இந்தியா என்பது என்றுமே ஒரே நாடாக இருந்தது இல்லை என்றும் அதனுள் பல்வேறு இனத்தவர் வசித்து வந்தனர் என்றும் அவர்களின் இடையே பல்வேறு அரசியல்களும் நிலவி வந்தன என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம் ராஜீவ் அவர்களே...!!! அதனை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே எண்ணுகின்றேன்.

அப்பேர்பட்ட ஒரு நாட்டினை ஆள்வது என்பது எளிதான காரியம் கிடையாது என்பதனை நிச்சயம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஒரே இன மக்கள் வசிக்கும் நாட்டினை ஆள்வதற்கே பலர் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கும் பொழுது பல்வேறு இனங்கள் மற்றும் பல்வேறு நம்பிக்கைகள் ஒருங்கே விளங்கிக் கொண்டு இருக்கும் ஒரு நாட்டினை முழுமையாக ஆள்வது என்பது அரசியலில் மிகுந்த அனுபவம் மிகுந்தவர்களுக்கு கூட ஒரு சவாலான காரியம் தான்.

நிலைமை அவ்வாறு இருக்கும் பொழுது தற்செயலாக தங்களின் தாயாரின் மரணத்திற்குப் பின்னர் அரசியலினுள் நுழைந்த உங்களின் கைகளில் இந்தியா போன்றதொரு மாபெரும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பு வந்து சேர்ந்த பொழுது அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள தகுதியானவராக இருந்து இருப்பீர்களா என்றால் இல்லை என்பதே உண்மையான விடையாக இருக்கும்.

நிச்சயமாய் இந்தியா போன்ற ஒரு தேசத்தினை ஆளும் பக்குவம் உங்களுக்கு அன்று இருந்து இருக்காது. இந்திய அரசியல் எவ்வாறு இருக்கின்றது...உங்களது தாயார் விட்டுச் சென்ற பணிகள் யாவை? நமது அயல் உறவுக் கொள்கைகள் என்ன? நாடு சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள் என்ன? என்பதனை எல்லாம் அறிந்துக் கொண்டு சுய முடிவினை எடுக்கும் தன்மை ஒரு மனிதனுக்கு காலத்தினாலும் அனுபவத்தினாலும் மட்டுமே வருமே அன்றி பதவியினை ஏற்ற நொடியிலே வந்து சேராது.

ஆனால்இந்திய நாட்டினை ஆள்வது என்ற மிகப்பெரிய பொறுப்பு உங்களின் கைகளில் வந்துச் சேர்ந்த பொழுது உங்களுக்கு அத்தகைய அனுபவம் வாய்க்கப் பட்டு இருக்கவில்லை என்பதனை நீங்கள் உணர்ந்தே தான் இருப்பீர்கள். அந்நிலையில் நிச்சயமாய் நீங்கள் உங்களைச் சுற்றி இருந்தவர்களின் உதவினை நாடி இருக்கத்தான் செய்வீர்கள். அதுவும் குறிப்பாக உங்களின் தாயின் உடனேயே இருந்தவர்களைத் தான் நீங்கள் நம்பி இருப்பீர்கள். உங்களின் கட்சி ஆட்களை நீங்கள் நம்பி இருப்பீர். அவர்கள் உங்களுக்கு நன்மையைத் தான் செய்வர்...நன்மையானவற்றைத் தான் சொல்வர் என்றே தான் நீங்கள் நம்பி இருப்பீர். அது தானே இயற்கை.

இந்த அடிப்படையிலேயே தான் என்னால் உங்களது ஈழத்தைக் குறித்த நடவடிக்கைகளைக் காண முடிகின்றது.

எந்த ஒரு பெரிய தேசத்திற்கும் ஒரு  நோய் இருக்கின்றது. அவைகள் பெரும்பாலும் மற்ற தேசங்களை அடக்கி ஒடுக்கி வைத்து தான் வல்லரசாக வேண்டும் என்ற கனவுகளையே கொண்டு விளங்குகின்றன...மாறாக நல்லரசாக வேண்டும் என்ற எண்ணம் அவைகளிடையே பெரும்பாலும் எழுவதே இல்லை.

அந்த நோய் இந்தியாவிற்கும் இருந்து இருப்பதில் நமக்கு ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான். நூறு கோடி மக்கள் தொகை...அள்ள அள்ள குறையாத இயற்கை வளம்..போதாதா வல்லரசுக் கனவுக் காண்பதற்கு. எனவே நீங்களும் வல்லரசுக் கனவினைக் கண்டத்தில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான்.

பலம் வாய்ந்த தேசம் இருக்கின்றது. வல்லரசுக் கனவும் இருக்கின்றது. அண்டை நாடுகளுக்கு இடையே பிரச்சனையும் இருக்கின்றது. வல்லரசுக் கனவினை நனவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் கண் முன்னே விரிந்து இருக்கின்றது. இவை போதாதா உங்களைக் கனவுக் காண வைக்க....மனிதனுள் இருக்கும் இயல்பான வல்லரசு நாட்டின் தலைவன் என்ற ஆசையை வளர்க்க...!!!

ஆனால் அந்த ஆசையினைக் கொண்டு தங்களை தவறான வழியில் வழி நடத்தியதினால் தான் ஈழத்தில் உங்களது அமைதி காக்கும் படை புரிந்த படுகொலைகள் நிகழ்ந்தன என்றே நான் கருதுகின்றேன். இதனை மெய்ப்பிக்கும் படியாகவே

"எனக்கு அந்த (ஈழ மக்கள்) போராட்டம் பற்றி சரியாக ஏதும் தெரியவில்லை. திடீர் என்று ஆட்சியில் அமர்ந்த நிலையில் பக்கத்தில் இருந்தவர்களின் ஆலோசனையின் படி அப்படி முடிவு எடுக்க வேண்டியதாக போயிற்று. உங்களின் பிரச்சனை எனக்குத் தெரியவில்லை. அதனால் அங்கு தமிழர்களுக்கு பாதகமான சில முடிவுகளை எடுத்து விட்டேன். இப்பொழுது தான் எனக்கு எல்லாம் புரிகிறது. மீண்டும் நான் பிரதமராக வருவேன்.அப்பொழுது உங்களின் போராட்டத்திற்கு துணையாக உறுதியாக நிற்பேன்" என்று நீங்கள் உங்களை வந்து சந்தித்த ஈழப் பிரதிநிதிகளான கவிஞர் காசி ஆனந்தனிடமும் சச்சிதானத்தினிடமும் நீங்கள் இறப்பதற்கு ஒண்ணரை மாதங்களுக்கு முன்னர் கூறியது இருக்கின்றது. ( பார்க்க : புத்தகம் - ராஜீவ் காந்தி தூக்கு கயிற்றில் நிஜம் பக்கம் 205)

மேலும் இந்து நாளேட்டிலும்

"கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்துவிடுவோம்...நமது உறவில் புதிய அத்தியாயத்தை துவக்குவோம். எங்கள் இயக்கம் இந்தியாவிற்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என்று புலிகள் இராஜிவிடம் கூறினர். அவரும் இதற்கு முழுமையான ஆதரவு தெரிவித்தார். பிரபாகரனுக்குத் தனது வாழ்த்துக்களை கூறுமாறு தெரிவித்த ராஜீவ், போராட்டத்தை தொடர்ந்து நடத்துமாறும் தனது சார்பில் பிரபாகரனிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ராஜீவ் கூறிய கருத்துக்கள் உடனே பிரபாகரனுக்குத் தெரிவிக்கப்பட்டன. பிரபாகரனும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் இராஜீவை விடுதலைப் புலிகள் கொலை செய்து இருப்பார்கள் என்று கூறப்படுவதில் அடிப்படை இல்லை"

என்று 28.05.91 ஆம் தேதி வந்த கட்டுரை புலிகளைக் குறித்த உங்களின் பார்வை காலங்களில் மாற்றம் அடைந்து இருப்பதையும் புலிகள் உங்களுடன் சமாதானம் செய்வதற்கு தயாராக இருந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டிக் கொண்டு தான் இருக்கின்றது. ( பார்க்க : புத்தகம் - ராஜீவ் காந்தி தூக்கு கயிற்றில் நிஜம் பக்கம் 217)

நிலைமைகள் அவ்வாறு இருக்க உங்களை கொல்வதற்கு புலிகளுக்கு யாதொரு தேவையுமே இருந்து இருக்க வாய்ப்பு இல்லையே. அனைத்தும் நன்றாக சென்றுக் கொண்டிருந்த வேளையில் தங்களது இலட்சியத்தினை பின்னடைவிற்கு உள்ளாக்கும் எந்த ஒரு செயலையும் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் அளவிற்கு புலிகள் முட்டாள்கள் அல்ல என்பதனை நீங்கள் அறிந்தே தான் இருப்பீர்கள்.

இருந்தும் உங்களின் மரணத்திற்கு புலிகள் காரணமாக காட்டப்பட்டு உள்ளனர். பழி வாங்கும் நோக்கில் உங்களை புலிகள் கொலை செய்து விட்டனர் என்றே கருத்துக்களும் பரப்பப்பட்டு உள்ளன.

இது நிச்சயம் உங்களைக் குழப்பிக் கொண்டு இருக்கும் பல கேள்விகளுள் சிலவான,

1) ஏன் என்னுடன் வேறு ஒரு காங்கிரஸ் தலைவர் கூட மரணமடைய வில்லை?

2) எப்பொழுதும் என்னுடம் இருக்கும் பாதுகாப்பாளர் ஏன் அன்றைக்கு எனது அருகில் இல்லை?

3) என்னுடைய உயிருக்கு ஆபத்து அந்நிய நாடுகளின் வாயிலாக இருக்கின்றது என்று பாலஸ்தீன போராளி இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்த போதும் ஏன் அதற்கு உகுந்த கவனம் செலுத்தப்படவில்லை...ஏன் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை?

4) ஏன் என்னுடைய கொலை வழக்கை முடக்க எனது கட்சியே முயன்றது. ஏன் என்னுடைய மனைவியே எனது கட்சியின் தலைமையில் இருந்தும் உண்மையான குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க முழுமையாக முயற்சி செய்யாதது ஏன்?

5) அந்நிய நாட்டு உளவு அமைப்புகளுக்கும் சந்திராசாமி மற்றும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று தெரிந்தும் ஏன் விசாரிக்கவில்லை அவர்களை?

என்பனவற்றுடன் நிச்சயமாய் ஏன் விடுதலைப்புலிகளை உங்களின் மரணத்தோடு அனைவரும் தொடர்புபடுத்தினர் என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாக இருக்கும்.

அதுவும் ஏன் புலிகளின் இயக்கத் தலைவரான பிரபாகரன் அவர்கள் உங்களது மரணத்தை குறித்து 'அது ஒரு துன்பவியல் சம்பவம்' என்று மட்டுமே குறிப்பிட்டார் எனபதும் நிச்சயம் ஒரு கேள்வியாகத் தான் இருக்கின்றது. அதாவது உங்களை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்று அனைவருமே கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அவ்வியக்கத்தின் தலைவர் முதலில் 'உங்களின் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் உங்கள் கொலைக்கான விசாரணையில் அனைத்து வித உதவியும் செய்ய தயார்' என்று கூறி விட்டு பின்னர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 'அது ஒரு துன்பவியல் சம்பவம்' என்றுக் கூறி இருப்பது ஏன் என்று நாம் கண்டாகத் தான் இருக்கின்றது.

அதற்கு நாம் ஒரு சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. உங்களின் கொலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலர் ஈடுபட்டு ஆதாயம் அடைந்து இருக்கின்றனர் என்றே நாம் கண்டு வருகின்றோம். இந்நிலையில் உங்களை காங்கிரஸ் கட்சி கொலை செய்து விட்டது என்று ஒட்டு மொத்த பழியையும் காங்கிரசின் மீதும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் மீதும் சுமத்துவது சரியானதொரு செயலாக அமையுமா?

அமையாது தானே. காங்கிரஸ் கட்சியினைப் பிடிக்க அக்கட்சியினுள் உள்ள சிலர் செய்த சதிக்கு அவ்வியக்கத்தினை முழுமையாக குறைக் கூற முடியாது தானே.

இந்த அடிப்படையிலேயே தான் நாம் விடுதலைப்புலிகளின் இயக்கத்தையும் காண வேண்டி இருக்கின்றது. இராஜீவ் அவர்களே. எந்த ஒரு இயக்கத்திலும் பிளவுகளும் துரோகங்களும் இருக்கத் தான் செய்யும்...காரணம் அவை மனிதனுள்ளே இருக்கும் மிருகத்தினாலே தூண்டப்படுபவை. அந்த மிருகம் பெருன்பான்மை மக்களுக்கும் அடங்காது உலாவிக் கொண்டு தான் இருக்கின்றது என்பதனை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர். அந்த மிருகத்திற்கு இயக்கங்கள் தெரியாது...எங்கே பேராசை, பொறாமை, ஆசை, வெறி போன்றவைகளுக்கு இடம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அது சுதந்திரமாக உலாவும். இதனை நாம் வரலாற்றில் தொடர்ந்து கண்டுக் கொண்டு வந்து இருக்கின்றோம். காங்கிரசிலும் கண்டு இருக்கின்றோம். விடுதலைப்புலிகளின் இயக்கத்திலும் கண்டு தான் இருக்கின்றோம். அதைத் தான் நாம் சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.

மாத்தையா...இந்த பெயர் உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்குமா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை...ஆனால் நிச்சயம் இந்திய உளவுத்துறைக்கு அப்பெயர் பரிச்சயமாகத் தான் இருக்கக் கூடும்...காரணம் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த பொழுது புலிகளின் சார்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டு இருந்தது புலிகளின் தலைமையில் இரண்டாம் இடத்தில் இருந்த மாத்தையா தான்.

பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையா, இந்திய உளவுத்துறையோடு இணைந்துக் கொண்டு பிரபாகரனையும், பொட்டு அம்மானையும் கொலை செய்து விட்டு புலிகளின் தலைமையை பிடிக்க சதி செய்ததற்காகவும் கிட்டுவின் மரணத்திற்கும் காரணமாக குற்றம் சாட்டப்பட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் தூக்கிலிடப்பட்ட விடயம் உங்களுக்கு தெரியாமல் தான் இருக்கும். காரணம் இவை அனைத்தும் உங்களின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகும்.

புலிகளின் இயக்கத்தில் பிளவுகள் இருந்து இருக்கின்றது...புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் இந்திய உளவுத்துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்...உங்களின் மரணத்தில் இந்திய உளவுத்துறை ஒழுங்காக செயல்படாமலும் உண்மையை மூடி மறைக்கும் விதமாகவும் செயலாற்றி இருக்கின்றது...உங்களின் மரணத்தில் காரணமாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பொழுது பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவின் பெயர் சேர்க்கப்படாது இருந்து இருக்கின்றது...மேலும் முன்னரே பிரபாகரன் அவர்கள் மாத்தையாவால் கொலை செய்யப்பட்டு விட்டார் என்று இந்திய உளவுத்துறை கிளப்பி விட்ட கதைகள் வேறு வரலாறாய் நின்றுக் கொண்டு தான் இருக்கின்றது.

இதன் அடிப்படையில் கண்டோம் என்றால்...இந்திய உளவுத்துறையையும் மாத்தையாவையும் பயன்படுத்தி உங்களை கொலை செய்து விட்டு பழியை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் மீதும் பிரபாகரனின் மீதும் சுமத்துவது என்பது சாத்தியமானதொன்றாகவே தெரிகின்றது.

அதுவே தான் நடந்தும் இருக்கின்றது என்பதே எனது மனதில் புலப்படும் எண்ணமும் ஆகும் அய்யா...!!! மேலும் வெளிநாடுகளில் ஈழம் குறித்த தமிழ் போராளிகள் என்றாலே புலிகள் என்ற பெயர் தான் அறியப்பட்டு இருக்கின்றது. மாறாக அங்கே பல்வேறு போராளி இயக்கங்கள் இருந்து இருக்கின்றன என்பதனை அவர்கள் அறிய மாட்டார்கள். காரணம் ஒரு சிறு தீவினுள் நிகழும் பிரச்சனைகளும் பெரும்பாலும் பலருக்கு மெய்யான ஆர்வம் இருப்பதில்லை தான். ஆனால் இந்திய உளவுத்துறைக்கு அவ்வாறு இல்லை...தமிழ் போராளி இயக்கங்கள் பல இருக்கின்றன என்பது அதற்குத் தெரியும்...அந்த இயக்கங்களுள் பலவற்றை அது தனக்காக பயன் படுத்தியும் இருக்கின்றது என்பது வரலாறு.

இந்நிலையில் உங்கள் மரணத்தில் ஈழத்தைச் சேர்ந்த தமிழர்களை சூழ்ச்சியினால் பயன்படுத்தி விட்டு பழியினை புலிகளின் மீது சுமத்தி இருக்கின்றனர் என்றே எமக்குத் தோணுகின்றது. உங்களுக்கும் அவ்வாறே தோணும் என்றே நினைக்கின்றேன் அய்யா...காரணம் உங்களின் மரணத்தினால் புலிகள் அடைந்த இலாபம் என்பது ஒன்றும் இல்லை என்றே நாம் வரலாற்றில் கண்டு இருக்கின்றோம்.

உண்மையில் உங்களது மரணத்தினால் ஆதாயம் அடைந்தது இந்தியாவில் உள்ள சிலரும்...உங்களின் கட்சியில் உள்ள சிலரும்....வெளிநாடுகளுமே அன்றி விடுதலைப்புலிகள் அல்லர்.

உங்களின் மரணத்தை சிறிது உன்னிப்பாக அறிவினைக் கொண்டு காண்பவர்களுக்கே இவ்விடயம் புலனாகும் பொழுது இது வரை இந்த விடயத்தினை உங்களின் கட்சியினரே...ஏன் நீங்கள் காதலித்து கைப்பிடித்து இன்று உங்களால் உங்களின் கட்சிக்கு தலைவராக இருக்கும் உங்களின் மனைவியுமே காணாமலும் அதனைக் குறித்து மேலும் ஆராயாமலும் இருப்பது நிச்சயம் உங்களுக்கு புதிராகத் தான் இருக்க கூடும் ராஜீவ் அவர்களே...!!!

மகாபாரதத்தில் ஒரு பகுதி உண்டு...ஊரினைச் சுற்றிப் பார்க்க தர்மனும் துரியோதனனும் செல்வார்களாம்...தர்மன் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு ஊரில் அனைவரும் நல்லவர்களாக இருக்கின்றனர் என்றுக் கூறுவான்...துரியோதனனோ ஊரில் அனைவரும் கள்வர்களாக இருக்கின்றனர் என்றுக் கூறுவான். அக்கதையின் முடிவு மனிதர்கள் நாம் கொண்டு இருக்கும் பார்வையின் படியே இருக்கின்றனர் என்பது ஆகும்.

இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் நான் காதலையும் மணவாழ்வையும் தூய்மையானதொன்றாக கருதுபவன் இராஜீவ் அவர்களே...அதனைக் குறித்து சந்தேகங்கள் எழுவதை கேவலமாக கருதுபவன். எனவே தான் நான் உங்களின் காதலையும் மெய்யானதொன்றாகவே காணுகின்றேன். இருந்தும் "அந்நிய நாட்டின் தலைவரின் வாரிசுகள் எங்களின் நாடுகளுக்கு படிக்க வந்தால்...அவர்களை எங்களின் வலையில் சிக்க வைக்க அனைத்து முறைகளையும் கையாளுவோம்...அதில் பெண்களை விட்டு காதலிக்கச் செய்வதும் உண்டு..." என்று அமெரிக்கா மற்றும் மேற்கு உலகத்தின் முகத்திரையை கிழிக்கும் வேலையைச் செய்து கொண்டு வருபவர்களும் ஒருவரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள் கூறும் பொழுதுசிறிய சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை இராஜீவ் அவர்களே...!!! உங்களின் துணைவியார் இங்கே வந்ததிற்கு பின்னர் தான் உங்களின் தம்பியும் சரி அன்னையும் சரி...நீங்களும் சரி கொலை செய்யப்பட்டு இருக்கின்றீர்...உங்களின் கொலைக்கான உண்மையான குற்றவாளிகளை உங்களின் கட்சியின் தலைமையில் இருந்தும் உங்களின் மனைவி கண்டுப்பிடிக்க முயலாது இருக்கின்றார்...அவரிடம் உண்மைகளைப் பற்றி பலர் கூறியும் அதனைக் காணாது இருக்கின்றார்...இந்நிலையில் அவர் மேல் சிறிது சந்தேகம் வரத்தான் செய்கின்றது இராஜீவ் அவர்களே...!!! அதற்கு மன்னியுங்கள்...ஒருவேளை இந்த கணிப்பு தவறானதொன்றாக இருந்தால் நிச்சயம் என்னை நீங்களும் உங்களின் துணைவியாரும் என்னை மன்னித்தே ஆக வேண்டும்...!!!

எனது இந்த கணிப்பு தவறானதொன்றாக இருக்கும் என்றே நான் வேண்டிக் கொள்கின்றேன். ஏன் தெரியுமா இராஜீவ்...

உங்களின் மேல் நான் பாவப்படுகின்றேன்...ஆயிரமாயிரம் ஈழத் தமிழர்களின் மரணத்திற்காக தமிழகமே உங்களை வெறுக்கும் பொழுது நான் உங்களுக்காக வருந்துகின்றேன்.

தம்பியை இழந்தீர்...!!!
தாயை இழந்தீர்...!!!
உண்மையான நண்பர்கள் யார் என்று அறியாது சதிகாரர்களுடன் சகவாசம் கொண்டீர்...!!!
தவறான வழிகாட்டலால் பாவம் பல பெற்றீர்...!!!
இறுதியில் மரணமும் கொடூரமாக எய்தினீர்...!!!

உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்ற காதல் ஒன்றாவது மெய்யாக இருக்கும் என்றே நம்பி இருப்பீர்...அதற்காகவாவது உங்களின் காதலைக் குறித்த எனது சந்தேகம் பொய்யாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன் அய்யா!!!

நீங்கள் பலியாக்கப்பட்ட ஒரு பலி ஆடு இராஜீவ் அவர்களே...!!!


இதனை...

இந்தியாவில் இருந்து பிரிந்துக் போன ஆரியக் கூட்டத்தில் ஒருவர்களான சிங்களர்கள் இந்திய ஆரியர்களின் மீது சொந்தம் கொண்டாடுவதும்...

""12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும்" - இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம்."

இங்கே இருக்கும் ஆரியர்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுவதில் இருந்தும்...

""இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது. அங்கு நடந்தது இனப்படுகொலை அல்ல..." என்று காங்கிரஸ் தரப்புக் கூறுகின்றது.
"இலங்கையை போர் குற்றவாளியாக அறிவிக்க முடியாது..." இது பா.ஜ.க கட்சியினரின் கூற்று.

"இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்..." இது RSS இன் கூற்று.

போராடும் தமிழ் இளைஞர்களை 'தமிழ் பொறுக்கிகள்' என்று சு. சுவாமி வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்."


என்பனவற்றின் வாயிலாக நீங்கள் அறிந்துக் கொள்ளலாம் இராஜீவ்...!!!

இந்தியாவின் பூர்வீக குடியினரான தமிழருக்கும்...வந்தேறிகளான ஆரியர்களுக்கும் இடையில் நடக்கும் ஒரு யுத்தத்தில் நீங்கள் பலியாக்கப்பட்ட ஒரு பலிகடா இராஜீவ்...அவ்வளவே!!!

வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் எங்கள் உள்ளம்...உண்மையாக உங்களுக்காக வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றது.

இருந்தும் உங்களின் பெயரால் அழிக்கப்பட்ட தமிழ் இனம்...மீண்டும் வளரும் என்பதில் எவ்வித ஐயங்களும் இல்லை அய்யா...உலகின் முதல் இனம் எளிதில் அழியாது...!!!

முற்றும்...!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

2) ஈழத்தின் வரலாற்றினை அறிந்துக் கொள்ள
ஈழம் : முகப்புப் பக்கம்

3)  தொடர்புடைய இடுகைகள்
http://tamilthesiyam.blogspot.in/2011/08/raw-3.html
http://thiruvadiyan.blogspot.in/2006/10/blog-post_05.html
//http://www.outlookindia.com/article.aspx?204614// 
 - ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி

முந்தையப்பதிவுகள்:

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!!
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 2 !!!
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 3 - இந்தியா என்றொரு தேசம...!!!

உங்களது மரணத்தில் உண்மையான ஆதாயத்தினை அடைந்தது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் இங்குள்ள பிராமணர்கள் மற்றும் உயர் சாதியினருமே என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம். இருந்தும் உங்களது மரணத்துக்கான பழி தமிழ் இனத்தின் மீது சுமத்தப்பட்டு இருக்கின்றது. அது ஏன் என்பது உங்களுக்கும் கூட குழப்பமாகத் தான் இருக்கலாம். அக்குழப்பத்திற்கு விடையினைக் காண வேண்டும் என்றால் அதற்கு நாம் இந்தியாவினைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் சிறிது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு கேள்வி

அமெரிக்க கிருத்துவர்கள் இந்தியர்களா?

முட்டாள்தனமான கேள்வியாகத்தானே தெரிகின்றது. உண்மையும் அது தான். அமெரிக்க கிருத்துவர்கள் அமெரிக்கர்கள் ஆவார்களே அன்றி இந்தியர்கள் ஆக மாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் வந்து தங்கினாலும் அவர்கள் இந்தியர்கள் ஆக மாட்டார்கள். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நான் நம்புகின்றேன்.

இதன் அடிப்படையிலேயே நாம் சீரியக் கிருத்துவர்களைக் காண வேண்டி இருக்கின்றது. கி.பி நான்காம் நூற்றாண்டில் இன்றைய கேரளக் கடற்கரைக்கு வந்து சேர்ந்த சீரிய நாட்டினைச் சார்ந்த சீரியக் கிருத்துவர்கள் இன்று இந்தியர்களாக இருக்கின்றனர். அதுவும் உயர் சாதியினராக இருக்கின்றனர். அவர்கள் ஏன் அவ்வாறு இருக்கின்றனர் என்றக் கேள்விக்கு விடைத் தேடத் துவங்குவதில் இன்று இந்தியா சந்தித்துக் கொண்டு இருக்கும் பல பிரச்சனைகளுக்கும் விடைகள் கிட்டும் என்பதே எனது எண்ணம்.

இந்தியா என்பது என்றுமே ஒரே நாடாக இருந்தது இல்லை ராஜீவ் அவர்களே. இதனை நீங்கள் உங்களது தாத்தா எழுதிய கடிதங்கள் மற்றும் நூல்களை படித்து இருந்தீர்கள் என்றாலே சிறிது அறிந்து இருப்பீர்கள். பல்வேறு காலங்களில் பல்வேறு இனக்குழுக்கள் இன்று இந்தியா என்று இருக்கும் நிலப்பரப்பின் மீது போர் தொடுத்தோ அல்லது வணிகம் சார்ந்தோ அல்லது பிழைக்க வழி தேடியோ வந்து அங்கேயே குடி கொண்டே தான் இருந்து இருக்கின்றனர்.

அசோகனின் காலத்தில் அவனது ஆட்சிக்கு உட்பட்ட யவன அரசர்களைப் பற்றியக் குறிப்பு இருக்கின்றது. தெற்கே இன்று கேரளம் என்று வழங்கப்பெறும் கடற்கரையோரம் கிரேக்க குடி இருப்புகள், ரோம குடி இருப்புகள், யூத குடி இருப்புகள் மற்றும் அவர்கள் ஆட்சி புரிய வழங்கப்பட்ட இடங்கள் என்று பல்வேறு இடங்கள் இருந்ததை வரலாற்றில் நாம் அறியத் தான் முடிகின்றது.

மேலும் சத்திரியர்கள் என்று ஆரியப் பிரிவுகளில் ஒன்றாக அறியப்பெறும் பிரிவினைச் சார்ந்தவர்களான ராஜபுத்திரர்கள் என்பவர்களும் இந்தியாவிற்கு வெளியே இருந்து இங்கே வந்த நாடோடி இனத்தினைச் சார்ந்த சகர்கள் மற்றும் சித்தியர்கள் ஆகியோரின் வம்சாவளியினரே என்றே உங்களின் தாத்தா கூறி இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்தியா என்று இன்று வழங்கப்பெறும் நிலப்பரப்பினில் பல்வேறு இன மக்கள் ஆண்டு இருக்கின்றனர்...குடி ஏறி இருக்கின்றனர்...இங்கேயே நிரந்தரமாக தங்கியும் இருந்து இருக்கின்றனர். கிரேக்கர்கள் இருந்து இருக்கின்றனர்...ஈரானியர் இருந்து இருக்கின்றனர்...ரோமர்கள் இருந்து இருக்கின்றனர்...சீரியர்கள் இருந்து இருக்கின்றனர்...யூதர்கள் இருந்து இருக்கின்றனர்....இன்னும் பல்வேறு மக்கள் இருந்து இருக்கின்றனர். ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இவர்கள் அனைவரும் இன்று அவர்களாக இங்கே இல்லை. அதாவது...

இந்திய நிலப்பரப்பினில் வந்துத் தங்கிய யூதன் இன்று யூதனாக இல்லை...!!!
இந்திய நிலப்பரப்பினில் வந்து குடியேறிய கிரேக்கன் இன்று கிரேக்கனாக இல்லை..!!!
இந்திய நிலப்பரப்பினில் குடியேறிய சகர்கள் இன்று சகர்களாக இல்லை...!!!

அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற பெயரிலே ஒன்றாக இருக்கின்றனர். அதுவும் நீங்கள் நன்றாக அறிந்த வர்ணாசிரமத்தின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் பெரும்பாலும் உயர் சாதியினராக இருக்கின்றனர். அதே நேரம் இந்திய நிலப்பரப்பின் பூர்வீக குடியினரான பெரும்பான்மையினரான மக்கள் தாழ்த்தப்பட்டு சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றுமே வைக்கப்பட்டு இருக்கின்றனர். வியப்பாக இருக்கின்றது தானே.

இந்த சூழ்நிலையைப் பற்றி நீங்கள் மேலும் விரிவாக அறிந்துக் கொள்ள அமெரிக்காவின் வரலாறு உங்களுக்கு உதவக் கூடும்.

உண்மையில் அமெரிக்கா என்று ஒரு நாடோ அல்லது அமெரிக்கர்கள் என்ற ஒரு இனமோ கிடையாது என்பதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள் என்றே நம்புகின்றேன். அமெரிக்கா என்று இன்று வழங்கப்படும் நிலப்பரப்பினில் வாழ்ந்துக் கொண்டு இருந்த பூர்வீக மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களைக் கொன்று ஒடுக்கியப் பின்னர் அங்கு சென்று இடத்தினைப் பிடித்த ஐரோப்பிய மக்களே இன்று அமெரிக்கர்கள் என்று வழங்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் பிடித்த இடமே அமெரிக்கா என்றும் நீங்கள் அறிவீர்கள். இடத்தினைப் பிடித்த அந்நியர்களும் வந்தேறிகளும் அங்கே ஆட்சியினைப் பிடித்துக் கொண்டு இருக்கும் பொழுது மண்ணின் மைந்தர்களான மக்களின் நிலை என்னவென்று யாரும் அறியாத நிலை தான் அங்கே இருக்கின்றது.

அதே வரலாற்று நிகழ்வு தான் இங்கேயும் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இங்கே உள்ள மண்ணின் மைந்தர்களை செவ்விந்தியர்களைக் கொன்றது போல் யுத்தத்தினால் வெல்ல முடியாத நிலையில் சூழ்ச்சிகள் பல கையாளப்பட்டு வந்தேறிகளும் அந்நியர்களும் உயர் சாதியினராய் இருக்க மண்ணின் மைந்தர்களோ சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் வைக்கப்பட்டு அறியாமையில் இருக்கின்றனர்.

இந்த வரலாற்றினை நீங்கள் அறிந்தால் தான் ஏன் உங்களின் மரணத்தினையும் உங்களையும் சாக்காக வைத்து மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் தாழ்த்தப்பட்டும் அழிக்கப்பட்டும் கொண்டு இருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிய முடியும்.

தமிழர்கள் சிறப்பானவர்கள் ஐயா...!!!

உலகின் முதல் இனம் என்று இன்று பெரும்பாலும் உலகம் ஏற்றுக் கொள்ளும் ஒரு இனம் தமிழ் இனம். ஒரு காலத்தில் இந்திய நிலப்பரப்பு முழுமையுமே தமிழர்களே இருந்து வந்தனர் என்று அம்பேத்கர் அவர்கள் கூறியது வெறும் மிகையல்ல. அதற்கு சான்றாக இன்று சிந்து சமவெளி நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்று பல ஆராய்ச்சிகள் கூறுவதும் அங்கே தமிழர்களின் புகழ் பெற்ற ஊர்ப் பெயர்களான மதுரை, வஞ்சி, தொண்டி போன்றவை காணப்படுவதும் தமிழர்களின் பெருமைக்கும் அவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதற்கும் சான்றுகளாகும். ஏன் இந்திய நிலப்பரப்பு முழுவதையும் கிட்டத்தட்ட பிடித்த அசோகனின் காலத்திலும் தெற்கே பாண்டியர்களும் சோழர்களும் சுதந்திரமாய் ஆட்சி புரிந்துக் கொண்டு தானே இருந்தனர்.

அப்பேர்பட்ட தமிழர்கள் தாம் இன்று உங்களது பெயரினால் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவ்வாறு முக்கியமாக தமிழர்களை அழிக்கும் பணியை முன் இருந்து செய்பவர்கள் பிராமணர்கள் மற்றும் மலையாளிகள் என்பதையும் நீங்கள் அறிந்து இருக்கக் கூடும். காரணம் உங்களைச் சுற்றி பெரும்பாலும் அவர்கள் தானே இருந்து இருப்பர். அதனால் அவர்களை நீங்கள் அறிந்து இருக்கக் கூடும்.

அவர்கள் அவ்வாறு அழிக்க முயல வேண்டியக் காரணம் என்ன? தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதனாலா? தமிழர்கள் இருக்கும் வரை அவர்களால் அவிழ்த்து விடப்பட்டு இருக்கும் பொய்களும் புரட்டுகளும் சூழ்ச்சிகளும் என்றாவது உடைந்து அவர்களின் மேலாதிக்கம் உடைந்து விடும் என்ற அச்சத்தினாலா?

என்ற கேள்விகளுக்கு நாம் நிச்சயம் பதில் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது ராஜீவ் அவர்களே.

அதுவும் குறிப்பாக பிராமணர்கள் என்பவர்கள் வந்தேறிகள் என்று தமிழ் இனம் முழங்கிக் கொண்டு இருக்கும் பொழுது,

மலையாளிகள் என்று இன்று அழைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அந்நிய நாட்டினைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் (மேற்கு கடற்கரையோரப் பகுதியில் நிகழ்ந்த யூத குடியேற்றங்கள், கிரேக்க மற்றும் ரோம குடியேற்றங்கள், சீரியக் குடியேற்றங்கள் போன்ற அன்னியர்கள் இன்று கேரளா எனப்படும் பகுதியில் ஆட்சிகள் புரிந்ததை வரலாறு கூறிக் கொண்டு இருக்கும் பொழுது)

அன்னியர்கள் என்று வழங்கப்படும் அவர்கள் மண்ணின் மைந்தர்களாக அறியப்படும் தமிழர்களை அழிக்க முயல்வது எதனால் என்றக் கேள்வி உங்களுக்கு முக்கியமாக படுகின்றதோ இல்லையோ தமிழர்களுக்கு நிச்சயமாய் முக்கியமான ஒரு கேள்வியாகத் தான் இருக்கின்றது.

மேலும் பிராமணர்கள் தமிழ் இனத்தின் தலைவரான திரு.காமராஜர் அவர்களையும் கொல்ல முயற்சித்து இருக்கின்றார்கள் என்ற வரலாற்றையும் இங்கே உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

மேலும் ஆச்சர்யமாகத் தான் இருக்கின்றது...ஒரு மலையாளி எங்கே சென்றாலும் மற்றொரு மலையாளியை அழைத்துக் கொண்டு விடுவான் என்று மலையாளிகளின் ஒற்றுமையை பெருமையாக யூதர்களின் ஒற்றுமையைப் போல் பேசும் மக்கள் காலங்களில் தமிழகத்தின் மேற்கு கடற்கரையில் வந்து குடி அமர்ந்த யூதர்களையும் இன்றைய மலையாளிகளையும் ஏன் ஒற்றுமைப்படுத்தி பார்க்கவில்லை என்பது நிச்சயம் ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது.

சரி இருக்கட்டும். நீண்ட நெடிய வரலாற்றினை சுருக்கமாகப் பார்ப்பது என்பது கடினமான ஒரு செயல் தான் இருந்தும் தமிழர்களான நாங்கள் எதனால் உங்களின் மரணத்திற்கு காரணமாக காட்டப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம் என்பதனை அறிய இந்த வரலாறு தேவைப்படத் தான் செய்கின்றது.

இப்பொழுது எப்படி உங்களின் மரணத்திற்கு பழியினை தமிழ் இனம் சுமக்க நேர்ந்தது என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது....!!!

கடிதம் தொடரும்....!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு