விவிலியம்...!!!

கிருத்துவர்களின் வேத நூல். உலகின் தோற்றத்தில் தொடங்கி பின்னர் யூதர்களின் வரலாறாய் பயணித்து இறுதியில் இயேசு கிருத்துவின் வாழ்வினையும் கொள்கைகளையும் விளக்குவதாய் அமைந்த ஒரு நூல். கிருத்துவத்தினைப் பற்றி நாம் அறிய வேண்டுமானால் விவிலியத்தினை பற்றி முதலில் அறிய வேண்டும். எனவே தான் நாம் முன்னரே விவிலியத்தின் சில பகுதிகள் பற்றி பார்த்து இருந்தோம். அதன் அடிப்படையில்,

௧) ஆதாம் மற்றும் ஏவாள் என்ற பெயர்கள் தமிழ் பெயர்கள் என்றும் (ஆதாம்)
௨) வெள்ளத்தால் உலகம் அழிவது குமரிக்கண்ட அழிவு என்றும்
௩) நோவா என்பதும் தமிழர்களை குறித்த சொல் என்றும் கண்டு இருந்தோம். (நோவா)

சரிங்க...இது எல்லாம் நம்ம ஏற்கனவே பார்த்த செய்திகள் தான். விவிலியத்துல சிவலிங்க வழிபாடு/கல் வழிபாடு இருக்கு அப்படின்னு சொன்னீங்களே அதப் பத்தி சொல்லுங்க அப்படிங்கிறீங்களா... அதனை பார்ப்போம்...ஆனால் அதற்கு முன் நாம் இன்னொரு தகவலையும் கண்டு விட்டால் நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்..விவிலியம் கூறும் கதையினை ஒத்த கதைகள் சுமேரிய இலக்கியத்திலும், பாபிலோனிய இலக்கியத்திலும் காணப்படுகின்றன என்று. அவ்விலக்கியங்களில் கதைகள் மட்டும் ஒரே மாதிரியாக அல்லாது சில பெயர்களும் கூட ஒரே மாதிரியாக இருக்கின்றன என்பதனையும் நாம் கண்டு இருக்கின்றோம். விவிலியத்தில் ஆதாம் என்றுக் கூறப்படும் மனிதன் சுமேரிய இலக்கியத்திலும் பாபிலோனிய இலக்கியத்திலும் ஆதப்பா என்று வழங்கப்படுகின்றான். விவிலியத்தில் நோவா என்று வழங்கப்படுபவன் சுமேரிய இலக்கியங்கள் மற்றும் பாபிலோனிய இலக்கியங்களில் 'ஊற்றுநாவிபித்தன்' என்று அழைக்கப்படுகின்றான்.

மேலும்,

ஆதாம் தொடங்கி நோவா வரை விவிலியம் பத்து தலைமுறையினரை விவரிக்கின்றது.
அதேப் போல் சுமேரியக் கதைகளும் ஆதப்பா தொடங்கி ஊற்றுநாவிபித்தன் வரை பத்து தலைமுறையினரை விவரிக்கின்றது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று இருக்கின்றது. அந்தக் கதைகள் கூறும் பத்து தலைமுறையினரில் ஏழாம் தலைமுறையினராக கூறப்படுபவனின் பெயர் அந்த இரண்டு கதைகளிலும் ஒன்றாகவே இருக்கின்றது.

'ஏனோக்கு' - அந்தக் கதைகளின் படி இவன் ஒருவன் தான் இறைவனை நேரில் கண்டு இறைவனோடு சென்றுக் கலந்தவன். இப்பொழுது இந்தப் பெயரைத் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

'ஏனோக்கு' என்பது 'யானோக்கு' என்ற சொல்லின் திரிபே என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

'யானோக்கு' என்னும் சொல் - யா + நோக்கு என்று பிரிந்து - யா என்னும் கடவுளை நோக்கியவன்/கண்டவன் என்னும் பொருளினைத் தருவதினை நாம் காணலாம். விவிலியமும் இவனை இறைவனை நேரில் கண்டவன் என்று கூறுவது இங்கே நோக்கத்தக்கது.

"ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்." (தொடக்க நூல் 5: 20-24)

இங்கே 'யா' என்பதும் 'நோக்கு என்பதும் தமிழ் சொற்கள் என்பது கவனிக்கத்தக்கது. இது விவிலியம் கூறும் முதல் மனிதர்கள் தமிழர்கள் என்பதற்கும் முதல் மொழி தமிழ் என்பதற்கும் இன்னொரு சான்றாக நாம் எடுத்துக்கொள்ளத் தக்க ஒன்றாகும். சரி.. இனி விவிலியத்தில் கல் வழிபாடு இருந்ததா என்பதனைக் காண்போம். அதற்கு நாம் யாக்கோபுவை காண வேண்டி இருக்கின்றது.

அந்தக் கதையின்படி யாக்கோபு ஆரான் என்னும் இடத்துக்கு பயணம் செய்கின்றான். அவ்வாறு பயணிக்கும் பொழுது இரவு நெருங்கவே தலைக்கு ஒரு கல்லினை தலையணையாக வைத்துக் கொண்டு உறங்குகின்றான். அன்று இரவு அவன் கனவு காணுகின்றான். அக்கனவில் இறைவன் அவனிடம் உரையாடுகின்றார். தூக்கம் கலந்து எழுந்த யாக்கோபு 'இந்த இடத்தில இறைவன் உண்மையாகவே இருக்கின்றார்' என்றுக் கூறி தான் இறைவனை உணர்ந்த இடத்தில தான் தலைக்கு வைத்த கல்லினை எடுத்து நட்டி அதற்கு எண்ணெயினை ஊற்றி 'இக்கல் தேவனோட வீடாக' இருக்கும் என்றுக் கூறி அந்த இடத்துக்கு பெத்தேல் என்று பெயரிட்டான். (ஆதியாகமம் -28 : 10 - 12 )

மேலும் விவிலியத்தில் பல இடங்களில் இதே மாதிரியான வழிப்பாட்டு முறைகளை நாம் காண முடிகின்றது.

யாக்கோபு அவனுக்கும் லாபான் என்பவனுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்படும் பொழுது சாட்சியாக ஒரு கல்லினை நட்டி வைத்து விட்டு அதனை சுற்றி கற்களைக் குவித்து வைத்துக் கொள்கின்றான். அதற்கு கலீடு என்றும் அவன் பெயரிடுகின்றான். (ஆதியாகமம் - 31 : 44 - 50 )

"மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்." - யாத்திராகமம் (24 - 4 )

"அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி," - யோசுவா (4 - 20 )

"அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்." - சாமுவேல் (7 - 12 )

இவ்வாறு விவிலியம் கூறும் பழைய ஏற்பாட்டில் கல்லினை நட்டி வைத்து அதனை வழிபடும் பழக்கம் மக்களிடம் இருந்து இருக்கின்றது என்பது நமக்கு தெரிய வருகின்றது. அவர்கள் கல்லினை இறைவனாக கருதவில்லை மாறாக இறைவன் இருப்பதற்கு ஒரு அடையாளமாகவே கருதினார்கள் என்றும் நாம் காண முடிகின்றது. மேலும் மற்றக் கல்லில் இருந்து இந்தக் கல்லினை வேறுப்படுத்திக் காட்டவே அதில் எண்ணெயும் ஊற்றினர் என்றும் அறிய முடிகின்றது.

சரிங்க... அவங்க கல்லினை வைத்து வழிப்பட்டாங்க. ஆனா அத எப்படி சிவலிங்க வழிப்பாடு அப்படின்னு சொல்றீங்கனு கேட்குறீங்களா...

சிவலிங்கம் என்பது இறைவனை அடையாளப்படுத்திய கல்லினைக் குறிக்க பயன்படுத்திய சொல்லே ஆகும். கிருத்துக்கு முன்பட்ட நூற்றாண்டுகளில் சிவலிங்கம் என்ற சொல் எந்த இலக்கியங்களிலும் கிடைக்கப்படவில்லை. கிருத்துக்கு பின்பட்ட நூற்றாண்டுகளில் தான் சிவலிங்கம் என்ற சொல் காணப்பெறுகின்றது. எனவே மக்களால் ஆதி இறைவனை குறிக்க பயன்பட்ட கல்லுக்கு பின்னாளில் சிவலிங்கம் என்று பெயர் வந்தது என்று நாம் கருத வேண்டியிருக்கின்றது.

மேலும் சிவலிங்க வழிப்பாட்டில் சிவலிங்கம் இருக்கும், அதன் முன்னர் நந்தி எனப்படும் சிவனின் வாகனமான காளை இருக்கும். ஆனால் காளை என்றால் கொம்புகள் இருக்க வேண்டும், ஆனால் சிவலிங்கத்தின் முன் இருக்கும் நந்திக்கோ முழுதாய் வளர்ந்த கொம்புகள் கிடையாது...கொம்புகள் வளர்ந்துக் கொண்டு இருக்கும் நிலையிலேயே நந்தியின் சிலைகள் காணப்படுகின்றன. எனவே நந்தி என்று சிவலிங்கத்தின் முன் வைக்கப்பட்டு இருப்பது காளை அல்ல என்றும் அது வளர்ந்துக் கொண்டு இருக்கும் கன்றுக்குட்டி தான் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே சிவலிங்கம்...அதன் முன்னர் ஒரு கன்றுக் குட்டி - இதுவே தான் சிவலிங்க வழிப்பாட்டு முறையின் தோற்றம் ஆகும்.

இதே மாதிரியான வழிபாடு விவிலியத்திலும் இருக்கின்றது.

எரோபெயாம் என்பவன் மக்கள் வழிபடுவதற்கு இரண்டு கன்றுக் குட்டி சிலைகளை உருவாக்கி ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றினை தானிலும் வைத்தான். அதுவரை கல்லும் பலிபீடமும் மட்டுமே இருந்த இடத்தில இப்பொழுது கன்றுக்குட்டியும் சேர்ந்தது. (இராஜாக்கள் I - 12 : 28 : 32 )

மேலே உள்ள விவிலிய பகுதியின் மூலம் அதுவரை கல்லினை மட்டுமே பலி கொடுத்து வணங்கிக்கொண்டு இருந்த மக்களின் வழிப்பாட்டு முறையில் புதிதாக கன்றுக்குட்டியும் சேர்க்கப் பட்டது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளுகின்றோம்.

சரி இதுவரை நாம் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டு உள்ள செய்திகளில் கல் வழிப்பாட்டினை பற்றிப் பார்த்தோம். தமிழர்களின் பழக்கமான கல் வழிபாடு சிந்து சமவெளியில் இருந்து மேற்கே சுமேரிய மற்றும் பாபிலோனிய வழிப்பாட்டு பழக்கமாக மாறி பின்னர் இசுரவேலர்களின் பழக்கமாகவும் மாறி இருப்பதனை நாம் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது புதிய ஏற்பாட்டில் இறைவனை கல்லினால் அடையாளப்படுத்தி இருக்கின்றார்களா என்பதனைக் காண்போம்.

"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்," - (பேதுரு I - 2 : 4 )

மேலே உள்ள வாக்கியத்தில் பேதுரு, இயேசுவை உயிருள்ள கல் என்று குறிப்பிட்டு உள்ளார். இங்கே அவர் ஏன் கல் என்ற சொல்லினை பயன் படுத்த வேண்டும். அதுவும் உயிர் உள்ள கல் என்றுக் கூறி இருக்கின்றார். கல்லுக்கு தான் உயிர் கிடையாதே...பின்னர் ஏன் அவர் உயிருள்ள கல் என்று கூறி இருக்கின்றார்? விடையினைக் காண்போம்...

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்...மக்கள் கல் நட்டி தங்களின் கடவுளை வழிப்பட்டு வந்தனர் என்று. கல் என்பது ஒரு அடையாளம். அவ்வளவே. தாங்கள் உயிரில்லாத கல்லின் மூலமாக வழிபட்டு வந்த இறைவன் உயிருள்ள மனிதனாக அவர்களுக்காக வந்ததை தெரிவிக்கவே உயிருள்ள கல் என்று பேதுரு கூறி இருக்கின்றார் என்கின்றனர் அறிஞர்கள்.

உயிரற்ற கல் வழிப்பாடு - அருவ நிலை - சிவலிங்கம்.
உயிருள்ள கல் - உருவ நிலை - இயேசு.

இவ்வாறே விவிலியத்தில் கல் வழிபாடு கூறப்பட்டு/பின்பற்றப்பட்டு உள்ளது. சரி...இதைப் போலவே இசுலாம் சமயத்திலும் கல் வழிப்பாட்டு முறை இருக்கின்றது. ஆனால் அதனை நாம் மற்றொரு பதிவில் பின்னர் காண்போம். இப்பொழுது தோமா நமக்காக தமிழகத்தில் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

என்ன தோமாவா....தமிழகத்திலா??? என்கின்றீர்களா!!! ஆமாங்க... தோமா தான். அதுவும் நம்ம சென்னையில தான். அவரின் வரலாற்றின் கூடவே சாந்தோம்...பரங்கி மலை..ஆகியவற்றின் வரலாறும் காத்திருக்கின்றன ...பயணிப்போம்!!!

மேலும் சில தகவல்கள்:

நாம் மேலே இறைவனை நினைத்து நட்டப்பட்ட கற்களுக்கு எண்ணெய் ஊற்றி மக்கள் வேறு கற்களில் இருந்து அவற்றினை வேறுப்படுத்தினர் என்றுக் கண்டு இருந்தோம். அதன் அடிப்படையில் இரு தகவல்கள்.

மேசியா என்றால் 'எண்ணெய் ஊற்றப்பட்டவர் என்பது பொருள்.
கிருத்து என்றாலும் அபிசேகம் பண்ணப்பட்டவர் என்பதே பொருள்.

ஆனால் விவிலியத்தில் கிருத்துவினை எவரும் அபிசேகம் செய்ததாக செய்திகள் இல்லை. அது அப்படி இருக்க அவரை ஏன் அவ்வாறு அழைக்கின்றனர் என்றக் கேள்விக்கு 'அது வரை மக்கள் கல்லில் எண்ணெய் ஊற்றி வழிப்பட்டு வந்த இறைவன் இன்று மனித வடிவில் வந்து இருக்கின்றார். இவரைத் தான் நாம் எண்ணெய் ஊற்றி வழிப்பட்டோம். எனவே இவர் எண்ணெய் ஊற்றப்பட்டவர் என்று மக்கள் கருதி அவரை கிருத்து என்று அழைத்தனர்' என்றே விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர்.
 

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20


5 கருத்துகள்:

இப்படியும் யோசிக்க இயலுமா...
பெரிய ஞானி அய்யா நீர்.

@தமிழ்த்தென்றல்

illai nanbare... gnani naan alla... palar seitha aaraaichiyinai naan enathu vaarthaikalil thokuthu eluthukindraen... avvalave!!!

அய்யா வணக்கம்! எதேச்சையாக இணையதளத்தில் கல் வழிபாடு பற்றி தேடும் போது இந்த பதிவை படிக்க நேர்ந்தது. உங்களுடைய ஹிந்து-கிறிஸ்துவ மத ஒற்றுமைப்படுத்துதல் பிரமிக்க வைக்கிறது. சரி நீங்கள் கூறிய கல் வழிபாடு பற்றி ஒரு வசனமாவது இருக்கிறதா என்பதை நீங்கள் கூறிய வரிகளையே கொடுக்கிறேன் பாருங்கள்.

//மேலும் விவிலியத்தில் பல இடங்களில் இதே மாதிரியான வழிப்பாட்டு முறைகளை நாம் காண முடிகின்றது.

யாக்கோபு அவனுக்கும் லாபான் என்பவனுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்படும் பொழுது சாட்சியாக ஒரு கல்லினை நட்டி வைத்து விட்டு அதனை சுற்றி கற்களைக் குவித்து வைத்துக் கொள்கின்றான். அதற்கு கலீடு என்றும் அவன் பெயரிடுகின்றான். (ஆதியாகமம் - 31 : 44 - 50 )

"மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்." - யாத்திராகமம் (24 - 4 )

"அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி," - யோசுவா (4 - 20 )

"அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்." - சாமுவேல் (7 - 12 )//

நீங்கள் கூறிய மேலே உள்ள வரிகளில் கல் வழிபாடு குறித்து உள்ளதா? என்பதை பார்த்து கூறுங்கள்.

எங்குமே கல்லை வணங்கியதாக இல்லை மாறாக கல்லை நட்டார்கள் என்றே வருகிறது சரியா...

எரோபெயாம் என்பவன் மக்கள் வழிபடுவதற்கு இரண்டு கன்றுக் குட்டி சிலைகளை உருவாக்கி ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றினை தானிலும் வைத்தான். அதுவரை கல்லும் பலிபீடமும் மட்டுமே இருந்த இடத்தில இப்பொழுது கன்றுக்குட்டியும் சேர்ந்தது. (இராஜாக்கள் I - 12 : 28 : 32 )

இதை வணங்க க் கூடாது என்று அடுத்த வசனம் சொல்லவில்லை

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு