming in his Kingdom" probably refers to the event of pentecost when christ Baptized his followers in the holy sprit and great power."

மேலே கூறப்பட்டு உள்ள விளக்கம் ஆழ்ந்து நோக்கத்தக்கது. "இரண்டாம் வருகை" என்பது கடவுள் பரிசுத்த ஆவியாக வரும் வருகையைக் குறிப்பதாக இங்கு கொள்ளப்படுவதற்கு இடம் இருக்கிறது என்று கூறப்பட்டு இருக்கிறது. இவ்வாறு கொள்ளுவது பொருத்தமானதா? என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

இவ்வாறு விளக்கம் கூறுவது பொருத்தமானதா?

கிருத்துவ அனுபவம் கடவுளை மூன்று நிலைகளில் நோக்குவதாக அமைந்து உள்ளது.

1. என்றுமுள்ள கடவுள் - முதல் நிலை
2. என்றுமுள்ள கடவுள் குமாரனாக வந்த நிலை - இரண்டாம் நிலை
3. என்றுமுள்ள கடவுள் பரிசுத்த ஆவியாக வந்த நிலை - மூன்றாம் நிலை


இந்த மூன்று நிலைகளும் மூன்று வெவ்வேறு ஆட்களின் நிலை அன்று. ஒரே கடவுளின் மூன்று 'கால நிலை' ஆகும்.

மனிதனைப் படைத்த அதே கடவுள், மனிதனை மீட்கத் தானே மனிதனாக வந்தார். மனிதனை மீட்ட பின்னர், அவன் உள்ளத்தில் இருந்து அவனை வழி நடத்தத் தானே பரிசுத்த ஆவியாக வந்தார்.

ஆகவே, ஒரே கடவுளின் 'இரண்டு வருகை' மூன்று நிலைகளில் செயல் படுகிறது என்பது பரிசுத்த ஆவியை அனுபவிக்கிறவர்களின் அனுபவ நிலை ஆகும்.

என்றுமுள்ள கடவுள் மகனாக வந்த பின்னர், என்றுமுள்ள கடவுள், தந்தை என்று அழைக்கப்படுகின்றார். ஆகவே,

1. தந்தையாகிய கடவுள்
2. மகனாகிய கடவுள்
3. பரிசுத்த ஆவியாகிய கடவுள்

என்று கடவுளை மூன்று நிலைகளில் பார்க்கும் பார்வை கிருத்துவத்தில் நிறைவாகிறது.

இந்த மூன்று நிலைகளையும் தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்று இணைப்பதற்குக் கடவுளின் முதல் வருகை மகனாகவும், கடவுளின் இரண்டாம் வருகை பரிசுத்த ஆவியாகவும் வந்தால் தான் மூவொரு கடவுள் நிலை தெளிவுபடும்.

ஆகவே "இரண்டாம் வருகை" என்பது கடவுள் இரண்டாம் முறை பூமிக்கு வந்த பரிசுத்த ஆவி நிலையைக் குறிப்பதே ஏற்றதாகும். Full Life Study Bible-இன் அடிக்குறிப்பு சரியாகவே அமைந்துள்ளது.

இந்த நிலை இயேசு கிருத்து கூறியவாறு, யூதாசு காரியோத்தின் இறப்பிற்குப் பின்னர் உருவானமையால்

"இங்கே இருக்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை" என்று இயேசு கிருத்து கூறியது நிறைவேறி உள்ளமையைக் காட்டுகிறது.

பரிசுத்த ஆவியின் வருகையை இரண்டாம் வருகை என்று கொள்ளாவிட்டால், இயேசு கிருத்து கூறியது தவறு என்னும் நிலையை உருவாக்கி விடும்.

இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையா? கடவுளின் இரண்டாம் வருகையா?

இயேசு கிருத்துவை, யூத மதத்தில், யூத இனத்தில் வந்த யோசேப்புக்குப் பிறந்த, ஒரு யூதனாகிய மனிதனாகவே அவருடைய சீடர்கள் எண்ணினார்கள். அதனால் அவர் யூதர்கள் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியா என்று நம்பினார்கள். அவருடைய முதல் வருகையில் அவர் யூதர்களுடைய இராஜ்யத்தை ரோமர்களிடமிருந்து மீட்டுத் தராமல் சென்று விட்டமையால் அவருடைய இரண்டாம் வருகையில் யூதர்களுடைய இராஜ்யத்தை மீட்டு அவர்களுக்குத் தருவார் என்று நம்பினார்கள்.

உண்மையில் அவர் யூத இனத்தில் வந்த யோசேப்புக்குப் பிறந்த ஒரு யூதனாகிய மனிதன் இல்லை. அவர் கடவுளாகிய பரிசுத்த ஆவியினால் உருவான கடவுளின் மகனாகிய கடவுள் என்பதை அவர்கள் அறியவில்லை.

இதனால் இயேசு கிருத்து கூறிய இரண்டாம் வருகை கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியின் வருகை என்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள இயலவில்லை.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


கடவுளின் மகனால் கற்றுக் கொடுக்கப்பட்ட பரலோக இராஜ்ஜியம்:

இயேசு கிருத்துவின் முன்னோடியாக விளங்கிய யோவான் ஸ்நானகன்,

"மனந்திரும்புங்கள், பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கம் பண்ணினார் (மத்.3 : 2).

இயேசு கிருத்து தம்முடைய பன்னிரு சீடர்களையும்

"பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கியுங்கள் (மத்.10:7) என்று சொல்லி அனுப்பினார்.

'பரலோக இராஜ்யம்' என்னும் பெயர், இயேசு கிருத்து பேசிய அவருடைய சொந்த மொழியான அரமேயத்தில் முதலில் எழுதப்பட்ட மத்தேயு நற்செய்தி நூலில் மட்டுமே காணப்படுகிறது.

கிரேக்க மொழியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் புதிய ஏற்பாட்டின் மற்ற நூல்களில் காணப்படவில்லை. மற்ற நூல்களில் "பரலோக இராஜ்யம்" என்பதற்குப் பதிலாக தேவனுடைய இராஜ்யம் என்னும் பெயர் காணப்படுகிறது.

'பரலோக இராஜ்யம் என்பது வேறு:
'தேவனுடைய இராஜ்யம்' என்பது வேறு.

இரண்டும் ஒன்று ஆக மாட்டாது.

"பரலோக இராஜ்யம்" என்பது இயேசு கற்றுக் கொடுத்த இராஜ்யம்.

"என்னுடைய இராஜ்யம் இந்த உலகத்திற்குரியது அன்று" என்று இயேசு கிருத்து பிலாத்துவினிடம் கூறினார். (யோ. 18 :36)

பிலாத்துவின் இராஜ்யம் இந்த உலகத்திற்குரிய இராஜ்யம். யூதர்கள் எதிர்பார்த்த இசுரவேலர் இராஜ்யமும் இவ்வுலகத்திற்குரிய இராஜ்யம்.

ஆனால் இயேசு கிருத்து கற்றுக் கொடுத்த பரலோக இராஜ்யம் அவர் உயிர்த்தெழுந்த பின்னர் இந்த உலகில் வர இருக்கும் இராஜ்யம். அதற்கு ஆயுத்தமாகுமாறு யோவான் ஸ்நானகனும் இயேசு கிருத்துவும் கற்றுக் கொடுத்தார்கள்.

1. யோவான் ஸ்நானகன்
 
மனந்திரும்புங்கள் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான் (மத்.3:2)
 
2. இயேசு கிருத்து பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள் என்றார். (மத். 10:7)

"இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (மத்.16:28).


இந்த வசனங்களின்படி, மனுஷ குமாரனின் இரண்டாம் வருகை விரைவில் இருப்பதாகவும், அந்த வருகையில் அவருடைய இராஜ்யமாகிய பரலோக இராஜ்யம் பூலோகத்தில் நிலை நிறுத்தப்படும் எனக் கூறப்படுவதும் ஆழ்ந்து நோக்கத்தக்கது.

அதாவது, இரண்டாம் வருகை சீடர்களில் சிலர் உயிரோடு இருக்கும் பொழுதே நடக்கும் என்பதும், அந்த இரண்டாம் வருகையில் பரலோக இராஜ்யம் இப்பூலோகத்தில் நிலை நிறுத்தப்படும் என்பதும் தெளிவாகக் கூறப்பட்டு உள்ளது.

இரண்டு நிலைகள்:

இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியாதவர்களால், பூலோக இராஜ்யமாகிய இசுரவேலர் இராஜ்யம் இரண்டாம் வருகையில் நிலை நிறுத்தப்படும் என்று இன்று வரை தவறாக எதிர்பார்க்கப்படுகிறது.

இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை உணர்ந்தவர்களால், பரலோக இராஜ்யம் சீடர்கள் சிலர் உயிரோடு இருக்கும் பொழுதே நிலை நிறுத்தப்பட்டு விட்டது என்று புரிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.

ஆகவே,

1. இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியாதவர்களால் இரண்டாம் வருகையில் எதிர்பார்க்கப்படுவது பூலோக இராஜ்யமாகிய இசுரவேல் இராஜ்யம்.

2. இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறிந்தவர்களால் இரண்டாம் வருகையில் புரிந்துக் கொள்ளப்பட்டது பரலோக இராஜ்யமாகிய இயேசு கிருத்துவின் இராஜ்யம்.

ஆகிய இரு நிலைகள் இருக்கின்றன என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

ஆகவே, இயேசு கிருத்து கன்னிப்பிறப்பை உடையவர் என்றும், கடவுளின் மகன் என்றும் புரிந்துக் கொண்டவர்கள் இரண்டாம் வருகை

நிறைவேறிவிட்டது என்றும், பரலோக இராஜ்யம் வந்து விட்டது என்றும் புரிந்து கொள்ளுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பு:

இது ஓர் அற்புதப் பிறப்பு. கடவுளால் திட்டமிடப்பட்ட பிறப்பு. இந்த பிறப்பை பற்றி மரியாள் உலகத்திற்குக் கூற இயலா நிலை.

தன் வயிற்றில் பிள்ளை உற்பத்தியாகி இருப்பதற்குக் காரணம் தன் கணவனாகிய யோசேப்பு இல்லை என்னும் உண்மையை மரியாள் வெளியே கூறினால், யூத மதச் சட்டத்தின்படி அவர் கல்லெறிந்து கொலை செய்யப்படுவார். இதனால்,

"மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்." (லூக். 2:19)

என்றும்,

"அவருடைய (இயேசு கிருத்துவினுடைய) தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்." (லூக். 2:51)

என்றும் குறிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னர் நாம் பார்த்துள்ளபடி, பேதுருவோ, யோவானோ, பவுலோ இயேசு கிருத்து யோசேப்பிற்குப் பிறந்தவர் என்பதைச் சிறிதும் சந்தேகப்படவில்லை.

இயேசு கிருத்து தம் ஊழியத்தைத் தொடங்கிய பொழுது அவருடைய ஞானம் அவர் வாழ்ந்த ஊர்க்காரர்களுக்கு வியப்பாக இருந்தது.

"இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா" (மத். 13:55) என்றும்,
"இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா" (லூக். 4:52) என்றும்
 
கூறியதை நாம் பார்க்கின்றோம். மேலும்

"தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்" என்று தேவையுடையவர்கள் அவரிடத்தில் வேண்டிக் கொண்டதையும் நாம் பார்க்கின்றோம்.

இதனால் அவர் வாழ்ந்தபோது, யூத மக்கள் அனைவரும் அவர் தாவீதின் கோத்திரத்தில் பிறந்த யோசேப்பின் மகன் என்றே நம்பினார்கள்.

இந்த நம்பிக்கையே அவருடைய சீடர்களுக்கும், பவுலுக்கும் இருந்ததை நாம் பார்க்கின்றோம்.

இயேசு கிருத்துவின் விண்ணேற்றத்திற்குப் பின்னர், இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த பேதுரு, பவுல் போன்ற தலைவர்கள் எல்லாரும் கொல்லப்பட்ட பின்னர் இந்த வரலாறுகளை எழுதப் பலர் புறப்பட்டனர். பவுலோடு நற்செய்திப் பணியாற்றிய லூக்காவும் வரலாறு எழுத முற்பட்டார். அப்பொழுது,

"ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும்" (லூக். 1:3)

என்று தாம் வரலாறு எழுதத் தொடங்கியதைக் கூறுகின்றார்.

இவர் இவ்வாறு கன்னி மரியாளிடத்திலும் விசாரித்து அறிந்த பின்னர், இயேசு கிருத்து யூதா கோத்திரத்தில் பிறந்த யோசேப்புக்குப் பிறந்தவர் அல்லர் என்பதையும், பரிசுத்த ஆவியினால் பிறந்த கடவுளின் மகன் என்பதையும் உணர்ந்து, கன்னிப்பிறப்பின் நிகழ்ச்சியை விரிவாக எழுதுகின்றார் என்பதை நாம் பார்க்கின்றோம்.

ஆகவே இரண்டாம் வருகை இன்னமும் நடைபெறவில்லை என்று நம்புவதற்கு இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியா நிலையே முக்கிய காரணம்.

இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பை உணர்ந்தவர்கள், அவரை யூத குலத்தில் பிறந்தவர் என்றோ, யூதர்கள் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியா என்றோ, அந்த மேசியா வரக் காத்திருக்கின்றோம் என்றோ நம்பவும் கூறவும் மாட்டார்கள்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


இயேசு கிருத்து உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய பரலோக இராச்சியத்தைப் பற்றிக் கூறி, பரலோக இராச்சியத்தைப் பூலோகத்திலேயே உருவாக்கவே தாம் வந்திருப்பதைக் கூறுகிறார்.

அவருடைய சீடர்களோ, யூதர்கள் இழந்து போன இராஜ்ஜியமாகிய பூலோக இராச்சியத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வந்தவராக அவரை நம்பினார்கள்.

முரண்பட்ட இரண்டு இராஜ்யங்கள்:

இவை ஒன்றுக்கொன்று எதிரான முரண்பட்ட இரண்டு நிலைகளாக இருக்கின்றன. பரலோக இராஜ்ஜியக் கருத்துக்கு எதிரானது பூலோக இராசியக் கருத்து என்பது பைபிளில் விளக்கப்படுகின்றது. எவ்வாறு?

பூலோக இராஜ்ஜியம் வன்முறையால் உருவாவது.

"ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்;
 பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்வான்"

என்பது உலகம் முழுவதற்கும் பொருந்தும். வன்முறையும் கொலையுமே பூலோக இராஜ்யங்கள் உருவாகக் காரணமானவை.

இதனால், வன்முறைக்கும் கொலைக்கும் காரணமான சாத்தானுடைய கையிலே இப்பூலோக இராஜ்யங்கள் இருப்பதாக லூக்கா 4 ஆம் அதிகாரத்தின் 5 முதல் 8 வரையுள்ள வசனங்களின் வழி விளக்கப்படுகிறது.

பரலோக இராசியம் மனமாற்றத்தால் உருவாவது. மனமாற்றத்தை ஏற்படுத்துவது இயேசு கிருத்துவின் நற்செய்தி. இயேசு கிருத்துவின் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்குக் காரணமானவர் பரிசுத்த ஆவி.

ஆகவே, பரிசுத்த ஆவியால் உருவாக்கப்படுவது பரலோக இராஜ்யம்.

வன்முறை, கொலை முதலிய செயல்களுக்குக் காரணமான சாத்தானால் உருவாக்கப்படுவது பூலோக இராஜ்யம்.

இயேசு கிருத்து பரலோக இராஜ்யத்தை இந்த பூலோகத்தில் உருவாக்க வந்த கடவுளின் மகன்.

புரிந்துக் கொள்ள இயலாமை:

அவர் பரலோக இராஜ்யத்தை இப்பூலோகத்திலே உருவாக்க வந்த கடவுளின் மகன் என்பது அவருடைய சீடர்களால் புரிந்து கொள்ள இயலாமலிருந்தமையே, இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையை அவர்கள் புரிந்து கொள்ளுவதில் அவர்களுக்கு இருந்த சிக்கல் ஆகும்.

ஏன் அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை?

1. இயேசு கிருத்து யூத மதத்தில் பிறந்தவர். அவருடைய சீடர்கள் அனைவரும் யூத மதத்தில் பிறந்தவர்கள்.

2. யூத மதம் மேசியாவாகிய ஒரு அரசரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

3. அந்த மேசியாவாகிய அரசன் யூதா கோத்திரத்தில் பிறப்பார் என்பது பழைய ஏற்பாட்டிலுள்ள தீர்க்க தரிசனங்களின் வெளிப்பாடு.

4. இயேசு கிருத்து யூதா கோத்திரத்தில் பிறந்த யோசேப்பின் மகன் என்று அறியப்பட்டார்.

5. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கூறியுள்ள தீர்க்கதரிசனங்கள் இயேசு கிருத்துவில் நிறைவேறியதாக நம்பினார்கள்.

6. அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, இயேசு கிருத்து கொலை செய்யப்பட்டாலும், அவர் திரும்ப உயிரோடு எழுந்தது மட்டுமல்லாமல், திரும்பவும் வருவார் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

7. இதனால், அவர் இறந்ததற்கும், திரும்பவும் உயிர்த்தெழுந்தமைக்கும் நாங்கள் சாட்சிகள் என்று அவர்கள் உறுதியாக எந்தத் தடையையும் பற்றிக் கவலைப்படாமல் சாட்சி கூறினார்கள்.

8. அவர் கூறிச் சென்றபடி, இரண்டாம் வருகையில் அவர் திரும்ப வரக் காத்திருக்கின்றார்கள்.

9. இந்தக் காத்திருத்தலே இன்று வரை வழிவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

10. இதன்படி இன்றும் அந்த நிலை போதிக்கப்பட்டு வருகிறது.

11. இன்று மொத்த பைபிளையும் கையில் வைத்திருப்பவர்களே பரலோக இராசியத்திற்கும் பூலோக இராசியதிற்கும் வேறுபாடு தெரியாமல் போதித்துக் கொண்டிருக்கையில், பைபிள் முழுமையாக உருவாகாத அந்தக் காலத்தில் சீடர்களால் புரிந்து கொள்ள இயலாமல் இருந்ததில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

சீடர்களால் அறிய முடியாதிருந்த இரண்டு காரியங்கள்:

1. இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்த யோசேப்பிற்குப் பிறந்தவர் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதாவது இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.

2. பூலோகத்தில் பரலோக இராஜ்யத்தை உருவாக்க வந்த கடவுளின் மகனே இயேசு கிருத்து என்பதையும் அவர்கள் அறிந்து இருக்கவில்லை. அதாவது பரலோக இராஜ்ஜியம் பற்றி அவர்களுக்குத் தெரியாது.

இவை இரண்டையும் இயேசு கிருத்துவின் சீடர்களால் ஏன் அறிய முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


இயேசு கிருத்து கூறியதும், அப்போஸ்தலர்கள் எதிர்பார்த்ததும், பவுல் திட்டமாக எதிர்பார்த்ததுமாகிய இரண்டாம் வருகை அவர்களுடைய வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஏன் நிறைவேறவில்லை? என்னும் கேள்வி எழுகின்றது.

அவர்களுடைய வாழ்நாளில் நிறைவேறாதது மட்டுமல்லாமல், இப்பொழுது ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னமும் நிறைவேறவில்லை.

இதுவரை அவர் வந்து விடுவார் என்று நம்பி, அவர் சொல்லி இருந்த அடையாளங்களைக் கணக்கிட்டு, இந்த நேரத்தில் வந்து விடுவார் என்று நம்பிக் காத்திருந்த பல கூட்டத்தினர் ஏமாற்றமடைந்த வரலாறுகள் இருக்கின்றன. இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இயேசு கிருத்து ஏன் இப்படிச் செய்தார்?

பொய் சொல்ல அவர் மனிதரல்ல. அவர் கூறியது நிச்சயம் நடந்திருக்க வேண்டும். இரண்டாம் வருகை இன்னமும் நிறைவேறவில்லையா? அல்லது நிறைவேறி விட்டதை சீடர்கள் அறியாமல் போனார்களா? என்னும் கேள்விகள் எழுகின்றன.

யூத இன மீட்பரா? உலக மீட்பரா?

பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை அடிப்படையாகக் கொண்டு, யூதருடைய இராச்சியத்தை மீட்டு அவர்களுக்குக் கொடுக்க வந்த யூத அரசனாகிய கிருத்துதான் இயேசு கிருத்துவா? அல்லது உலக மக்களை மீட்க்க வந்த உலக மீட்பராகிய அரசனாகிய கிருத்துவா? என்னும் கேள்வி இப்பொழுது எழுகின்றது. இயேசு கிருத்து தம்மை உலக மீட்பராகிய கிருத்து என்று அவருடைய சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஆனால் அவர்களோ யூத மீட்பராகிய கிருத்து என்று புரிந்து கொண்டார்களே தவிர, உலக மீட்பராகிய கிருத்து என்பதை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதை அவருடைய வாழ்நாளில் நடந்த நிகழ்ச்சிகளே நமக்கு விளக்குகின்றன.

மத்தேயு 16 ஆம் அதிகாரத்தில் 13 முதல் 28 வரையுள்ள வசனங்கள் கூறும் நிகழ்ச்சி இதைத் தெளிவுபடுத்துகின்றது.

" அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்." (மத் 16 : 22-23)

இயேசு கிருத்துவோ தம்மை உலக மீட்பராக விளக்குகிறார். சீடர்களோ அவரை யூத இன மீட்பராகப் பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு விருப்பமான நிலை. அவர் தம்மை உலக மீட்பராக விளக்கினாலும், சீடர்கள் அவரை யூத இன மீட்பராகவே பார்த்தமைக்குக் காரணம் அவருடைய இராஜ்யத்தைப் பற்றி அவர்களால் புரிய இயலாமையேயாகும்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842


சீடர்களின் அப்போஸ்தலர் பட்டமும் பவுலும்:

இயேசு கிருத்துவின் சீடர்கள் பன்னிருவர். யூதாஸ் காரியோத்து இறந்தமையால், அந்த இடத்திற்கு மத்தியா தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த அப்போஸ்தலர் பட்டம் மற்றவர்களுக்குக் கிடையாது என்றும், இந்த பன்னிருவருக்கு மட்டுமே உரியது என்றும், அவர்கள் நம்பினார்கள் என்பதை அப்போஸ்தலர் முதலாம் அதிகாரம் 21 முதல் 26 வரை நாம் பார்கின்றோம்.

பவுல் போன்றவர்கள் இந்தப் பட்டத்திற்கு உரியவர்கள் அல்லர் என்றும், இதனால் இவர்கள் தங்களை அப்போஸ்தலர் என அழைத்துக் கொள்ளக் கூடாது என்றும் செயல்பட்டனர் என்பது,

"அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; (வெளி. 2:2)

என்னும் வசனத்தால் விளங்குகிறது.

ஆயினும் பவுலைப் பற்றி அனனியாவுக்குக் கூறப்பட்ட செய்தி:

அதற்குக் கர்த்தர்: "நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்." என்றார். (அப். 9:15)

என்பதாகும். ஆகவே, பவுலைப் பன்னிருவருடன் ஒப்பிடுவது பொருத்த மற்ற ஒன்றாகும். அவர் இயேசுவால் சிறப்பாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பதை உள்ளத்தில் வைத்தல் வேண்டும்.

உடனே இரண்டாம் வருகை என நம்பினர்:

இசுரவேலருக்கு இராச்சியத்தைக் கொடுக்கும் இரண்டாம் வருகை, இயேசு கிருத்து உயிர்த்தெழுந்து, பரலோகம் சென்று, சிறிது காலத்திலேயே இருக்கும் என்று சீடர்கள் உறுதியாக நம்பினார்கள். காரணம், இயேசு கிருத்து சிலுவையில் அடிக்கப்படும் முன்பே, இதைப் பற்றித் தெளிவாகக் கூறி இருந்தார். எவ்வாறு?:

"இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." (மத்.16:28, மாற். 9:1)

"அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று." (யோவான் 21:21-23)

இந்த வசனங்களின்படி, அவருடைய சீடர்களில் சிலர் வாழுங்காலத்திலேயே இரண்டாம் வருகை நிகழ்ந்து விடும் என்பது தெளிவாக இயேசு கிருத்துவால் கூறப்பட்டு உள்ளது.

இதனால் தங்கள் வாழ்நாளிலேயே தாங்கள் இரண்டாம் வருகையைப் பார்க்கப் போகின்றோம் என உறுதியாக நம்பினார்கள். பவுல் இதைக் குறித்து

"இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்." - (1 கொரி. 15:51)

"பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்." (1 தெச. 4:17)

என்று எழுதி உள்ளார்.

பவுலுடைய வாழ்நாளிலேயே இரண்டாம் வருகை நடைபெறப் போவதாக அவர் உறுதியாக நம்பினார். இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகை, தாமதமான பொது இன்னமும் நடைபெறவில்லையே, தாமதமாவது ஏன்? என்று கேட்கிறவர்களுக்கு பேதுரு

"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2பேது. 3:9)

என்றும்

"தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்;" (2பேது 3:12)

என்றும் எழுதி உள்ளார்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு