நண்பர்களுக்கு வணக்கங்கள்...!!!

ஈழத்தைப் பற்றிய வரலாற்றினைக் குறித்து இந்த வலைப்பூவினில் தொடர் ஒன்று எழுதி வந்தேன். இந்நிலையில் புதிதாக படிக்க ஆரம்பிக்கும் நண்பர்களுக்கு அப்பதிவுகள் அனைத்தினையும் வரிசைப்படுத்திப் படிப்பது என்பது கடினமான ஒரு விடயமாக இருக்கக் கூடும். அதற்காக ஒரு முகப்புப் பக்கத்தினை உருவாக்கி விட்டால் படிக்கும் நண்பர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும் என்று எண்ணியே இந்தப் பதிவு.

இத்தொடரினை எழுதத் துவங்கும் முன்னர் என் மனதில் இருந்த இலக்கு ஈழத்தில் நிகழ்ந்த போர்களைப் பற்றியோ அல்லது இன்று நிலவும் சூழலினைக் குறித்து எழுத வேண்டும் என்பதோ அல்ல...மாறாக ஈழத்தின் வரலாறு துவங்கி ராஜீவ் காந்தியின் மரணம் வரை நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி  வண்ணம் மக்களிடம் பகிர வேண்டும் என்பதே. எனவே ராஜீவ் காந்தியின் மரணத்தைப் பற்றிப் பார்ப்பதோடு இத்தொடர் முடிவு பெறும் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.

இதோ நாம் இது வரைக் கண்ட பகுதிகள்!!!

ஈழம்: ஒரு பார்வை-1!!!
ஈழம்: ஒரு பார்வை-2!!!
ஈழம்: ஒரு பார்வை-3!!!
ஈழம்: ஒரு பார்வை-4!!!
ஈழம்: ஒரு பார்வை-5!!!
ஈழம்: ஒரு பார்வை-6: இலங்கையின் விடுதலை !!!
ஈழம்: ஒரு பார்வை-7 : பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம்
ஈழம்: ஒரு பார்வை-8 : ஒப்பந்தங்கள்...பிரபாகரன்
ஈழம்: அறிந்துக் கொள்ள சில விடயங்கள்
ஈழம்: ஒரு பார்வை-9 : இந்திராவும் இலங்கையும்
ஈழம்: ஒரு பார்வை-10 : இந்தியாவும் இலங்கையும்
ஈழம்: ஒரு பார்வை-11 : இந்திய அமைதிக் காக்கும் படை
ஈழம்: ஒரு பார்வை-12 : பிரேமதாசா - புலிகள்
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!!
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 2 !!!

வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

அமெரிக்காவினை நீங்கள் எதிர்த்து இருக்கின்றீர்கள். அதே நேரம் உங்களின் மரணத்திற்குப் பின்னர் அமெரிக்காவிற்கு உங்களது கட்சியினாலேயே சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. உங்களது மரணத்தை அடிப்படையாக வைத்து ஆட்சியினைப் பிடித்த உங்களது கட்சியே உங்களது கொள்கையினை காற்றில் பறக்க வைத்து உள்ளது. ஏன் இந்த முரண்பாடு என்று சிந்திக்கவோ அல்லது விவாதிக்கவோ நமது நாட்டினில் ஊடகங்கள் ஏனோ தயாராக இல்லை. அவை ஏன் தயாராக இல்லை என்பதை நாம் முக்கியமாக கண்டாக வேண்டி இருந்தாலும் இப்பொழுது அதனை விட முக்கியமான விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது என்றே எண்ணுகின்றேன். அதுவும் குறிப்பாக நீங்கள் கொலையுண்ட காலப் பின்னணியை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றே எண்ணுகின்றேன்.

அது ஒரு தேர்தல் காலம். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 1991 ஆம் ஆண்டு. அந்த தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு நீங்கள் வரும் பொழுது தான் கொல்லப்பட்டு இருக்கின்றீர்கள். இங்கே என்னுள் எழும் கேள்வி என்னவென்றால் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கப் பெரும் பாராளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 1994 ஆம் ஆண்டில் தான் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் இரு வருடங்களிலேயே பாராளுமன்றத் தேர்தல் மீண்டும் வந்து இருக்கின்றது. அதுவும் அந்த இருவருடங்களில் இரண்டு பிரதமர்களை நமது நாடு சந்தித்து இருக்கின்றது.

சுருக்கமாக சொல்வதென்றால் நமது நாடு அந்த ஆண்டுகளில் ஏதோ மறைமுகப் பிரச்சனைகளைக் கண்டு வந்துக் கொண்டு இருந்து இருக்கின்றது என்றே என்னால் அறிந்துக் கொள்ள முடிகின்றது. நிச்சயம் அதனை நீங்களும் அறிந்து இருப்பீர்கள் என்றே எண்ணுகின்றேன்.

1989 ஆம் ஆண்டில் பிரதமராக பதவி ஏற்ற வி.பி.சிங் அவர்களை நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஈழத்தில் நீங்கள் அனுப்பிய அமைதிக் காக்கும் படையினை திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரு உன்னதமான மனிதர். இன்று வரை தமிழர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் ஒரு பிரதமர் என்றால் அது திரு.வி.பி.சிங் அவர்கள் தான் என்பதனை தமிழகம் நீங்கள் வந்து இருந்தால் நிச்சயம் அறிந்து இருப்பீர்.

ஆனால் வி.பி.சிங் அவர்கள் அமைதிப் படையினை திரும்பப் பெற்றதோடு மட்டும் நிற்க வில்லை...நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இட ஒதுக்கீடுக்கான மண்டல் கமிசனின் பரிந்துரைகளை சட்டமாக்கியவரும் அவரே. "ஆட்சிப் போனாலும் கவலை இல்லை...மக்களுக்கு உரிய இந்த இட ஒதுக்கீட்டினை நான் சட்டமாக்கியே தீருவேன்" என்று கூறி பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீட்டினை பெற்றுத் தந்த ஒரு மாபெரும் தலைவர் அவர்.

இட ஒதுக்கீட்டை அவர் கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக அவர் பதவி விலக வேண்டி இருந்தது என்பதையும், அவருக்கு பின்னர் சந்திரசேகரன் என்பவர் பதவி ஏற்றார் என்பதையும் நீங்கள் நன்றாக அறிவீர்.

இந்த சந்திரசேகரன் என்பவர் தான் அமெரிக்க விமானங்களுக்கு இந்தியாவில் எரிவாயு நிரப்ப அனுமதி தந்தவர் என்பதையும் அதனை பாராளுமன்றத்தில் நீங்கள் வன்மையாக கண்டித்தீர்கள் என்பதையும் வரலாற்றை சற்று கவனித்து இருப்பவர்கள் நிச்சயம் அறிந்துத் தான் இருப்பர். மேலும் இவரும் ஒரு வருடத்திற்கு மேலாக ஆட்சியில் இல்லாமல் ஆட்சி கவிழ மீண்டுமொரு பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்தியா தயாரானது என்பதையும் நீங்கள் அறிவீர். இதனால் தான் 1991 ஆம் ஆண்டில் நீங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராக வேண்டி இருந்தது.

இங்கே பலரும் 1991 ஆம் ஆண்டை மட்டுமே கண்டுக் கொண்டு இருக்கும் பொழுது ஏனோ தெரியவில்லை எனது கவனம் 1989 ஆம் ஆண்டில் திரு.வி.பி.சிங் அவர்களால் கொண்டு வரவேற்றப்பட்ட இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மீதே செல்லுகின்றது. காரணம் மீண்டும் தேர்தல் வருவதற்கு அடிப்படைக் காரணியாகவே அச்சட்டம் விளங்குகின்றது.

அச்சட்டத்தின் வாயிலாக அனைத்து அரசு பணிகளிலும் அனைத்து வகையான மக்களுக்கும் உரிய உரிமைகள் கிட்டப்பெறும். ஆனால் அதே சமயம் இந்தியாவில் பிராமணர்களும் உயர் சாதியினரும் கொண்டு இருந்த ஆதிக்கம் படிப்படியாக குறைந்து இருக்கும். இதனை நிச்சயம் அவர்கள் விரும்பி இருக்க மாட்டார்கள். ஆண்டாண்டுக் காலமாக அநியாயமாக அனுபவித்து வந்த சுகங்களை அவர்கள் இழக்க எவ்வாறு விரும்புவார்கள்?

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் பெரும்பான்மையானோர் பிராமணர்கள்.
பா.ஜ.க வைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
பொதுஉடைமை கட்சி என்றுக் கூறிக் கொள்ளும் கட்சியின் தலைமையிலும் பிராமணர்களும் மலையாளிகளுமே நிறைந்து உள்ளனர்.

இவ்வாறு இந்திய அரசியலில் முக்கியமான இடங்களை எல்லாம் கைப்பற்றிக் கொண்டு இருக்கும் பிராமணர்களும் உயர் சாதியினரும் எவ்வாறு அவர்களது ஆதிக்கத்திற்கு எதிராக வரும் சட்டத்தை ஏற்றுக் கொள்வர். மாட்டார்கள் தானே. எதிர்க்கத் தானே செய்வார்கள். அவர்களின் எதிர்ப்பினால் தானே திரு.வி.பி.சிங் அவர்கள் பதவி விலக வேண்டி இருந்தது. இதனை நீங்களும் தானே அறிவீர்கள்.

இந்த நிலைமையிலேயே தான் நாம் உங்களின் மரணத்திற்கு பின்னர் உங்களது கட்சி கொண்டு வந்த 'தனியார் மயக் கொள்கையினைப்' பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

வி.பி.சிங் சட்டத்தினைக் கொண்டு வந்து விட்டார். இனி அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கும் இருக்கும். படிப்படியாக பிராமணர்கள் மற்றும் இதர உயர் சாதியினரின் செல்வாக்கு குறையும். அதாவது அரசு வேலைகள் என்ற ஒன்று இருந்தால் பிராமணர்களின் செல்வாக்கு குறையும். அரசு வேலைகள் என்று ஒன்று இல்லாது போனால் இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாது போகும். இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாது போனால் பிராமணர்கள் மற்றும் உயர் சாதியினரின் செல்வாக்கு குறையாது. இதில் உள்ள உண்மையை நீங்கள் அறிவீர்கள் தானே...!!!

இதனை அடிப்படையாகக் கொண்டுப் பார்த்தால் 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசு அதனுடைய பணிகளை பெரும்பாலும் தனியார் வசம் விட்டு இருப்பதன் காரணத்தை நாம் அறிய முடிகின்றது தானே.

'பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமாவதும்...அச்சட்டத்தை காரணமாகக் கொண்டு ஒரு அரசைக் கலைத்து அதற்குப் பின்னர் தனியார் மயமாக்கும் வேலையை ஆரம்பிப்பதும்' நிச்சயம் தொடர்புடையவைகளே என்பதனை நீங்கள் இங்கே இருந்து இருந்தால் நிச்சயம் அறிந்தே இருப்பீர்கள்.

இதோ இன்று நமது நாட்டினைப் பாருங்கள்...பெரும்பாலும் அனைத்தும் தனியார் மயமாக்கப் பட்டுக் கொண்டே வந்துக் கொண்டு இருக்கின்றது. அனைத்து தனியார் நிறுவனங்களிலும் மேல் இடங்களில் பிராமணர்களும் உயர் சாதியினருமே நிறைந்து இருக்கின்றனர்.

இதோ 2010 இல் எடுத்த ஒரு ஆய்வு...தலைசிறந்த தனியார் நிறுவனங்களில் மேலான பதவிகளை வகிப்பவர்களில் 93% சதவீதம் பேர் உயர் சாதியினரே என்பதனை அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது (இவர்கள் இந்திய சனத்தொகையில் வெறும் 10% அவ்வளவே).

இதன் மூலமாக உங்களின் மரணத்தில் ஆதாயம் அடைந்து இருப்பது வெறும் அமெரிக்க நாட்டவர்கள் மட்டும் அல்ல இங்கே இருக்கும் உயர் சாதியினரும் பிராமணர்களும் தான் என்பது உங்களுக்கு புலனாகும் என்றே நம்புகின்றேன்.  இந்தக் கூற்றுக்கு சான்றாக உங்களின் மரணத்திற்கு வழிவகுத்த ஒருவராக அறியப்படும் சுப்பிரமணிய சாமி ஒரு பிராமணராக இருப்பதை எடுத்துக் கொள்ளலாம் தானே.

சுப்பிரமணிய சுவாமியை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். நீங்கள் இறந்து விட்ட செய்தியை அவ்விடத்தில் உள்ளவர்களே அறியாத நிலையிலேயே எங்கோ இருந்துக் கொண்டு இராஜீவ் காந்தி இறந்து விட்டார்...விடுதலைப் புலிகள் அவரைக் கொன்று விட்டார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்த ஒருவர் அவர். நிச்சயம் அவரை நீங்கள் அறிந்து இருப்பீர். இல்லை அறியவில்லை என்றாலும் அறிந்துக் கொள்ள முயற்சியாவது செய்யுங்கள் காரணம் உங்களின் மரணத்தில் சுப்பிரமணிய சாமியை விசாரிக்க விசாரணை கமிசன் பரிந்துரைத்தும் இன்னும் விசாரிக்கப்படாமலே நாட்டினுள் உலா வந்து கொண்டு இருக்கும் ஒரு மாபெரும் தலைவர் அவர்.

மேலும் நீங்கள் மரணித்த ஒரு மாதத்திற்குப் பின்னர் காஞ்சிபுரத்தில் பிரம்மஹத்தி தோஷ யாகம் நடத்தியவர் அவர். பிரம்மஹத்தி தோஷ யாகம் என்றால் என்னவென்று சாமானியனான எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். ஒரு பிராமணனைக் கொன்றால் அதை விட பெரிய பாவம் இல்லை என்றும் அப்பாவத்தை தீர்க்க யாகம் செய்ய வேண்டும் என்றும் அதுவே பிரம்மஹத்தி யாகம் என்பதும் நிச்சயம் உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஏன் என்றால் நீங்களும் ஒரு பிராமணர் தானே. உங்கள் ஆட்கள் தானே இந்த கதைகளை எல்லாம் நாட்டினுள் கட்டி வைத்து இருக்கின்றனர். ;ஆகையால் நிச்சயம் உங்களுக்கு அந்த யாகத்தைப் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.

பண்டிட் ஜவர்ஹலால் நேரு...உங்களின் தாத்தாவின் பெயர். இதில் பண்டிட் எனப்படுவது அவர் படித்து வாங்கியப் பட்டம் இல்லை...அது காஷ்மீரத்து பிராமணர் என்பதைக் குறிக்கும் சொல். அதாவது நீங்கள் காஷ்மீரத்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

நீங்கள் ஒரு பிராமணர். நீங்கள் மரணித்து இருக்கின்றீர். இல்லை கொலை செய்யப்பட்டு இருக்கின்றீர். அக்கொலையினில் சந்தேகத்துக்கு உரிய ஒருவர் பிராமணரை கொன்றால் செய்ய வேண்டிய யாகத்தை செய்கின்றார். அதுவும் நீங்கள் இறந்த ஒரு மாத காலத்திற்குள். இந்நிலையில் அவர் யாரைக் கொலை செய்தார்...எந்த பிராமணனைக் கொலை செய்தார்...என்ற கேள்விகள் சாதாரண மனிதனின் மனதிலேயே எழக்கூடும் தான் அல்லவா....ஆனால் ஏன் இந்தக் கேள்விகள் விசாரணை அதிகாரிகளின் மனதிலும் ஊடகங்களின் மனதிலும் எழவே இல்லை?

ஏன் சுப்பிரமணிய சாமி விசாரிக்கப்படவே இல்லை?

அவர் பிராமணர் என்பதாலா? இல்லை ஊடகங்கள் அனைத்தும் பிராமணர்களின் கையிலேயே இருக்கின்றன என்பதாலா...அல்லது இந்திய அரசியல் இன்றும் பிராமணர்களின் கைகளிலேயே தான் மறைமுகமாக இருக்கின்றது என்றக் காரணத்தினாலா?

இடஒதுக்கீடு வந்து இருக்கின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி கலைக்கப்படுகின்றது. பின்னர் உங்களை கொலை செய்வதன் வாயிலாக அமெரிக்கா உள்ளே அழைத்து வரப்படுகின்றது...தனியார்மயம் அமெரிக்காவின் துணையுடன் ஊட்டி வளர்க்கப்படுகின்றது...அரசு இயந்திரம் பழுதடைய செய்யப்படுகின்றது.

இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை என்றே எனக்குத் தோன்றுகின்றது. நிச்சயம் உங்களுக்கும் அவ்வாறே தோன்ற வேண்டும் என்றே நான் கருதுகின்றேன்...இல்லையெனில் உங்களின் மரணத்தை காரணமாக வைத்து ஆட்சியைப் பிடித்த உங்களின் கட்சியே உங்களின் மரணத்தைக் குறித்து உண்மையான அக்கறைக் காட்டாமலும் அதனைக் குறித்த விசாரணையை மழுங்கடிக்கச் செய்ததும் உங்களின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டதும் ஏன் என்ற கேள்விகளுக்கு உங்களால் விடை அளிக்க முடியுமா ஐயா?

மேலும் தங்களுக்கு சாதகம் என்றால் எதையும் பிராமணர்கள் செய்வர் என்பது நாம் அறிந்த ஒன்று தானே...ஆங்கிலேயன் இங்கே முதலில் வந்த பொழுது அவனுக்கு வால் பிடித்தது யார்? அவர்கள் தானே. காரணம் அவர்களும் அன்னியர்கள் தானே. சரி இருக்கட்டும் வரலாறு பெரியது. உங்களுக்கு அவ்வளவு பெரிய வரலாறு தெரிந்து இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே...இருந்தும் அவற்றை நாம் பார்க்க வேண்டிய நேரத்தில் பார்க்க முயலலாம்.

இப்பொழுது உங்களின் மரணத்தினால் ஆதாயம் அடைந்தவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் இந்தியாவில் வாழும் பிராமணர்களும் உயர் சாதியினருமே ஆவர் என்றே நாம் கண்டு  இருக்கின்றோம். இதனை குறித்து எந்த ஒரு ஊடகமும் பேசாது இருப்பதற்கு காரணம் ஊடகங்கள் அனைத்தும் ஒன்று அமெரிக்கா சார்ந்து இருக்கின்றன அல்லது பிராமணர்கள் சார்ந்து இருக்கின்றன என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது மேலும் சில விடயங்களைக் குறித்து நான் உங்களிடம் பேச வேண்டி இருக்கின்றது.

உங்களின் மரணத்திற்கு காரணமாக தமிழர்கள் அடையாளப்படுத்தப் பட்டு உள்ளனர். அது உண்மையா...உண்மை இல்லாவிடில் ஏன் தமிழர்கள் குறி வைத்து பழி வாங்கப்பட்டனர் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

கடிதம் தொடரும்....!!!

பி.கு:
1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!
2) தொடர்புடைய புத்தகங்கள்/பதிவுகள் சில
 - ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி
 - http://greatgameindia.wordpress.com/2013/03/07/subramanian-swamy-the-mossad-stooge-the-assassination-of-rajiv-gandhi/
 - http://realkillersofrajiv.blogspot.in/
- http://www.outlookindia.com/article.aspx?205868
- http://www.nytimes.com/1991/01/30/world/india-in-an-uproar-over-refueling-of-us-aircraft.html

அன்புள்ள ராஜீவ் காந்தி அவர்களுக்கு,

நிச்சயம் இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் கடிதம் எழுதியாக வேண்டிய சூழ்நிலை இருப்பதினால் எழுதித் தான் ஆக வேண்டி இருக்கின்றது. இன்று மீண்டும் உங்களது கொலை வழக்கைப் பற்றிய விவாதங்களும் அநியாயமாய் தண்டனைப் பெறப்பெற்ற அப்பாவிகளின் விடுதலையைக் குறித்த குரல்களும் எழத் துவங்கி உள்ளன. இந்நிலையில் என் மனதில் இருக்கும் எண்ணங்களையும் கேள்விகளையும் உங்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்றே தோணுகின்றது.

உங்களுக்குத் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை இருந்தும் இன்றைக்கு உங்களின் கொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள் தான் என்ற எண்ணம் இந்திய மக்களின் இடையே வெகுவாக பரப்பப்பட்டு உள்ளது. ஈழத்தில் நீங்கள் தமிழர்களைக் கொன்றீர்கள் அதனால் பழிக்கு பழியாக உங்களை விடுதலைப் புலிகள் கொன்று விட்டனர் என்றே மக்கள் நம்ப வைக்கப்பட்டு உள்ளனர். "பழிக்கு பழி...இரத்தத்திற்கு இரத்தம்" என்ற வகையிலான திரைப்படங்களை மட்டுமே கண்டு வளர்ந்த ஒரு சமூகத்திடம் அக்கருத்து விரைவாக சென்று அடைந்ததில் நமக்கு வியப்பு ஒன்றும் இல்லை தான்.

இராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்...!!!
யாரால்?
விடுதலைப்புலிகளால்...!!!
ஏன்?
ஈழத்தில் அவர் தமிழர்களைக் கொன்றார் அதனால்...!!!
ஆ...சரிதான்...அப்படித்தான் இருக்க வேண்டும்...!!!

என்றவாறே தான் இன்றைய மக்களுள் கருத்துக்கள் நிலவிக் கொண்டிருக்கின்றன. பிழை அவர்களின் மேல் இல்லை...காரணம் அவர்களை அந்த அளவு அரசியல் தெளிவோடு தான் இன்றைய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வைத்து இருக்கின்றன. நாட்டின் நிலைமை அவ்வாறு தான் இருக்கின்றது.

ஆனால் நிச்சயம் உண்மையை நீங்கள் அறிந்து இருப்பீர்...ஒரு விடுதலைப் போராட்டத்தில் பழி வாங்கும் எண்ணம் சிறிதும் உதவாது என்பதனை. விடுதலையை நோக்கிப் போராடும் ஒவ்வொரு போராளியின் இலக்கும் விடுதலையாகவே இருக்குமே அன்றி, தனி மனித விருப்பங்களோ அல்லது வெறுப்புகளோ முக்கியமாக இருக்காது. ஆயிரம் இழப்புகளைச் சந்தித்தாலும் இலக்கு விடுதலையாகவே இருக்கும். அதற்கு பங்கம் விளைவிக்கும் யாதொரு செயலையும் எந்த ஒரு விடுதலைப் போராளியும் எப்பொழுதும் செய்ய மாட்டான். இதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள்...விடுதலைப் புலிகளும் அறிந்து தான் இருப்பர்.

அந்நிலையில் அவர்கள் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உங்களைக் கொன்றால், அண்டை நாடான இந்தியாவின் ஆதரவினை நிரந்திரமாக இழக்க வேண்டி வரும் என்பதையும்...தாய் தமிழகத்தின் ஆதரவையும் இழக்க நேரிடும் என்பதையும் அறிந்தே தான் இருப்பர். அதனை விட பெரிய இழப்பு அவர்களுக்கு நிச்சயம் கிடையாது. உங்களின் மரணத்தினால் புலிகளுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக கிட்டி இருக்கும்...மேலும் அவர்களின் விடுதலை போராட்டமும் ஒரு பின்னடைவை சந்தித்து இருக்கும்.

நிலைமை இவ்வாறு இருக்கையில் நிச்சயம் அவர்கள் உங்களைக் கொலை செய்ய எந்த ஒரு காரணமும் இல்லை என்றே தோணுகின்றது. காரணம் அதில் அவர்களுக்கு எந்த ஒரு ஆதாயமும் இல்லை.

இங்கே ஒரு புத்தகம் எனக்கு நியாபகம் வருகின்றது 'தி கவுன்ட்ஆப் மோன்டே கிறிஸ்டோ' என்றொரு புத்தகம் அது. அதில் ஒரு அப்பாவி இளைஞன் எந்த ஒரு தவறுமே செய்யாது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பான். ஏன் தான் சிறையில் இருக்கின்றோம் என்றே அவன் குழம்பிக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு பெரியவர் "ஏன் காரணமே அறியாது துன்பத்தை அனுபவிக்கின்றோம் என்று எண்ணுகின்றாயா...உன்னுடைய துன்பத்தினால் யார் யார் எல்லாம் இன்பமும் பலனும் அடைந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பார்...அப்பொழுது உன்னுடைய துன்பத்திற்கான காரணத்தை நீ கண்டு அறிவாய்" என்றே கூறிச் செல்வார்.

அதையேதான் நாமும் இங்கே முயன்றுப் பார்க்க வேண்டி இருக்கின்றது. உங்களின் மரணத்தினால் நிச்சயம் விடுதலைப்புலிகளுக்கு யாதொரு நன்மையையும் இல்லாத நிலையில்...உங்களின் மரணத்தினால் யாரெல்லாம் ஆதாயம் அடைந்து இருப்பார்கள் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் உங்களின் வாழ்க்கையை சற்று திரும்பித் தான் பார்க்க வேண்டி இருக்கின்றது.

பிறப்பும் இறப்பும் நமது கைகளில் இல்லை. நீங்கள் பிறக்கும் பொழுதே நூறு கோடி மக்களை ஆளும் வாய்ப்பினைப் பெற்ற குடும்பத்தில் பிறந்தீர்கள். இருந்தும் ஆட்சியில் உங்களுக்கு ஆர்வம் இருந்ததா என்பது தெரியவில்லை. காரணம் உங்களின் அண்ணன் சஞ்சய் காந்தி அப்பொறுப்புகளில் ஆர்வம் கொண்டு இருந்தமையால் நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து இருக்க சாத்தியக் கூறுகள் அதிகமாகத் தான் இருக்கின்றது.

ஒருவேளை உங்களது அண்ணனும் மர்மமாக இறக்காமல் உங்களது தாயும் கொலை செய்யப்படாமல் இருந்து இருந்தால் நீங்கள் அரசியலுக்கு வராமலே போயிருந்து இருக்கலாம். எனக்கும் இந்த கடிதத்தை எழுத வேண்டிய தேவை இல்லாது போயிருக்கும். ஆனால் அவை அனைத்தும் நிகழ்ந்து விட்டன. எனவே நாமும் அவற்றைக் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

நீங்கள் ஒரு அரசியல்வாதி அல்ல ராஜீவ் அவர்களே...அண்ணன் எப்பொழுது செல்வான் திண்ணை எப்பொழுது காலி ஆகும் என்று அரசியலையே கண்ணாக வைத்து கொண்டு இருந்தவராக எனக்குத் தெரியவில்லை...உங்களின் அண்ணனின் மறைவிற்குப் பின்னர் தான் நீங்கள் களம் இறக்கப்படுகின்றீர்கள். சந்தர்ப்பம் உங்களை அரசியலுக்கு இழுத்து வருகின்றது.

அப்பொழுது கூட நீங்கள் பிரதமராக ஆவீர்கள் என்று எண்ணினீர்களா இல்லையா என்றுத் தெரியவில்லை...காரணம் நாட்டினை ஆண்டுக் கொண்டு இருக்கும் நமது அம்மா மரணம் அடைவார்கள் என்று எந்த பிள்ளையுமே எண்ணி இருக்க மாட்டான் தான். ஆனால் உங்களின் தாயார் கொலை செய்யப்பட நாட்டின் தலைமைப் பொறுப்பு உங்களின் வசம் வருகின்றது. இங்கே தான் சில கேள்விகள் கிளம்புகின்றன...

1) உங்களின் தலைமைப் பொறுப்பை அதாவது நீங்கள் பிரதமர் ஆவதை உங்களின் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்களா?

2) பிரதமராவதற்கு உரிய பக்குவம் உங்களுக்கு இருந்து இருக்குமா?

இவ்விரண்டுக் கேள்விகளுக்குமே விடைகள் இல்லை என்றே வருகின்றது.

நிச்சயமாய் இந்திரா காந்தி அவர்கள் இருந்து இருக்கக் கூடிய கால கட்டம் வரைக்கும் அவரைத் தவிர வேறு யாரும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரதம மந்திரி ஆகி இருக்க முடியாது. அந்நிலையில் அவருக்கு அடுத்து சஞ்சய் காந்தி என்று ஒருவர் வரிசையில் இருந்தாலும் சிலருக்கு பிரச்சனைகள் தான். அந்நிலையில் அவ்விருவரின் மரணத்தையும் சிலர்....உங்கள் கட்சிக்காரர்களே கொண்டாடி இருப்பர். அவர்களுக்கு நிச்சயமாய் நீங்கள் அரசியலுள் நுழைந்தது கசப்பாகத் தான் இருந்து இருக்கும். எப்பொழுது நீங்கள் இறப்பீர்கள் எப்பொழுது அவர்கள் பிரதமர் ஆகலாம் என்றே அவர்களின் சிந்தனை இருக்கும் தானே.

அதன் அடிப்படையில் பார்த்தால் இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக பிரதமர் ஆகி இருக்க வேண்டிய திரு. நரசிம்ம ராவ் அவர்கள் உங்களால் அந்த வாய்ப்பினை இழந்து விட்டார். நீங்கள் பிரதமராக ஆக்கப்பட்டு விட்டீர்கள். இனி நீங்கள் இருக்கும் வரை அப்பதவி அவருக்கு கிடையாது.

இந்நிலையில் உங்களின் மரணத்திற்கு பின்னர் திரு.நரசிம்ம ராவ் அவர்களே பிரதமர் ஆகி இருப்பதும், உங்களுடைய மரணத்திற்கான சதியின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் சந்திராசாமியும் நரசிம்ம ராவும் தோழர்கள் என்பதும் இங்கே நாம் சிந்தித்துப் பார்த்தாக வேண்டிய விடயங்களாக இருக்கின்றன.

மேலும் நீங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுதே உங்களை சதியால் அகற்ற நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி, சந்திராசாமி போன்றவர்கள் முயன்றார்கள் என்பதையும் நீங்கள் அறிந்தே இருந்தீர்கள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

அதாவது நீங்கள் பிரதமர் ஆனதில் உங்கள் கட்சிக்கு உள்ளேயே புகைச்சல் இருந்து இருப்பது புலனாகின்றது. சரி இது இருக்கட்டும்...!!!

உங்களின் தாயார் தீவிர சோவியத் ஆதரவாளர். சோவியத் ஆதரவாளர் என்றால் அமெரிக்க எதிர்ப்பாளர் என்பது மறைமுகப் பொருள் தானே. இது நிச்சயமாய் அமெரிக்காவிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விடயமாக இருந்து இருக்காது என்பது தெளிவு.

நூறு கோடி மக்கள் தொகையினைக் கொண்ட நாட்டினை இழக்க நிச்சயம் அமெரிக்கா தயாராக இருக்காது. இந்தியாவின் கொள்கைகள் அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தால் அமெரிக்கா பெறப் போகும் இலாபங்கள் கணக்கில் அடங்காதவை என்பதை அமெரிக்கா அறிந்தே தான் இருக்கும். அதற்குத் தேவை எல்லாம் அதனை நாட்டிற்குள் அனுமதிற்கும் ஒரு தலைவர். அமெரிக்காவின் அடிமையாக இருக்க காத்து இருக்கும் ஒரு தலைவர். ஆனால் அந்த தலைவர் தான் அதற்கு கிட்டவில்லை.இந்திரா காந்தி சோவியத் ஆதரவாளராக இருந்தார்.

இந்நிலையில் வந்தால் நூறு கோடி மக்கள் இருக்கும் ஒரு மாபெரும் சந்தை...அள்ள அள்ள குறையாத இயற்கை வளங்களைக் கொண்டுள்ள ஒரு பூமி...அதற்கு வேண்டியது ஒரு தலைவரின் மரணம்...ஒரே ஒரு தலைவரின் மரணம்..என்ற நிலையில்...அமெரிக்கா என்ன செய்து இருக்கும். வரலாற்றில் அது என்ன செய்து இருக்கின்றதோ அதையே தான் செய்து இருக்கும். அந்த தலைவரைக் கொலை செய்ய முயற்சி செய்து இருக்கும். இந்திரா காந்தியின் மரணத்திலும் சந்திராசாமியின் பெயர் அடிபடுவதுடன் அவரின் மரணத்திலும் மர்மம் நிலவுதும் அமெரிக்காவின் தலை ஈட்டினை நிச்சயமாய் உறுதி செய்கின்றன.

இந்திரா காந்தியின் மரணத்துடன் சந்திராசாமியின் தோழரான நரசிம்ம ராவ் பிரதமராகி இருந்தால் அன்றே அமெரிக்கா இந்தியாவினுள் நுழைந்து இருக்கும். ஆனால் எதிர்பாராவிதமாய் நீங்கள் உள்ளே புகுந்து இருக்கின்றீர்கள். யாரும் இதனை எதிர் பார்த்து இருக்க முடியாது. அமெரிக்காவும் தான். கூடுதலாக நீங்களும் சோவியத் ஆதரவாளர். அமெரிக்காவின் நிச்சயமாய் தீர்க்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உங்களின் பெயரைச் சேர்க்க அந்த ஒரு காரணம் போதாதா.

போதாகுறைக்கு வளைகுடா போரில் நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராக பேசியதும்...'என்றுமே இந்தியா அமெரிக்காவிற்கு வால் பிடிக்காது...நாங்கள் முன்னேற்றத்திற்காக ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளை நாடுவோம்...' என்று அமெரிக்காவை எதிர்த்ததும் நிச்சயமாய் அமெரிக்காவிற்கு இனித்து இருக்காது.

இந்நிலையில் உங்களை நீக்கவே அமெரிக்கா முயன்று இருக்கும். உங்களை நீக்கி விட்டு அதன் கொள்கைகளுக்கு கதவினை திறந்து விடும் ஒரு அடிமைத் தலைவனைத் தான் அமெரிக்கா இந்தியாவின் பிரதமராக அமைக்கப் பார்க்கும்.

இதன் அடிப்படையில் பார்த்தோம் என்றால்...

அமெரிக்காவினை எதிர்த்த தலைவரான உங்களின் மரணத்திற்கு பின்னர், உங்களின் மரணத்தைக் காரணமாக வைத்தே ஆட்சியில் அமர்ந்த உங்களது கட்சியானது செய்த முதல் வேலை உங்களின் கொலைக்கான வழக்கை முடக்க முயன்றதும்...அமெரிக்காவினை இந்தியாவினுள்...'தாராளமயமாக்கம்...தனியார்மயமாக்கம்...உலகமயமாக்கம்...' என்ற கொள்கையின் வாயிலாக அனுமதித்ததுமே ஆகும்.

இதனை இன்று வரை எந்த ஒரு ஊடகமுமே கேள்விக்கு உட்படுத்தாமல் இருப்பது நிச்சயமாய் ஆச்சரியப்படத் தான் வைக்கின்றது.

கடிதம் தொடரும்...!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

2) தொடர்புடைய புத்தகங்கள்/பதிவுகள் சில
 - ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி
 - http://greatgameindia.wordpress.com/2013/03/07/subramanian-swamy-the-mossad-stooge-the-assassination-of-rajiv-gandhi/
 - http://realkillersofrajiv.blogspot.in/
- http://www.outlookindia.com/article.aspx?205868
- http://www.nytimes.com/1991/01/30/world/india-in-an-uproar-over-refueling-of-us-aircraft.html

இன்று தமிழர்களும் சரி தமிழர்களால் உருவாக்கப்பட்ட சமயங்களும் சரி அடிமைத்தளையில் கட்டுண்டு கிடக்கின்றனர். மாபெரும் அறிவுக் களஞ்சியத்திற்கு உரிமையாளர்களான தமிழர்கள் அச்சிறப்பினை அறியாது அறியாமையிலும் மூட நம்பிக்கைகளிலும் உழன்றுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இருந்து அவர்களை விடுவிக்க அவர்களது உண்மையான வரலாற்றையும் அவர்களது சிறப்பையும் அவர்களை அறியச் செய்து அவர்களது உரிமைகளை அவர்கள் மீட்டு எடுக்க செய்வதன் மூலமே முடியும். அவ்வாறு தமிழர்கள் விடுதலை அடைந்தால் தான் அவர்களது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'தென்னாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்ற உயர்ந்த உண்மைகள் வெளியாகி உலகில் இன்று நிலவிக் கொண்டு இருக்கும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் சண்டைகளுக்கும் ஒரு நிரந்திரமான முடிவினைக் கொண்டு வர முடியும். அத்தகையத் தீர்வு தமிழ் இனம் விடுதலை அடைவதில் தான் அடங்கி இருக்கின்றது. அதன் ஒரு கூறாக தான் தமிழர் சமயத்தின் விடுதலைப் போராட்டங்கள் நிகழப் பெறுகின்றன. நிற்க.

இங்கே நிச்சயம் பல கேள்விகள் எழும்பும்...மாற்றுக் கருத்துக்களும் தான். அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.

1) கபாலீசுவரர் ஆதிக் கோவில் கத்தோலிக்கர்களால் இடிக்கப்பட்டது ஏன்?

2) அதன் மீது இயேசுவின் சீடரான தோமாவிற்காக சாந்தோம் பேராலயம் கட்டப்பட்டது ஏன்?

3) ஏன் அப்பேராலயம் 1950 இல் போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது?

4) கபாலீஸ்வரர் பெயர்க் காரணம் என்ன? இப்பொழுது புனையப்பட்டுள்ள கதையான கபாலத்தில் பிச்சை எடுத்தவர் என்பது கடவுளுக்குப் பொருந்துமா?

5) கபாலீஸ்வரர் கோவிலில் பலி பீடம் இருக்கின்றது ஆனால் பலி இல்லை...அது ஏன்?

6) காசியில் உள்ள சிவலிங்கத்தை தொட்டுக் கும்பிட இயலும் தமிழர்களுக்கு கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை தொட்டு வணங்க சங்கராச்சாரியார்கள் தடை விதித்து உள்ளது ஏன்?

7) உருவ வழிபாட்டை ஏற்காத 'நான் தான் கடவுள்' என்ற நாத்திக கொள்கையை அடிப்படையாக கொண்ட நாத்திக சமயமான ஸ்மார்த்த சமயத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்களின் கட்டுப்பாட்டுக்கு எப்பொழுது/எவ்வாறு இறை நம்பிக்கையை உடைய சைவ வைணவ சமயங்கள் சென்றன?

என்பன போன்ற பல கேள்விகளுக்கும் அக்கூட்டத்தில் பதில்கள் அளிக்கப்படும். மேலும்,

உடலைப் பற்றி ஆராய்வது அறிவியல்...உயிரைப் பற்றி ஆராய்வது மெய்யியல்...இறைவனைப் பற்றி ஆராய்வது இறையியல். இந்த மூன்றையும் ஆராயும் மனிதனின் ஆறாவது அறிவிற்கு காரணமான ஆன்மாவைப் பற்றி ஆராய்வது ஆன்மவியல். ஆன்மவியலில் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் அடங்கி விடுகின்றன. உலக மொழிகளில்தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆன்மவியலின்உலகவளாவிய சிறப்பும் கூட்டத்தில் விளக்கப்படும்.

தமிழர் வரலாற்றில், சமயங்களின் வரலாற்றில், சமூக மாற்றத்தில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவர்கள் தயைக் கூர்ந்து கலந்துக் கொள்ளலாம்.

கண்ணால் காண்பதும் பொய்...காதால் கேட்பதும் பொய்...தீர விசாரிப்பதே மெய்.

பி.கு:

1) வரலாற்றைக் குறித்து நாம் பல பதிவுகளை கண்டு வந்துக் கொண்டு இருக்கின்றோம். அப்பதிவுகளை கீழே உள்ள இணைப்பில் காணலாம்...

சமயங்களும் வரலாறும் - முகப்புப் பக்கம்

2) மேலும் தொடர்புடைய பதிவுகள்

தமிழர் ஆன்மீக எழுச்சிப் போராட்டம் - 19-01-2014
தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் என்ன...!!!
கேரளத்து சீரியக் கிருத்துவர்களுக்கும் தோமாக்கும் தொடர்பு இருக்கின்றதா...!!!

ஒரு சராசரியின் வாழ்க்கை மிகவும் எளிதானது தான்.

அணுமின் நிலையங்கள் குறித்தோ அல்லது அதனை எதிர்த்துப் போராடும் மக்களைக் குறித்தோ அல்லது நாட்டில் நிலவும் மின்வெட்டினைக் குறித்தோ பெரிதும் மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டிய தேவைகள் ஒரு சராசரி வாழ்க்கையில் பெரும்பாலும் இருப்பதில்லை.

"மின்சாரம் இல்லையா...சரி பிரச்சனை இல்லை பாழாய்ப் போன நாட்டினை சிறிது திட்டி விட்டு மின்சாரம் இல்லாது எவ்வாறு வேலையைப் பார்ப்பது என்பதனை யோசிக்கலாம்...அப்படியே மின் வாரியத்திற்கு ஒரு அழைப்பினை விடுத்து 'அண்ணே..இங்க மின்சாரம் இல்ல...எப்பனே விடுவீங்க' என்று கேட்டுக் கொள்ளலாம்...கூடவே மின்சாரம் இல்லாததற்கு இவர்கள் தான் காரணம் என்று ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் சில மனிதர்களை நோக்கி கை காட்டினால் அவர்களையும் கடிந்துக் கொள்ளலாம்."

ஒரு சராசரியின் பணி பொதுவாக அத்துடன் முற்றுப் பெற்று விடுகின்றது. மின்சாரம் ஏன் இல்லை? எதனால் மின் வெட்டு நிலவுகின்றது...அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்ட மின்சாரத்தின் பின்னால் உள்ள அரசியல் இதனைக் குறித்து சிந்திக்கவோ அல்லது தகவல்களை அறிந்துக் கொள்ளவோ பெரும்பாலும் நமக்கு தேவையோ அல்லது நேரமோ இருப்பதில்லை. அதனை விட முக்கியமான பல விடயங்கள் நமக்கு ஒவ்வொரு நாளும் இருக்கின்றன. பிரச்சனை அங்கே தான் இருக்கின்றது.

அக்கேள்விகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று நம் நாட்டு மின்சார வாரியம் கிட்டத்தட்ட 1,16,089 கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றது. அதுவும் குறிப்பாக தமிழக மின்சார வாரியம் 53,298 கோடி ரூபாய் கடனில் மூழ்கிக் கொண்டு இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் நம் நாட்டின் அரசு அப்பெரும் கடன் தொகையை நம் மீது (நாட்டு மக்களின்) தலையில் வைக்க முடிவு செய்து இருக்கும் நிலையில்

 "2011-2012 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து மின் விநியோக நிறுவனங்களும் 1,16,089 கோடி நஷ்டத்தை ஈட்டும்; அதனால், மின் விநியோக நிறுவனங்கள் தனியாருடன் செய்துக் கொண்ட கொள் முதல் ஒப்பந்தங்களின் படி பணத்தை உடனடியாக தருவதற்கு வழி இல்லாது போகும். எனவே 1,16,089 கோடி ரூபாயையும் மின் பயனீட்டாளர்கள் மீது சுமத்தத் தேவையான உத்தரவுகளை அனைத்து மாநில ஒழுங்குமுறை ஆணையங்களுக்கும் வழங்க வேண்டும்" என்று மத்திய மின்துறை அமைச்சகம் இல் மின்சார மேல்முறையீட்டுத் தீர்பாயத்திற்கு கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டு உள்ளது. அதற்கு மின்சார மேல் முறையீட்டுத் தீர்பாயமும் அனுமதி தந்து உள்ளது (OP1 of 2011 of APTEL (Appellate Tribunal for electricity) dated 11.11.2011). அதன்படி ஆண்டுதோறும் ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் மின் கட்டண உயர்வை மக்கள் சந்தித்தாக வேண்டிய ஒரு நிலை உருவாகி உள்ளது".""
நாம் மின்சாரத்தினைக் குறித்தும் அதனைச் சூழ்ந்து இருக்கும் அரசியலைக் குறித்தும் அறிந்துக் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு ஒரு மிகச் சிறந்த அடித்தளமாக அமைகின்றது தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் திரு.சா.காந்தி அவர்கள் எழுதிய 'தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்' என்றப் புத்தகம்.

இப்பொழுது அந்த புத்தகத்தைப் பற்றியும் அது கூறி இருக்கும் தகவல்களைப் பற்றியும் தான் நாம் சற்று பார்த்தாக வேண்டி இருக்கின்றது.

1) தமிழக மின் வாரியம் கடுமையான நஷ்டத்தில் ஓடிக் கொண்டு இருக்கின்றது. இத்தனைக்கும் 2001 ஆம் ஆண்டு வரையில் ஆண்டிற்கு 300 கோடி ரூபாய்கள் இலாபம் ஈட்டித் தந்த ஒரு துறை அது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு இன்று திடீரென்று மாபெரும் நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கின்றது?


2) மத்திய மின்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தின் படி தனியார் மின் விநியோக நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்கின்றன என்றும் அவைகளுக்கே அரசாங்க மின் வாரியங்கள் கடன் பட்டு இருக்கின்றன என்றும் அவற்றை அடைப்பதற்கே அக்கடன் தொகையை மக்களின் தலையில் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்பதும் நமக்கு புலனாகின்றது. ஆனால் புலனாகாத விடயங்கள் - என்றில் இருந்து தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை தயாரிக்கின்றன - ஏன் அவற்றிக்கு இவ்வளவு பெரியத் தொகையை அரசாங்க நிறுவனங்கள் கடன் பட்டு இருக்கின்றன - ஏன் தனியாரிடம் இருந்து நாம் மின்சாரம் பெற வேண்டி இருக்கின்றது என்பன போன்றவை ஆகும். இவை ஏன் என்றும் நாம் அறிந்தாக வேண்டி இருக்கின்றது.

3) மத்திய மின்துறை அமைச்சகம் மின்சார கட்டண உயர்வைக் குறித்து வெறும் பரிந்துரையை மட்டுமே தந்துள்ளது. ஆனால் முடிவினை எடுக்கும் உரிமையோ மின்சார மேல் முறையீட்டுத் தீர்பாயம் என்ற ஒன்றிடம் இருக்கின்றது என்பதும் நமக்கு புலனாகின்றது. இங்கே நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அது என்ன 'மின்சார மேல் முறையீட்டுத் தீர்பாயம்' என்பதும் ஏன் அதற்கு மத்திய மின்துறை அமைச்சகத்தினை விடகூடுதல் அதிகாரம் இருக்கின்றது என்பதுமே ஆகும்.

சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மேலே உள்ள விடயங்களைப் பற்றி விரிவாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால்அவ்வனைத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ள தனியார்மயமாக்கத்தைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு நாம் 1991 ஆம் ஆண்டில் அன்றைய மத்திய அரசான காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்கின்ற கொள்கையைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

அட ஆமாங்க...1991 ஆம் ஆண்டே தான். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட அதே ஆண்டு தான். அமெரிக்காவை எதிர்த்த ஒரு தலைவர் (இராசீவ் காந்தி) கொலை செய்யப்பட, அவரது மரணத்தை மையமாக வைத்தே ஆட்சியினைப் பிடித்து அவர் எதிர்த்த அமெரிக்காவிற்கு நாட்டினுள் நுழைய சிவப்பு கம்பளத்தை அத்தலைவரது கட்சியே (காங்கிரஸ்) விரித்த நாடகக் காட்சி அரங்கேறிய வருடமே தான்.

அந்நாடகத்தைப் பற்றி நாம் விரிவாக கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது, இருந்தும் அதற்கு இப்பதிவினில் இடம் இல்லாததால் அதனை வேறொரு பதிவினில் காண்போம். இப்போதைக்கு நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அமெரிக்காவினை எதிர்த்த ஒரு தலைவர் கொலை செய்யப்பட்டு இருக்கின்றார். அவ்வருடமே அமெரிக்கா அவரது நாட்டினுள் நுழைந்து இருக்கின்றது.

இவ்விரண்டு சம்பவங்களும் தற்செயலாக நிகழ்ந்தவைகளாகக் கூட இருக்கலாம்...ஆனால்

'எங்களுக்கு அடிபணியாத நாட்டின் தலைவர்களை கொலை செய்து விட்டு அவர்களுக்குப் பதிலாக எங்களுக்கு உதவக் கூடிய பொம்மைத் தலைவர்களை முன்னிறுத்தி அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பது எங்களது வழிமுறைகளில் ஒன்று. தென் அமெரிக்க நாடுகளான ஈகுவேடார் மற்றும் பனாமா ஆகிய நாடுகளின் தலைவர்கள் எங்களை எதிர்த்தப் பொழுது அவர்களை திட்டமிட்டு கொலை செய்தது எங்களின் உளவு அமைப்புத் தான்'

என்று அமெரிக்க நாட்டின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றும் வேலையை செய்துக் கொண்டு வரும் ஒருவரான ஜான் பெர்கின்ஸ் என்பவர் அவரது நூலில் குறிப்பிடும் பொழுது ராஜீவ் காந்தியின் கொலையையும் அதற்குப் பின்னர் அமெரிக்கா இந்தியாவினுள் நுழைந்ததையும் வெறும் தற்செயலான சம்பவங்களாக மட்டுமே நம்மால் காண முடியவில்லை.

சரி இருக்கட்டும் நாம் முன்னர் கண்டதைப் போலவே இது ஒரு பெரிய தலைப்பு ஆகையால் இதனை மற்றுமொரு தனிப் பதிவினில் விரிவாகக் காணலாம். இப்பொழுது மின்சாரத் துறையினைப் பற்றி மட்டுமே காண முயற்சிக்கலாம். (ஜான் பெர்கின்ஸ் எழுதிய அந்த நூலின் பெயர் -  பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம். இதனைப் பற்றிய குறிப்பைக் காண இந்த இணைப்பைப் படிக்கவும்).

எனவே இப்பொழுது இந்தப் பின்னணியிலேயே தான் நாம் உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் என்றக் கொள்கையினைக் காண வேண்டி இருக்கின்றது.

1991 இல் அரசாங்கம் தனியார்மயமாக்கல் என்றக் கொள்கையின் வாயிலாக பல்வேறுத் துறைகளையும் தனியார் மயப்படுத்த ஆரம்பிக்கின்றது. பல்வேறு துறைகளில் மின்சாரத் துறையும் அடங்கத் தான் செய்கின்றது. அது வரை முழுக்க முழுக்க மின்சார தயாரிப்பும் விநியோகமும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. ஆனால் 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மின்சாரத் துறையை தனியார் கைவசம் ஒப்படைக்கும் நிலையையே அரசுகள் கடைப்பிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. அரசாங்க நிறுவனங்களின் கைகள் புதிய சட்டங்கள் வாயிலாக கட்டப்படுகின்றன. இதனை தெளிவாக இந்நூலின் ஆசிரியர் தக்க சான்றுகள் மூலமாக இப்புத்தகத்தில் விளக்கி இருக்கின்றார். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தினைக் காணவும்.
  
 இதில் 1994 ஆம் ஆண்டில் இருந்து 2008-09 ஆம் ஆண்டு வரை தமிழக மின்சார வாரியம் உற்பத்தி செய்த/ தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்துக் கொண்ட மின்சார அளவுகள் குறிக்கப்பட்டு உள்ளன.

கவனித்தோம் என்றால் கிட்டத்தட்ட அந்த 15 வருடங்கள் காலங்களில் தமிழக அரசின் மின் உற்பத்தி 8650 மில்லியன் யூனிட்கள் மட்டுமே கூடி உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மின்சாரத்தின் அளவு வெறும் 7801 மில்லியன் யூனிட்கள் மட்டுமே கூடி உள்ளது. அதாவது அரசாங்க நிறுவனங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு கடந்த 15 வருடங்களில் 16451 மில்லியன் யூனிட்கள் மட்டுமே கூடி உள்ளன. ஆனால் தனியாரின் உற்பத்தியோ கடந்த 15 வருடங்களில் 21,024 மில்லியன் யூனிட்டுகளாக கூடி உள்ளது.

அதாவது மக்களின் மின்சார தேவை கடந்த 15 வருடங்களில் பெருமளவு கூடி உள்ளது. ஆனால் அதனைத் தீர்க்க வேண்டிய கடமையை உடைய அரசோ மின் உற்பத்தியை தனியார் வசத்திடம் விடும் வேலையை செம்மையாக செய்து வந்துக் கொண்டு இருக்கின்றது. அதாவது மக்களின் அடிப்படைத் தேவையான ஒன்று மெதுவாக அரசின் கைகளில் இருந்து விலகி தனியாரின் வசம் சென்றுக் கொண்டு இருக்கின்றது.

இதைத் தான் அமெரிக்கா விரும்புகின்றது. இதைத் தான் இந்திய நாட்டு பெரு முதலாளிகள் விரும்புகின்றனர். மின்சாரம் என்பது மக்களின் அடிப்படைத் தேவை அதனை நமது கட்டுக்குள் வைத்துக் கொண்டால் நிச்சயம் இலாபம் பார்க்கலாம்...சாதாரண இலாபம் அல்ல...கொள்ளை இலாபம். அவர்களின் அந்த இலாபத்திற்காகத்தான் இந்திய அரசும் அரசியல்வாதிகளும் இடையறாது முயன்றுக் கொண்டு இருக்கின்றனர்.

இதனை நாம் அறிந்துக் கொள்ள 1991 ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசின் கொள்கையை பார்த்தாலே தெரியும்

1) 1991 ஆம் ஆண்டில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களான மாநில மின் வாரியங்கள் மற்றும் தேசிய அனல் மின் உற்பத்திக் கழகம் போன்றவை வளரும் மின் தேவைகளுக்கு ஏற்ப புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் துவக்குவதற்கு மத்திய அரசு அனுமதியினை மறுத்து இருக்கின்றது.

2) 1992-97  காலகட்டத்தில் வந்த எட்டாவது ஐந்தாண்டு கால திட்டத்தில் புதிய மின் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டு வந்த மூலதன ஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. அதாவது மின் தேவைகள் நிச்சயம் அதிகரிக்கும் என்று நன்றாக அறிந்த காலக்கட்டத்தில் அரசு மின்சாரம் தொடர்பான வேலைகளை நிறுத்தி அதனை தனியார்களிடம் தந்து உள்ளது.

3) தனியார்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வாரி வழங்கும் பல சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. சுதந்திர இந்தியாவில் மக்களுக்கான சேவையாகப் பார்க்கப்பட்ட மின்சாரம், தனியார்மயமாக்கம் என்ற ஒன்றினால் வணிகப் பொருளாக மாறி விட்டது. இதனை மாற்றியது 2003 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய மின்சாரத் திட்டமே ஆகும். நிற்க.

மேலே நாம் கண்ட விடயங்களின் மூலமாக மின்சாரம் என்பதன் பின்னணியில் மாபெரும் அரசியல் நிகழப்ப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதை நாம் அறிய முடிகின்றது. இதனைப் பற்றி முழுதாக அறிந்துக் கொள்ள பல அறிய விடயங்களை தன்னுளே சான்றுகளுடன் கொண்டு எளிதாக விளக்கிப் கொண்டு இருக்கின்றது இப்புத்தகம்.

இப்புத்தகத்தை நிச்சயம் படிக்கவும்...படித்து விவாதிக்கவும்...விவாதித்து கருத்தினை மக்களிடையே பரப்பவும் வேண்டிய கடமை இன்று நம்மிடையே இருக்கின்றது. காரணம் அவ்வாறு செய்தால் தான்,

1) ஏன் இன்று மின்வெட்டினை நம் நாடு சந்தித்துக் கொண்டு இருக்கின்றது என்பதையும்

2) ஏன் மின்சார கட்டணம் உயர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதையும்

3) நம்மை சுற்றி ஒரு சூழ்ச்சி அரசியல் எவ்வாறு உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பதையும்

4) ஏன் மாநில மின்சார வாரியம் தயாரிக்கும் மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை 1.83 ரூபாய் ஆக இருக்கும் பொழுது அதிகக் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாய் கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்க வேண்டும் என்பதையும்

5) மின்சாரக் கட்டணத்தை தீர்மானிக்கும் உரிமையோ அல்லது மின்சாரத்தினை யாரிடம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையோ மாநில அரசிடம் இருந்து பறிபோய் விட்டது என்பதையும்

6) மின்சாரத்தை தயாரிக்கும் உரிமத்தைப் பெற்றும் அதற்கு பின்னர் ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்காத வீடியோகான் நிறுவனத்தின் உரிமத்தை தமிழக மின்வாரியம் இரத்து செய்ததை எதிர்த்து வாதாடி அந்நிறுவனத்திற்கு 150 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வாங்கி ஏன் திருவாளர் மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்கள் தந்தார்கள் என்பதையும்

7) இன்று ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக போராடும் அரவிந்த் கேஜ்ரிவாலின் போராட்டத்தையும் மக்களின் உரிமைகளை எந்த அளவு அனைத்துக் கட்சிகளும் காற்றில் பறக்க விட்டு உள்ளன என்பதையும்

8) நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு கிடைக்காத மின்சாரம், அந்நிய நாட்டு மளிகைக் கடைகளுக்காக கணினியின் முன்னர் அமர்ந்து கொண்டு கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கும் நிறுவனங்களுக்கு தடை இல்லாமல் எதனால் கிடைக்கின்றது என்பதையும்

9) இன்று பரவலாக அறியப்பெறும் 2ஜி அலைக்கற்றை ஊழல், பிரதமரின் நிலக்கரி ஊழல் போன்ற பல்வேறு ஊழல்கள் தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளின் விளைவுகள் தான் என்பதையும்

நாம் அறிந்துக் கொள்ள முடியும். அவ்வாறு அறிந்துக் கொண்டால் தான் நம்மைச் சுற்றி இருக்கும் ஒரு மாய சதி வலையில் இருந்து நாம் விடுதலை அடைய முடியும்.

மின்சாரம் என்பது இன்றியமையாத ஒன்றாக நமது நாட்டினில் நமது வாழ்வினில் உருவாகி இருக்கும் இக்காலத்தில் அதனைச் சுற்றி இருக்கும் அரசியலை அறிந்துக் கொண்டு விழிப்புணர்வு அடைவது என்பது இன்று இன்று நம் முன்னர் இருக்கும் முக்கியமான ஒரு விடயமாகும்.

இதற்கு நமக்கு மாபெரும் துணையாக இந்த அருமையான புத்தகத்தை தந்து இருக்கும் ஐயா சா.காந்தி அவர்களுக்கு நமது நன்றிகள்.

இந்த புத்தகத்தை குறிப்பாக இன்று மின்சாரத் துறையில் பொறியியல் படிப்பினை மேற்கொண்டு இருக்கும் மாணவர்கள் கற்கவும் விவாதிக்கவும் சிந்திக்கவும் செய்வது நிச்சயம் அருமையான பலன்களைத் தரும்.

புத்தகம் வெளியீடு : முகம் மற்றும் மே 17 இயக்கம்
விலை : 110 ரூபாய்

பி.கு:

1) உலகமயமாக்கல் என்பதில் ஒளிந்து உள்ள அரசியலைப் பற்றி அறிந்துக் கொள்ள இப்பதிவையும் படிக்கவும்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

2) வழக்கம் போல் உங்களின் கருத்துக்களும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.

அலுவலகத்தில் சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றி பேச்சு எழுந்த பொழுது 'தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு விளையாடச் சென்ற வீரர்களுள் பெரும்பான்மையானோர் (ஏன் அனைவருமே) பிராமணர்கள்' என்று கருத்து எழுந்த பொழுது ஏறக்குறைய அனைவருமே அதிர்ச்சிக்கு உள்ளாகத் தான் செய்தனர். விளையாட்டினை வெறும் விளையாட்டாக மட்டுமே கண்டு வந்துக் கொண்டு இருந்த அவர்களுக்கு இத்தகவல் முற்றிலுமாக புதிதாக ஒன்றாக இருந்தது.

7 கோடி மக்கள் தொகை இருக்கும் ஒரு மாநிலத்தில்வெறும் 3 சதவீதம் இருக்கும் ஒரு பிரிவினரில் இருந்து மட்டுமே அனைத்து வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பது தற்செயலான ஒன்றா? அதுவும் கிரிக்கெட் விளையாட்டை உயிர் மூச்சாகவே கொண்டு தமிழகத்தின் தெருவெங்கும் இளைய தலைமுறையினர் அவ்விளையாட்டினை ஆடிக் கொண்டு வரும் பொழுது வெறும் ஒரு பிரிவு மக்கள் மட்டுமே திறமை பெற்று இருக்கின்றனர் என்பது ஏற்க கூடிய ஒன்றா என்றுமே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இதோ தமிழகத்தில் இருந்து இந்திய அணி (மன்னிக்கவும் பிசிசிஐ-யின் அணிக்கு) விளையாடச் சென்ற வீரர்களின் பட்டியல் (ஏதோ நான் அறிந்த வரையில்)

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் - பிராமணர்
ரவீந்திர அஷ்வின் - பிராமணர்
சடகோபன் ரமேஷ் - பிராமணர்
W.V. இராமன் - பிராமணர்
L. சிவராம கிருஷ்ணன் - பிராமணர்
ஹேமங் பதானி - பிராமணர்
லக்ஷ்மிபதி பாலாஜி - பிராமணர்
S.பத்ரிநாத் - பிராமணர்
முரளி கார்த்திக் - பிராமணர்
தினேஷ் கார்த்திக் - பிராமணர்
அபினவ் முகுந்த் - பிராமணர்
முரளி விஜய் - பிராமணர்
ராபின் சிங் - சரியாகத் தெரியவில்லை
திரு குமரன் - பிராமணர் (சந்தேகம் இருக்கின்றது)

வியப்பாகத் தான் இருக்கின்றது. பிராமணர்களே தேர்வு செய்யப் பட்டு இருக்கின்றனர் என்ற விடயத்தை விட அதிகமாக வியப்பூட்டும் விடயம் என்னவென்றால் இச்செய்தி இது வரை வெளியே பேசப்படாமலே இருப்பது தான்.

மாநிலமே விளையாடும் ஒரு விளையாட்டில் நிலவும் சாதிவெறியினை மக்களுக்கு புலப்படுத்தாமல் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் என்ன தான் செய்கின்றனவோ?

பி.கு:

கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி ஏற்கனவே விரிவான பதிவினை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம்.


வழக்கம் போல் உங்களின் கருத்துக்களும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு