என்றோ எரிந்து முடிந்திருந்த
ரோமபுரி
இன்று மீண்டும் எரிகின்றது…எரிவது ரோமாபுரிக்கு புதிதல்ல…!!!
***********************************
தீ அணைக்க கரங்கள் தேடுகின்றேன்
பரிதாபமாய்
அனைத்து கரங்களிலும் பிடில் ஒன்று இசைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது…!!!
*************************************
காலங்களில் மரித்த நீரோ
திரும்பி இருந்தான்
நீரோக்களாய்…நெருப்போடு இசையும் எரிக்க ஆரம்பித்தது…!!!
****************************************

சிறுக சிறுக கட்டியிருந்த கூடுகள்
மெதுவாய் எரிகின்றன
பறக்க வழியில்லாத பறவைகளின் சிறகுகளையும் சேர்த்து எரித்துக் கொண்டே…!!!
**********************************************
எரியும் சிறகுகள் அக்னிச் சிறகுகலாம்
என்றே சிலர் இசைத்தனர்
எரியும் சிறகுகளின் ரணம் புரியாது…!!!
*****************************************
நெருப்பு சிரித்துக் கொண்டே நெருங்கியது
தயாரானேன்
சிறகொடிந்த பறவையாய் வாழ்வதை விட…நெருப்பினை எதிர்த்த பறவையாய் வீழ்வது மேல் என்றே!!!
*********************************
ஒரு நொடி அச்சம் விடைப்பெற்றுக் கொள்ள
தோன்றுமாம்
யுகங்களை வெல்லும் வீரம்…!!!
******************************************
நெருப்பு சுடும் அவ்வளவு தானே…
சுடட்டும்
என்றே நிற்க… பரவியது நெருப்பு…!!!
******************************************
என் மேல் அல்ல…
மெதுவாய்…
என்னுள்…!!!
***********************************
நெருப்பின் கரங்கள் தீண்டிட
துயில் களைந்து எழுகின்றான்
என்னுள் ஆயிரம் ஆண்டுகளாய் பனியில் உறைந்திருந்த வீரன் ஒருவன்!!!
***************************************************
ஒவ்வொரு பறவையுள்ளும் ஒவ்வொரு வீரன் எழ
எழுகின்றது ஒரு இனம்
என்றோ அதன் கால்களில் கட்டப்பட்டிருந்த விலங்குகளை தகர்த்து எறிந்துக் கொண்டே!!!
******************************************************
உலகின் எல்லையெங்கும் பயணித்த கால்கள்
சோம்பலைத் தொலைக்க
மீண்டும் ஆரம்பிக்கின்றது ஒரு வரலாற்றுப் பயணம்…!!!
*************************************************
மன்னிக்கவும்…இதில் நீரோக்களுக்கு இடம் இல்லை!!!
********

பி.கு:

இந்த இடத்தில் கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளையும் சேர்க்கலாம் போன்று தோன்றியதினால் சேர்கின்றேன்.
இருப்பாய் தமிழா நெருப்பாய்
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு