"எனக்கு தோல்வி என்பதே கிடையாது". மதனின் வார்த்தைகளில் ஆவேசம் கொந்தளித்தது.

"ஆம்" என்றார் சார்லஸ்.

மதன் நிமிர்ந்து சார்லெஸை பார்த்தான். பின் மீண்டும் குனிந்து தன்னுடைய குத்துச்சண்டை கையுறைகளை பார்த்தவாறு "எனக்கு வலிக்காது சார்ல்ஸ். நான் வெல்லப்பிறந்தவன்" என்றான்.

"ஆம்!" என்றார் சார்ல்ஸ். அவருக்கு மதனின் வார்த்தைகள் புதிதல்ல. மதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவனை அவர் கண்டு இருக்கிறார். புதிதாய் அவன் அவரிடம் எதையும் சொல்ல போவதில்லை. இப்போது அவன் சொல்லும் வார்த்தைகள்அவனுக்காக மட்டுமே. அவருக்கு தெரியும், அவன் தன்னை தயார் செய்து கொண்டு இருக்கிறான்.



"என் மகனை ஒரு பெரிய குத்துச்சண்டை வீரனாக்க வேண்டும். அதற்கு நீங்கள் அவனுக்கு பயிற்சி அளிக்க சரி என்று சொல்ல வேண்டும்." 15 வருடங்களுக்கு முன்னால் மதனின் தந்தை உதிர்த்த வார்த்தைகள் இன்றும் அவருக்கு நன்றாக நினைவில் இருந்தன.

"மன்னிக்கவும்! என்னால் பயிற்சி அளிக்க முடியாது. உங்கள் விருப்பங்களை உங்கள் குழந்தைகளின் மீது சுமத்துவது சரியல்ல."

"இல்லை... இல்லை நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றீர்கள். அவனுக்கு குத்துச்சண்டை பிடிக்கும்" என்று மதனின் தந்தை தொடங்கினார்.

"6 வயதுச் சிறுவனுக்கு குத்துச்சண்டை சரியான ஒன்றல்ல. நீங்கள் போகலாம்" என்று உரையாடலை முடித்து விட்டவராய் திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. வேண்டாம் என்று எந்தச் சிறுவனைப்பார்த்து சொன்னாரோ அந்தச் சிறுவன் அவருடைய கையுறைகளை அணிந்துக்கொண்டு விளையாட்டாய் சண்டைப்பயிற்சி செய்யும் பையை குத்திக்கொண்டு இருந்தான்.

நின்றார் சார்ல்ஸ். ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்தார்.

 இவன் சராசரி சிறுவனல்ல.

" எனக்கும் குத்துச்சண்டைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் ஏனோ இவன் குத்துச்சண்டையில் பெரிய ஆளாய் வருவான் என்று எனக்கு தோன்றுகின்றது" மதனின் தந்தை தொடர்ந்தார். சார்ல்ஸ் அவரை அமைதியாய் திரும்பி பார்த்தார்.

"தினமும் காலை 6 மணிக்கு பயிற்சி தொடங்கும். நீங்கள் போகலாம்" என்று கூறிநகர்ந்தார் சார்ல்ஸ்.

அவை நடந்து 15 வருடங்கள் முடிந்து போயிருந்தன. அந்த வருடத்திலேயே மதனின் பெற்றோர் ஒரு சாலை விபத்தில் காலமாக, சார்ல்ஸ் மதனை தன் வளர்ப்பு மகனாக தத்து எடுத்து இருந்தார். மதன் தன்னை ஒரு முழு நேர குத்துச்சண்டை வீரனாக தயார் செய்து கொள்ள ஆரம்பித்து இருந்தான். அன்று தொடங்கி அவன் தோற்று அவர் கண்டதில்லை. வெற்றி... அது ஒன்றே இலக்கு என்று வென்ற போட்டிகள் தந்த வேகம், வேகம் தந்த வெறி , வெறி தந்த வெற்றி .... என்றே அவன் தன்னை ஒரு முன்னணி குத்துச்சண்டை வீரனாக நிலை நிறுத்தி கொண்டு இருந்தான். இதோ அவன் கனவான உலக சாம்பியன் பட்டம் அவன் கைக்கு அருகே இருக்கின்றது.
இடையில் ஒரே போட்டி.
ஒரே நபர்.
கார்த்திக்... சாமானியன் அல்ல. கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்தை தன் வசம் வைத்து இருப்பவன். செய்திகளின் கூற்று உண்மையானால் அவனை போல் ஒரு வீரனை குத்துச்சண்டை உலகம் இது வரை கண்டதில்லை. வெற்றி கடினம் தான். ஆனால் முடியாததில்லை. சார்ல்ஸ் மதனை கூர்ந்து பார்த்தார். மதன் தயாராகவே இருக்கின்றான். அவனிடம் பயமில்லை. அவன் வெல்வான்.

"மக்களே!!! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் உலக சாம்பியன் குத்துச்சண்டை போட்டி இதோ சற்று நேரத்தில் தொடங்க போகிறது." அறிவிப்பாளரின் குரல் அரங்கமெங்கும் ஒலித்தது. உடை மாற்றும் அறையில் மதன் எழுந்து தனது மேல் அங்கியை அணிந்தான். அரங்கமெங்கும் ஒலிக்கும் மக்களின் கரகோசங்கள் அவனின் வெற்றித் தாகத்தை மேலும் அதிகரித்தன.
மதன் சார்லசை பார்த்தான். சார்ல்ஸ் தலை அசைத்தார். நம் நேரம் வந்து விட்டது.
போகலாம்...
"இதோ... உலக சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடும்... 21 வயதே ஆன... இது வரை தோல்விகளே காணாத ...மதன்....!!!"
மதன் தனது அறையிலிருந்து அரங்கத்தின் உள் நுழைந்தான். சார்ல்ஸ் பின் தொடர்ந்தார்.
"வரலாறு படைப்பாரா?... பார்ப்போம்... இதோ உங்களுக்காக ... மதன்" அறிவிப்பாளர் தொடர்ந்தார்.
அரங்கமெங்கும் மதனின் பெயர் எதிரொலித்தது மக்களின் குரலோடு சேர்ந்து.
மதன் புன்னகைத்தான். இதை தான் அவன் எதிர்பார்த்தான். உலகமே அவன் பெயர் சொல்ல வேண்டும்.
"3 சுற்றுகளுக்குள் வெல்ல வேண்டும். என்னால் முடியும்.
எனக்கு வலிக்காது. நான் தோற்க மாட்டேன்." 
மதன் குத்துச் சண்டை மேடையுள் நுழைந்தான்.  

பெண்….

யாரிவள்…

சாந்தமான காந்தமா…
இல்லை
அண்டம் வாழும் அண்டமா….

ஆதியா??? அந்தமா???...
அல்லது
வெறும் குயில்களின் சந்தமா….




இவள் எண்ணங்கள் என்ன…

ஆழம் அறியா கடலா…
அல்ல
மலரில் எழுதிய மடலா???

அனைவரும் படிக்கும் புத்தகம் இவள் தான்…
பக்கங்களில் பாசம் ஊட்டுகிறாள்
நேசம் காட்டுகிறாள்…
அர்த்தங்கள்??? – அதற்கு மட்டும் புன்னகைக்கிறாள்!!!

மௌனத்தில் உருக்கும் என்னை
கண்ணீரில் கரைக்கிறாள்
பின் புன்னகையில் மீண்டும் உயிர்பிக்கிறாள்…!!!

புரிந்த புதிரே…
விழி அசைவில் காலத்தை மாற்ற அறிந்தவள் நீ…
அறியாதிருப்பாயோ….
நீயின்றி நாங்கள் இல்லை என்று!!!

"இந்நேரம் மொட்டைமாடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?" என்றேன்.
"ஹேய் நான் எங்க வீட்டு மொட்டை மாடில இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?" ஆச்சரியத்தோடு ஒலித்தது அவள் குரல்.

"உன் ஒளியால் நிலா சற்று பிரகாசம் கூடுதலாக தெரிந்தது. அதை வைத்து தான் " என்றேன்.
"போடா.... உனக்கு இதே வேலையா போச்சி" என்றாள் வெட்கப்பட்டுகொண்டே.
"வெட்கப்படுகின்றாயா!!! ஆச்சரியமாக இருக்கின்றதே"
"வெட்கமா???நானா???.... யார் சொன்னா!!! எனக்கு வெட்கப்படுவது பிடிக்காது தெரியுமா" என்றாள் போலி திமிருடன்.
செல்லப்பொய்கள் சொல்வது பெண்களுக்கு பிடிக்கும்...ஆண்களுக்கோ கதை சொல்வது...
பொய் சொல்லிவிட்டாள்... இப்பொழுது கதையின் முறை... ஆரம்பித்தேன்
"அப்பாடி!!! உலகம் பிழைத்தது" என்றேன்.
"என்ன?நான் வெட்கப்படுவதற்கும் உலகம் அழிவதற்கும் என்ன தொடர்பு?..." என்றாள் ஆச்சரியத்தோடு.
"சொல்கிறேன்... இரவு வெகு நேரம் வெட்ட வெளியில் நிற்காதே என்று உன் வீட்டில் சொல்லி இருக்கிறார்கள் தானே" கதையைத் தொடர்ந்தேன்.
"ஆம்... அதற்கு என்ன"
"அது ஏன் தெரியுமா?"
"குழந்தைக்கு கூட தெரியும். இரவு வெகு நேரம் வெளியில் நின்றால் பனி பிடிக்கும்" என்றாள்.
"தவறு. பனி பிடித்து கொண்டு போய் விடும்" என்றேன்.
"பிடித்து கொண்டு போய் விடுமா? என்ன சொல்ற" என்றாள்
"உனக்கு கதையே தெரியாதா?... அந்த காலத்தில் பனித்தேவன் மிகவும் மோசமானவனாய் இருந்தானாம். இரவில் வெளியில் அலையும் அழகான பெண்களை தனக்கு சேவை செய்ய பிடித்து கொண்டு போய் விடுவானாம். அதனால் அந்த காலத்தில் பெண்களை இரவு நேரத்தில் வெளியில் உலாவ விட மாட்டார்கள்"
"ஆனால் இப்பொழுது உலாவ விடுகிறார்கள் அல்லவா!!! அந்த பனித்தேவன் இப்பொழுது சேவைக்கு ஆள் தேடுவது இல்லையா?" என்றாள்.
"இல்லை! அவன் மாறி விட்டான்" என்றேன்.
"ஓ!!! திருந்தி விட்டானா!!!" என்றாள்.
"இல்லை. காதலித்து விட்டான். அவனையும் தன் அறிவால் ஒரு மங்கை பித்து பிடிக்க வைத்து விட்டாள்." என்றேன்.
"காதலா?..."என்றாள்.
"ஆம். அந்த பெண்ணையே மணமுடித்து அவளுடன் வட துருவத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். அவள் இறக்கும் வரை. அன்று முதல் அவன் அவள் நினைவாகவே வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் இடையே ஓய்வின்றி அலைந்து கொண்டு இருக்கின்றான்!!!" என்றேன்.
"சரி! அதற்கும் உலகம் அழிவதற்கும் என்ன சம்பந்தம்" என்றாள்.
"தன் காதலியை மறக்க நினைத்து அலையும் அவன் உன் வெட்கத்தை கண்டால் நிச்சயம் அவள் எண்ணம் வந்து உருகி விடுவான். அவன் இல்லை என்றால் துருவங்கள் இரண்டும் அழிந்து விடும். அப்புறம் உலகம் அழிய தானே செய்யும்" என்றேன்
"உனக்கு மட்டும் எப்படித்தான் இப்படி எல்லாம் கதை கிடைக்குதோ???" என்றாள்.
புன்னகைத்தேன்.
"என்ன பதிலை காணோம்" என்றாள்.
நான் கதை சொல்லவில்லை, உன் வெட்கம் என்னிடம் சொல்வதை நான் உன்னிடம் சொல்கிறேன் என்று சொல்ல துடித்த உதடுகள் ஏனோ "ஒன்றுமில்லை!!!" என்று சொல்லி அடங்கின.
"சரி!!! எனக்கு தூக்கம் வருகிறது. நீயும் போய் நிம்மதியாக தூங்கு. குட் நைட்" என்று சொல்லி அவளது கைப்பேசியை அணைத்தாள்.
விடிந்திருந்தது.!!!
                                   முற்றும்
  

புகைவண்டி கடப்பதற்காக
        நிலவு நிற்குமா – நிற்கின்றாய்!!!
நானும் நிற்கின்றேன்
       வெட்கம் சூழ்ந்த உன் முகத்தை கண்டுகொண்டு!!!
கடந்து சென்ற புகைவண்டி நிச்சயம் சொல்லி இருக்க வேண்டும்
     'பாவம் அவனை ஒரு முறை பார்த்து விடு என்று!!! '
திரும்பினாய்
   " என்ன வேண்டும்!!!" என்றாய் எதுவும் அறியாதவள் போல்
   "உன் காதல்!!" என்றேன் ....
மறுகணம் மேகம் மறைத்த நிலவை போல்
     ஜன கூட்டத்தினுள் பறந்து மறைகிறாய்!!!
  " மெதுவாகவே எடுத்து வா
              உன் காதலை,
     காத்திருப்பேன்
               என் வாழ்க்கையோடு!!!



"நீ கவிஞனாமே??

    என்னை பற்றி ஒரு கவிதை சொல்லேன்" என்றாள்!!!

“நான் எழுதிய கவிதைகள் கேட்கின்றன

    அவற்றை பற்றி கவிதை எழுத சொல்லி,

கவிதைகளின் கவிதையா – என்னவள்" என்றேன்.

 கவிதைகள் பூரித்தன சரி

          உன் கன்னங்கள் ஏன் சிவந்தன???’

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு